<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ் Lifestyle, Food, Fashion, Travel Tips and Updates in Tamil, சிறந்த தமிழ்  தலைப்புச் செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/lifestyle/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/lifestyle</link>
 <description>Lifestyle Tips and updates in Tamil, சமீபத்திய லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்: Latest Lifestyle updates, Food, Travel and Fashion tips in Tamil Online at tv9tamilnews.com. Read சமீபத்திய லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ், Top stories from Tamil Madu, India and the world.</description><lastBuildDate>Tue, 16 Jun 2026 10:20:52 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமைகள் இன்னும் எத்தனை நாள் மறுக்கப்படும்?&#8221;</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/honoring-the-unsung-heroes-international-domestic-workers-day-and-their-rights-85122.html</link>	
		<pubDate>Tue, 16 Jun 2026 10:20:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/honoring-the-unsung-heroes-international-domestic-workers-day-and-their-rights-85122.html</guid>
		            
			

    	<description><![CDATA[Honoring the Unsung Heroes: ஜூன் 16-ஆம் தேதி சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வேளையில், ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாட இயக்கத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்களின் உழைப்பே அடித்தளமாக அமைகிறது. சமையல், தூய்மைப்பணி, குழந்தைகள் பராமரிப்பு என விடியல் முதல் இரவு வரை ஓய்வில்லாமல் உழைக்கும் இவர்களின் பங்களிப்பு, பல குடும்பங்கள் நிம்மதியாக அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-36.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமைகள் இன்னும் எத்தனை நாள் மறுக்கப்படும்?&#8221;" /></figure>ஒவ்வொரு குடும்பமும் எவ்விதக் கவலையுமின்றி அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சக்கரம் தொய்வின்றிச் சுழல்வதற்கும் பின்னணியில் இருக்கும் உழைப்புச் சக்திகள் வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் மகத்தான பங்களிப்பையும், மறுக்கப்படும் உரிமைகளையும் உலக அரங்கில் உரக்கச் சொல்லும் உன்னதமான நாளாக இந்த ஜூன் 16-ஆம் தேதி "சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO), இந்தத் தொழிலாளர்களுக்கான முறையான அங்கீகாரம், உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முறைப்படி உருவாக்கியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் நினைவாகவே ஆண்டுதோறும் இந்நாள் உலகெங்கும் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகிறது.
<h3>விடியல் முதல் இரவு வரை ஓய்வில்லா உழைப்பு</h3>
சமையல் செய்வது, வீட்டைத் தூய்மைப்படுத்துவது, குழந்தைகளையும் முதியவர்களையும் அன்போடு பராமரிப்பது என இவர்களின் கடமைகள் விடியற்காலையில் தொடங்கி இரவு வரை நீள்கின்றன. எவ்வித ஓய்வு இடைவெளியுமின்றித் தொடரும் இவர்களின் இந்த அர்ப்பணிப்புமிக்கப் பணிதான், லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் உயர் அடுக்குக் குடும்பங்கள் நிம்மதியாகத் தங்கள் அலுவலகப் பணிகளுக்குச் செல்ல வழிவகுக்கிறது. பல குடும்பங்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறுவதற்கு இவர்களின் உழைப்பே அடித்தளமாக அமைகிறது. சுருக்கமாகக் கூறின், ஒரு வீட்டின் நிம்மதியான இயக்கமே இந்தத் தொழிலாளர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.
<h3>அங்கீகாரமின்மையும் எதிர்கொள்ளும் சவால்களும்</h3>
ஆனால், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், இன்றும் பல இடங்களில் இவர்களின் கடின உழைப்பு மிகக் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் இவர்களுக்குப் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், எப்போது வேலை போகும் என்ற பணிப் பாதுகாப்பற்ற சூழலையே அவர்கள் தினசரி எதிர்கொண்டு வருகின்றனர். உடல் உழைப்பை அதிகமாகக் கோரும் இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு முறையான மருத்துவக் காப்பீடோ அல்லது ஓய்வுகாலச் சமூகப் பாதுகாப்போ கிடைப்பதில்லை என்பது பெரும் சோகமாகும்.
<h3>கண்ணியமான வேலைச் சூழலை உறுதி செய்ய வேண்டிய தருணம்</h3>
இந்தத் தொழிலாளர் கூட்டத்தின் வாழ்நாள் தியாகத்தைப் போற்றுவது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடக் கூடாது. அவர்களுக்குரிய கண்ணியமான வேலைச் சூழலை உருவாக்குவது, முறையான மற்றும் நியாயமான ஊதியத்தை நிர்ணயிப்பது, மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு ரீதியிலான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உறுதி செய்வது ஆகியவையே இந்த நாளின் உண்மையான நோக்கமாகும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், மனிதநேயமிக்கப் பார்வையும் இவர்களுக்குக் கிடைக்கும்போதே இந்தச் சர்வதேச தினம் முழுமையடையும். கடந்த 2011-ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO), இந்தத் தொழிலாளர்களுக்கான முறையான அங்கீகாரம், உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முறைப்படி உருவாக்கியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் நினைவாகவே ஆண்டுதோறும் இந்நாள் உலகெங்கும் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>House Fly: மழை வந்ததும் வீட்டிற்குள் ஈ வருகிறதா..? விரட்ட எளிய குறிப்புகள் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-get-rid-of-those-buzzing-houseflie-that-enter-the-house-during-the-rainy-season-84839.html</link>	
		<pubDate>Sun, 14 Jun 2026 20:57:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-get-rid-of-those-buzzing-houseflie-that-enter-the-house-during-the-rainy-season-84839.html</guid>
		            
			

    	<description><![CDATA[House Flies Home Remedies: ஈக்கள் தம்மோடு பல வகையான பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் கொண்டு வருகின்றன. இதனால், உங்களுக்குப் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை உங்கள் உணவிலும் மொய்க்கின்றன. அதனால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், ஈக்கள் பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/house-flies-home-remedies.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="House Fly: மழை வந்ததும் வீட்டிற்குள் ஈ வருகிறதா..? விரட்ட எளிய குறிப்புகள் இதோ!" /></figure>மழைக்காலம் தொடங்கும் போது, ​​<a href="https://www.tv9tamilnews.com/lifestyle/remote-work-fuels-severe-isolation-and-mental-health-risks-study-finds-83723.html">வீட்டிற்குள்</a><strong> (Home Clean)</strong> ஈக்கள் வர தொடங்கும். <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/boiled-potato-water-helps-clean-silver-kitchen-hacks-tips-in-tamil-83667.html">சமையலறை</a> முதல் படுக்கையறை, கூடம் வரை எல்லா இடங்களிலும் ஈக்கள் தென்படத் தொடங்குகின்றன. வீட்டில் ஈக்களைக் கண்டால், அதை நீங்கள் சற்றும் புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில், பல இடங்களில் உள்ள அழுக்குகளில் ஈக்கள் மொய்த்துள்ளன. ஈக்கள் <strong>(Housefly)</strong> தம்மோடு பல வகையான பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் கொண்டு வருகின்றன. இதனால், உங்களுக்குப் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை உங்கள் உணவிலும் மொய்க்கின்றன. அதனால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கிடையில், வீட்டிலிருந்து இதுபோன்ற ஈக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்? வீட்டில் நீங்கள் என்ன செய்யலாம்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்...

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/smart-tips-to-choose-fresh-fish-easily-83788.html">மீன் வாங்குறீங்களா? இந்த அறிகுறிகளை மறக்காதீங்க!</a>
<h3>குப்பைகளை உடனடியாக அகற்றுங்கள்..</h3>
ஈக்கள் அசுத்தமான இடங்களில் வாழ்கின்றன. குப்பை மற்றும் அழுகிய பொருட்கள் போன்ற இடங்களை ஈக்கள் விரும்புகின்றன. அதனால்தான் பாக்டீரியாக்களும் உங்கள் வீட்டிற்குள் நுழைகின்றன. இது உணவு நஞ்சாக மாறக்கூடும். காலரா மற்றும் பிற நோய்த்தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், உங்கள் வீட்டில் உள்ள ஈக்களை நீங்கள் உடனடியாக விரட்டலாம். அதற்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் வீட்டிலேயே ஒரு செய்முறையை தயாரித்து, உங்கள் வீட்டிலிருந்து ஈக்களை விரட்டலாம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/trichy-bird-park-emerges-as-a-new-tourist-attraction-84319.html">பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!</a>
<h3>வீட்டிலிருந்து ஈக்களை எப்படி விரட்டுவது?</h3>
உங்கள் வீட்டில் உள்ள ஈக்களை விரட்ட விரும்பினால், நீங்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே ஒரு ஈ விரட்டியை தயாரிக்கலாம். இதற்கு, உங்களுக்கு ஒரு கப் தண்ணீர் மட்டுமே போதுமானது. மேலும், ஒரு கரண்டி சர்க்கரை, வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் ஆகியவையும் இதற்கு தேவைப்படும். அதன்படி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் சர்க்கரையைக் கலக்கவும். மீண்டும் அதில் வினிகரைச் சேர்த்து, சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவத்தையும் சேர்த்து, கலவையை நன்றாகக் கலக்கவும். வீட்டில் அதிக ஈக்கள் இருக்கும் இடத்தில் இந்தக் கலவையை வைக்கவும். சர்க்கரையின் இனிப்பு, ஈக்களை அந்தக் கலவையின்பால் ஈர்க்கும். ஈக்கள் இந்தக் கலவையின் அருகே வந்தவுடன், அவை அதில் சிக்கிக்கொள்கின்றன. அவற்றால் வெளியே வர முடியாது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Eye Care Tips: கண்களுக்கு கீழ் கருவளையங்களா..? அதற்கான காரணங்களும், தடுப்பு முறைகளும்..!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-prevent-dark-circles-under-the-eyes-eye-care-tips-in-tamil-84829.html</link>	
		<pubDate>Sun, 14 Jun 2026 19:34:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-prevent-dark-circles-under-the-eyes-eye-care-tips-in-tamil-84829.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dark Circles: கடுமையான சூரிய ஒளி, மாசுபாடு, அதிக உப்புள்ள உணவு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நேரம் செல்போம் அல்லது லேப் டாப் ஸ்க்ரீன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றவையும் கண்களுக்குக் கீழ் வீக்கத்தை ஏற்படுத்தலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நிலை 'பெரிஆர்பிட்டல் பஃப்பினெஸ்' (periorbital puffiness) என்று அழைக்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/dark-circles.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Eye Care Tips: கண்களுக்கு கீழ் கருவளையங்களா..? அதற்கான காரணங்களும், தடுப்பு முறைகளும்..!" /></figure>கோடைக்காலத்தின்போது <strong>(Summer)</strong> சருமம் கருமையாதல், முகப்பருக்கள், வியர்த்தல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற தோல் <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/mixing-these-ingredients-with-curd-and-applying-the-mixture-to-scalp-will-resolve-problem-of-hair-loss-84206.html">பிரச்சனைகளை</a> சந்திக்கின்றனர். கடுமையான வெப்பம் உங்கள் கண்களை<strong> (Eye Care)</strong> சுற்றியுள்ள <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/benefits-of-applying-gram-flour-and-lemon-juice-pack-on-the-face-83635.html">சருமத்தையும்</a> பாதிக்கிறது. பலருக்குக் கண்களுக்குக் கீழ் வீக்கம், கருவளையங்கள் ஆழமாதல் மற்றும் முகம் சோர்வாக தோன்றுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மக்கள் பெரும்பாலும் இதைத் தூக்கமின்மையால் ஏற்படுகின்றது என்று நினைத்து கருதிப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் அதிகரித்த வெப்பம், நீர்ச்சத்து குறைபாடு, கடுமையான சூரிய ஒளி மற்றும் சில ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கலாம்.

சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கண்களுக்குக் கீழ் ஏற்படும் வீக்கம் மற்றும் கருவளையங்கள் போன்ற பிரச்சனைகளை கணிசமாகக் குறைக்க முடியும். எனவே, கோடை காலத்தில் இது ஏன் ஏற்படுகிறது என்பதையும், இதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.

ALSO READ: முகம் கருமையாகவும் பொலிவிழந்தும் காணப்படுகிறதா? சரிசெய்யும் கடலை மாவு – எலுமிச்சை மேஜிக்!
<h3>கோடைக்காலத்தில் நம் கண்களுக்குக் கீழ் ஏன் வீக்கம் ஏற்படுகிறது?</h3>
கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருக்கும். வெப்பமான காலநிலையில், உடல் அதிகமாக வியர்ப்பதால் நீரிழப்பு ஏற்படுகிறது. மேலும், கடுமையான சூரிய ஒளி, மாசுபாடு, அதிக உப்புள்ள உணவு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நேரம் செல்போம் அல்லது லேப் டாப் ஸ்க்ரீன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றவையும் கண்களுக்குக் கீழ் வீக்கத்தை ஏற்படுத்தலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நிலை 'பெரிஆர்பிட்டல் பஃப்பினெஸ்' (periorbital puffiness) என்று அழைக்கப்படுகிறது. இதில், கண்களைச் சுற்றியுள்ள தளர்வான திசுக்களில் நீர் தேங்கி, கண்ணுக்குத் தெரியும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
<h3>கோடை காலத்தில் கருவளையங்கள் ஏன் அதிகரிக்கின்றன?</h3>
பல்வேறு காரணங்களால் கருவளையங்கள் ஏற்படலாம். சிலருக்கு, தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் அதிகமாகத் தெரிவதால் அவை ஏற்படுகின்றன. மற்ற சிலருக்கு, சோர்வு, தூக்கமின்மை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை காரணமாக இருக்கலாம். அதிகப்படியான சூரிய ஒளி சில சமயங்களில் கண்களுக்குக் கீழ் உள்ள நிறமிகளை அதிகரித்து, கருவளையங்களை மேலும் கருமையாக்கக்கூடும். நீர்ச்சத்து குறைபாடும் கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் பொலிவிழந்து, குழி விழுந்தது போல் தோற்றமளிக்கச் செய்யும்.
<h3>தவிர்ப்பது எப்படி..?</h3>
<h3>ஒத்தடம் கொடுத்தல்:</h3>
உங்கள் கண்களுக்குக் கீழ் வீக்கம் இருந்தால், குளிர் ஒத்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்விக்கப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட ஜெல் கண் மாஸ்க், குளிர்விக்கப்பட்ட கரண்டி அல்லது குளிர்விக்கப்பட்ட தேநீர் பைகளை உங்கள் மூடிய கண்களின் மீது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கலாம். இது இரத்த நாளங்களைச் சுருக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
<h3>டீ பேக்குகள்:</h3>
பச்சை மற்றும் கருப்பு டீ பேக்குகளில் காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை தற்காலிகமாகக் குறைக்க உதவும். இருப்பினும், டீ பைகள் முழுமையாக ஆறிய பின்னரே அவற்றைப் பயன்படுத்தவும். சூடான டீ பைகள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான சருமத்தை சேதப்படுத்தக்கூடும்.
<h3>நீரேற்றம்:</h3>
கோடை காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதன் அறிகுறிகள் முதலில் முகத்திலும் கண்களைச் சுற்றியும் தென்படலாம். நாள் முழுவதும் தாராளமாகத் தண்ணீர் குடியுங்கள். மேலும், வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், கண்களுக்குக் கீழ் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
<h3>உப்பை குறைக்கவும்:</h3>
அதிக உப்பு சாப்பிடுவது உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வீக்கத்தை அதிகரிக்கக்கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். இது உடலில் நீர் தேக்கத்தைக் குறைத்து, வீக்கத்தைப் போக்கவும் உதவக்கூடும்.
<h3>போதுமான அளவு தூக்கம்:</h3>
நீங்கள் தினமும் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், கருவளையங்களும் வீக்கமும் மேலும் அதிகமாகத் தெரியும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். இது சருமத்திற்கும் இரத்த நாளங்களுக்கும் மீண்டுவர நேரம் அளித்து, உங்கள் முகத்தைப் புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கச் செய்யும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/mixing-these-ingredients-with-curd-and-applying-the-mixture-to-scalp-will-resolve-problem-of-hair-loss-84206.html">தலைமுடி பிரச்சனையா? தயிரில் இதை கலந்து தேய்த்தால் சரியாகும்!</a>
<h3>கண்களைப் பாதுகாத்தல்:</h3>
கடுமையான சூரிய ஒளி, கண்களுக்குக் கீழ் நிறமாற்றத்தை அதிகரித்து, சருமத்தின் வயதாவதை விரைவுபடுத்தும். வெளியில் செல்லும்போது, ​​புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகளை அணியுங்கள் மற்றும் உங்கள் முகத்திற்கென பிரத்யேகமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான சருமத்தைப் பாதுகாக்க உதவும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இரவில் அழும் சுட்டீஸ்&#8230; நிம்மதியாய் தூங்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/health/effective-nighttime-sleep-guide-for-infants-above-6-months-84673.html</link>	
		<pubDate>Sun, 14 Jun 2026 06:29:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[உடல்நலம் அப்டேட்ஸ்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/health/effective-nighttime-sleep-guide-for-infants-above-6-months-84673.html</guid>
		            
			

