Brain Development: இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஞாபக மறதி? இதற்கு மொபைல் போன் காரணமா?

Improve Memory Power: உங்களுக்கு நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், தகவல்களைப் புரிந்துகொள்வதில் சிரமம், மன அழுத்தம், நிலையான சோர்வு (Fatigue) மற்றும் தேவையற்ற எண்ணங்கள் போன்றவை ஏற்படும். அந்தவகையில், நீங்களும் அடிக்கடி எதையாவது மறந்துவிட்டால் இந்த செய்தி உங்களுக்கானது.

Brain Development: இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஞாபக மறதி? இதற்கு மொபைல் போன் காரணமா?

ஞாபக மறதி

Published: 

15 Jan 2026 18:39 PM

 IST

கடந்த சில மாதங்களாக அல்லது நாட்களாக நீங்கள் சிறிய விஷயங்களை கூட மறந்து கொண்டிருந்தாலோ அல்லது எதையும் நினைவில் கொள்வதில் சிரமப்பட்டாலோ, அது ‘மூளை மூடுபனி’ (Brain Fog) ஆக இருக்கலாம். இது ஆங்கிலத்தில் Brain Fog என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், தகவல்களைப் புரிந்துகொள்வதில் சிரமம், மன அழுத்தம், நிலையான சோர்வு (Fatigue) மற்றும் தேவையற்ற எண்ணங்கள் போன்றவை ஏற்படும். அந்தவகையில், நீங்களும் அடிக்கடி எதையாவது மறந்துவிட்டால் இந்த செய்தி உங்களுக்கானது. இந்தநிலையில், மூளை மூடுபனி என்றால் என்ன..? அதுகுறித்தான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குளிர்காலத்தில் யாருக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு..? இந்த அறிகுறிகள் வந்தால் கவனம்!

மூளை மூடிபனி ஏன் ஏற்படுகிறது..?

மூளை மூடுபனி மன அழுத்தத்தால் ஏற்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நினைவாற்றலை பாதிக்கிறது. இது சில நேரங்களில் உங்களுக்கு சோர்வை கூட கொடுக்கலாம். இது சில நேரங்களில் மன சமநிலையின்மைக்கு வழிவகுத்து, ஒரு நபர் பேசுவதையும் கடினமாக்குகிறது. மூளை மூடுபனி ஒரு நோய் அல்ல, மாறாக மறதி மற்றும் கவனக்குறைவின் அறிகுறியாகும். இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம். இதைப் புறக்கணித்தால், அது உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

இந்தப் பிரச்சனை முக்கியமாக ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களை பாதிக்கிறது. இதன் விளைவாக, அவர்களின் தூக்கம் சீர்குலைந்து, மன அழுத்தம் காரணமாக ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது.

ஆALSO READ: குளிர்காலத்தில் நாம் ஏன் அதிகமாக தூங்குகிறோம்? காரணம் என்ன?

தூக்கமின்மை:

மூளை மூடுபனி உடலிலும் மனதிலும் அதாவது தூக்கமின்மை மற்றும் அடிக்கடி தலைவலி போன்றவை ஏற்படும். இதனுடன், பலவீனம் மற்றும் நிலையான சோர்வு உணர்வும் இருக்கும். இதனால், மக்கள் எளிதில் எரிச்சலடைந்து சிறிய விஷயங்களை மறந்துவிடுவார்கள். எந்தவொரு பணியிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதும் பொதுவானது.

மூளை மூடுபனியைத் தவிர்க்க என்ன செய்யலாம்..?

  • முதலில் மொபைல் மற்றும் கணினி பயன்பாட்டைக் குறைக்கவும். இரண்டாவதாக, ஒரு நேர வரம்பை நிர்ணயிக்கவும்
  • வேலைக்கு ஒரு நேரத்தை அதற்குள் அதன் வேலையை முடிக்க பழகுங்கள்.
  • ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொண்டு போதுமான தூக்கத்தைப் பெறுங்கள்.
  • உங்கள் எண்ணங்களை குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வழிகள் அனைத்தும் மூளை மூடுபனியைக் குறைக்க உதவியாக இருக்கும்.
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்