அதிகரிக்கும் முக்கியத்துவம்.. அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை..

MP Kanimozhi: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை வழங்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும்  முக்கியத்துவம்.. அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை..

அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனியறை

Published: 

25 Jun 2025 07:11 AM

சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய திமுக தலைமை அலுவலகமான (DMK Headquarters) அண்ணா அறிவாலயத்தில் (Anna Arivalayam) திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் கே என் நேருவிற்க தனிஅறை வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது திமுக எம்.பி கனிமொழிக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் திமுக கட்சியில் எம்.பி கனிமொழிக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் கட்சியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி, வைத்தும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

கட்சி பணிகள் மும்மரம்:

இது ஒரு பக்கம் இருக்க உடன்பிறப்பே வா என்ற திட்டத்தின் கீழ் தினசரி மூன்று தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அதில் தொகுதிகளில் மக்களுக்கான தேவை என்ன இருக்கிறது, மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது, பின் தங்கி இருக்கக்கூடிய தொகுதிகளில் என்ன செய்ய வேண்டும், கடந்த தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகளில் எப்படி வெல்வது போன்ற பல்வேறு விஷயங்களை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் திமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திமுக கட்சியில் இளைஞர்களுக்கு இனி வரும் காலங்களில் முக்கியத்துவம் அளிக்க ஏதுவாக முக்கிய பொறுப்புகளில் அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு கட்ட நிகழ்வுகளை திராவிட முன்னேற்ற கழகம் எடுத்து வரும் நிலையில் தற்போது திமுக எம்.பியான கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனியறை:


திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் துறைமுகம் முருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சர் கே.என் நேருவிற்கு தனியறை ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது திமுக எம்.பி கனிமொழிக்கு தனி அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழியை அழைத்து, அவரது அறையில் இருக்கும் நாற்காலியில் அமர வைத்து, அந்த அறை அவருக்கு என ஒதுக்கினார்.

திமுகவில் கனிமொழிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அதேபோல் கனிமொழியை ஒதுக்கி வைத்துள்ளனர் என பல்வேறு யூகங்கள் பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் தற்போது திமுகவில் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் இந்த தனி அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.