    	<description><![CDATA[Infants Above 6 Months: ஆறு மாதத்திற்கு மேலான குழந்தைகள் இரவில் அடிக்கடி அழுவதற்கு பசி மற்றும் பற்கள் முளைப்பதால் ஏற்படும் வலியே முதன்மைக் காரணமாக இருப்பதால், தூங்கும் முன் போதிய உணவு அளிப்பது அவசியமாகும். தினமும் இரவில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் மென்மையான சூழலை உருவாக்கி தூங்க வைப்பதன் மூலம் குழந்தைகளின் உடலுக்கு அது உறங்குவதற்கான நேரம் என்பதை புரிய வைக்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/baby-cry.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இரவில் அழும் சுட்டீஸ்&#8230; நிம்மதியாய் தூங்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!" /></figure>ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் இரவில் அடிக்கடி விழிப்பதற்கு பசி, பற்கள் முளைத்தல் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற உடல் ரீதியான அசௌகரியங்களே முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்னதாகவே குழந்தையின் வயிறு நிரம்பும் அளவிற்கு போதிய உணவை வழங்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். தினமும் இரவில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை தூங்க வைக்கும் முறையான 'ஸ்லீப் ரூட்டின்' பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் தூக்க சுழற்சியை சீராக்க உதவும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மொபைல், டிவி போன்ற திரைகளின் வெளிச்சத்தை முற்றிலும் தவிர்ப்பது நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும். குழந்தை தூங்கும் அறையின் வெப்பநிலை மிதமாகவும், அவர்கள் அணியும் ஆடைகள் வசதியான பருத்தி துணியாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
<h3>பசி மற்றும் உடல் ரீதியான அசௌகரியங்களை கண்டறிதல்</h3>
ஆறு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திண்பண்டங்கள் அல்லது கூழ் போன்றSolid உணவுகள் கொடுக்கத் தொடங்குகிறோம். பகல் நேரத்தில் அவர்கள் போதிய அளவு சாப்பிடவில்லை என்றாலோ அல்லது செரிமானக் கோளாறுகள் இருந்தாலோ இரவில் பசியினால் அடிக்கடி விழிப்பார்கள். மேலும், இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்கும் (Teething). பற்கள் ஈறுகளைத் துளைத்துக் கொண்டு வரும்போது ஏற்படும் கடுமையான வலியும், அரிப்பும் அவர்களை தூங்கவிடாமல் செய்யும். எனவே, தூங்குவதற்கு முன் வயிறு நிரம்ப உணவு கொடுப்பதையும், பற்கள் முளைப்பதால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க மருத்துவர் ஆலோசனையுடன் மசாஜ் செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
<h3>முறையான தூக்க நேர வழக்கத்தை உருவாக்குதல் (Sleep Routine)</h3>
குழந்தைகளின் தூக்கத்தை முறைப்படுத்துவதில் 'ஸ்லீப் ரூட்டின்' எனப்படும் தூக்க நேர வழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் இரவில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை தூங்க வைப்பது அவர்களின் உடலுக்கு அது தூங்குவதற்கான நேரம் என்பதை உணர்த்தும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அறையின் வெளிச்சத்தைக் குறைப்பது, மென்மையான தாலாட்டுப் பாடல்களைப் பாடுவது, அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுவது போன்ற செயல்கள் குழந்தையை நிம்மதியான தூக்கத்திற்கு தயார் செய்யும். டிவி, மொபைல் போன்ற திரைகளின் வெளிச்சம் குழந்தையின் தூக்கத்தை தூண்டும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் என்பதால், இரவில் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
<h3>குழந்தை தானாகவே தூங்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் (Self-Soothing)</h3>
பல நேரங்களில் குழந்தைகள் தூக்கத்தில் லேசாக விழிக்கும்போது, மீண்டும் அவர்களாகவே தூங்குவதற்குத் தெரியாமல் அழத் தொடங்குகிறார்கள். தாய்ப்பால் கொடுத்தோ அல்லது தூக்கி வைத்துத் தாலாட்டியோ மட்டுமே தூங்க வைக்கும் பழக்கம் இருந்தால், இரவில் எழும்போதெல்லாம் அவர்கள் அதையே எதிர்பார்ப்பார்கள். எனவே, குழந்தை அரைகுறை தூக்கத்தில் இருக்கும்போதே அவர்களை படுக்கையில் கிடத்தி, தட்டிக் கொடுத்து தானாகவே தூங்கப் பழக வேண்டும். இதன் மூலம், நடு இரவில் விழித்தாலும் அவர்களாகவே மீண்டும் தூங்கிவிடக் கற்றுக் கொள்வார்கள். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குழந்தை உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? இந்த டிப்ஸ் உதவலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/51-parenting-rule-can-strengthen-parent-child-bond-84540.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 12:20:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/51-parenting-rule-can-strengthen-parent-child-bond-84540.html</guid>
		            
			

    	<description><![CDATA[5:1 Parenting Rule: குழந்தை வளர்ப்பில் ‘5:1 விதி’ பெற்றோர்–குழந்தை உறவை வலுப்படுத்தும் பயனுள்ள முறையாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கண்டிப்புக்கு முன் ஐந்து நேர்மறை பாராட்டுகள் அல்லது ஊக்கங்கள் வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது குழந்தைகளின் தன்னம்பிக்கையை உயர்த்தி, மனநிலையை மேம்படுத்துவதோடு பெற்றோரிடம் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/active-parenting.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குழந்தை உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? இந்த டிப்ஸ் உதவலாம்!" /></figure>இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவு பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் தவறு செய்தால் கண்டிப்பது, மதிப்பெண் குறைந்தால் திட்டுவது, ஒழுக்கம் இல்லாத நடத்தை குறித்து தொடர்ந்து கவலைப்படுவது போன்ற அணுகுமுறைகள் பல வீடுகளில் இயல்பாகிவிட்டன. ஆனால் உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ‘5:1 Parenting Rule’ எனப்படும் புதிய பெற்றோர் வழிமுறை, குழந்தைகளுடன் உறவை வலுப்படுத்துவதற்கான பயனுள்ள அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இந்த முறையின் அடிப்படை நோக்கம், குழந்தையின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்கள் செய்யும் நல்ல செயல்களை அதிகமாக கவனித்து பாராட்டுவதே ஆகும்.
<h3>‘5:1 விதி’ என்றால் என்ன?</h3>
‘5:1 விதி’ என்பது ஒரு குழந்தை செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அல்லது அதனுடன் சேர்த்து, குறைந்தது ஐந்து நேர்மறையான கருத்துகள், ஊக்கங்கள் அல்லது பாராட்டுகளை வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இது குழந்தைகளை கட்டுப்பாடின்றி வளர்க்கும் முறை அல்ல; மாறாக, அவர்கள் தங்களை மதிக்கப்படுபவர்களாக உணரும்படி செய்வதே இதன் நோக்கம். “எப்போதும் கண்டிப்பு மட்டுமே கேட்கும் குழந்தைகள், தங்களிடம் குறைதான் அதிகம் என்று நினைக்கத் தொடங்கலாம்” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தையின் நல்ல செயல்களை அடிக்கடி பாராட்டுவது, அவர்களின் மனநிலையையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
<h3>இந்த முறையை வீட்டில் எப்படி செயல்படுத்தலாம்?</h3>
பெற்றோர் தினசரி வாழ்க்கையில் சிறிய மாற்றங்களின் மூலம் இந்த அணுகுமுறையை பின்பற்ற முடியும். உதாரணமாக, குழந்தை தனது பொருட்களை ஒழுங்காக வைத்தால் அதைப் பாராட்டுதல், சகோதரர்களுடன் சண்டையில்லாமல் விளையாடினால் கவனித்து நல்ல வார்த்தைகள் கூறுதல், முயற்சியைக் கூட மதித்து பாராட்டுதல் போன்றவை இதில் அடங்கும். குழந்தை தவறு செய்தபோதும், அதற்கு முன் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை நினைவூட்டும் விதமாக அணுகினால், அவர்கள் எதிர்ப்போடு அல்லாமல் புரிதலோடு பதிலளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காக எண்ணிக்கை வைத்து கணக்கிட வேண்டிய அவசியமில்லை; பெற்றோர் தங்கள் அணுகுமுறையில் நேர்மறையை அதிகரிப்பதே முக்கியம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
<h3>குழந்தையின் மனநிலை மற்றும் தன்னம்பிக்கையில் ஏற்படும் மாற்றம்</h3>
தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடும். ஆனால் அதிகமான பாராட்டும் ஊக்கமும் கிடைக்கும் சூழலில் வளரும் குழந்தைகள், தங்களைப் பாதுகாப்பாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் உணர்வார்கள். இதன் விளைவாக, பெற்றோரிடம் நம்பிக்கை அதிகரித்து, குடும்ப உறவுகள் வலுப்படும். தண்டனையைத் தவிர்க்க நல்லவராக நடப்பதை விட, சரியானது என்பதால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளிடம் உருவாகும். இது அவர்களின் உணர்ச்சி வளர்ச்சிக்கும் சமூக பழக்கங்களுக்கும் நீண்டகால நன்மை தரும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
<h3>எல்லா வயது குழந்தைகளுக்கும் பொருந்துமா?</h3>
இந்த ‘5:1 விதி’ சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படக்கூடியதாக கருதப்படுகிறது. சிறுவர்களுக்கு உற்சாகமான பாராட்டுகள் பொருத்தமாக இருக்கும் நிலையில், இளம்வயதினருக்கு மென்மையான மற்றும் உண்மையான அங்கீகாரங்கள் சிறப்பாக செயல்படும். குழந்தையின் வயதுக்கு ஏற்ப அணுகுமுறை மாறினாலும், அன்பு, புரிதல் மற்றும் ஊக்கத்தை அதிகப்படுத்தும் அடிப்படை நோக்கம் மாறாது. இதனால் பெற்றோர்–குழந்தை உறவு வலுவடைவதோடு, வீட்டில் மனஅழுத்தமும் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/trichy-bird-park-emerges-as-a-new-tourist-attraction-84319.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 21:15:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/trichy-bird-park-emerges-as-a-new-tourist-attraction-84319.html</guid>
		            
			

    	<description><![CDATA[Trichy Bird Park: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள பறவை பூங்கா, சுற்றுலா மற்றும் இயற்கை விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மற்றும் வண்ணமயமான பறவைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ₹200 டிக்கெட் கட்டணத்தில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் இயற்கையை நெருக்கமாக அனுபவிக்கும் புதிய சுற்றுலா மையமாக இது மாறியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-24.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!" /></figure>திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள பறவை பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக்கும் குடும்ப பொழுதுபோக்கு மையங்களின் விரிவாக்கத்திற்கும் முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. நகர மக்களுக்கும், வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இயற்கையையும் அரிய பறவை இனங்களையும் நெருக்கமாக அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பறவைகள் பற்றிய விழிப்புணர்வை பெறும் கல்வி மையமாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
<h3>அடிக்கல் நாட்டப்பட்ட வரலாறு</h3>
இந்தப் பறவை பூங்காவிற்கான அடிக்கல் 2023-ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே இது திருச்சியின் எதிர்கால சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. நகர வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் சார்ந்த பொழுதுபோக்கையும் இணைக்கும் முயற்சியாக இந்தத் திட்டம் கவனம் பெற்றது.
<h3>பிரம்மாண்ட திறப்பு விழா</h3>
பல்வேறு கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பூங்கா அதிகாரப்பூர்வமாக 2025 பிப்ரவரி 9ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த விழா, திருச்சியின் சுற்றுலா வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய நிகழ்வாக கருதப்பட்டது.
<h3>பறவைகளின் வண்ணமயமான உலகம்</h3>
பூங்காவின் முக்கிய சிறப்பம்சம் உலகின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆகும். வண்ணமயமான கிளிகள், அலங்காரப் பறவைகள் மற்றும் அரிய இனங்கள் வரை பல உயிரினங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் நேரடியாக பறவைகளை நெருக்கமாகக் காணும் அனுபவத்தை பெறும் வகையில் சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை ஒத்த அமைப்புகள் காரணமாக குடும்பங்களும் குழந்தைகளும் அதிக ஆர்வத்துடன் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.
<h3>டிக்கெட் கட்டணம் மற்றும் பார்வையாளர் அனுபவம்</h3>
பூங்காவிற்கு வருகை தரும் மக்களுக்கான டிக்கெட் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 120 செ.மீ.க்கு மேல் உயரம் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒருவருக்கு ₹200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் பூங்காவின் பராமரிப்பு தரம் மற்றும் உள்ளமைப்புகளை கருத்தில் கொண்டால் ஏற்றதாகவே பலர் கருதுகின்றனர். வாகன நிறுத்த வசதி, சுத்தமான நடைபாதைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவை பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.
<h3>சுற்றுலாவில் புதிய அடையாளம்</h3>
திருச்சி பறவை பூங்கா தற்போது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையமாக மட்டுமல்லாமல், குடும்பங்களுக்கான ஓய்வு இடமாகவும் மாணவர்களுக்கான இயற்கை அறிவு மையமாகவும் வளர்ந்து வருகிறது. நகரின் சுற்றுலா முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பூங்கா, வருங்காலத்தில் தமிழகத்தின் முக்கிய இயற்கை சுற்றுலா மையங்களில் ஒன்றாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒரு விளம்பரம் கூட இல்லாமல் தினமும் 5 கோடி பூரிகள் விற்றுத் தீரும் அசாத்திய இந்திய வர்த்தகம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/pani-puri-breaks-records-as-indias-unadvertised-6000-crore-street-food-empire-84305.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 20:15:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/pani-puri-breaks-records-as-indias-unadvertised-6000-crore-street-food-empire-84305.html</guid>
		            
			

    	<description><![CDATA[Pani Puri Business: இந்தியாவில் எந்தவித விளம்பரமும் இன்றி மக்களின் அன்றாடப் பழக்கமாக மாறியுள்ள பானி பூரி வணிகம், தினமும் 5 கோடி பூரிகளை விற்பனை செய்து ஆண்டுக்கு ₹6,000 கோடி ஈட்டும் பிரம்மாண்ட சந்தையாக உருவெடுத்துள்ளது. டெல்லியில் கோல்கப்பா, மும்பையில் பானி பூரி எனப் பிராந்திய கலாச்சாரத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள இந்தத் தொழில், சந்தைப்படுத்துபவர்களின் ஒரு தீராத கனவு வடிவமாகத் திகழ்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/07/pani-puri-recipe.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒரு விளம்பரம் கூட இல்லாமல் தினமும் 5 கோடி பூரிகள் விற்றுத் தீரும் அசாத்திய இந்திய வர்த்தகம்!" /></figure>இந்தியாவின் தெருவோர உணவுகளில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ள 'பானி பூரி', நாட்டின் மிக ஸ்திரமான மற்றும் லாபகரமான நுகர்வோர் வணிகமாக உருவெடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களைத் தங்களுக்குப் பழக்கப்படுத்தவும் கோடிக்கணக்கில் நிதியை விளம்பரங்களுக்காக வாரியிறைத்து வருகின்றன. ஆனால், எந்தவித விளம்பரமும் இன்றி, மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பழக்கமாகவே பானி பூரி மாறிப்போயுள்ளது. வர்த்தக உலகில் சாதிப்பதற்கு மிகவும் கடினமான இலக்காகக் கருதப்படும் 'தொடர் நுகர்வு' (Repeat consumption at scale) என்ற நிலையை, இந்தத் தொழில் மிக எளிதாகச் சாதித்துக் காட்டியுள்ளது. நாடு முழுவதும் தினமும் சுமார் 5 கோடி பூரிகள் விற்பனையாகும் நிலையில், ஆண்டுக்குத் தோராயமாக ₹6,000 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட சந்தையாக இது உருவெடுத்து, ஒட்டுமொத்த வணிக உலகையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
<h3>பிராந்திய கலாச்சாரம்: பெயர்கள் மாறினாலும் மாறாத சுவையும் தகவமைப்பும்</h3>
டெல்லியில் 'கோல்கப்பா', மும்பையில் 'பானி பூரி', கொல்கத்தாவில் 'பூச்கா' என இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இது அழைக்கப்பட்டாலும், இதன் அடிப்படைத் தனித்துவமும் சுவையும் மாறுவதே இல்லை. அந்தந்த பிராந்திய மக்களின் கலாச்சாரம் மற்றும் சுவைத்தேவைக்கு ஏற்ப தன்னை மிக கச்சிதமாகத் தகவமைத்துக் கொள்ளும் தனித்திறன் இந்த உணவுக்கு உண்டு. இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் சுவைக்கு ஏற்ப காரம், புளிப்பு அல்லது இனிப்பு என உருமாறி, அனைத்துத் தரப்பு மக்களையும் இது கவர்ந்திழுக்கிறது. இதனாலேயே, சந்தைப்படுத்துதல் (Marketing) துறையில் இருப்பவர்களின் ஒரு தீராத கனவு வடிவமாக இந்த வணிக மாதிரி பார்க்கப்படுகிறது.
<h3>பொருளாதாரப் பின்னணி: குறைந்த முதலீடும் உடனடிப் பணப்புழக்கமும்</h3>
இதன் பொருளாதாரக் கணக்குகளை ஆராய்ந்து பார்த்தால், நுகர்வோர் சந்தையில் இது ஏன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது தெளிவாகப் புரியும். பொதுவாக ஒரு பிளேட் பானி பூரி ₹20 முதல் ₹60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான மூலப்பொருட்களின் செலவு மிகக் குறைவு என்பதால், இதில் கிடைக்கும் லாப வரம்பு (Profit margin) மிக அதிகம். அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தினமும் தேடி வருவது, உடனடிப் பணப்புழக்கம் (Immediate cash cycles) மற்றும் மிகக் குறைந்த முதலீட்டுத் தேவை போன்ற சாதகமான அம்சங்கள் இந்தத் தொழிலில் நிறைந்துள்ளன.

இதன் காரணமாகவே, பெருநகரங்களில் உள்ள பானி பூரி வியாபாரிகள் தங்களின் கடின உழைப்பால் மாதத்திற்கு ₹75,000 முதல் ₹2.5 லட்சம் வரையிலும், ஆண்டுக்கு ₹10 லட்சம் முதல் ₹25 லட்சம் வரையிலும் நிகர லாபமாகவே சம்பாதிக்கின்றனர். இத்தகைய அசாத்தியமான லாபகரமான பொருளாதாரக் கணக்குகளை, சந்தையில் பல கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்ற பெரிய ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்கள் கூடப் பார்த்துப் பொறாமைப்படும் நிலை இன்று உருவாகியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உலகையே உலுக்கும் தனிமை: சர்வதேசப் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/india-ranks-second-globally-in-loneliness-crisis-survey-reveals-84287.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 19:10:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/india-ranks-second-globally-in-loneliness-crisis-survey-reveals-84287.html</guid>
		            
			

    	<description><![CDATA[Loneliness Crisis: உலக அளவில் தனிமை உணர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதத்தினர் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தீவிரமான தனிமை உணர்வையும், மற்றவர்களிடமிருந்து தனித்துவிடப்பட்ட மனநிலையையும் எதிர்கொள்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-23.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உலகையே உலுக்கும் தனிமை: சர்வதேசப் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்!" /></figure>உலக அளவில் பெருகி வரும் மனநலச் சிக்கல்களில் ‘தனிமை உணர்வு’ தற்போதைய நவீன சமூகத்தின் ஆகப்பெரும் சாபமாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட சர்வதேச அளவிலான ஆய்வு ஒன்று, உலக நாடுகளை உலுக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தனிமை உணர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் உலகளாவிய பட்டியலில், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக, பாரம்பரியமான குடும்பப் பிணைப்புகளும், சமூக உறவுகளும் பெருமளவில் சிதைந்து போயுள்ளன.
<h3>இந்தியாவை ஆட்கொள்ளும் 58 சதவீத அபாயம்</h3>
இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்கள் நம்மை உற்றுநோக்க வைக்கின்றன. இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், சுமார் 58 சதவீதத்தினர் தங்களது அன்றாட வாழ்க்கையில் மிகக் கடுமையான தனிமை உணர்வையும், சமூகத்திலிருந்து தாங்கள் முற்றிலும் தனித்துவிடப்பட்ட ஒரு மனநிலையையும் எதிர்கொள்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுக்குள் இந்தத் துயரத்தைச் சுமந்து திரிவது ஒரு மறைமுகப் பெருந்தொற்றாகவே பார்க்கப்படுகிறது.
<h3>தொழில்நுட்ப வளர்ச்சியும் சிதையும் குடும்பப் பிணைப்புகளும்</h3>
மனிதர்களை ஒன்றிணைக்கப் பிறந்த நவீன தொழில்நுட்பமே, இன்று மனிதர்களுக்கு இடையே பெருஞ்சுவரை எழுப்பியுள்ளது இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதீத சமூக வலைத்தளப் பயன்பாடு மற்றும் வேகமாக மாறிவரும் நகர்ப்புற கலாச்சாரம் ஆகியவை மனிதர்களுக்கு இடையேயான நேரடித் தொடர்புகளை அடியோடு கிள்ளி எறிந்துள்ளன. முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் ஆயிரக்கணக்கான 'நண்பர்களைக்' கொண்டுள்ள இன்றைய தலைமுறையினருக்கு, நிஜ வாழ்க்கையில் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு மனிதர் கூட இல்லாத அவல நிலையே நீடிக்கிறது.
<h3>பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறும் மன அழுத்தம்</h3>
சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் இந்தத் தனிமை உணர்வு, வெறும் மனக்கவலை என்பதோடு நின்றுவிடாமல் தீவிரமான மன அழுத்தமாகவும், பல்வேறு மனநலப் பாதிப்புகளாகவும் உருவெடுத்து வருகிறது. முந்தைய காலங்களில் முதியவர்கள் மட்டுமே எதிர்கொண்ட இந்தத் தனிமை, இன்று துடிதுடிப்பான இளம் தலைமுறையினர் முதல் வயோதிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் தன் வசம் இழுத்துக் கொண்டுள்ளது. இது தனிமனிதப் பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி, தற்காலத்தில் ஒரு தீவிரமான சமூக மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினையாக (Public Health Issue) உருவெடுத்துள்ளதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

