Facial Massage: ஐஸ் கட்டி கொண்டு 5 நிமிட மசாஜ்… முகம் இவ்வளவு பொலிவு பெறுமா..?

Ice Facial Massage: ஐஸ் கட்டிகளால் முகத்தை மசாஜ் செய்வது பல நன்மைகளை தரும். இருப்பினும், ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தைப் பராமரிக்க பலர் ஐஸ் கட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐஸ் கட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்துவது சருமத்திற்கு உண்மையில் நன்மை பயக்குமா?

Facial Massage: ஐஸ் கட்டி கொண்டு 5 நிமிட மசாஜ்... முகம் இவ்வளவு பொலிவு பெறுமா..?

ஐஸ் மசாஜ்

Published: 

15 Oct 2025 20:31 PM

 IST

சருமத்திற்கு ஐஸ் (Ice Cube) மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதன் பயன்பாடு பல சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு சிறிய ஐஸ் துண்டை முகத்தில் தேய்ப்பது (Facial massage) இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, துளைகளை சுருக்குகிறது, வீக்கம் மற்றும் சிவப்பு புள்ளிகளை குறைக்கிறது. மேலும், சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறது. பிரபலங்கள் தங்கள் முகத்தை ஐஸ் தண்ணீரில் கழுவுவது அல்லது அதைப் பயன்படுத்துவது பற்றி வீடியோவாக பாத்திருப்போம், கேள்வி பட்டிருப்போம்.  அதே போல் நீங்களும் இதைப் பயன்படுத்தி மசாஜ் செய்வது எவ்வாறு சரும அழகை பராமரிக்கலாம்.

ஐஸ் கட்டி கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

ஐஸ் கட்டிகளால் முகத்தை மசாஜ் செய்வது பல நன்மைகளை தரும். இருப்பினும், ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தைப் பராமரிக்க பலர் ஐஸ் கட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐஸ் கட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்துவது சருமத்திற்கு உண்மையில் நன்மை பயக்குமா? மேலும் அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்போம்.

ALSO READ: இளம் வயதிலேயே முக சுருக்கமா..? இவை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

ஒரு நாளைக்கு எவ்வளவு முறை ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம்..?

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஐஸ் பயன்படுத்துவது நல்லது. ஐஸ் கட்டிகள் சருமப் பிரச்சினைகளைப் போக்க உதவும். அதேநேரத்தில், ஐஸ் கட்டிகளை அதிகமாகப் பயன்படுத்துவது சருமத்தை வறண்டு போகச் செய்யும்.

முகத்தில் ஐஸை பயன்படுத்துவதை யார் தவிர்க்க வேண்டும்?

பெரும்பாலான மக்களுக்கு முக ஐஸ் மசாய் செய்வது பாதுகாப்பானது. ஆனால் சில சூழ்நிலைகளில் சிலர் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பின்னாடி உள்ள காரணங்கள்:

மிகவும் வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம்:

உங்களுக்கு மிகவும் வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், உங்கள் முகத்தில் அடிக்கடி ஐஸ் கட்டியை தடவினால், அது எரிச்சல் மற்றும் சிவப்பை ஏற்படுத்தும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்லதல்ல. இதற்காக, ஐஸை குறைவாக அல்லது நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதை ஒரு பருத்தி துணியில் சுற்றி, தோலில் நேரடியாக தேய்க்காமல் மெதுவாகத் தேய்க்கவும். இது உங்களுக்கு இன்னும் நன்மைகள் கிடைக்கும்.

முக சிகிச்சைகள்:

நீங்கள் அழகு சிகிச்சை, லேசர், தோல் உரித்தல் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், உங்கள் முகத்தில் ஐஸ் மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும். இதில், உங்கள் சருமம் இயற்கையாகவே குணமடையட்டும். அப்படி இல்லையென்றால், நேரடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

கற்றாழையை ஐஸ் கட்டிகள்:

கற்றாழை ஜெல்லை ஒரு ஐஸ் கட்டி தட்டில் வைத்து உறைய வைக்கலாம். கற்றாழை துண்டுகளை தண்ணீர் அல்லது பிற பொருட்களுடன் கலந்து ஒரு ஐஸ் கட்டி தட்டில் உறைய வைக்கலாம். இந்த துண்டுகளை உங்கள் முகத்தில் தடவுவது சருமத்தை ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும். மேலும், உங்கள் சருமத்தின் அமைப்பையும் மேம்படுத்தும்.

ALSO READ: மன ஆரோக்கியத்தை மேம்படுத்தணுமா? முக்கியமான 6 விஷயங்கள்!

ஐஸ் மசாஜ் செய்ய சரியான நேரம் எது..?

ஏதேனும் விசேஷங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் மேக்கப்பிற்கு முன் ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம். அதேபோல், தூங்க செல்வதற்கு முன் ஐசிங் செய்வது மிகவும் நன்மை பயக்கும். இது உங்கள் சருமத்திற்கு சில மணிநேர நிவாரணம் அளிக்கிறது. உங்கள் முக தோல் எரிச்சலடைந்தால், ஐஸ் கட்டிகள் நன்மை பயக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஐசிங் செய்யுங்கள். அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.