AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது நல்லதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Expert Health Advice : காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். டீ குடிப்பதில் ஆரம்பித்து, பிரெட்டில் ஜாம் கலந்து சாப்பிடுவதை பலருக்கும் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிடுவது நல்லதா என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது நல்லதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jul 2025 22:27 PM IST

காலையில் எழுந்தவுடன் இனிப்புகள் (Sweets) சாப்பிடுவது பலரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகறது. அது தேநீராகட்டும். பிஸ்கட் அல்லது பிரட்-ஜாம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.  உடல் வெறும் வயிற்றில் இனிப்புகளை உட்கொள்ளும்போது, இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவு திடீரென வேகமாக உயரும். இதனால் உடல் அதிக அளவில் இன்சுலின் ஹார்மோனை வெளியிடுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவு (Diabetic) மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால், அது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிடுவது உடனடி ஆற்றலையும் நல்ல உணர்வையும் தருகிறது, ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆர்.எம்.எல் மருத்துவமனையின் மருத்துவத் துறையின் டாக்டர் சுபாஷ் கிரி விளக்குகிறார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, இரத்த சர்க்கரை அளவு குறையும் போது, சோர்வு, எரிச்சல் மற்றும் ஆற்றல் குறைவது போன்ற பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.  இது அன்றைய  நாளின் செயல்திறனையும் பாதிக்கிறது. சில நிபுணர்கள் இதை எதிர்வினை இரத்தச் சர்க்கரைக் குறைவு என்று அழைக்கிறார்கள். இதில் இரத்த சர்க்கரை முதலில் உயர்கிறது. பின்னர் அது மிக வேகமாகக் குறைகிறது.

இதையும் படிக்க : கல்லீரை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 6 உணவுகள் தவிருங்கள் !

 செரிமானத்தில் ஏற்படும் விளைவுகள்

இனிப்புகளில் உள்ள பதப்படுத்தப்பட்ட சர்க்கரை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காலை நேரம் செரிமான அமைப்புக்கு மிகவும் உணர்திறன் கொண்டது. எனவே இந்த நேரத்தில் பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது பசியைத் தூண்டும் ஹார்மோனான கிரெலின் செயல்படுவதை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் பசியை உணர வைக்கும். இது உங்களை அதிகமாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். மேலும், ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளியின் கூற்றுப்படி, ஆரோக்கியமான, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளுடன் தங்கள் நாளைத் தொடங்குபவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறைவாக இருக்கும்.

இதையும் படிக்க : இளைஞர்களிடையே சிறுநீரக கற்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது?

சரியான வழி என்ன?

உங்களுக்கு இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,  காலை உணவிற்குப் பிறகு அவற்றைச் சாப்பிடுவது நல்லது. அப்போது செரிமான அமைப்பு சுறுசுறுப்பாக இருக்கும். உடல் ஆற்றலை சிறப்பாக செயலாக்க முடியும். நீங்கள் வாழைப்பழம், ஆப்பிள் அல்லது பேரீச்சம்பழம் போன்ற பழங்களை உண்ணலாம். அவை இயற்கை சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்துக்களையும் வழங்குகின்றன. இது இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகரித்து, அதை நிலையாக வைத்திருக்கும்.

Follow Us