தற்போதாவது விழித்துக் கொண்டு சமூக உறவுகளை மேம்படுத்தாவிட்டால், எதிர்காலச் சந்ததி கடுமையான மன ரீதியான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Hair Fall: தலைமுடி பிரச்சனையா? தயிரில் இதை கலந்து தேய்த்தால் சரியாகும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/mixing-these-ingredients-with-curd-and-applying-the-mixture-to-scalp-will-resolve-problem-of-hair-loss-84206.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 15:12:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/mixing-these-ingredients-with-curd-and-applying-the-mixture-to-scalp-will-resolve-problem-of-hair-loss-84206.html</guid>
		            
			

    	<description><![CDATA[Benefits of Curds on Hair: தயிர் மற்றும் முட்டை கலந்த ஹேர் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முட்டைகளில் அதிக அளவில் புரதம் மற்றும் பயோட்டின் உள்ளன, இவை முடியை வலுப்படுத்த அவசியமானவையாகக் கருதப்படுகின்றன. முட்டையை தயிருடன் கலந்து தயாரிக்கப்பட்ட கலவையை முடியின் வேர் முதல் நுனி வரை தடவுவது, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/curd-with-hair-care.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Hair Fall: தலைமுடி பிரச்சனையா? தயிரில் இதை கலந்து தேய்த்தால் சரியாகும்!" /></figure>இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவுமுறை மற்றும் இரசாயனப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவற்றால் முடிப் பிரச்சனைகள் <strong>(Hair Fall)</strong> வேகமாக அதிகரித்து வருகின்றன. <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vijays-hairstylist-praises-cm-vijays-kindness-and-patience-80008.html">முடி உதிர்தல்</a>, வறட்சி, பொடுகு, முடி உடைதல் மற்றும் இளநரை போன்ற <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/benefits-of-applying-gram-flour-and-lemon-juice-pack-on-the-face-83635.html">பிரச்சனைகள்</a> சாதாரணமாகிவிட்டன. இத்தகைய சூழ்நிலையில், பலர் மீண்டும் இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களை நாடி வருகின்றனர். இதில், தயிர் மிகவும் பயனுள்ள மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. தயிரில் <strong>(Curd)</strong> புரதம், கால்சியம், வைட்டமின் பி5, புரோபயாடிக்குகள் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை முடியின் வேர்களைப் போஷிக்க உதவுகின்றன.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vijays-hairstylist-praises-cm-vijays-kindness-and-patience-80008.html">முதல்வர் விஜயின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய ஹேர் ஸ்டைலிஸ்ட்!</a>
<h3>தயிர் மற்றும் வெந்தய கலவை:</h3>
நிபுணர்களின் கூற்றுப்படி, தயிரை முறையாகப் பயன்படுத்தினால், அது முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், அதை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. முடி உதிர்தல் என்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். இதற்கு, வெந்தயத்தை தயிருடன் கலந்து பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வெந்தயத்தில் புரதம், நிக்கோடினிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இவை முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதற்காக, இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை விழுதாகத் தயாரிக்கவும். இந்த விழுதை தயிருடன் கலந்து முடி வேர்களில் தடவுவது முடியை வலுப்படுத்த உதவுகிறது.

இந்தக் கலவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும், முடி வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி உதிர்தலைக் குறைப்பதோடு, புதிய முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
<h3>தயிர் மற்றும் தேன் கலவை:</h3>
வறண்ட மற்றும் பொலிவிழந்த முடி பல பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும். தொடர்ச்சியான வெப்ப ஸ்டைலிங், இரசாயன சிகிச்சைகள் மற்றும் மாசுபாடு ஆகியவை முடியில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தைக் குறைக்கின்றன. இத்தகைய சூழலில், தயிர் மற்றும் தேன் கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேனில் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன, அவை முடியை ஆழமாக ஈரப்பதமாக்குகின்றன. தேனை தயிருடன் கலந்து இந்தக் கலவையை முடியில் தடவுவது, முடியை மென்மையாகவும் பட்டுப்போன்றதாகவும் மாற்றுகிறது. இந்தக் கலவை முடியில் உள்ள வறட்சியைக் குறைத்து, இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது முடியின் தரத்தை மேம்படுத்தும்.

பொடுகு என்பது உச்சந்தலை தொடர்பான மிகவும் பொதுவான பிரச்சனையாகும். பொடுகு உச்சந்தலையில் அரிப்பு, முடி உதிர்தல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதற்காக, எலுமிச்சை சாற்றை தயிருடன் கலந்து தடவுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. இந்தக் கலவையை முடியின் வேர்களில் மெதுவாகத் தடவி, சிறிது நேரம் கழித்து மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவவும். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது பொடுகைக் குறைத்து, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பல நேரங்களில், உடலில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் முடி பலவீனமடைகிறது.
<h3>தயிர் மற்றும் முட்டை கலந்த ஹேர் மாஸ்க்:</h3>
தயிர் மற்றும் முட்டை கலந்த ஹேர் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முட்டைகளில் அதிக அளவில் புரதம் மற்றும் பயோட்டின் உள்ளன, இவை முடியை வலுப்படுத்த அவசியமானவையாகக் கருதப்படுகின்றன. முட்டையை தயிருடன் கலந்து தயாரிக்கப்பட்ட கலவையை முடியின் வேர் முதல் நுனி வரை தடவுவது, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது முடி உடைவதைக் குறைத்து, முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தத் தீர்வு குறிப்பாக வறண்ட மற்றும் சேதமடைந்த முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலர் முடியின் இயற்கையான பளபளப்பைப் பராமரிக்க விலை உயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/benefits-of-applying-gram-flour-and-lemon-juice-pack-on-the-face-83635.html">முகம் கருமையாகவும் பொலிவிழந்தும் காணப்படுகிறதா? சரிசெய்யும் கடலை மாவு – எலுமிச்சை மேஜிக்!</a>

நிபுணர்களின் கூற்றுப்படி, தயிரைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முடியில் தயிரைத் தடவும்போது, ​​அதை நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது, ஏனெனில் அது உச்சந்தலையில் பிசுபிசுப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தக் கலவையை சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்திருப்பது போதுமானது. இது தவிர, சளி அல்லது சைனஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த தயிரை நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தயிர் பயன்படுத்திய பிறகு முடியை நன்கு அலசுவதும் அவசியம், இல்லையெனில் அதன் வாசனை அல்லது பிசுபிசுப்புத் தன்மை நீடிக்கக்கூடும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Kitchen Ideas: பாதியாக வெட்டப்பட்ட காய்கறிகள் விரைவில் கெட்டுவிடுகிறதா..? ப்ரஸாக வைக்க இதை செய்யலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-do-you-store-halved-vegetables-kitchen-ideas-in-tamil-84178.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 13:45:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-do-you-store-halved-vegetables-kitchen-ideas-in-tamil-84178.html</guid>
		            
			

    	<description><![CDATA[Fresh Vegtables: நறுக்கிய காய்கறிகளைச் சரியாகச் சேமித்து வைத்தால், சமைப்பதற்குத் தேவைப்படும் நேரமும் குறைகிறது. உணவு வீணாவது உலகளவில் ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. சமையலறையின் காய்கறிகளை சரியான சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/halved-vegetables.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kitchen Ideas: பாதியாக வெட்டப்பட்ட காய்கறிகள் விரைவில் கெட்டுவிடுகிறதா..? ப்ரஸாக வைக்க இதை செய்யலாம்!" /></figure>சமையலறையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை, பாதி வெட்டப்பட்ட காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதுதான். பெரும்பாலும், ஒரு <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-identify-chemically-adulterated-tomatoes-before-buying-84095.html">காய்கறி</a> <strong>(Vegtables)</strong> முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், அதன் மீதமுள்ள பகுதியை <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/7-simple-and-effective-solutions-to-get-rid-of-cockroaches-from-the-refrigerator-83405.html">ஃப்ரிட்ஜில்</a> <strong>(Refrigerator)</strong> வைக்கிறோம். இருப்பினும், சரியாக சேமிக்கப்படாவிட்டால், இந்தக் காய்கறிகள் சில மணி நேரங்களிலேயே மென்மையாகி, நிறம் மாறி, அல்லது கெட்டுப்போகத் தொடங்கிவிடும். இது வீட்டுச் செலவுகளை அதிகரிப்பதோடு, உணவு வீணாவதற்கும் வழிவகுக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பாதியாக வெட்டப்பட்ட காய்கறிகளைச் சரியாகச் சேமித்தால், அவற்றை நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/7-simple-and-effective-solutions-to-get-rid-of-cockroaches-from-the-refrigerator-83405.html">ஃப்ரிட்ஜுக்குள் படையெடுக்கிறதா கரப்பான் பூச்சி.. அகற்றுவதற்கான எளிய வழிகள் இங்கே!</a>

பல வீடுகளில், காய்கறிகளை வெட்டிய பிறகு, அவை நேரடியாக ஒரு தட்டில் அல்லது ஃப்ரிட்ஜில் திறந்த நிலையில் வைக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த முறை தவறானது. ஏனெனில் இது காய்கறிகளில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தைக் குறைத்து, அவற்றின் தரத்தையும் குறைக்கிறது. கேரட், வெள்ளரிக்காய், குடைமிளகாய், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வீட்டில் அன்றாட வாழ்வில் அடிக்கடி பாதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
<h3>வெட்டப்பட்ட காய்கறிகள் விரைவாக கெட்டுப்போக காரணம் என்ன..?</h3>
காய்கறிகள் கெட்டுப்போவதற்கான முக்கிய காரணம், வெளிப்புறத்திலிருந்து வரும் அதிகப்படியான ஈரப்பதம் அல்லது அதற்கு மாறாக, காய்கறிகளிலிருந்து அத்தியாவசிய ஈரப்பதம் இழக்கப்படுவதுதான். இந்த 2 சூழ்நிலைகளிலும், காய்கறிகளின் தரம் குறைகிறது. எனவே, காற்றுப் புகாத சேமிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாதியாக வெட்டப்பட்ட காய்கறிகளுக்கு ஜிப்லாக் பைகளைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள தீர்வாகக் கருதப்படுகிறது. இந்தப் பைகள் வெளிப்புறக் காற்று மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் உள்ளே நுழைவதைத் தடுக்கின்றன. இதனால், காய்கறிகளின் நீர்ச்சத்து பராமரிக்கப்பட்டு, அவை நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றன.

ஜிப்லாக் பையைப் பயன்படுத்துவது மட்டும் போதாது, அதைச் சரியாக மூடுவதும் அவசியம். பையில் அதிக காற்று இருந்தால், காய்கறிகள் விரைவில் கெட்டுவிடும். எனவே, காய்கறிகளைச் சேமிக்கும்போது முடிந்தவரை காற்றை வெளியேற்றுவது அவசியம். அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளுக்குக் கூடுதல் கவனம் தேவை. உதாரணமாக, வெள்ளரிக்காய் அல்லது முள்ளங்கி போன்ற காய்கறிகள் வெட்டிய உடனேயே உலர்ந்து போக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலைகளில், அவற்றை ஒரு காகிதத் துண்டில் சுற்றி, பின்னர் ஒரு கொள்கலனில் சேமிப்பது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. காகிதத் துண்டு வெளிப்புறத்திலிருந்து அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, காய்கறிகளில் அதிகப்படியான ஈரப்பதம் சேர அனுமதிக்காது. இது பூஞ்சை உருவாவதற்கான வாய்ப்பைக் குறைத்து, காய்கறிகளின் தன்மையைப் பராமரிக்கிறது.
<h3>வெட்டிய உடனேயே பழுப்பு நிறமாக மாறும்..</h3>
பல வீடுகளில், குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளைச் சேமிக்கும்போது, ​​வெவ்வேறு காய்கறிகளை ஒரே கொள்கலனில் வைக்கும் பழக்கம் உள்ளது. இருப்பினும், இதைத் தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் சில காய்கறிகள் அதிக ஈரப்பதத்தை வெளியிடுகின்றன. புணர்களின் கூற்றுப்படி, எலுமிச்சை சாறும் ஒரு இயற்கைப் பாதுகாப்பானாகப் பயன்படும். சில காய்கறிகள் அல்லது பழங்கள் வெட்டிய உடனேயே பழுப்பு நிறமாக மாறத் தொடங்கும். இப்படியான சூழ்நிலையில், சிறிதளவு எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்துவது நிறமாற்ற செயல்முறையை மெதுவாக்கும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றத்தைக் குறைக்க உதவுகிறது. இது உருளைக்கிழங்கு, ஆப்பிள் அல்லது அவகேடோ போன்ற உணவுகளில் ஏற்படும் நிறமாற்றத்தைக் குறைக்கிறது.

குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளைச் சேமிக்கும்போது சரியான வெப்பநிலையைப் பராமரிப்பது முக்கியம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மிகக் குறைந்த வெப்பநிலை சில காய்கறிகளை மென்மையாக்கிவிடும். அதே சமயம், அதிக வெப்பநிலை அவை கெட்டுப்போகும் விகிதத்தை அதிகரிக்கிறது. காய்கறிகளைச் சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டுமா என்பது குறித்துப் பலருக்குக் குழப்பம் உள்ளது. பல உணவு நிபுணர்களின் கூற்றுப்படி, காய்கறிகளைப் பயன்படுத்துவதற்கு முன் கழுவுவது நல்லது. ஏனெனில், ஈரமான காய்கறிகளைச் சேமிப்பது அவற்றில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது. காய்கறிகளைச் சேமிக்கும்போது சுத்தமான கொள்கலன்களைப் பயன்படுத்துவதும் முக்கியம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-identify-chemically-adulterated-tomatoes-before-buying-84095.html">ரசாயன தக்காளியா? வாங்கும் முன் இந்த அறிகுறிகளை தவறாமல் பாருங்கள்!</a>
<h3>சரியான முறையில் கவனம்:</h3>
நறுக்கிய காய்கறிகளைச் சரியாகச் சேமித்து வைத்தால், சமைப்பதற்குத் தேவைப்படும் நேரமும் குறைகிறது. உணவு வீணாவது உலகளவில் ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. வீட்டில் சரியான சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடியும். நிபுணர்களின் முடிவு தெளிவாக உள்ளது. காய்கறிகளைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க விலையுயர்ந்த உபகரணங்கள் தேவையில்லை. சரியான கொள்கலன்கள், கட்டுப்படுத்தப்பட்ட ஈரப்பதம், காற்றுப் புகாத சேமிப்பு மற்றும் சில எளிய பழக்கவழக்கங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த முறை காய்கறி பாதியளவு உண்ணப்பட்டிருக்கும்போது, ​​அதை நேரடியாக ஃப்ரிட்ஜில் வைப்பதற்குப் பதிலாக, சரியாகச் சேமித்து வைப்பதன் மூலம் அதன் புத்துணர்ச்சியைப் பாதுகாக்க முயற்சிப்பது அதிகப் பயனளிக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரசாயன தக்காளியா? வாங்கும் முன் இந்த அறிகுறிகளை தவறாமல் பாருங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-identify-chemically-adulterated-tomatoes-before-buying-84095.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 05:22:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-identify-chemically-adulterated-tomatoes-before-buying-84095.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chemically Adulterated Tomatoe: சந்தையில் கிடைக்கும் சில தக்காளிகள் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். மிக அதிக பளபளப்பு, ஒரே மாதிரியான சிவப்பு நிறம் மற்றும் கடினமான தோல் இருந்தால் அது செயற்கை பழுக்கலின் அறிகுறியாக இருக்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-19-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரசாயன தக்காளியா? வாங்கும் முன் இந்த அறிகுறிகளை தவறாமல் பாருங்கள்!" /></figure>சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளி, உடல்நலத்திற்கு நல்ல சத்துகளை வழங்கும் முக்கிய காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் சமீப காலங்களில் சந்தைகளில் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட அல்லது கலப்படம் செய்யப்பட்ட தக்காளிகள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. வெளிப்புறத்தில் சிவப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும் தக்காளி எல்லாமே இயற்கையாக பழுத்தது அல்ல. குறிப்பாக மிக அதிகமாக ஜொலிக்கும் தோற்றம், ஒரே மாதிரியான நிறம் மற்றும் அதிக கடினத்தன்மை இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
<h3>தோலின் தன்மை மூலம் உண்மையை அறியலாம்</h3>
இயற்கையாக பழுத்த தக்காளி கையில் எடுக்கும் போது சற்று மென்மையாகவும், லேசாக அழுத்தினால் இயல்பாக தளர்வாகவும் இருக்கும். ஆனால் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட தக்காளிகள் வெளியில் சிவப்பாக இருந்தாலும் அவற்றின் தோல் அதிகமாக கடினமாக இருக்கலாம். சில சமயங்களில் அவை இயற்கை மணத்தை இழந்தும் காணப்படும். தக்காளியை வாங்கும் முன் அதன் மேற்பரப்பை கவனமாக பார்த்து, மிகவும் செயற்கையாகத் தோன்றும் பளபளப்பை தவிர்ப்பது பாதுகாப்பான தேர்வாக இருக்கலாம்.
<h3>வெட்டி பார்த்தால் உள்ளே இருக்கும் உண்மை தெரியும்</h3>
தக்காளியை வெட்டி பார்த்தபோது அதன் உள்ளே நிறம் சமமாக இல்லாமல் பச்சை அல்லது வெளிர் நிறத் தழும்புகள் காணப்பட்டால் அது இயற்கையாக பழுக்காததற்கான அறிகுறியாக இருக்கலாம். வெளிப்புறம் மட்டும் சிவப்பாக இருந்தாலும் உள்ளே முறையாக பழுக்காமல் இருக்கும் தக்காளிகள் செயற்கை வேகப்படுத்தும் ரசாயனங்களின் தாக்கத்தால் உருவாகும் என கூறப்படுகிறது. இயற்கை தக்காளியில் உள்ளும் வெளியும் சீரான நிறம் காணப்படுவதோடு, விதைகளும் முழுமையாக வளர்ந்திருக்கும்.
<h3>மணம் மற்றும் விதைகள் முக்கிய சான்றுகள்</h3>
இயற்கை தக்காளிக்கு ஒரு மெல்லிய மண்வாசனை கலந்த இயல்பான நறுமணம் இருக்கும். ஆனால் ரசாயனப் பயன்பாட்டில் பழுக்கவைக்கப்பட்ட தக்காளிகளில் அந்த இயல்பான மணம் குறைந்து காணப்படலாம். சில நேரங்களில் மங்கலான அல்லது வித்தியாசமான வாசனையும் இருக்கலாம். மேலும், தக்காளியின் விதைகளை கவனித்தால் இயற்கை தக்காளிகளில் அவை முழுமையாக வளர்ந்து எளிதாக பிரியும். கலப்பட தக்காளிகளில் விதைகள் முழுமையாக உருவாகாமல் வெண்மையாகவும் சதையோடு ஒட்டியிருப்பதையும் காணலாம்.
<h3>வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய சோதனைகள்</h3>
தக்காளியை ஒரு பாத்திரம் நிறைந்த தண்ணீரில் போட்டு பார்ப்பது ஒரு எளிய சோதனையாக பார்க்கப்படுகிறது. பொதுவாக இயற்கை தக்காளிகள் தண்ணீரில் மூழ்கவோ அல்லது கீழே தங்கவோ வாய்ப்பு அதிகம். சில செயற்கை தக்காளிகள் மிதக்கும் தன்மை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இது முழுமையான அறிவியல் சோதனை அல்ல என்பதால் தோற்றம், மணம், உள்ளமைப்பு போன்ற பல அம்சங்களையும் சேர்த்து கவனிப்பது நல்லது. உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு நம்பகமான கடைகளில் இருந்து காய்கறிகளை வாங்குவது உடல்நல பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பு பாதுகாப்பா? பள்ளிகளும் விழிக்க வேண்டிய நேரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/digital-safety-in-education-why-schools-must-share-responsibility-83974.html</link>	
		<pubDate>Wed, 10 Jun 2026 13:29:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/digital-safety-in-education-why-schools-must-share-responsibility-83974.html</guid>
		            
