பிரதமர் மோடியின் பீகார் பயணம்.. கினியா குடியரசிற்காக இந்தியாவில் தயார் செய்யப்பட்ட 150 ரயில் இன்ஜின்கள்..
PM Modi: இந்தியாவின், ” இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் சுமார் 150 அதிக குதிரை திறன் கொண்ட ரயில் இன்ஜின்களை கினியா குடியரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

கோப்பு புகைப்படம்
இந்தியாவின் ஏற்றுமதி லட்சியங்களுக்கு ஒரு புதிய முன்னேற்றமாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஜூன் 20, 2025 தேதியான இன்று கினியா குடியரசுக்கு (Guinea Republic ) ஏற்றுமதி செய்வதற்காக பிஹாரில் கட்டமைக்கப்பட்ட முதல் ஏற்றுமதி இன்ஜினை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். சரண் மாவட்டத்தில் உள்ள மர்ஹோவ்ரா டீசல் லோகோமோட்டிவ் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த இன்ஜின்கள் ”இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குனர் திலீப் குமார் இது தொடர்பாக பேசுகையில், ”இந்த ஆலை முன்னதாக இந்திய ரயில்வேக்காக பிரத்தியேகமாக இன்ஜின்களை உற்பத்தி செய்தது. ஆனால் அதிகரித்த திறனுடன் இந்தியா இப்போது உலகளாவிய என்ஜின் ஏற்றுமதி சந்தையில் நுழைகிறது” என தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதிக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் இன்ஜின்:
அதாவது பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் லோகோமோட்டிவ் இன்ஜின்கள் கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று அதாவது ஜூன் 20, 2025 அன்று கொடிய செய்து துவக்கி வைக்கிறார். ரயில்வே பாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குனர் திலீப் குமார் கினியா குடியரசிலிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் அதில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 150 இன்ஜின்கள் கினியா அரசுக்கு அனுப்பப்படும் என்றும் இது இரும்பு தாது சுரங்கத்திற்காக பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் முதல் ஏற்றுமதி இன்ஜின் இதுவே ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ” இந்த ரயில் இன்ஜின்கள் அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்கள், மேம்பட்ட ஏசி உந்துவிசை அமைப்பு, மின் செயலி அடிப்படையிலான கட்டுப்பாடு அமைப்புகள், பிரேக்கிங் சிஸ்டம் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ரயில் இன்ஜின்:
🚨PM Modi to flag off first locomotive for export to Guinea on June 20 in Bihar. pic.twitter.com/vYKoUbQsY3
— Indian Infra Report (@Indianinfoguide) June 19, 2025
உலக அளவில் குறிப்பாக மேற்கு ஆரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலையான கேஜ் இன்ஜின்களுக்கு அதிக தேவை இருப்பதாக திலீப் குமார் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய இரும்பு தாது சுரங்கத்தில் ஒன்றாக கினியாவின் சிமண்டோ திட்டத்திற்கு இந்த இன்ஜின்கள் மிக முக்கியமானவை எனவும் வாப்டேக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்திப் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு இந்தியாவிடம் வழங்கப்பட்டதாகவும், இதில் வாப்டேக் 75% பங்குகளையும், இந்திய ரயில்வே 25 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 726 ரயில் இன்ஜின்கள் இந்திய ரயில்வேக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 150 ரயில் இன்ஜின்கள் தற்போது கினியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ஹோவ்ரா லோகோமோடிவ் ஆலையில் சுமார் 2000 முதல் 2500 பேர் வரை பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து பேசிய சிராக் பஸ்வான்:
VIDEO | On PM Modi’s Bihar visit, Union Minister Chirag Paswan (@iChiragPaswan) says, “The way PM Modi prioritises Bihar’s development, it shows his commitment to fulfil the dream of a ‘Viksit Bihar’. Every time he visits the state, he inaugurates projects worth thousands of… pic.twitter.com/ejFrLTxfmL
— Press Trust of India (@PTI_News) June 19, 2025
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20, 2025 தேதியான இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிகார் மற்றும் ஒடிசா செல்கிறார். இந்த பயணத்தின் போது பிஹாரின் சிவானில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வைஷாலி தியோரியா ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அதேபோல் இந்த வழிதடத்தில் புதிய ரயில் சேவையையும் கொடியை அசைத்து தொடங்கி வைக்கிறார். முசாப்பூர் மற்றும் பெட்டியா வழியாக பாட்ளிபுத்ரா மற்றும் கோரக்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.