AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே தளத்தில் அனைத்து சேவைகளை பெற ‘ரெயில்ஒன் சூப்பர் செயலி’

Ticket Booking Update: ரெயில்ஒன் சூப்பர் செயலி மூலம் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் புதிய அமைப்பு அறிமுகமாகிறது. தட்கல் முன்பதிவு நேரம் 3–5 வினாடிகளாக குறைந்து மோசடி தடுப்பு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் ரயிலுக்கு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் பாதுகாக்கப்படும்.

ஒரே தளத்தில் அனைத்து சேவைகளை பெற ‘ரெயில்ஒன் சூப்பர் செயலி’
ரெயில்ஒன் சூப்பர் செயலிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Mar 2026 16:15 PM IST

இந்தியாவில் தினமும் சுமார் 2.3 கோடி மக்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்த பெரும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க இந்திய ரயில் 1986-ம் ஆண்டு முதல் பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) எனப்படும் முன்பதிவு முறையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த அமைப்பு பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வந்தது. குறிப்பாக தட்கல் முன்பதிவு நேரங்களில் செயலி செயலிழப்பது, டிக்கெட் பதிவு செய்யும்போது தாமதம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. தினமும் டிக்கெட் முன்பதிவு செய்ய முயலும் பலருக்கும் இந்த தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக டிக்கெட் பெறுவது கடினமான ஒன்றாக மாறியது.

புதிய தலைமுறை தொழில்நுட்ப அமைப்பு அறிமுகம்

இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய ரயில் தற்போது அடுத்த தலைமுறை டிக்கெட் முன்பதிவு அமைப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய அமைப்பு கிளவுட்-நேட்டிவ் மைக்ரோ சர்வீசஸ் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதாகும். தற்போது பயன்படுத்தப்படும் முன்பதிவு அமைப்பு ஒரு நிமிடத்திற்கு சுமார் 8 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டது. ஆனால் புதிய அமைப்பு ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறனை வழங்கும். இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை முன்பை விட 5 மடங்கு வேகமாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்கல் முன்பதிவில் ஏற்படும் மாற்றங்கள்

புதிய அமைப்பு அறிமுகமான பிறகு தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் பெரிதும் குறையும். இதுவரை தட்கல் முன்பதிவின் போது 30 வினாடிகள் வரை தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நேரம் 3 முதல் 5 வினாடிகளுக்குள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தானாக கண்டறிந்து சரிசெய்யும் வசதியும் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையாகவே டிக்கெட் பெற வேண்டிய பயணிகளுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.

மோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் ஏஜென்ட் மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய அமைப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதிக தேவை உள்ள முன்பதிவுகளுக்கு ஆதார் OTP சரிபார்ப்பு மற்றும் முக அங்கீகாரம் போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் இணையதள மோசடிகள் மற்றும் கருப்பு சந்தை டிக்கெட் விற்பனை குறையும். அதேபோல் குபெர்னெட்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் கிளஸ்டர்கள் மூலம் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக அளவில் டிக்கெட்டுகளை கையாளும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ரெயில்ஒன் சூப்பர் செயலி’ – ஒரே தளத்தில் அனைத்து சேவைகள்

பி.ஆர்.எஸ்., யு.டி.எஸ். மற்றும் இ-டெண்டரிங் போன்ற சேவைகள் அனைத்தும் ‘ரெயில்ஒன் சூப்பர் செயலி’ என்ற ஒரே தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் ஒரே உள்நுழைவு மூலம் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல், பணத்தை திரும்ப பெறுதல், PNR நிலை அறிதல், இருக்கை நிலை விவரம் போன்ற அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும். மேலும் தற்போதைய இருக்கை நிலை, நடைமேடை எண், டிக்கெட் கட்டண விவரம் போன்ற தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும். காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பும் இதன் மூலம் மேம்படும்.

வருவாய் உயர்வு மற்றும் எதிர்கால திட்டம்

இந்த புதிய திட்டத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகள் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வரை பாதுகாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தட்கல் கருப்பு சந்தை மூலம் ஏற்படும் ரூ.500 கோடி இழப்பும் கட்டுப்படுத்தப்படும். பிரீமியம் ரயில்களில் மாறும் விலை நிர்ணயம் மூலம் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2047-ம் ஆண்டை நோக்கி உருவாக்கப்பட்ட இந்த புதிய அமைப்பு, எதிர்கால அதிவேக ஹைப்பர்லூப் ரயில்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1986-ல் இருந்த 2G டிக்கெட் முறையிலிருந்து 2026-ம் ஆண்டின் 6G டிக்கெட் முன்பதிவு முறைக்கு இந்திய ரயில் முன்னேறுகிறது.

Follow Us