			

    	<description><![CDATA[Digital Safety in Education: இன்றைய மாணவர்கள் கல்விக்காக இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால், டிஜிட்டல் பாதுகாப்பு முக்கிய தேவையாக மாறியுள்ளது. சைபர் துன்புறுத்தல், போலி தகவல்கள் மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும்.  இதனால், பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-15-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பு பாதுகாப்பா? பள்ளிகளும் விழிக்க வேண்டிய நேரம்!" /></figure>இன்றைய காலத்தில் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கல்விக்காக அதிகமாக இணையத்தையும் டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள், கல்வி செயலிகள், சமூக ஊடகங்கள் போன்றவை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் இந்த வளர்ச்சியுடன், இணையத்தில் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன. தவறான தகவல்கள், இணையதள மோசடிகள், சைபர் துன்புறுத்தல் மற்றும் தனியுரிமை மீறல்கள் போன்றவை மாணவர்களின் மனநிலையையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் உள்ளன. இதனால், டிஜிட்டல் பாதுகாப்பு என்பது இனி வீட்டில் பெற்றோர் மட்டும் கவனிக்க வேண்டிய விஷயம் அல்ல என்பது தெளிவாகிறது.
<h3>பள்ளி கற்றல் சூழலிலும் முக்கியமான பொறுப்பு</h3>
மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் கல்வி செயல்பாடுகளை இணையத்தின் மூலம் மேற்கொள்வதால், பள்ளிகளும் டிஜிட்டல் பாதுகாப்பை கற்றல் சூழலின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு இணையத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இணையத்தில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது, பாதுகாப்பான கடவுச்சொற்களை பயன்படுத்துவது மற்றும் அந்நியர்களுடன் தகவல் பகிர்வதை தவிர்ப்பது போன்ற அடிப்படை பாதுகாப்பு பழக்கங்களை மாணவர்களிடம் உருவாக்குவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
<h3>சைபர் துன்புறுத்தலால் ஏற்படும் மனநல பாதிப்பு</h3>
சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, பல மாணவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் அவமதிப்பு கருத்துகள், மிரட்டல்கள் அல்லது போலி தகவல்கள் பரவுவது மாணவர்களின் மனநலத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில் இது தன்னம்பிக்கை குறைவு, மனஅழுத்தம் மற்றும் சமூக தொடர்புகளிலிருந்து விலகும் நிலைக்கும் வழிவகுக்கிறது. எனவே, பள்ளிகள் மாணவர்களின் மனநல பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் ஒழுக்கம் குறித்த ஆலோசனைகள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது.
<h3>பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டிய காலம்</h3>
டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது முக்கியமானதாக மாறியுள்ளது. குழந்தைகள் எந்த வகையான இணையதளங்களை பயன்படுத்துகின்றனர், யாருடன் தொடர்பில் இருக்கின்றனர், அவர்கள் பார்க்கும் உள்ளடக்கங்கள் பாதுகாப்பானவையா என்பதைக் கவனமாக கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில், குழந்தைகளுக்கு பயமுறுத்தாமல், இணையத்தை பொறுப்புடன் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்குவது அவசியம். திறந்த உரையாடலின் மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும்.
<h3>எதிர்கால கல்வியில் டிஜிட்டல் பாதுகாப்பின் அவசியம்</h3>
டிஜிட்டல் கல்வி வளர்ச்சியடையும் இந்த காலத்தில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கல்வி அமைப்பின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. பள்ளி பாடத்திட்டங்களிலேயே இணைய பாதுகாப்பு குறித்த அடிப்படை அறிவை சேர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் செயல்படக் கற்றுக்கொண்டால், அவர்கள் கல்வி மட்டுமின்றி சமூக வாழ்க்கையிலும் நம்பிக்கையுடன் முன்னேற முடியும். டிஜிட்டல் பாதுகாப்பு என்பது இனி தனிப்பட்ட குடும்ப பிரச்சினை அல்ல, மாறாக சமூக மற்றும் கல்வி சூழலின் முக்கிய பொறுப்பாக மாறி வருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீன் வாங்குறீங்களா? இந்த அறிகுறிகளை மறக்காதீங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/smart-tips-to-choose-fresh-fish-easily-83788.html</link>	
		<pubDate>Tue, 09 Jun 2026 17:05:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/smart-tips-to-choose-fresh-fish-easily-83788.html</guid>
		            
			

    	<description><![CDATA[Fresh Fish Easily: மீன் வாங்கும்போது அதன் கண்கள் பளபளப்பாகவும் செவுள் சிவப்பு நிறத்திலும் இருந்தால் அது புதிய மீன் என அறியலாம். துர்நாற்றம் அதிகமாக இருந்தால் அந்த மீனை தவிர்ப்பது நல்லது. கை கொண்டு அழுத்தும்போது மீன் இறைச்சி மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் அது தரமானதாக இருக்கும். தோற்றம், மணம் மற்றும் உடல் தன்மையை கவனித்து வாங்கினால் ஆரோக்கியமான உணவை உறுதி செய்யலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/09/hilsa-fish.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீன் வாங்குறீங்களா? இந்த அறிகுறிகளை மறக்காதீங்க!" /></figure>உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்களை வழங்கும் முக்கிய உணவுகளில் மீன் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சந்தையில் மீன் வாங்கும்போது அதன் தரம் மற்றும் புத்துணர்ச்சியை சரியாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. பலரும் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே பார்த்து வாங்கிவிடுவதால், சில நேரங்களில் பழைய அல்லது தரமற்ற மீன்களை வீட்டிற்கு கொண்டு செல்லும் சூழல் உருவாகிறது. அதனால் சில எளிய விஷயங்களை கவனித்தால் நல்ல தரமான மீனை தேர்வு செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
<h3>கண்கள் மற்றும் தோற்றம் தரும் அறிகுறி</h3>
புதிய மீனை அடையாளம் காண முதலில் அதன் கண்களை கவனிக்க வேண்டும். பளபளப்பாகவும் சற்று வெளிப்படையாகவும் இருக்கும் கண்கள் கொண்ட மீன்கள் பொதுவாக புதியதாக இருக்கும். கண்கள் மங்கலாக அல்லது உள்ளே இறங்கியபடி இருந்தால், அது நீண்ட நேரம் சேமிக்கப்பட்ட மீனாக இருக்கலாம். மேலும் மீனின் தோலில் இயல்பான ஒளிர்வு இருக்க வேண்டும். வறண்ட தன்மை அல்லது நிறமாற்றம் இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது.
<h3>செவுள் பகுதியை பார்த்து தரத்தை அறியலாம்</h3>
மீனின் செவுள் பகுதி அதன் புத்துணர்ச்சியை அறிய முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. புதிய மீன்களில் செவுள் பொதுவாக சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் பழைய மீன்களில் அது பழுப்பு நிறமாக அல்லது மங்கலான தோற்றத்தில் இருக்கக்கூடும். எனவே வாங்கும் முன் அந்த பகுதியை கவனமாக பரிசோதிப்பது நல்ல தேர்வுக்கு உதவும்.
<h3>வாசனை மூலம் தெரியும் உண்மை</h3>
மீனை வாங்கும்போது அதன் மணத்தையும் அலட்சியப்படுத்தக்கூடாது. புதிய மீன்களுக்கு கடல் அல்லது நீர்நிலையின் இயல்பான வாசனை மட்டுமே இருக்கும். அதிகமாக துர்நாற்றம் வீசும் மீன்கள் தரமற்றதாக இருக்க வாய்ப்பு உள்ளது. சிலர் வாசனையை மறைக்க பனியில் வைத்து விற்பனை செய்தாலும், இயல்பற்ற மணம் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
<h3>கைகளால் தொட்டு பார்ப்பதும் அவசியம்</h3>
மீனின் உடல் அமைப்பும் அதன் தரத்தை வெளிப்படுத்தும். மென்மையாக சிதைந்து போகும் தன்மை இருந்தால் அது புதியதாக இருக்காது. கை கொண்டு மெதுவாக அழுத்தும்போது மீன் இறைச்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் அது புதிய மீன் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிகமாக தளர்ந்தோ அல்லது பிசுபிசுப்பாக இருந்தாலோ வாங்காமல் இருப்பது நல்லது.
<h3>பாதுகாப்பான உணவுக்கு சரியான தேர்வு முக்கியம்</h3>
மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும், தரமான மீனை தேர்வு செய்வது அதைவிட முக்கியமானது. சந்தையில் சில நிமிடங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்ல தரமான மற்றும் சுவையான மீனை வாங்க முடியும். குறிப்பாக குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தோற்றம், மணம், செவுள் நிறம் மற்றும் உடல் தன்மை போன்ற அம்சங்களை பார்த்து மீன் வாங்குவது பாதுகாப்பான உணவு பழக்கத்திற்கு வழிவகுக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மனவலிமை கொண்ட குழந்தை வேண்டுமா? பெற்றோர் இதை செய்தால் போதும்&#8230;</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/30-minute-parenting-rule-to-build-emotionally-strong-children-83727.html</link>	
		<pubDate>Tue, 09 Jun 2026 12:34:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/30-minute-parenting-rule-to-build-emotionally-strong-children-83727.html</guid>
		            
			

    	<description><![CDATA[30-Minute Parenting Rule: தினமும் 30 நிமிடங்கள் குழந்தைகளுடன் செலவிடுவது அவர்களை மனதளவில் வலிமையாக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ‘10-10-10’ முறையில் கேட்பது, விளையாடுவது, உணர்வுகளை பகிர்வது முக்கிய பங்காற்றுகிறது. இது குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்தும். பெற்றோர்-குழந்தை உறவையும் இந்த பழக்கம் வலுப்படுத்தும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-4-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மனவலிமை கொண்ட குழந்தை வேண்டுமா? பெற்றோர் இதை செய்தால் போதும்&#8230;" /></figure>குழந்தைகள் மனதளவில் வலிமையாக வளர தினமும் 30 நிமிடங்கள் பெற்றோர் ஒதுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ‘10-10-10’ விதிப்படி முதல் 10 நிமிடங்கள் குழந்தையை கவனமாக கேட்பதற்கும், அடுத்த 10 நிமிடங்கள் ஒன்றாக விளையாடுவதற்கும், கடைசி 10 நிமிடங்கள் உணர்வுகளை பகிர்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சி கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பெற்றோரின் ஆதரவு நிறைந்த உரையாடல் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வை உருவாக்குகிறது. மொபைல் மற்றும் டிவி நேரத்தை குறைத்து நேரடி உரையாடலுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம். சிறிய நேர ஒதுக்கீடும் குழந்தையின் மனநிலையை நேர்மறையாக மாற்றக்கூடும். குடும்ப உறவையும் இது மேலும் வலுப்படுத்தும்.
<h3>குழந்தையின் உணர்ச்சி வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்குவது ஏன் அவசியம்?</h3>
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் மற்றும் டிஜிட்டல் கவனச்சிதறல்களால் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் குழந்தையின் உணர்ச்சி வலிமை மற்றும் மனநிலையை உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் கூறுவதாவது, தினமும் வெறும் 30 நிமிடங்கள் குழந்தையுடன் முழுமையாக கவனத்துடன் செலவிடுவது, அவர்களின் மனநலத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்த உதவக்கூடும் என்பதாகும்.
<h3>‘10-10-10’ முறையின் பின்னணி என்ன?</h3>
குழந்தைகளுடன் செலவிடும் 30 நிமிடத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கும் அணுகுமுறையே ‘10-10-10’ விதி எனப்படுகிறது. முதல் 10 நிமிடங்களில் குழந்தை விரும்பும் விஷயங்களை குறுக்கிடாமல் கேட்பது முக்கியம். அடுத்த 10 நிமிடங்களில் ஒன்றாக விளையாடுதல் அல்லது அவர்களுக்கு பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடுவது உறவை வலுப்படுத்துகிறது. கடைசி 10 நிமிடங்களில் அவர்களின் உணர்வுகள், நாள் முழுவதும் நடந்த அனுபவங்கள் குறித்து பேசுவது, குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த கற்றுக்கொள்ள உதவுகிறது.
<h3>மனதளவில் உறுதியான குழந்தைகளை உருவாக்கும் வழி</h3>
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களிடம் பொறுமையுடன் பேசும் பழக்கம், அவர்களுக்கு பாதுகாப்பான மனநிலையை உருவாக்குகிறது. பெற்றோர் குற்றம் சாட்டும் அணுகுமுறையை விட ஆதரவு அளிக்கும் விதத்தில் பேசும்போது, குழந்தைகள் தங்களின் சிக்கல்களை வெளிப்படையாக பகிரத் தொடங்குகின்றனர். இது மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் சுயநம்பிக்கையுடன் முடிவெடுக்கவும் உதவுகிறது.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/remote-work-fuels-severe-isolation-and-mental-health-risks-study-finds-83723.html">டிஜிட்டல் சிறை: வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை வாட்டும் தனிமைப் புயல்!</a>
<h3>திரை உலகை விட நேரடி உரையாடலின் தாக்கம் அதிகம்</h3>
மொபைல், டிவி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் நேரத்தை அதிகமாக ஆக்கிரமித்து வரும் நிலையில், பெற்றோர் நேரடியாக செலவிடும் சில நிமிடங்களே குழந்தையின் மனநிலையை மாற்றக்கூடியதாக இருக்கிறது. குழந்தை பேசும் போது முழு கவனத்துடன் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறோம் என்ற உணர்வை தருகிறது. இந்த சிறிய மாற்றமே குடும்ப உறவை வலுப்படுத்துவதோடு, குழந்தையை உணர்ச்சி ரீதியாக வலிமையானவராக மாற்றும் முக்கிய காரணியாக அமையலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டிஜிட்டல் சிறை: வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை வாட்டும் தனிமைப் புயல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/remote-work-fuels-severe-isolation-and-mental-health-risks-study-finds-83723.html</link>	
		<pubDate>Tue, 09 Jun 2026 11:49:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/remote-work-fuels-severe-isolation-and-mental-health-risks-study-finds-83723.html</guid>
		            
			

    	<description><![CDATA[Remote Work: கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் பரவலான வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தாலும், அவர்களின் மன ஆரோக்கியத்தை மிகக் கடுமையாகப் பாதித்து வருவதாகப் புதிய ஆய்வு எச்சரிக்கிறது. அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்பவர்களை விட, வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் தங்களது வேலை நேரத்தில் தனியாகக் கழிக்கும் நேரம் 58 சதவீதமும், முழுமையான தனிமையில் இருக்கும் வாய்ப்பு 72 சதவீதமும் அதிகரித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-3-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டிஜிட்டல் சிறை: வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை வாட்டும் தனிமைப் புயல்!" /></figure>கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் (Remote Work) கலாச்சாரம் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழல் மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக பலரும் இதனை விரும்புகின்றனர். இருப்பினும், இந்த பணிமுறை ஊழியர்களின் மன ஆரோக்கியத்தில் கடுமையான எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. ஊழியர்களின் உற்பத்தித் திறனைத் தாண்டி, அவர்களின் சமூக வாழ்க்கை இதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை இந்த ஆய்வு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
<h3>அதிகரிக்கும் சமூகத் தனிமை</h3>
சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின்படி, அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்பவர்களைக் காட்டிலும், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய தகுதி வாய்ந்த பணிகளில் இருப்பவர்கள் தங்களது வேலை நேரத்தில் தனியாகக் கழிக்கும் நேரம் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், நாள் முழுவதும் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல் முற்றிலும் தனிமையில் கழிப்பதற்கான வாய்ப்பு இவர்களுக்கு 72 சதவீதம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
<h3>மன அழுத்தமும் மருத்துவ ஆலோசனைகளும்</h3>
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களிடம் பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன ரீதியான உளைச்சல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால், அவர்கள் மனநல ஆலோசகர்களை நாடும் விகிதமும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துப் பயன்பாடுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. வெறும் அலுவலகப் பணி நேரத்தில் மட்டுமின்றி, பணி முடிந்த பிறகும் கூட இவர்கள் தங்களது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதைக் குறைத்துக் கொண்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இது அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் பாதிக்கிறது.
<h3>தனித்து வாழ்பவர்களுக்கு இரட்டிப்புப் பாதிப்பு</h3>
இந்தத் தனிமை மற்றும் மனநலப் பாதிப்புகள், தனியாக வசிக்கும் ஊழியர்களிடம் மிக மோசமாகப் பிரதிபலிக்கின்றன. குடும்பத்துடன் வாழ்பவர்களைக் காட்டிலும், தனியாக வசிப்பவர்கள் நாள் முழுவதும் எந்தவொரு நபரிடமும் பேசாமல் இருப்பதற்கான வாய்ப்பு 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்களின் மன உளைச்சலின் அளவு குடும்பத்துடன் இருப்பவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மனிதர்களுடனான நேரடித் தொடர்பும், சமூகப் பிணைப்பும் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை உளவியல் நிபுணர்கள் இதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.

