AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7 நாட்களுக்குள் விளக்கம்.. இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

CEC Gyanesh Kumar Press Conference: வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசுகையில், 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் வழங்கப்படாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

7 நாட்களுக்குள் விளக்கம்.. இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Aug 2025 19:44 PM IST

டெல்லி, ஆகஸ்ட் 17, 2025: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்திய தேர்தல் ஆணையம் (ECI) செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், “இந்திய அரசியலமைப்பின் கீழ் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்களிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சியோ அல்லது ஆளும் கட்சியோ அல்ல. கட்சிகளுக்கு இடையே எந்த பாகுபாடும் இல்லை, அனைவரும் ஒன்றுதான். கடந்த 2 தசாப்தங்களாக, அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை கோரி வருகின்றன. இதை நிவர்த்தி செய்ய, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. வரைவுப் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்க அனைத்து வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் பங்களிக்கின்றன.

தவறான தகவல்கள் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது:

28370 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை தாக்கல் செய்ய 15 நாட்கள் மீதமுள்ளன. இந்த 15 நாட்களுக்குள் அனைத்து அரசியல் கட்சிகள், பூத் லெவல் முகவர்கள் (BLA) கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது. அடிப்படை மட்டத்தில், அனைத்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், பூத் லெவல் முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர், மேலும் அவர்கள் சான்றுகளையும் வழங்குகிறார்கள்.

மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு.. புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

ஆனால் இந்த சான்றுகள் அரசியல் கட்சிகளை சென்றடையவில்லை, அல்லது தவறான தகவல்களை பரப்ப வேண்டுமென்றே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பீகாரில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தல் ஆணையத்துடன் நிற்கும்போது, தேர்தல் ஆணையம் அல்லது வாக்காளர்கள் மீது எந்த அபிப்ராயத்தையும் தெரிவிக்க முடியாது.

உச்சநீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் நிறைவேற்றியுள்ளது:

சவால்களைத் தாக்கல் செய்வதற்கான 45 நாள் காலக்கெடு முடிந்ததும், அவர்கள் ஏன் தேர்தல்கள் குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? மேலும், 56 மணி நேரத்திற்குள், பெயர்கள் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் மாவட்ட வாரியாக தேடக்கூடிய பட்டியல்களை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க: தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 326, வாக்காளர் பட்டியலில் இடம்பெற, ஒருவர் இந்தியக் குடிமகனாகவும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. தேர்தல் பட்டியலில் பெயர்கள் தவறாக இருக்கலாம், ஆனால் இது தவறான வாக்களிப்புக்கு சமமானதல்ல. ஒருவர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். இரண்டையும் கலந்து வாக்குகள் திருடப்படுகின்றன என்று சொன்னால், அது தவறு.

7 நாட்களுக்குல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்:


குற்றச்சாட்டுகள் 1,50,000 பேர் மீது இருந்தால், இந்த வாக்காளர்கள் அனைவருக்கும் எந்த ஆதாரமும் இல்லாமல் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டுமா? நீங்கள் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் வழங்கப்படாவிட்டால், குற்றச்சாட்டுகள் தவறு என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.

Follow Us