திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவி.. காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்!

Man Marries Wife to Her Lover | உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது மனைவி காதலனுடன் சேர்ந்த சாப்பாட்டில் விஷம் கலந்து தன்னை கொலை செய்ய முயன்றதை அறிந்த கணவன், அந்த பெண்ணின் காதலனுக்கே அவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவி.. காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்!

மாதிரி புகைப்படம்

Published: 

22 Jun 2025 08:00 AM

லக்னோ, ஜூன் 22 : சாப்பாட்டில் விஷம் வைக்க காதலனுடன் இணைந்து மனைவி திட்டமிட்ட நிலையில், அந்த பெண்ணை அவரது காதலனுக்கு அவரது கணவன் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி வேறு ஒரு உறவில் இருந்ததை கண்டுபிடித்த கணவன் அவருக்கு திருமணம் செய்து வைத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, கணவனே தனது மனைவிக்கு திருமணம் செய்து வைத்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாப்பாட்டில் விஷம் கலந்து கணவனை கொல்ல முடிவு செய்த மனைவி

உத்திரபிரதேச மாநிலம், கோண்டா பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ் சந்திரா. 42 வயதாகும் இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கரிஷ்மாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவியி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கரிஷ்மா மீது சந்தேகம் அடைந்த ஹரிஸ் சந்திரா அவரை கண்காணிக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று காலை ஹரிஷ் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் மறைந்திருந்து தனது மனைவியின் நடவடிக்கையை நோட்டமிட்டுள்ளார். கணவன் வேலைக்கு சென்றுவிட்டதாக நினைத்த கரிஷ்மா, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரும் கரிஷ்மாவும் உல்லாசமாக இருப்பதை ஹரிஸ் சந்திரா கண்டு கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்

அதுமட்டுமன்றி கரிஷ்மா தனது காதலுடன் இணைந்து தனது கணவனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொள்ள திட்டமிட்டதை கேட்டு அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வருவதை போல வந்த ஹரிஷ், இரவு உணவில் தனக்கு விஷம் கலந்து வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதன் காரணமாக தம்பதிக்கு மத்தியில் மீண்டும் தகராறு வந்துள்ளது. இதனால் பொறுமையை இழந்த ஹரிஸ், அடுத்த நாள் காலை ஊர் பஞ்சாயத்தை கூட்டி நடந்த விஷயத்தை பெரியவர்களிடம் கூறியுள்ளார்.

பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும் தனது விருப்பத்தின் அடிப்படையிலும் அவர் தனது மனைவியை சிவராஜிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இந்த திருமணம் கட்டாயத்தின் பெயரில் நடத்தபட்டதாக கரிஷ்மாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த நிலையில், கரிஷ்மா தனது மகளுடன் சென்ற நிலையில் ஹரிஸ் சந்திரா தனது மகன்களுடன் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.