Also Read:<a href="https://www.tv9tamilnews.com/lifestyle/late-night-eating-during-stress-may-harm-gut-health-83682.html"> மன அழுத்தத்துடன் லேட் நைட் உணவா? குடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து!</a>
<h3>நிறுவனங்களுக்கான ஆலோசனைகளும் தீர்வுகளும்</h3>
இந்த ஆய்வின் முடிவுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை முழுமையாகத் தவிர்க்கச் சொல்லவில்லை. மாறாக, ஊழியர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். கலப்புப் பணி மாதிரியைப் (Hybrid Work) பின்பற்றும் நிறுவனங்கள், ஊழியர்கள் அனைவரும் ஒரே நாளில் அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்குள் சமூகத் தொடர்பும், உரையாடல்களும் மேம்படும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்களும் தங்களது அன்றாட வாழ்க்கையில் மற்ற மனிதர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கான வாய்ப்புகளைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மன அழுத்தத்துடன் லேட் நைட் உணவா? குடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/late-night-eating-during-stress-may-harm-gut-health-83682.html</link>	
		<pubDate>Tue, 09 Jun 2026 05:30:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/late-night-eating-during-stress-may-harm-gut-health-83682.html</guid>
		            
			

    	<description><![CDATA[Stress May Harm Gut Health: மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் இரவு 9 மணிக்குப் பிறகு அதிகளவு உணவு சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அன்றாட கலோரியின் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இரவில் உண்பவர்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 2.5 மடங்கு அதிகமாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/05/simple-tips-to-manage-stress.png" class="attachment-large size-large wp-post-image" alt="மன அழுத்தத்துடன் லேட் நைட் உணவா? குடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து!" /></figure>இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. வேலைப்பளு, தூக்கமின்மை, ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணிகள் உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனுடன் சேர்ந்து இரவு நேரங்களில் தாமதமாக அதிகளவு உணவை உட்கொள்வதும் உடலுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள புதிய மருத்துவ ஆய்வு ஒன்று, மன அழுத்தத்துடன் கூடிய தாமதமான உணவுப் பழக்கம் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என்ற முக்கிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
<h3>இரவு 9 மணிக்குப் பிறகு அதிக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு</h3>
இந்த ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வின் படி, இரவு 9 மணிக்குப் பிறகு தங்களின் அன்றாட கலோரி அளவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான உணவை உட்கொள்ளும் நபர்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழ்பவர்களிடம் இந்த தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புணர்ச்சி, அசௌகரியம் போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு பல மடங்கு உயர்வதாக மருத்துவ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
<h3>மன அழுத்தமும் நள்ளிரவு உணவும் சேரும் போது என்ன நடக்கிறது?</h3>
மருத்துவ நிபுணர்களின் விளக்கப்படி, மனித உடலின் செரிமான மண்டலம் குறிப்பிட்ட நேர அட்டவணையைப் பின்பற்றுகிறது. இரவு நேரங்களில் உடல் ஓய்வுக்குத் தயாராகும் நிலையில் இருக்கும் போது, அதிகளவு உணவு உட்கொள்வது செரிமான அமைப்புக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் மன அழுத்தம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை உருவாக்குவதால், செரிமான செயல்பாடு சீர்குலையும் அபாயமும் அதிகரிக்கிறது. இந்த இரு காரணிகளும் ஒன்றாக இணையும் போது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நீண்டகால பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
<h3>உணவுப் பழக்கத்தில் மாற்றம் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்</h3>
உடல்நலத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் இரவு நேரங்களில் அதிக கலோரி கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுதல், எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்வு செய்தல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் போன்ற பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், நீடித்த செரிமான பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Kitchen Hacks: உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு தண்ணீரை வீணாக்கிவிடுகிறீர்களா? இப்படி செய்தால் வெள்ளி பளபளக்கும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/boiled-potato-water-helps-clean-silver-kitchen-hacks-tips-in-tamil-83667.html</link>	
		<pubDate>Mon, 08 Jun 2026 21:18:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/boiled-potato-water-helps-clean-silver-kitchen-hacks-tips-in-tamil-83667.html</guid>
		            
			

    	<description><![CDATA[Boiled Potato Water Reuse: மங்கிப்போன வெள்ளிப் பொருட்களின் பளபளப்பை மீண்டும் கொண்டுவர, வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீர் உதவும் என்று கூறும் ஒரு வீட்டு வைத்தியம். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமாக, இந்த தந்திரங்களுக்கு விலை உயர்ந்த வெள்ளி சுத்தம் செய்யும் பொருட்களோ அல்லது சிறப்பு இரசாயனங்களோ தேவையில்லை.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/boiled-potato-water.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kitchen Hacks: உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு தண்ணீரை வீணாக்கிவிடுகிறீர்களா? இப்படி செய்தால் வெள்ளி பளபளக்கும்!" /></figure>பெரும்பாலான <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-make-chemical-free-natural-mosquito-repellent-cream-at-home-tips-in-tamil-79016.html">வீடுகளில்</a> <strong>(Home)</strong> உருளைக்கிழங்கு<strong> (Potato)</strong> வேகவைக்கப்படுகிறது. மேலும் வேகவைத்த பிறகு, இந்த நீரானது பெரும்பாலும் வீணாக்கப்படுகிறது. ஆனால், பலருக்கும் இதை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து அறிவதில்லை. நீங்களும் உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு மீதமுள்ள நீரை யோசிக்காமல் வடிகாலில் ஊற்றினால், மிகவும் பயனுள்ள ஒரு பொருளுக்கு பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு மீதமுள்ள நீரில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இது உங்களுக்கு ஒரு <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/easy-tips-to-remove-stains-from-white-clothes-naturally-83490.html">கடினமான</a> வேலையை எளிதாக்கும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-make-chemical-free-natural-mosquito-repellent-cream-at-home-tips-in-tamil-79016.html">கொசு கடிக்காமல் தப்பிக்கணுமா? வீட்டிலேயே செய்யலாம் கொசு விரட்டி கிரீம்!</a>
<h3>வேகவைத்த உருளைக்கிழங்கு தண்ணீர்</h3>
மங்கிப்போன வெள்ளிப் பொருட்களின் பளபளப்பை மீண்டும் கொண்டுவர, வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீர் உதவும் என்று கூறும் ஒரு வீட்டு வைத்தியம். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமாக, இந்த தந்திரங்களுக்கு விலை உயர்ந்த வெள்ளி சுத்தம் செய்யும் பொருட்களோ அல்லது சிறப்பு இரசாயனங்களோ தேவையில்லை. மீதமுள்ள வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீரைப் பயன்படுத்தி, பழைய மற்றும் நிறம் மங்கிய வெள்ளி நகைகள் அல்லது பாத்திரங்களை எப்படிப் பளபளப்பாக்கலாம் என்று பார்ப்போம்.
<h3>எப்படி பலனளிக்கும்?</h3>
உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதனுடன் சிறிதளவு வினிகரைச் சேர்க்கும்போது, ​​இந்தக் கலவையானது வெள்ளிப் பொருட்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. இதனால்தான் பலர் வெள்ளி நகைகளையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றனர்.
<h3>இதை எப்படி பயன்படுத்துவது?</h3>
முதலில், உருளைக்கிழங்கை வேகவைத்த பிறகு மீதமுள்ள சூடான நீரை வடிகட்டவும்.
பிறகு அதில் 1 தேக்கரண்டி வெள்ளை வினிகரைச் சேர்க்கவும். இப்போது, ​​நிறம் மங்கிய வெள்ளி நகை அல்லது பாத்திரத்தை தண்ணீரில் போடுங்கள். அதை தண்ணீரில் முழுமையாக மூழ்கும் வரை மூழ்கவைக்கவும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இப்போது, வெள்ளியை வெளியே எடுத்து மென்மையான துணியால் சுத்தம் செய்யவும். அவ்வளவுதான் வெள்ளி பளபளக்க தொடங்கும்.

வெள்ளி நகைகள் அல்லது பாத்திரங்களை வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீரில் ஊறவைப்பதால், வெறும் 15 நிமிடங்களில் கறையைக் கணிசமாகக் குறைத்து, அதன் பளபளப்பை மீட்டெடுக்கும். இருப்பினும், வெள்ளியில் பிடிவாதமான, பழைய கறை இருந்தால், அதையும் முழுமையாக நீக்கும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/easy-tips-to-remove-stains-from-white-clothes-naturally-83490.html">வெள்ளை ஆடையில் கறையா? இந்த டிப்ஸ் தெரிந்தால் புதுசுபோல் மின்னும்!</a>
<h3>எப்போது கவனம் தேவை..?</h3>
வெள்ளி நகைகளில் மென்மையான கற்கள், முத்துக்கள் அல்லது சிறப்புப் பூச்சுகள் இருந்தால், இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய பகுதியில் சோதித்துப் பார்க்க வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Skin Care: முகம் கருமையாகவும் பொலிவிழந்தும் காணப்படுகிறதா? சரிசெய்யும் கடலை மாவு &#8211; எலுமிச்சை மேஜிக்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/benefits-of-applying-gram-flour-and-lemon-juice-pack-on-the-face-83635.html</link>	
		<pubDate>Mon, 08 Jun 2026 19:41:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/benefits-of-applying-gram-flour-and-lemon-juice-pack-on-the-face-83635.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gram Flour and Lemon Face Pack: கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவும். கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. எலுமிச்சை சாறு சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/lemon-gram.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Skin Care: முகம் கருமையாகவும் பொலிவிழந்தும் காணப்படுகிறதா? சரிசெய்யும் கடலை மாவு &#8211; எலுமிச்சை மேஜிக்!" /></figure>சூரிய ஒளி, மாசுபாடு, தூசி மற்றும் அழுக்கு ஆகியவற்றால் முகத்தில் கருமையும் பொலிவின்மையும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, பலர் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களையும் சிகிச்சைகளையும் நாட முனைகின்றனர். ஆனால், வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய சில பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு முகப் பூச்சு, <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-your-skin-even-when-using-ac-a-lot-in-summer-82782.html">சருமத்திற்கு</a> <strong>(Skin Care)</strong> நல்ல பொலிவைத் தருவதோடு, கருமையைக் குறைக்கவும் உதவும். அத்தகைய <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/top-11-k-beauty-sunscreen-picks-tailored-for-indian-skin-82706.html">ஃபேஷ் மாஸ்க்களில்</a> <strong>(Face Mask)</strong> ஒன்றுதான் கடலை மாவு-எலுமிச்சை ஃபேஷ் மாஸ்க் பயன் தரும். இது ஆயுர்வேதத்தில் உடனடிப் பொலிவிற்காகவும், பொலிவை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சருமம் நன்கு கருமையாக இருக்கும்போதும், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போதும் இதைப் பயன்படுத்தினால் நல்ல பலன்களைக் காணலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால், இதை எப்படித் தயாரிப்பது? தேவையான பொருட்கள் என்னென்ன? நல்ல பலன்களைப் பெற இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/top-11-k-beauty-sunscreen-picks-tailored-for-indian-skin-82706.html">வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க சூப்பர் கொரியன் சன்ஸ்கிரீன்கள்!</a>
<h3>கடலை மாவு-எலுமிச்சை பேஷ் மாஸ்க்கான பொருட்கள்</h3>
<ul>
 	<li>கடலை மாவு – 2 ஸ்பூன்</li>
 	<li>எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்</li>
 	<li>தயிர் அல்லது பால் – 1 ஸ்பூன்</li>
 	<li>ஒரு சிட்டிகை மஞ்சள்</li>
 	<li>ரோஸ் வாட்டர் – தேவைக்கேற்ப</li>
</ul>
<h3>தயாரிப்பு முறை</h3>
<ul>
 	<li>ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, தயிர் அல்லது பால், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ரோஸ் வாட்டரை சிறிது சிறிதாகச் சேர்த்து மென்மையான விழுது போல பதம் வருமாறு கலக்கவும்.</li>
</ul>
<h3>பயன்படுத்துவது எப்படி..?</h3>
முதலில், உங்கள் முகத்தை ஒரு மென்மையான க்ளென்சரால் சுத்தம் செய்யுங்கள். பிறகு, இந்த கடலை எலுமிச்சையை கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகப் பூசுங்கள். உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான பகுதியைத் தவிர்ப்பது நல்லது. இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். இது முழுமையாக காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் தேய்த்து, கழுவி, மென்மையான துண்டால் துடைத்து எடுக்கவும். அதன் பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது.
<h3>இந்த ஃபேஸ் பேக்கின் நன்மைகள்</h3>
கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவும். கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. எலுமிச்சை சாறு சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தயிர் அல்லது பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கி, பொலிவுடன் தோற்றமளிக்கச் செய்கிறது. இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் குறைக்கவும் உதவுகிறது.

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு, கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு பேஷ் மாஸ்க் ஒரு இயற்கையான சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. அது சருமத்தை மென்மையாக்குகிறது. ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் கலவையானது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, புத்துணர்ச்சியான தோற்றத்தைத் தருகிறது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-your-skin-even-when-using-ac-a-lot-in-summer-82782.html">ஏசியில் இருப்பது சரும பிரச்சனைகளை ஏற்படுத்துமா? இவை சருமத்தை பாதுகாக்கும்!</a>
<h3>வாரத்திற்கு எத்தனை முறை உங்களால் முயற்சி செய்ய முடியும்?</h3>
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். இருப்பினும், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள், முதலில் கையில் சிறிதளவு தடவிப் பரிசோதித்துவிட்டு, அதன் பிறகு முகத்தில் தடவுவது நல்லது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மொச்சைக்கொட்டையின் மகத்தான மருத்துவ குணங்கள்: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை அமுதம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/health-benefits-of-field-beans-for-disease-prevention-and-vitality-83594.html</link>	
		<pubDate>Mon, 08 Jun 2026 17:00:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/health-benefits-of-field-beans-for-disease-prevention-and-vitality-83594.html</guid>
		            
			

    	<description><![CDATA[Field Beans: மொச்சைக்கொட்டையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் வீரியம் கொண்டவை. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதோடு, செரிமான மண்டலத்தைச் சீராக்கி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வேரோடு குணப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் இயற்கை முறையில் பாதுகாக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-8-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மொச்சைக்கொட்டையின் மகத்தான மருத்துவ குணங்கள்: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை அமுதம்!" /></figure>நம் அன்றாட சமையலில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மொச்சைக்கொட்டை (Field Beans), வெறும் சுவைக்கான உணவு மட்டுமல்ல, அது ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. தற்கால நவீன உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண விரும்புவோருக்கு மொச்சைக்கொட்டை ஒரு வரப்பிரசாதமாகும். புரதச்சத்து (Protein), நார்ச்சத்து (Fiber) மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் (Minerals) நிறைந்துள்ள இந்த அற்புத உணவின் மருத்துவ நன்மைகளைச் செய்தித் தொகுப்பாகக் கீழே காண்போம்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல்

ஆரோக்கியமான வாழ்விற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொடிய புற்றுநோயைத் தடுப்பதில் மொச்சைக்கொட்டை மிக முக்கியப் பங்காற்றுகிறது. தற்போதைய மருத்துவ ஆய்வுகளின்படி, இதில் உள்ள குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) மற்றும் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மார்பக புற்றுநோய் (Breast Cancer) போன்ற தீவிர நோய்களின் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுத்து ஆரம்பக்கட்டத்திலேயே அதை அழிக்கும் வீரியம் இதற்கு உண்டு.

உடல் எடையைக் குறைக்கும் அற்புதக் காரணி

அதிகப்படியான உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனை ஆரோக்கியமான முறையில் குறைக்கவும் மொச்சைக்கொட்டை பெரிதும் உதவுகிறது. நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதைத் தடுத்து, வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குவதில் இதன் பங்கு அளப்பரியது. உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்களை மேற்கொள்பவர்கள், தங்களது உணவுப் பட்டியலில் மொச்சைக்கொட்டையை தாராளமாக இணைத்துக் கொள்ளலாம்.

நாள் முழுமைக்குமான புத்துணர்ச்சியும் ஆற்றலும்

உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஆற்றலை (Energy) உடனடியாக வழங்குவதில் இந்த மொச்சைக்கொட்டை பீன்ஸ் முன்னிலையில் உள்ளது. காலையில் அல்லது மதிய உணவில் இதனைச் சேர்த்துக் கொள்ளும்போது, அது சோர்வை நீக்கி நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த ஆற்றல் தரும் உணவாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துதல்

நமது உடலைத் தாக்கும் பல்வேறு கிருமிகள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் (Immune System) பங்கு முக்கியமானது. மொச்சைக்கொட்டையில் அதிகளவில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Anti-oxidants), வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பல மடங்கு வீரியமிக்கதாக மாற்றுகின்றன.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்துநீரிழிவு நோயாளிகளுக்கு, குறிப்பாக டைப்-2 நீரிழிவு (Type 2 Diabetes) பாதிப்பு உள்ளவர்களுக்கு மொச்சைக்கொட்டை ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கவிடாமல், அதனைச் சீரான அளவில் பராமரிக்க உதவுகிறது. இன்சுலின் சுரப்பைச் சீராக்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து

ஆரோக்கியமான செரிமானப் பாதைக்கு (Digestive Track) வழிவகுப்பதில் மொச்சைக்கொட்டைக்கு நிகர் வேறில்லை. இதில் கொட்டிக்கிடக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டைத் துரிதப்படுத்துவதுடன், குடல் சார்ந்த பிரச்சினைகள், வயிற்று வீக்கம் மற்றும் கடுமையான மலச்சிக்கல் (Constipation) போன்ற குறைபாடுகளை வேரிலிருந்தே குணப்படுத்த உதவுகிறது. குடலைச் சுத்தமாகப் பராமரிக்க விரும்புபவர்கள் இதனைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெள்ளை ஆடையில் கறையா? இந்த டிப்ஸ் தெரிந்தால் புதுசுபோல் மின்னும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/easy-tips-to-remove-stains-from-white-clothes-naturally-83490.html</link>	
		<pubDate>Mon, 08 Jun 2026 12:46:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/easy-tips-to-remove-stains-from-white-clothes-naturally-83490.html</guid>
		            
			

