AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SA 3rd ODI: ஜெய்ஸ்வால் சதம்.. ரோஹித், விராட் அரைசதம்.. வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா!

IND vs SA 3rd ODI Highlights: 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தொடரின் முந்தைய இரண்டு போட்டிகளில் ஜெய்ஸ்வால் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

IND vs SA 3rd ODI: ஜெய்ஸ்வால் சதம்.. ரோஹித், விராட் அரைசதம்.. வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா!
இந்தியா - தென்னாப்பிரிக்காImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Dec 2025 21:31 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றுல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதே நேரத்தில் அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியும் அரைசதங்களை அடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதற்கு பதிலளித்த இந்திய அணி 61 பந்துகள் மீதமுள்ள நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

ALSO READ: ஒருநாள் வரலாற்றில் முதல் சதம்.. முத்திரை பதித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தொடரின் முந்தைய இரண்டு போட்டிகளில் ஜெய்ஸ்வால் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த அழுத்தத்தின் காரணமாக, ஜெய்ஸ்வால் 75 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். மேலும், ரோஹித் சர்மாவுடன் 155 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டார். இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 121 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இதன்மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களிலும் சதம் அடித்த 6வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் இப்போது பெற்றுள்ளார்.

ALSO READ: குல்தீப் எடுத்த முக்கிய விக்கெட்.. குஷியில் கோலி க்யூட் நடனம்..!

தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்த இந்திய அணி:


இன்று அதாவது 2025 டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த தொடர் ஏற்கனவே 1-1 என சமநிலையில் இருந்தது, மேலும் இந்திய அணி 39 ஆண்டுகால அச்சுறுத்தலை எதிர்கொண்டது. 1986-87 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் அணி இந்தியாவை தோற்கடித்தது. அதன் பின்னர், ஒரே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு தொடர்களையும் இந்திய அணி ஒருபோதும் இழந்ததில்லை. அதேநேரத்தில், இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் விசாகப்பட்டினத்தில் தோற்கும் அபாயத்தில் இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் வலுவான செயல்திறனால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

Follow Us