Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bangladesh Cricket Board: பயிற்சியின்போது பாலியல் துன்புறுத்தல்.. கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் மகளிர் வங்கதேச கேப்டன் புகார்!

Jahanara Alam: கடந்த 2022 மகளிர் உலகக் கோப்பையின் போது இப்படியான சம்பவம் நடந்ததாக ஜஹானாரா ஆலம் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் குழுவை அமைத்து, 15 நாட்களுக்குள் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

Bangladesh Cricket Board: பயிற்சியின்போது பாலியல் துன்புறுத்தல்.. கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் மகளிர் வங்கதேச கேப்டன் புகார்!
முன்னாள் வங்கதேச மகளிர் அணியின் கேப்டன் ஜஹானாரா ஆலம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Nov 2025 13:42 PM IST

முன்னாள் வங்கதேச மகளிர் அணி கேப்டன் ஜஹானாரா ஆலம் (Jahanara Alam), முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிபி நிர்வாகியுமான ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் (Bangladesh Cricket Board) விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. அந்த புகாரில் முன்னாள் தேர்வாளரும் சில வாரிய அதிகாரிகளும் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். அதன்படி, கடந்த 2022 மகளிர் உலகக் கோப்பையின் போது இப்படியான சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் குழுவை அமைத்து, 15 நாட்களுக்குள் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது..?

மனநலம் காரணமாக தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ஜஹானாரா ஆலம்” நான் அநாகரீகமான அட்டூழியங்களை ஒரு முறை அல்ல, பல முறை எதிர்கொண்டேன். நிச்சயமாக, நாங்கள் ஒரு அணியில் இடம் பெற்றிருக்கும்போது, நாங்கள் விரும்பினாலும் கூட, சில விஷயங்களை செய்ய முடியாது. சிலரால் நீங்கள் நன்றாக அறியும்போது பொதுவெளியில் சில விஷயங்களை சொல்லவோ எதிர்க்கவோ முடியாது. நான் கேப்டனாக இருந்தபோது பிசிபி நிர்வாகி சர்ஃப்ராஸ் பாபு மூலம் தனக்கு திருமண முன்மொழிவு அளிக்கப்பட்டது. அப்போது, முன்னாள் மகளிர் தேர்வுக்குழு தலைவர் நாதெல்லா சவுத்ரி மன்சுருலினும் இதை தடுக்க தவறிவிட்டார். பிசிபி தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி தனது புகார்களை புறக்கணித்தார்.

ALSO READ: சூதாட்ட விவகாரம்! ரெய்னா, தவானின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

கடந்த 2021ம் ஆண்டு, தௌஹீத் பாய், ஒருங்கிணைப்பாளர் சர்பராஸ் பாபு மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். இதை நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அவர் ஏன் என்னை மோசமாக நடத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அமைதியாக இருந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நான் அந்த வாய்ப்பை நிராகரித்தபோது, ​​மஞ்சு பாய் மறுநாளே என்னை அவமதிக்கவும், தகாத வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்யவும் தொடங்கினார்” என்றார்.

ஆலம் கொடுத்த புகார்:

மேலும், நியூசிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், “எங்கள் பயிற்சி முகாமுக்கு முந்தைய காலகட்டத்தில், நான் பந்து வீசிக் கொண்டிருந்தபோது, ​​மறைந்த தௌஹித் மஹ்மூத் வந்து என் தோளில் கை வைத்தார். பெண்களை அருகில் இழுத்து, மார்பில் அழுத்தி, காதுகளில் பேசும் பழக்கம் அவருக்கு இருந்தது. நாங்கள் அவரைத் தவிர்ப்போம் – போட்டிகளுக்குப் பிறகு கைகுலுக்கும்போது கூட, அவர் எங்களை இழுக்காதபடி தூரத்திலிருந்து எங்கள் கைகளை நீட்டுவோம்.” என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இதை அப்போதைய வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர்.

ALSO READ: இந்திய அணியில் வேண்டுமென்றே புறக்கணிப்பு.. தேர்வுக்குழுவை விளாசிய ஷமியின் பயிற்சியாளர்!

ஜஹானாரா ஆலம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

வங்கதேச அணிக்காக ஜஹானாரா ஆலம் இதுவரை 52 ஒருநாள் போட்டிகளில், 52 இன்னிங்ஸ்களில் 30.39 சராசரியுடன் 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவரது சிறந்த செயல்திறன் 3/18 ஆகும். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஆலம் 83 போட்டிகளில் விளையாடி, 24.03 சராசரியாகவும், 5.69 எகானமி ரேட்டிலும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளையும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதில், அவரது சிறந்த செயல்திறன் 5/28 ஆகும்.