    	<description><![CDATA[Stains from White Clothes: வெள்ளை ஆடைகளில் கறை பட்டால் உடனே சுத்தம் செய்வது முக்கியம், இல்லையெனில் கறை ஆழமாக பதியலாம். உணவு, வியர்வை, எண்ணெய் மற்றும் மேக்கப் கறைகளுக்கு மெதுவான சுத்திகரிப்பு முறைகள் உதவக்கூடும். கறை நீங்கும் முன் வெந்நீர் அல்லது இஸ்திரி பயன்படுத்துவது கறையை நிரந்தரமாக்கும் அபாயம் உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-4-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெள்ளை ஆடையில் கறையா? இந்த டிப்ஸ் தெரிந்தால் புதுசுபோல் மின்னும்!" /></figure>வெள்ளை நிற உடைகள் அணிவது அழகையும் சுத்தத்தையும் காட்டினாலும், சிறிய கறைகள்கூட உடனே கண்களில் படும். உணவு சிந்தல், வியர்வை, மேக்கப், எண்ணெய், சன்ஸ்கிரீன் போன்றவை வெள்ளை துணிகளில் எளிதில் கறை பதிய காரணமாகின்றன. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், வெள்ளை துணிகளில் நிறமூட்டம் இல்லாததால் சரியான முறையில் சுத்தம் செய்தால் கறைகளை நீக்குவது சற்றே எளிதாக இருக்கலாம். உடனடியாக கவனித்தால் பழைய நிலைக்கு மீண்டும் கொண்டு வர வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
<h3>கறை பட்ட உடைகளை உடனே சுத்தம் செய்வது ஏன் முக்கியம்?</h3>
கறை பட்டவுடன் அதை அப்படியே விடாமல் விரைவாக சுத்தம் செய்ய முயற்சிப்பது மிக அவசியம். அதிக நேரம் கழிந்தால் கறை துணி நார்களில் ஆழமாக பதிந்து விடும். குறிப்பாக வெப்பமான நீர் அல்லது இஸ்திரி போன்ற சூட்டை பயன்படுத்துவது சில கறைகளை நிரந்தரமாக்கும் அபாயம் உள்ளது. எனவே முதலில் குளிர்ந்த நீரில் மெதுவாக கழுவி, கறை பரவாமல் கவனமாக செயல்படுவது நல்லது. தேய்த்து அழிப்பதை விட மெதுவாக துடைப்பது பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது.
<h3>உணவு மற்றும் வியர்வை கறைகளுக்கு என்ன செய்யலாம்?</h3>
உணவு சிதறிய கறைகள், வியர்வை மஞ்சள் தடங்கள் அல்லது இரத்தக் கறைகள் போன்றவற்றை நீக்க சில வீட்டுப் பொருட்களே உதவக்கூடும். மெதுவான சோப்பு அல்லது சுத்திகரிப்பு திரவங்களை பயன்படுத்தி கறை பகுதியில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு கழுவுவது பலருக்கும் உதவியாக இருக்கும். ஆனால் துணியின் தன்மையை பார்த்து செயல்படுவது அவசியம். அதிகமாக ரசாயனப் பொருட்களை பயன்படுத்தினால் துணி சேதமடையும் வாய்ப்பும் உள்ளது.
<h3>எண்ணெய் மற்றும் மேக்கப் கறைகளை எப்படிச் சமாளிப்பது?</h3>
எண்ணெய் சார்ந்த கறைகள் பொதுவாக சிரமமானவை. இதற்காக சிலர் பேக்கிங் சோடா போன்றவற்றைப் பயன்படுத்தி எண்ணெயை உறிஞ்ச முயற்சிக்கின்றனர். மேக்கப் கறைகளுக்கு மெதுவான சுத்திகரிப்பு திரவங்கள் பயன்படலாம். முக்கியமாக எண்ணெய் கறைகளில் உடனே தண்ணீர் ஊற்றுவது சில நேரங்களில் கறையை மேலும் பரப்பக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கறை இருக்கும் இடத்தில் அதிக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.
<h3>வெப்பம் பயன்படுத்துவது ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?</h3>
பலர் உடனே துணியை வெந்நீரில் ஊறவைக்கவோ, ட்ரையர் அல்லது இஸ்திரி பயன்படுத்தவோ செய்கிறார்கள். ஆனால் இது சில கறைகளை நிரந்தரமாக மாற்றக்கூடும். குறிப்பாக புரதம் சார்ந்த கறைகள் வெப்பத்தில் மேலும் உறைந்து விடும் அபாயம் உள்ளது. அதனால் கறை முழுமையாக நீங்கியதை உறுதி செய்யாமல் துணியை சூட்டில் உலர்த்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. காற்றில் இயல்பாக உலர்த்துவது பாதுகாப்பான தேர்வாக இருக்கலாம்.
<h3>பழைய கறைகள் நீங்காவிட்டால் என்ன செய்யலாம்?</h3>
சில நேரங்களில் பலமுறை சுத்தம் செய்த பிறகும் கறைகள் நீங்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் உடையை முழுவதும் மாற்றி அணிய வேண்டிய அவசியமில்லை. சிலர் துணிகளை மறுநிறமூட்டம் செய்து பயன்படுத்துகின்றனர். மேலும் தொழில்முறை சுத்திகரிப்பு சேவைகளும் உதவக்கூடும். பழைய வெள்ளை உடைகளை கைவிடுவதற்குப் பதிலாக புதுப்பித்து பயன்படுத்துவது செலவையும் குறைத்து, துணி வீணாவதையும் தடுக்கலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இடுப்புச் சதை சட்டென குறையணுமா? ‘பிலேட்ஸ்’ உடற்பயிற்சியின் மேஜிக் ரகசியம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/achieve-a-flat-stomach-and-snatched-waist-with-pilates-83488.html</link>	
		<pubDate>Mon, 08 Jun 2026 10:20:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/achieve-a-flat-stomach-and-snatched-waist-with-pilates-83488.html</guid>
		            
			

    	<description><![CDATA[Pilates Flat Stomach: உபகரணங்கள் இல்லாத எளிய பிலேட்ஸ் உடற்பயிற்சிகள் மூலம் வயிற்றுத் தசைகளை இறுக்கமாக்கி தட்டையான வயிறைப் பெற முடியும். இதில் 'கிரிஸ் கிராஸ்' மற்றும் 'சைட் பிளாங்க்' ஆகிய பயிற்சிகள் இடுப்பின் பக்கவாட்டுக் கொழுப்பை மிக வேகமாகத் தகர்க்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-3-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இடுப்புச் சதை சட்டென குறையணுமா? ‘பிலேட்ஸ்’ உடற்பயிற்சியின் மேஜிக் ரகசியம்!" /></figure>இன்றைய அவசர உலகில் உடலை கட்டுக்கோப்பாகவும், இடுப்பை அழகாகவும் மாற்றுவதற்கு 'பிலேட்ஸ்' (Pilates) உடற்பயிற்சி முறை உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கடினமான உடற்பயிற்சி உபகரணங்கள் ஏதுமின்றி வீட்டில் இருந்தபடியே வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். பிலேட்ஸ் முறையில் உள்ள 'கிரிஸ் கிராஸ்' (Criss Cross) என்ற பயிற்சி, தொப்பை மற்றும் பக்கவாட்டு இடுப்புத் தசைகளை நேரடியாகக் குறிவைத்து மிக வேகமாகச் செயல்படுகிறது. தரையில் படுத்துக் கொண்டு முழங்கால்களையும் முழங்கைகளையும் மாற்றி மாற்றி மெதுவாக அசைப்பதன் மூலம் வயிற்றின் ஆழமான தசைகள் அதிகளவில் தூண்டப்படுகின்றன. இத்துடன் 'சைட் பிளாங்க்' (Side Plank) பயிற்சியைச் சேர்த்துச் செய்யும்போது, இடுப்பின் இருபுறமும் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் சமநிலை பெறுகிறது.
<h3>நவீன பிலேட்ஸ் பயிற்சிகள்</h3>
இன்றைய காலகட்டத்தில் பலரும் தட்டையான வயிறு மற்றும் கச்சிதமான இடுப்பு அமைப்பைப் பெறப் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைப்பதிலும், உடலை உறுதியாக வைப்பதிலும் 'பிலேட்ஸ்' (Pilates) எனப்படும் உடற்பயிற்சி முறை உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கடினமான உடற்பயிற்சி உபகரணங்கள் ஏதுமின்றி, வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமாக்க இந்த பயிற்சி பெரிதும் உதவுகிறது.
<h3>கிரிஸ் கிராஸ் வழிமுறைகள்</h3>
பிலேட்ஸ் பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது 'கிரிஸ் கிராஸ்' ஆகும். இது தொப்பை மற்றும் பக்கவாட்டு இடுப்புத் தசைகளைக் குறிவைத்துச் செயல்படுகிறது. தரையில் நேராகப் படுத்து, கால்களை 90 டிகிரி கோணத்தில் மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை தலைக்கு பின்னால் கட்டிக்கொண்டு, வலது முழங்கையை இடது முழங்காலுக்கும், இடது முழங்கையை வலது முழங்காலுக்கும் மாற்றி மாற்றி கொண்டு வர வேண்டும். இந்த அசைவுகளை எவ்வளவு மெதுவாகச் செய்கிறோமோ, அவ்வளவு ஆழமாக வயிற்றுத் தசைகள் வேலை செய்யும் என உடற்பயிற்சி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
<h3>சைட் பிளாங்க் ரகசியம்</h3>
இடுப்பின் இருபுறமும் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க 'சைட் பிளாங்க்' சிறந்த தேர்வாகும். ஒரு பக்கமாகப் படுத்து, முழங்கையைத் தரையில் ஊன்றி, உடலை நேர்க்கோட்டில் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இந்த நிலையில் குறைந்தது 30 விநாடிகள் நீடிக்க வேண்டும். இது வயிற்றின் ஆழமான தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த சமநிலையை (Stability) அதிகரிக்கவும் துணைபுரிகிறது.
<h3>ஆரோக்கிய உணவுமுறை மாற்றங்கள்</h3>
வயிற்றுப் பகுதியைச் சீரமைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது; அதனுடன் ஆரோக்கியமான உணவுமுறையையும் (Diet) பின்பற்றுவது அவசியமாகும். அதிக கலோரி கொண்ட உணவுகளைத் தவிர்த்து, சமச்சீரான உணவுகளை உட்கொள்ளும்போது பிலேட்ஸ் பயிற்சியின் பலன்கள் இரட்டிப்பாகும். தினசரி 15 முதல் 20 நிமிடங்கள் வரை இப்பயிற்சிகளுக்கு ஒதுக்கினால், குறுகிய காலத்திலேயே இடுப்புப் பகுதியில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களை உங்களால் உணர முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Kitchen Hacks: ஃப்ரிட்ஜுக்குள் படையெடுக்கிறதா கரப்பான் பூச்சி.. அகற்றுவதற்கான எளிய வழிகள் இங்கே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/7-simple-and-effective-solutions-to-get-rid-of-cockroaches-from-the-refrigerator-83405.html</link>	
		<pubDate>Sun, 07 Jun 2026 17:19:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/7-simple-and-effective-solutions-to-get-rid-of-cockroaches-from-the-refrigerator-83405.html</guid>
		            
			

    	<description><![CDATA[Cockroach Removal Tips: வெப்பத்தின் காரணமாக கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பின்னாலும் கீழேயும் ஒளிந்து கொள்கின்றன. குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் உள்ள தூசி, உணவுத் துகள்கள் மற்றும் பூச்சி எச்சங்களைச் சுத்தம் செய்ய, அதைச் சுவரிலிருந்து சற்று தள்ளி வைக்கவும். சுவர்கள், தரைகள், குழாய்கள் மற்றும் மின்சார சாக்கெட்டுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிசல்கள் அல்லது இடைவெளிகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/refrigerator-hacks.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kitchen Hacks: ஃப்ரிட்ஜுக்குள் படையெடுக்கிறதா கரப்பான் பூச்சி.. அகற்றுவதற்கான எளிய வழிகள் இங்கே!" /></figure>குளிர்சாதனப் பெட்டியில்<strong> (Refrigerator)</strong> கரப்பான் பூச்சிகள் தோன்றுவது அழுக்கிற்கான அறிகுறி மட்டுமல்ல, இது ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயமாகவும் பார்க்க வேண்டும். ஈரப்பதம், வெப்பமான வானிலை மற்றும் சிறிய உணவுத் துகள்கள் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கின்றன. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், அவை <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-vegetables-from-rotting-quickly-in-summer-kitchen-hacks-in-tamil-82388.html">சமையலறை</a><strong> (Kitchen)</strong> முழுவதும் பரவிவிடும். உண்மையில், சிறிதளவு ஈரப்பதம், உணவுத் துகள்கள் மற்றும் சூடான இடங்கள் கரப்பான் பூச்சிகளை ஈர்த்து, தங்குவதற்கு வாய்ப்புகளை வழங்கும். அதன்படி கரப்பான் பூச்சிகளை உரிய நேரத்தில் தடுக்காவிட்டால், அவை விரைவாகப் பெருகி உடல் நலத்தில் பிரச்சனையை உண்டாக்கலாம். நல்லவேளையாக, சில எளிய சுத்தம் மற்றும் <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/tips-to-help-cooling-your-cooler-in-summer-cooler-cooling-tips-in-tamil-77395.html">பராமரிப்பு</a> பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-vegetables-from-rotting-quickly-in-summer-kitchen-hacks-in-tamil-82388.html">கோடைக்காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிவிடுகிறதா..? இதை செய்து நீண்ட காலம் பாதுகாக்கலாம்!</a>
<h3>குளிர்சாதன பெட்டியை எப்படி சுத்தம் செய்வது..?</h3>
சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன் குளிர்சாதனப் பெட்டியின் மின் இணைப்பைத் துண்டிக்கவும். இது குளிர்சாதனப் பெட்டியின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் சுத்தம் செய்ய உதவும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அனைத்து உணவுப் பொருட்கள், தட்டுகள் மற்றும் இழுப்பறைகளை அகற்றிய பிறகு, ஏதேனும் உணவுத் துண்டுகள், கெட்டுப்போன உணவு அல்லது படிந்துள்ள அழுக்கு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இவைதான் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கின்றன.

குளிர்சாதனப் பெட்டியை உள்ளேயும் வெளியேயும் மிதமான வெந்நீர் மற்றும் சுத்தப்படுத்தும் திரவத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, ரப்பர் சீல்கள், காய்கறிப் பெட்டிகள், தட்டுகளின் மூலைகள் மற்றும் முட்டை தட்டுகள் போன்ற பகுதிகளைச் சுத்தம் செய்யவும். சிறிய அழுக்கு கூட கரப்பான் பூச்சிகளுக்கு உணவாகிவிடும்.

வெப்பத்தின் காரணமாக கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பின்னாலும் கீழேயும் ஒளிந்து கொள்கின்றன. குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் உள்ள தூசி, உணவுத் துகள்கள் மற்றும் பூச்சி எச்சங்களைச் சுத்தம் செய்ய, அதைச் சுவரிலிருந்து சற்று தள்ளி வைக்கவும். சுவர்கள், தரைகள், குழாய்கள் மற்றும் மின்சார சாக்கெட்டுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிசல்கள் அல்லது இடைவெளிகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும். ஏதேனும் இடைவெளிகளைக் கண்டால், அவற்றை சீலண்ட் அல்லது புட்டி கொண்டு அடைக்கவும்.

உணவுப் பொருட்களை எப்போதும் மூடிய கொள்கலன்களில் வைக்க வேண்டும். அதேநேரத்தில் பழங்கள், காய்கறிகள் அல்லது மீதமுள்ள உணவைத் திறந்து வைக்க வேண்டாம். தரை ஓடுகளில் ஏதேனும் விழுந்தால், அதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். நிரம்பிய குப்பைத் தொட்டி கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும். எனவே, சமையலறைக் கழிவுகளைத் தவறாமல் வெளியே எறிந்துவிட்டு, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியைப் பயன்படுத்துங்கள். இது கரப்பான் பூச்சிகளின் இனப்பெருக்க வாய்ப்புகளைப் பெருமளவில் குறைக்கும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/simple-tips-to-choose-sweet-and-tasty-mangoes-in-the-market-83045.html">இனிப்பான மாம்பழம் வாங்கணுமா? தேர்வு செய்ய இதோ டிப்ஸ்!</a>

வழக்கமாக சுத்தம் செய்த பிறகும் கரப்பான் பூச்சி தொல்லை தொடர்ந்தால், ஒரு தொழில்முறை பூச்சிக் கட்டுப்பாட்டு சேவையின் உதவியை நாடுவது நல்லது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது உங்கள் சமையலறையை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாமியார் &#8211; மருமகள் பந்தம் இனிமையாக மாற எளிய வழிகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/simple-strategies-for-building-a-harmonious-mother-in-law-and-daughter-in-law-relationship-83256.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 19:13:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/simple-strategies-for-building-a-harmonious-mother-in-law-and-daughter-in-law-relationship-83256.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mother-in-law vs Daughter-in-law: மாமியார் மற்றும் மருமகள் இடையேயான உறவு என்பது ஒரு குடும்பத்தின் அஸ்திவாரம் போன்றது. இந்த இருவருக்குள் ஏற்படும் இணக்கமும் புரிதலும் மட்டுமே அந்த வீட்டின் அமைதியையும் மகிழ்ச்சியையும் தீர்மானிக்கிறது. விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்வதே மாமியார்-மருமகள் இடையே வாழ்நாள் முழுவதும் அன்பை நிலைநிறுத்தும் எளிய வழியாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-19.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாமியார் &#8211; மருமகள் பந்தம் இனிமையாக மாற எளிய வழிகள்!" /></figure>மாமியார் மற்றும் மருமகள் இடையேயான உறவில் பரஸ்பர மரியாதையும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் முக்கியத்துவமும் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் அஸ்திவாரமாக அமைகிறது. மருமகளைத் தன் சொந்த குடும்பத்தில் ஒருத்தியாகவும், மாமியாரைப் பக்குவம் வாய்ந்த வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ளும் நேர்மறையான கண்ணோட்டம் இருவருக்குள்ளும் இருக்கும் மனக்கசப்புகளை முழுமையாக நீக்கிவிடும். எந்தவொரு சிறிய கருத்து வேறுபாடு அல்லது மனவருத்தம் ஏற்பட்டாலும், அதை மனதிற்குள்ளேயே வைக்காமல் நேரடியாகவும் அன்பாகவும் பேசித் தீர்த்துக் கொள்வது உறவை மேலும் பலப்படுத்தும். அதிகாரங்களைத் திணிக்காமல் அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்வதே மாமியார்-மருமகள் இடையே வாழ்நாள் முழுவதும் அன்பை நிலைநிறுத்தும் எளிய வழியாகும்.

குடும்ப அமைதிக்கான அடிப்படைப் புரிதல்

மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய உறவுமுறையானது எப்போதுமே மிகவும் நுட்பமானது மற்றும் சவாலானது. ஒரு வீட்டின் நிம்மதியும் சந்தோஷமும் முழுமையாக நிலைத்திருக்க வேண்டும் என்றால், இந்த இருவரின் பிணைப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவர்களுக்குள் சுமுகமான சூழல் நிலவவில்லை எனில், அன்றாட வாழ்வில் நடக்கும் மிகச் சிறிய விவாதங்கள் கூட பிற்காலத்தில் பெரிய அளவிலான குடும்பச் சண்டைகளாக உருவெடுக்கக்கூடும். எனவே, இந்தத் தனித்துவமான பந்தத்தை சீராகப் பேணுவதற்கு, இரு தரப்பிலும் சிறிதளவு பரஸ்பர புரிதல், மிகுந்த பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை ஆகிய குணங்கள் இன்றியமையாத தேவையாகப் பார்க்கப்படுகிறது.

