AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல மடங்கு உயரும் சேவை கட்டணங்கள்!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், தங்கத்தேர் உலா உள்ளிட்ட பல்வேறு சேவை கட்டணங்களை பல மடங்கு உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டுள்ள தகவல், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டண உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல மடங்கு உயரும் சேவை கட்டணங்கள்!
திருச்செந்தூர் முருகன் கோவில்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 24 Jun 2026 05:31 AM IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தங்கத்தேர் உலா மற்றும் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சேவை கட்டணங்களை பல மடங்கு உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சண்முகார்ச்சனை கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகக் கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் கடுமையாக உயர்த்தப்பட இருப்பதாக உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு முடிவுக்கு ஆன்மிக பக்தர்களும் பொதுமக்களும் தங்களது கடுமையான எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த உத்தேச மாற்றங்கள் குறித்த தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் வரும் 7-ஆம் தேதிக்குள் கோயில் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சங்களில் உயரும் கட்டணங்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தற்போதைய கடுமையான விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டும், கோயிலின் வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையிலும் சேவை கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நலனை மேம்படுத்தும் நோக்கில், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த உத்தேச கட்டண உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பல மடங்கு உயர்த்தப்படும் முக்கிய சேவை கட்டணங்கள்

கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய உத்தேசப் பட்டியலின்படி, பெரும்பாலான முக்கிய வழிபாடுகளின் கட்டணங்கள் திகைப்பூட்டும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தங்கரத உலா கட்டணம் ₹2,500-லிருந்து ₹5,000 ஆகவும், இதற்கான நிரந்தர வைப்பு நிதி ₹50,000-லிருந்து ₹1 லட்சமாகவும் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல், சண்முகார்ச்சனை கட்டணம் ₹5,000-லிருந்து ₹30,000 ஆகவும், மூலவர் அபிஷேகத்திற்கான கட்டணம் ₹1,500-லிருந்து (இரு நபர்களுக்கு) ₹10,000 ஆகவும் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. மேலும், ஒன்பது கால பூஜைக்கான கட்டணம் ₹1,500-லிருந்து ₹6,500 ஆக உயர்த்தப்படுவதோடு, அதன் நிரந்தர வைப்பு நிதி ₹20,000-லிருந்து ₹90,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு தரிசன முறையில் மாற்றம் மற்றும் பொதுமக்கள் கருத்து

அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டண முறையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாதாரண நாட்களில் ₹500 மற்றும் திருவிழா நாட்களில் ₹2,000 என வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனிவரும் நாட்களில் அனைத்து தினங்களுக்கும் பொதுவான கட்டணமாக ₹2,500 நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் இருந்தால், அதனை வரும் 7-ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் கோயில் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து லாபம் பெருகும் வேளையில், வருவாய் இழப்பைக் காரணம் காட்டி இப்படி கட்டணங்களை உயர்த்துவது நியாயமற்றது என பக்தர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow Us