India Cricket Sponsorship: இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எது..? ஏல திட்டத்தை வகுத்த பிசிசிஐ!

BCCI Sponsorship Auction 2025: பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஏலத்தை புதிய கடுமையான விதிகளுடன் தொடங்கியுள்ளது. பணம் தொடர்பான விளையாட்டுகள், பந்தயம், சூதாட்டம் மற்றும் கிரிப்டோ தொடர்புடைய நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், Dream11 போன்ற நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்பை கைவிட்டுள்ளன.

India Cricket Sponsorship: இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எது..? ஏல திட்டத்தை வகுத்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

03 Sep 2025 11:51 AM

 IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமைகளுக்கான புதிய ஏல செயல்முறையை பிசிசிஐ நேற்று அதாவது 2025 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த முறை பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சர் குறித்து கடுமையான விதிகளை முன்வைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புதிய சட்டங்கள் காரணமாக, பணம் தொடர்பான விளையாட்டு, பந்தயம், சூதாட்டம் அல்லது கிரிப்டோகரன்சி தொடர்பான எந்த நிறுவனமும் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது. முன்னதாக, கடந்த சில ஆண்டுகளில் ட்ரீம் 11 (Dream11) மற்றும் My11Circle போன்ற நிறுவனங்கள் BCCI-க்கு சுமார் ரூ.1,000 கோடி நிதியுதவி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது புதிய சட்டங்கள் காரணமாக, இந்த நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட்டை முற்றிலுமாக விட்டு வெளியேறிவிட்டன. இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ள Dream11 முடிவு செய்துள்ளது.

ALSO READ: ஆசியக் கோப்பைக்கு முன்பு அதிர்ச்சி.. பிசிசிஐ – ட்ரீம் 11 ஒப்பந்தம் முறிவு.. டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுமா இந்திய அணி?

ஸ்பான்சர்ஷிப்பை கைவிட்ட Dream11:

கடந்த 2023ம் ஆண்டு இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ட்ரீம்11 நிறுவனம் ரூ.358 கோடிக்கு வாங்கியது. இது 2026ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது புதிய சட்டத்தின் காரணமாக, ட்ரீம்11 நிறுவனம் இந்தியாவில் அதன் பண விளையாட்டு வணிகத்தை மூடிவிட்டது. இதன் காரணமாக இந்த ஸ்பான்சர்ஷிப்பையும் கைவிட வேண்டியதாயிற்று. ட்ரீம்11 நிறுவனத்தின் இந்த முடிவுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சில பிராண்டுகள் நேரடியாக

இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ ஆன்லைன் பண விளையாட்டு, பந்தயம் கட்டுதல், சூதாட்டம் அல்லது கிரிப்டோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்த ஸ்பான்சர்ஷிப் பந்தயத்தில் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ தனது புதிய விதிகளில் தெளிவுபடுத்தியுள்ளது. கூடுதலாக, மது, புகையிலை, ஆபாசம் போன்ற தார்மீக ரீதியாக ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் நிறுவனங்களும் இந்த செயல்முறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிறுவனமும் மாற்று பிராண்டிங்கைப் பயன்படுத்தி, அதாவது வேறு பெயர் அல்லது அடையாளத்தைப் பயன்படுத்தி ஏலம் எடுக்க முயற்சிக்க முடியாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் பல வணிக வகைகளில் செயல்பட்டு, இவற்றில் ஒன்று கூட தடைசெய்யப்பட்டால், அது ஸ்பான்சர்ஷிப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டதாகக் கருதப்படும்.

ALSO READ: விலகிய ட்ரீம் 11.. ஸ்பான்சராக வர ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனம்.. பிசிசிஐ முடிவு என்ன?

ஏலதாரர்களுக்கு கடுமையான நிபந்தனைகள்:


இந்த டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்காக ஏலம் எடுக்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டு வருவாய் அல்லது நிகர மதிப்பு ரூ. 300 கோடியாக இருக்க வேண்டும். ஏலச் செயல்முறைக்காக ஆர்வமுள்ள தரப்பினர் (IEOI) ஆவணத்தை வாங்குவதற்கான கடைசி தேதி வருகின்ற 2025 செப்டம்பர் 12 ஆகும். அதே நேரத்தில் ஏலத்தில் பங்கேற்கும் கடிதத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 2025 செப்டம்பர் 16ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories
IND W vs SA W Final : பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?
IND W vs SA W: பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. இதுவரை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
IND vs AUS 2nd T20: 5 ஆண்டுகளுக்கு பிறகு! சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
Womens World Cup: 25 ஆண்டுகளுக்குப் பிறகு! மகளிர் உலகக் கோப்பையில் புதிய அணி சாம்பியன்..? இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா?
ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி
IND W vs AUS W Semi Final: கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்.. நாக் அவுட்டில் நங்கூர ரன் சேஸ்.. இந்திய மகளிர் குவித்த சாதனைகள்!