கண்ணோட்டத்தை மாற்றுவதன் முக்கியத்துவம்

ஒரு புதிய குடும்பத்திற்குள் நுழையும் மருமகளை, மாமியார் எப்போதுமே ஒரு வேற்று ஆளாகவோ அல்லது புதிய நபராகவோ பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக, அவளையும் தன் குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கமாக ஏற்று அரவணைக்க வேண்டும். அதே வேளையில், மருமகளும் தன் மாமியாரை வெறும் அதிகாரத்தைக் காட்டும் ஒரு கட்டுப்பாட்டாளராக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்ற ஒரு வழிகாட்டியாகவும், குடும்பத்தின் மூத்தவராகவும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த இருதரப்பு எண்ணங்களிலும், பார்வைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் போது, அவர்களுக்குள் எழும் பெரும்பாலான மனக்கசப்புகளும், அன்றாடப் பிரச்சினைகளும் தானாகவே மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

மனம் திறந்த தகவல் தொடர்பு மற்றும் தீர்வுகள்

எந்தவொரு ஆரோக்கியமான உறவிற்கும் வலுவான அடித்தளமாக விளங்குவது தடையற்ற தகவல் தொடர்புதான். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடோ அல்லது மனவருத்தமோ ஏற்பட்டால், அதை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்காமல், உடனடியாக ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. மனக்குறைபாடுகளைக் காலம் கடந்து சேமித்து வைப்பது, எதிர்காலத்தில் பெரிய அளவிலான மோதல்களுக்கே வழிவகுக்கும். மேலும், இவ்வாறு விவாதிக்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவைப்படுவதோடு, அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக, மாமியார் ஏதேனும் ஒரு ஆலோசனையைக் கூற விரும்பினால், அதை ஒரு கட்டளையாகவோ அல்லது அதிகாரமாகவோ திணிக்காமல், அன்பான முறையில் எடுத்துரைப்பது உறவை மேலும் பலப்படுத்தும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடை வெயில், மழையில் இருந்து குழந்தைகளை எப்படி காப்பது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/essential-safety-tips-to-protect-infants-and-kids-from-intense-summer-heatwaves-83168.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 18:56:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/essential-safety-tips-to-protect-infants-and-kids-from-intense-summer-heatwaves-83168.html</guid>
		            
			

    	<description><![CDATA[Child Safety: தற்போது நிலவி வரும் கடுமையான வெப்ப அலையிலிருந்து பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்கப் பெற்றோர்கள் மதிய வேளைகளில் அவர்களை வெளியில் அனுப்புவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டின் உட்புறத்தைக் குளுமையாக வைத்திருப்பதுடன், அவசரத் தேவையின்றி வெயில் காலத்தில் குழந்தைகளுடன் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதைக் பெற்றோர்கள் தடுத்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-1-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடை வெயில், மழையில் இருந்து குழந்தைகளை எப்படி காப்பது?" /></figure>&nbsp;

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடப்பு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் தினசரி வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைக் கடந்து பதிவாகி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில அரசுகளும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்குத் தொடர் விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. தற்போதைய வெப்ப அலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

<strong>குழந்தைகளுக்கான சிறப்பு கவனம்: வீட்டை விட்டு வெளியே அனுப்புவதைத் தவிர்க்க அறிவுரை</strong>

பெரியவர்களைக் காட்டிலும் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல்நிலை இந்த வெயில் காலத்தில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், சிறு குழந்தைகளைக் கடுமையான சூரிய ஒளியில் நேரடியாகக் கொண்டு செல்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடை விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளை மதிய நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கப் பெற்றோர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

<strong>வெப்பத்தாக்கத்தின் அறிகுறிகள்: பெற்றோர்கள் கண்டறிய வேண்டிய முக்கியப் புள்ளிகள்</strong>

குழந்தைகளுக்கு வெப்பத்தின் பாதிப்பு (Heatstroke) ஏற்பட்டுள்ளதா என்பதைப் பெற்றோர்கள் அவர்களின் சில உடல்நிலை மாற்றங்களைக் கொண்டு துல்லியமாகக் கண்டறிய முடியும். வழக்கத்திற்கு மாறாகக் குழந்தைகள் மிகவும் சோர்வடைவது, உடல் சர்மம் வறண்டு போதல், அதிகப்படியான தாகம், தலைவலி, வாந்தி அல்லது மயக்க நிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும் அளவு குறைந்திருந்தாலோ அது உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

<strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: நீர்ச்சத்து மற்றும் தகுந்த ஆடைகளைத் தேர்வு செய்தல்</strong>

வெப்ப அலையின் பிடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அவர்களுக்குத் தொடர்ந்து தூய்மையான குடிநீர், இளநீர், ஓ.ஆர்.எஸ் (ORS) கரைசல் மற்றும் பழச்சாறுகளைக் கொடுத்து உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு இறுக்கமான ஆடைகளை அணிவிக்காமல், காற்றோட்டமான மற்றும் வெளிர் நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிவிப்பது சிறந்தது. மேலும், வீட்டின் உட்புறத்தைக் குளுமையாக வைத்திருப்பதுடன், மதிய வேளைகளில் அவசரத் தேவையின்றி குழந்தைகளுடன் பயணங்கள் மேற்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பத்தே நிமிடத்தில் குழந்தைகளைக் கவரும் சூப்பர் ஸ்நாக்ஸ்..!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/quick-10-minute-paneer-thecha-recipe-perfect-for-kids-evening-snack-83165.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 13:42:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/quick-10-minute-paneer-thecha-recipe-perfect-for-kids-evening-snack-83165.html</guid>
		            
			

    	<description><![CDATA[Paneer Thecha Recipe: பாலிவுட் பிரபலம் மலைக்கா அரோராவின் விருப்பமான மகாராஷ்டிர பாரம்பரிய 'பன்னீர் தேச்சா' உணவு தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டியாகவும், அவசர காலங்களில் காலை உணவிற்கான சிறந்த சைடு டிஷ்ஷாகவும் இது அமைகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/paneer-thecha.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பத்தே நிமிடத்தில் குழந்தைகளைக் கவரும் சூப்பர் ஸ்நாக்ஸ்..!" /></figure>உணவுப் பிரியர்களின் விருப்பப் பட்டியலில் பன்னீர் எப்போதும் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. பொதுவாக பன்னீரை வைத்து பட்டர் மசாலா அல்லது பிரியாணி போன்ற பாரம்பரிய உணவுகளையே நாம் அதிகம் செய்து பழகியிருப்போம். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் பாலிவுட் பிரபல நட்சத்திரமான மலைக்கா அரோராவின் 'பன்னீர் தேச்சா' (Paneer Thecha) என்ற புதிய உணவு வகை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய காரசாரமான உணவு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்நாக்ஸ் வகை, தற்போதைய உணவு ட்ரெண்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

<strong>குழந்தைகளுக்கான சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி</strong>

மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் என்ன சமைத்துக் கொடுப்பது என்ற கவலை பல பெற்றோர்களுக்கு இருக்கும். அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த பன்னீர் தேச்சா அமைகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையில் இருப்பதுடன், அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய புரதச்சத்தை (Protein) அதிக அளவில் வழங்குகிறது. காரசாரமான உணவுகளை விரும்பி உண்ணும் பெரியவர்களுக்கும், புதுமையான சுவையைத் தேடும் சிறுவர்களுக்கும் ஒருசேர நாவிற்கு விருந்தளிக்கும் இந்த சிற்றுண்டியை மிகக் குறைந்த நேரத்தில் சமைத்து முடித்துவிடலாம்.

<strong>குறைந்த நேரத்தில் தயாரிப்பதற்கான வழிமுறைகள்</strong>

இல்லத்தரசிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சமையலறையில் அதிக நேரம் செலவிடுவது சவாலான காரியமாகும். ஆனால், இந்த சுவையான பன்னீர் தேச்சாவைத் தயார் செய்ய வெறும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது. வீட்டிலுள்ள எளிய பொருட்களைக் கொண்டே மிகக் குறைந்த நேரத்தில் இதனைச் செய்து முடிக்க முடியும் என்பதால், திடீரென வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அல்லது அவசரமான காலை வேளையிலும் கூட இதனை ஒரு சிறந்த சைடு டிஷ்ஷாகவோ அல்லது ரோல் (Roll) செய்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

<strong>தேவையான பொருட்களின் பட்டியல்</strong>

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவைத் தயாரிப்பதற்குப் பெரிய அளவில் செலவோ அல்லது அரிய பொருட்களோ தேவையில்லை. நமது சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பன்னீர், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய், உடலுக்கு நன்மை தரும் பூண்டு, மொறுமொறுப்பான வறுத்த வேர்க்கடலை, ஜீரண சக்தியை அதிகரிக்கும் சீரகம், நறுமணமிக்க கொத்தமல்லித் தழை ஆகியவற்றுடன் தேவையான அளவு சமையல் எண்ணெய் மற்றும் உப்பு ஆகிய எளிய பொருட்களே இதற்குப் போதுமானதாகும்.

<strong>செய்முறை விளக்கம் மற்றும் இறுதித் தயாரிப்பு</strong>

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் சீரகம் ஆகியவற்றை லேசாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஆறிய இந்த கலவையுடன் வறுத்த வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அல்லது உரலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் (இதுவே 'தேச்சா' மசாலா எனப்படும்). அடுத்ததாக, மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் தாளித்து, சதுரங்களாக நறுக்கிய பன்னீர் துண்டுகளைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பன்னீர் பொன்னிறமாக மாறும் வேளையில், நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் தேவையான உப்பையும் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் 2 நிமிடங்கள் கிளறி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் 10 நிமிட 'பன்னீர் தேச்சா' தயார்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனிப்பான மாம்பழம் வாங்கணுமா? தேர்வு செய்ய இதோ டிப்ஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/simple-tips-to-choose-sweet-and-tasty-mangoes-in-the-market-83045.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 06:20:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/simple-tips-to-choose-sweet-and-tasty-mangoes-in-the-market-83045.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tasty Mangoes: சந்தையில் மாம்பழம் வாங்கும்போது நிறத்தை மட்டும் பார்த்து தேர்வு செய்யாமல், அதன் மணம் மற்றும் மென்மையையும் கவனிக்க வேண்டும். நன்கு பழுத்த மாம்பழங்களில் இனிமையான வாசனை இருக்கும். மிகவும் கடினமாகவோ அல்லது அதிக மெத்தையாகவோ இருக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது. தோலில் அதிக கருப்பு தழும்புகள் இல்லாத, இயல்பாக பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்தால் நல்ல சுவையை பெறலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/05/mangoes-for-health.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனிப்பான மாம்பழம் வாங்கணுமா? தேர்வு செய்ய இதோ டிப்ஸ்!" /></figure>கோடை காலம் தொடங்கியவுடன் சந்தைகளில் மாம்பழங்களின் வரத்து அதிகரிக்கிறது. ஆனால் வெளிப்புற அழகை மட்டும் பார்த்து வாங்கினால், இனிப்பு குறைந்த அல்லது சரியாக பழுக்காத மாம்பழங்கள் கைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதனால் நல்ல சுவையுடன் இருக்கும் மாம்பழத்தை தேர்வு செய்வதற்கு சில எளிய விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக பழத்தின் மணம், தோல் அமைப்பு, மென்மை போன்றவை அதன் தரத்தை எளிதாக காட்டும் அறிகுறிகளாக இருக்கும். நன்கு பழுத்த மாம்பழங்களில் இயல்பான இனிப்பு மணம் இருக்கும் என்பதால், வாங்கும் முன் அதை அருகில் வைத்து முகர்ந்து பார்க்கலாம். இனிமையான வாசனை இருந்தால் அது சுவையாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.
<h3>நிறத்தை மட்டும் நம்பாதீர்கள்</h3>
பலர் மாம்பழத்தை வாங்கும்போது அதன் மஞ்சள் நிறத்தை மட்டும் பார்த்து முடிவு செய்கிறார்கள். ஆனால் எல்லா வகை மாம்பழங்களும் ஒரே மாதிரி நிறம் மாறாது. சில வகைகள் பச்சை கலந்த நிறத்திலேயே நன்கு பழுத்திருக்கும். எனவே அதிகமாக பளபளப்பாக இருக்கும் அல்லது மிகவும் ஒரே மாதிரி நிறம் கொண்ட மாம்பழங்களை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இயல்பாக பழுத்த மாம்பழங்களில் நிற வேறுபாடு சற்று காணப்படலாம். நிறத்துடன் சேர்த்து அதன் மணம் மற்றும் கையால் தொட்ட உணர்வையும் பரிசோதித்தால் சிறந்த பழத்தை தேர்வு செய்ய முடியும்.
<h3>மென்மையை கவனித்தால் ஏமாறமாட்டீர்கள்</h3>
நல்ல மாம்பழத்தை அடையாளம் காண இன்னொரு எளிய வழி அதன் மென்மையை சோதிப்பதாகும். மாம்பழத்தை மிகவும் அழுத்தாமல் மெதுவாக கை வைத்து பார்க்க வேண்டும். நன்கு பழுத்த பழம் சிறிதளவு மென்மையாக இருக்கும். மிகக் கடினமாக இருந்தால் அது இன்னும் பழுக்காமல் இருக்கலாம்; அதே நேரத்தில் மிகவும் மெத்தையாக இருந்தால் அது அதிகமாக பழுத்திருக்க வாய்ப்பு உண்டு. சரியான அளவு மென்மை கொண்ட மாம்பழங்களே சுவையாகவும் சாறாகவும் இருக்கும்.
<h3>தோலில் உள்ள குறைகளை கவனிக்கவும்</h3>
மாம்பழத்தின் தோலை பார்த்தும் அதன் தரத்தை ஓரளவு அறியலாம். அதிக சுருக்கம், ஆழமான கருப்பு தழும்புகள் அல்லது வெடிப்பு போன்றவை இருந்தால் அந்த பழம் கெட்டுப்போய் இருக்கக்கூடும். சில நேரங்களில் வேதிப்பொருள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் இயல்பற்ற பளபளப்பு அல்லது வெளிப்புறத்தில் வெள்ளை தூள் போன்ற தடயங்களும் காணப்படலாம். அதனால் வெளிப்புற தோற்றம் மிகவும் கவர்ச்சியாக இருந்தாலும் சற்று கவனமாக தேர்வு செய்வது நல்லது.
<h3>சரியான விற்பனையாளரிடம் வாங்குவது முக்கியம்</h3>
மாம்பழத்தின் தரம் அதன் வகையிலும், விற்பனை செய்யும் இடத்திலும் மாறுபடும். நம்பகமான கடைகள் அல்லது பழக்கமான விற்பனையாளர்களிடம் வாங்கினால் நல்ல தரமான பழம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். முதலில் குறைந்த அளவில் வாங்கி சுவையை பார்த்த பிறகு அதிகமாக வாங்குவது பாதுகாப்பான முடிவாக இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தையில் வரக்கூடும் என்பதால், கவனமாக தேர்வு செய்தால் இனிப்பான மற்றும் ஆரோக்கியமான மாம்பழத்தை வீட்டிற்கு கொண்டு செல்லலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலையிலேயே இதைப் பேசாதீங்க&#8230; விவாகரத்து வரை கொண்டு செல்லும் கணவன்-மனைவி சண்டைகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/crucial-morning-communication-mistakes-that-can-trigger-divorce-and-ruin-marriages-83012.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 05:19:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/crucial-morning-communication-mistakes-that-can-trigger-divorce-and-ruin-marriages-83012.html</guid>
		            
			

    	<description><![CDATA[Morning Conversations: காலையில் கண் விழித்தவுடன் கடந்த காலத் தவறுகளையும், பழைய சண்டைகளையும் மீண்டும் கிளறிப் பேசுவது தம்பதியரிடையே மனக்கசப்பை அதிகரித்து விவாகரத்து வரை வழிவகுக்கும். துணையின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது உறவின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். அவசரமாக வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் ஒருவரையொருவர் குறை கூறாமல், இன்முகத்தோடு நேர்மறையான வார்த்தைகளைப் பேசி நாளைத் தொடங்குவதே சிறந்ததாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-18.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலையிலேயே இதைப் பேசாதீங்க&#8230; விவாகரத்து வரை கொண்டு செல்லும் கணவன்-மனைவி சண்டைகள்!" /></figure>ஒரு நாளின் தொடக்கம் எப்படி அமைகிறதோ, அதைப்பொறுத்தே அன்றைய நாள் முழுவதும் நமது மனநிலையும் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பாக, திருமணமான தம்பதியரிடையே காலையில் மலரும் முதல் உரையாடல், அவர்களது வாழ்நாள் முழுமைக்குமான பிணைப்பைத் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நிலவும் அதீத பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக, பெரும்பாலான கணவன்-மனைவியர் காலையிலேயே தங்களுக்குள் விவாதங்களையும் மனக்கசப்புகளையும் தொடங்கிவிடுகின்றனர். இத்தகைய எதிர்மறையான பழக்கவழக்கம் தொடர்ந்தால், அது காலப்போக்கில் பிரிவினை அல்லது விவாகரத்து வரை கொண்டு போய் சேர்க்கும் என்று மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
<h3>கடந்த கால கசப்புகளை கிளறுதல்</h3>
காலையில் கண் விழித்த உடனேயே, பழைய தவறுகளையும் கடந்த கால சண்டைகளையும் மீண்டும் நினைவுபடுத்திப் பேசுவது தம்பதியரிடையே மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்குகிறது. "அன்று நீ செய்த தவறால்தான் இந்த இழப்பு ஏற்பட்டது" என்பது போன்ற குற்றச்சாட்டுகள், துணையின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தும். இத்தகைய பேச்சுகள் அதிகாலைப் பொழுதின் நேர்மறை ஆற்றலை முழுமையாக அழித்து, இருவருக்குள்ளும் ஒரு நிரந்தரமான அசுவராசியத்தை விதைத்துவிடும். எனவே, காலையில் பழைய குப்பைகளைக் கிளறுவதைத் தவிர்ப்பது உறவுக்கு நல்லது.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/religion/the-divine-science-and-benefits-of-worshiping-during-brahma-muhurta-82977.html">ஏன் அதிகாலை வழிபாட்டை முன்னோர்கள் வற்புறுத்தினார்கள்? இதோ வெளிவரும் உண்மை!</a>
<h3>மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுதல்</h3>
ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான திறமைகளும் குணநலன்களும் உள்ளன என்பதை தம்பதியர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, காலையிலேயே பக்கத்து வீட்டுக்காரருடனோ அல்லது உறவினர்களுடனோ தனது துணையை ஒப்பிட்டு தாழ்த்திப் பேசுவது, அவர்களின் சுயமரியாதையைப் பெருமளவில் பாதிக்கும். "அவர்களைப் பார், எவ்வளவு பொறுப்பாக இருக்கிறார்கள்" என்ற ஒற்றை வார்த்தை, துணையின் மனதில் தாழ்வுமனப்பான்மையையும் உங்கள் மீதான கோபத்தையும் வளர்த்துவிடும்.
<h3>பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் நிதி விவாதங்கள்</h3>
குடும்பப் பொறுப்புகள் என்று வரும்போது பணப் புழக்கம் மற்றும் பட்ஜெட் குறித்த விவாதங்கள் தவிர்க்க முடியாதவைதான் என்றாலும், அதற்கென ஒரு சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காலையில் காபி குடிக்கும் வேளையிலேயே, "கடன் சுமை அதிகமாகிவிட்டது, இந்த மாத செலவுகளுக்குப் பணமில்லை" எனப் புலம்பத் தொடங்குவது இருவருக்குமே அன்றைய நாளின் உத்வேகத்தைக் குலைத்துவிடும். இத்தகைய நிதி சார்ந்த சவாலான ஆலோசனைகளை மாலை நேரங்களிலோ அல்லது வார இறுதியிலோ நிதானமாகப் பேசுவதே புத்திசாலித்தனமாகும்.
<h3>அன்றாட பணிகளில் குறை கூறுதல்</h3>
காலை நேரத்தில் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் பதற்றத்தில், "நீ எப்போதும் இப்படித்தான், எதையும் ஒழுங்காகச் செய்ய மாட்டாய்" என்று பொதுப்படையாகக் குறை கூறுவது தம்பதியருக்குள் எரிச்சலை மூட்டும். இத்தகைய தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வார்த்தைப் போர்கள் தம்பதியரின் அன்றாடப் பணிகளைப் பாதிப்பதுடன், அலுவலகத்திலும் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இரவில் எவ்வளவு முயன்றும் தூங்க முடியவில்லையா? காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html</link>	
		<pubDate>Fri, 05 Jun 2026 22:19:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html</guid>
		            
