Health Tips: கோடையில் கவனம்..! இந்த 5 தெரு உணவுகளை சாப்பிடாதீர்கள்..!
Summer Health Tips: கோடைக்காலத்தில் அதீத வெயிலால் உடல் நலத்தில் (Health) பாதிப்பு ஏற்படும். இந்த பருவத்தில் ஏற்படும் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தில் உணவு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, எதையும் சாப்பிடுவதற்கு முன்பு கவனமாக இருப்பது அவசியம். இந்தக் கட்டுரையில், கோடையில் நீங்கள் சாப்பிடக் கூடாத 5 தெரு உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கோடை (Summer) மட்டுமின்றி எந்த பருவ காலமாக இருந்தாலும் ஆரோக்கியத்தை பேண உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். இருப்பினும், கோடைக்காலத்தில் அதீத வெயிலால் உடல் நலத்தில் (Health) பாதிப்பு ஏற்படும். இந்த பருவத்தில் ஏற்படும் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தில் உணவு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, எதையும் சாப்பிடுவதற்கு முன்பு கவனமாக இருப்பது அவசியம். இந்தக் கட்டுரையில், கோடையில் நீங்கள் சாப்பிடக் கூடாத 5 தெரு உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஏனெனில், இவை உங்கள் செரிமானத்தைப் பாதிக்கக்கூடும்.
ALSO READ: கோடையில் வெயிலை அசால்ட் செய்யும் ஐஸ் ஆப்பிள்.. உடலுக்கு ஸ்பெஷல் பெனிஃபிட்ஸ்!
வறுத்த உணவுகள்
கோடையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உடலில் சூட்டை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தையும் கடினமாக்குகிறது. எனவே, நீங்கள் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால், அவை வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடும்.




டீ மற்றும் காபி:
கோடைக்காலத்தில் டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வது பித்த தோஷத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, வயிறு உப்புசம் போன்றவை ஏற்படுவதுடன், செரிமான செயல்முறையிலும் சிரமங்கள் உண்டாகின்றன.
நறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்:
நீண்ட நேரத்திற்கு முன்பு வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை எந்தப் பருவத்திலும் உட்கொள்ளக் கூடாது என்றாலும், அவை, குறிப்பாக கோடை காலத்தில், விரைவாக கெட்டுப்போக தொடங்கும். இவற்றை உண்பது உடலுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், செரிமானத்திலும் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. இது உணவு நஞ்சாதல் ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது .
இனிப்புகள்:
கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம், குல்ஃபி மற்றும் மில்க்ஷேக்குகள் குளிர்ச்சியை தந்தாலும், இவற்றில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்க, இவற்றை முறையாகக் குளிரூட்டுவது மிகவும் அவசியம். இல்லையெனில், வெளியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த பால் பொருட்களை உட்கொள்வது வயிற்றுக் கோளாறுக்கு வழிவகுக்கும்.
ALSO READ: சுட்டெரிக்கும் வெயிலின்போது இந்த அறிகுறிகளா..? இவற்றை ஏன் தவிர்க்கக்கூடாது..?
சாஸ், சட்னி மற்றும் ஊறுகாய்:
கோடை காலத்தில் சட்னி சாப்பிடுவது சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும். எனவே, இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:
- முதலாவதாக, அதில் அதிகப்படியான மிளகாய் மசாலா இருக்கக்கூடாது
- இரண்டாவதாக, அது பழையதாக இருக்கக்கூடாது. கோடை காலத்தில் சட்னி சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். எனவே அதை உங்கள் உணவில் கவனமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.