			    	<description><![CDATA[இரவு தூக்கம் வராமல் இருப்பதற்கு மன அழுத்தம் மட்டும் காரணம் அல்ல. வைட்டமின் டி, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களில் உள்ள குறைபாடுகளும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். நல்ல தூக்கத்திற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?  என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/poor-sleep-quality-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Poor Sleep Quality 1" /></a></dt><p>இன்றைய காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று தூக்கமின்மை. இரவில் வெகுநேரம் உறங்குவது, நள்ளிரவில் கண்விழிப்பது, காலையில் எழுந்தாலும் சோர்வாக இருப்பது போன்ற பிரச்னைகள் சகஜமாகிவிட்டன. பலர் மன அழுத்தம், வேலைச் சுமை அல்லது வாழ்க்கை முறை காரணமாகக் கூறுகின்றனர். இருப்பினும், உடலில் சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு தூக்கத்தின் தரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/poor-sleep-quality-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Poor Sleep Quality 2" /></a></dt><p>உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாவிட்டால், தூக்கத்தின் காலம் மற்றும் தரம் இரண்டும் பாதிக்கப்படலாம். வைட்டமின் டி குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி குறைவாகப் பெறுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/poor-sleep-quality-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Poor Sleep Quality 3" /></a></dt><p>நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 இன்றியமையாதது. இந்த வைட்டமின் குறைபாடு தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். இரவில் அடிக்கடி எழுந்திருத்தல், நன்றாகத் தூங்காமல் இருத்தல், கவனக்குறைவு போன்ற பிரச்சனைகள் தோன்றும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/poor-sleep-quality-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Poor Sleep Quality 4" /></a></dt><p>உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருப்பதில் மக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு மன அழுத்தம், பதட்டம், தசை வலி மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கும். நல்ல தூக்கத்திற்கு போதுமான மெக்னீசியம் அளவு அவசியம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/poor-sleep-quality-these-missing-vitamins-could-be-the-hidden-cause-83099.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/poor-sleep-quality-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Poor Sleep Quality 5" /></a></dt><p>இரத்தத்தின் மூலம் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் இரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், சோர்வு, பலவீனம், அமைதியின்மை அதிகரித்து இரவில் நிம்மதியாக தூங்காமல் போகலாம். பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>காலையில் இதை செய்தால் மனஅழுத்தம் குறையுமா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/morning-habits-that-may-help-reduce-stress-facts-you-should-know-82858.html</link>	
		<pubDate>Fri, 05 Jun 2026 06:12:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/morning-habits-that-may-help-reduce-stress-facts-you-should-know-82858.html</guid>
		            
			

    	<description><![CDATA[Stress Relief Morning Habits: காலை நேரத்தில் அமைதியாக சில நிமிடங்கள் செலவிடுவது மனஅழுத்தத்தை குறைக்க உதவக்கூடும். லேசான உடற்பயிற்சி, காலை சூரிய ஒளி மற்றும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மனநிலையை மேம்படுத்தலாம். சத்தான காலை உணவு உடல், மன உற்சாகத்தை அதிகரிக்க உதவும். சிறிய காலை பழக்க மாற்றங்கள் நாள் முழுவதும் அமைதியான மனநிலையை தரக்கூடும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-16.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலையில் இதை செய்தால் மனஅழுத்தம் குறையுமா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!" /></figure>இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் என்பது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. வேலை அழுத்தம், குடும்ப பொறுப்புகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் அதிகமான டிஜிட்டல் பயன்பாடு போன்ற காரணங்களால் மனநிலை பாதிக்கப்படுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால், நிபுணர்கள் கூறுவதுபோல் காலையை எப்படி தொடங்குகிறோம் என்பது நாள் முழுவதும் மனநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில நல்ல காலை பழக்கங்கள் மனஅழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவக்கூடும்.
<h3>காலையில் அமைதியான நேரத்தை செலவிடுவது</h3>
பலர் எழுந்த உடனே அவசரமாக மொபைல் பார்க்கவும், வேலை தொடர்பான விஷயங்களில் மூழ்கவும் தொடங்கிவிடுகிறார்கள். இது நாள் தொடங்கும் முன்பே மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து நாளுக்கான திட்டத்தை சிந்திப்பது மனதை சீராக வைத்திருக்க உதவலாம். அதிகாலை நேரத்தின் அமைதி மனதிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை தரக்கூடியதாக கருதப்படுகிறது.
<h3>லேசான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி</h3>
காலை நேரத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவக்கூடும். உடற்பயிற்சியின் போது உடலில் சுறுசுறுப்பு மற்றும் மகிழ்ச்சி உணர்வை தூண்டும் சில ஹார்மோன்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைந்து நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட உதவி கிடைக்கலாம்.
<h3>காலை சூரிய ஒளி மற்றும் தூய காற்று</h3>
காலை நேர சூரிய ஒளி மற்றும் தூய காற்று உடல் மற்றும் மனநிலைக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சில நிமிடங்கள் வெளியில் நடப்பது மனதில் இருக்கும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை அளிக்கலாம். குறிப்பாக இயற்கையோடு சில நிமிடங்கள் செலவிடுவது மன அமைதியை மேம்படுத்தும் என்று பலர் நம்புகின்றனர்.
<h3>தியானம் மற்றும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி</h3>
மனஅழுத்தத்தை குறைக்க எளிமையான வழிகளில் ஒன்று தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியாகும். காலையில் 5 முதல் 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிப்பது மனதில் இருக்கும் பதட்டத்தை குறைக்க உதவலாம். இது கவனச்சிதறலை குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவக்கூடிய ஒரு நல்ல பழக்கமாக பார்க்கப்படுகிறது.
<h3>சத்தான காலை உணவின் முக்கியத்துவம்</h3>
காலை உணவை தவிர்ப்பது சிலருக்கு சோர்வு மற்றும் எரிச்சலை அதிகரிக்கக்கூடும். அதனால் சத்தான மற்றும் சமநிலையான காலை உணவை எடுத்துக்கொள்வது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனநிலையும் சீராக இருக்க வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
<h3>சிறிய மாற்றங்கள் பெரிய நிம்மதியை தரலாம்</h3>
மனஅழுத்தத்தை முழுமையாக தவிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், காலை நேரத்தில் சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பது அதை குறைக்க உதவக்கூடும். அமைதியான தொடக்கம், உடற்பயிற்சி, சூரிய ஒளி மற்றும் சத்தான உணவு போன்றவை மனநிலையை மேம்படுத்த உதவும். தினமும் சில நிமிடங்கள் நமக்காக ஒதுக்குவது மன அமைதிக்கும் நல்ல வாழ்க்கை முறைக்கும் வழிவகுக்கக்கூடும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரஸ்க் ரொம்ப ரிஸ்க்..  இப்படித்தான் தயாராகுதா? திகைத்துப்போன ரொட்டி பிரியர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/rusk-made-video-in-factories-with-maida-and-refined-oil-expert-explains-health-risks-health-tips-82799.html</link>	
		<pubDate>Thu, 04 Jun 2026 14:55:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/rusk-made-video-in-factories-with-maida-and-refined-oil-expert-explains-health-risks-health-tips-82799.html</guid>
		            
			

    	<description><![CDATA[Rusk Health Risks: இந்திய வீடுகளில், குறிப்பாக காலை உணவு அல்லது மாலை தேநீருடன் ரஸ்க் ஒரு பிரபலமான தேர்வாகும். அவை இலகுவான சிற்றுண்டிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், தொழிற்சாலைகளில் ரஸ்க் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைத் தினமும் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் விளக்குவோம்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rusk-risk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரஸ்க் ரொம்ப ரிஸ்க்..  இப்படித்தான் தயாராகுதா? திகைத்துப்போன ரொட்டி பிரியர்கள்!" /></figure>சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. ஒரு தொழிற்சாலையில் ரஸ்க் தயாரிக்கப்படும் முழு செயல்முறையையும் அது காட்டுகிறது, இது பல ரஸ்க் பிரியர்களைத் திகைக்க வைத்துள்ளது. ரஸ்க்குகள் அதிக அளவு மாவு, எண்ணெய் மற்றும் பதப்படுத்திகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. அவை கையால் உருட்டப்படுகின்றன... அதாவது, ஒட்டுமொத்தமாக, ரஸ்க்குகள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதைப் பார்க்கும்போது, ​​ஒரு கேள்வி எழுகிறது: ரஸ்க் சாப்பிடுவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்குமா?

இந்திய வீடுகளில் மக்கள் காலையிலும் மாலையிலும் தேநீருடன் ரஸ்க் சாப்பிடுவது வழக்கம். இந்த இலேசான மற்றும் மொறுமொறுப்பான சிற்றுண்டிகள் சுவையாகத் தோன்றலாம், ஆனால் அவை உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதே மருத்துவர்களின் கருத்து. ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி பார்க்கலாம்
<h3>தொழிற்சாலையில் ரஸ்க் எப்படித் தயாரிக்கப்படுகிறது?</h3>
சமூக வலைதளங்களில் வைரலான அந்தக் காணொளியில், பிசையும் இயந்திரத்தில் அதிக அளவு மாவு கொட்டப்படுவது காட்டப்பட்டுள்ளது. பின்னர், ஒரு டின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு, மாவு கையால் பிசையப்பட்டு தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. மீண்டும் எண்ணெய் தடவப்பட்டு, உருண்டைகள் செய்யப்பட்டு, ரொட்டி சுடப்படுகிறது. பின்னர், அந்த மாவு உருட்டப்பட்டு, ரஸ்க் வடிவங்களில் வெட்டப்பட்டு, மீண்டும் சுடப்படுகிறது.
<h3>வீடியோ</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DYyyl_uTgDu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DYyyl_uTgDu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shivam Varshney🧿 (@foodiejunglee)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>
<h3>வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?</h3>
டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணரான ஃபரேஹா ஷானம், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரஸ்க்குகள் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகின்றன என்றும், அதில் நார்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்றும் விளக்குகிறார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, மற்றும் சில சமயங்களில் கூடுதல் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. பதப்படுத்திகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவை உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் அதிக வெப்பநிலை மற்றும் இரசாயனங்கள் மூலம் பதப்படுத்தப்படுவதால், அதன் சில இயற்கை ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும். பொரித்த உணவுகளுடன் இதை உட்கொள்வது கெட்ட கொழுப்பையும், இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அடங்கிய உணவுகளை நீண்டகாலம் உட்கொள்வது, உடலில் அழற்சியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அவற்றை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
<h3>தினமும் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?</h3>
தினமும் ரஸ்க் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். உண்மையில், ரஸ்க் உங்களுக்கு விரைவாகப் பசியை உண்டாக்கி, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தூண்டும். அவை இரத்தச் சர்க்கரை அளவை திடீரென அதிகரிப்பதோடு, செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, அவற்றை அளவோடு அல்லது எப்போதாவது உட்கொள்வதே சிறந்தது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Skin Care: ஏசியில் இருப்பது சரும பிரச்சனைகளை ஏற்படுத்துமா? இவை சருமத்தை பாதுகாக்கும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-your-skin-even-when-using-ac-a-lot-in-summer-82782.html</link>	
		<pubDate>Thu, 04 Jun 2026 13:44:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-your-skin-even-when-using-ac-a-lot-in-summer-82782.html</guid>
		            
			

    	<description><![CDATA[Summer Skin Care: ஏசியில் குளிரூட்டப்பட்ட அறையில் தொடர்ந்து இருப்பது நமது சருமத்தை மந்தமாகவும் உயிரற்றதாகவும் ஆக்குகிறதா? இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிக்கப் போகிறோம். மேலும், இதுபோன்ற சூழ்நிலையில் கோடைக்காலத்தில் ஏசியில் இருந்து நமது சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ac-skin-care.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Skin Care: ஏசியில் இருப்பது சரும பிரச்சனைகளை ஏற்படுத்துமா? இவை சருமத்தை பாதுகாக்கும்!" /></figure>கோடைக்காலத்தில் <strong>(Summer)</strong> வெளியே சென்று வந்த பிறகு, வெப்பம் வாழ்க்கையைத் தாங்க முடியாததாக ஆக்குகிறது. சில நேரங்களில், நாம் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று ஏசியில் அமர்கிறோம். ஏனெனில் இந்த ஆண்டு, வெப்பத்தில் வாழ்வது தாங்க முடியாததாகிவிட்டது. எனவே, வெட்கையில் இருந்து பெற நாம் <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/why-sleeping-in-ac-rooms-during-heatwaves-still-feels-uncomfortable-82061.html">ஏசியில்</a> இருக்க விரும்புகிறோம். ஆனால் ஏசியின் குளிர்ச்சியான சூழலில் இருப்பது நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது சருமத்தையும் சேதப்படுத்துகிறது. குறைந்த ஈரப்பதம் கொண்ட குளிரூட்டப்பட்ட சூழல்கள் <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/top-11-k-beauty-sunscreen-picks-tailored-for-indian-skin-82706.html">வறண்ட சருமத்தின்</a> அறிகுறிகளை <strong>(Skin Care)</strong> ஏற்படுத்தக்கூடும். ஈரப்பதமும் சருமத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சருமத்தின் மேல் அடுக்கில் (ஸ்ட்ரேட்டம் கார்னியம்) உள்ள நீரின் அளவு மாறுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சி குறைகிறது, மற்றும் சொரசொரப்பு அதிகரிக்கிறது. ஏசியில் குளிரூட்டப்பட்ட அறையில் தொடர்ந்து இருப்பது நமது சருமத்தை மந்தமாகவும் உயிரற்றதாகவும் ஆக்குகிறதா? இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிக்கப் போகிறோம், மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் நமது சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/why-sleeping-in-ac-rooms-during-heatwaves-still-feels-uncomfortable-82061.html">ஏசி அறையிலும் தூக்கம் வராததற்கு என்ன காரணம்? – வெப்பஅலை காலத்தில் உடல் எப்படி பாதிக்கப்படுகிறது?</a>
<h3>ஏசியில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி..?</h3>
<h3>மாய்ஸ்சரைசர் பயன்படுத்துதல்:</h3>
உங்கள் சருமம் வறண்டு போயிருந்தால் அல்லது ஏசியில் அமர்ந்திருப்பதால் வறண்டு போயிருந்தால், அதைக் கவனித்துக்கொள்வது அவசியம். அதன்படி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள வறட்சியைக் குறைத்து , சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். மேலும், ஏசியின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸுக்குள் வைத்து பயன்படுத்துங்கள். அப்போதுதான் அந்த வெப்பநிலை உடலுக்கு இதமாக இருக்கும். ஏசியில் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டாம், ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு 5 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
<h3>பருத்தி மற்றும் தளர்வான ஆடைகளை அணியுங்கள்:</h3>
கோடை காலத்தில் பருத்தி மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது நன்மை தரும். ஏனெனில் இது உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதுமட்டுமின்றி, நீங்கள் நீண்ட நேரம் ஏசியில் இருக்க வேண்டிய அவசியத்தையும் உங்களுக்கு தராது. மேலும், தினமும் தியானம் செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
<h3>கற்றாழையைப் பயன்படுத்துதல்:</h3>
கற்றாழைக்கு இயற்கையான சரும ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. அதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் அரிப்பு மற்றும் அழற்சியைக் குறைக்கின்றன.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/top-11-k-beauty-sunscreen-picks-tailored-for-indian-skin-82706.html">வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க சூப்பர் கொரியன் சன்ஸ்கிரீன்கள்!</a>
<h3>அறையில் ஒரு கப் தண்ணீர் வைத்தல்:</h3>
ஏசி இருக்கும் அறையில் ஒரு கப் தண்ணீர் வைத்திருப்பது நன்மை தரும். ஏசி காற்றில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிவிடும். ஆனால், குவளை தண்ணீர் காற்றில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதனால், சருமம், உதடுகள், கைகள் மற்றும் பாதங்கள் வறண்டு போவதில்லை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க சூப்பர் கொரியன் சன்ஸ்கிரீன்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/top-11-k-beauty-sunscreen-picks-tailored-for-indian-skin-82706.html</link>	
		<pubDate>Thu, 04 Jun 2026 10:20:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/top-11-k-beauty-sunscreen-picks-tailored-for-indian-skin-82706.html</guid>
		            
			

    	<description><![CDATA[Korean Sunscreen: இந்திய தட்பவெப்ப நிலை மற்றும் பல்வேறு சரும வகைகளுக்கு ஏற்ப, ஒட்டும் தன்மையோ அல்லது வெள்ளைத் திட்டுக்களோ (White cast) ஏற்படுத்தாமல் முகத்தில் எளிதில் உறிஞ்சக்கூடிய சிறந்த 11 கொரியன் சன்ஸ்கிரீன்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இவற்றில் உள்ள நியாசினமைடு, ஹைலூரோனிக் அமிலம் மற்றும் சிகா (CICA) போன்ற மூலப்பொருட்கள் சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாப்பதோடு, கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு வடுக்களைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/sun-screen.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க சூப்பர் கொரியன் சன்ஸ்கிரீன்கள்!" /></figure>இன்றைய காலகட்டத்தில் வெயில், வியர்வை, மாசு மற்றும் ஒப்பனை போன்ற பல்வேறு சவால்களைத் தாங்கி நம் சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, இந்திய சரும அமைப்பிற்கு வெறும் சூரியக் கதிர்களில் இருந்து தப்பிப்பது மட்டுமல்லாமல், கரும்புள்ளிகள், சரும நிறமாற்றம், முகப்பரு வடுக்கள் மற்றும் பொலிவிழந்த நிலை போன்ற பிரச்சனைகளை மேலாண்மை செய்வதும் முக்கிய தேவையாக இருக்கிறது. பாரம்பரிய சன்ஸ்கிரீன்கள் பல நேரங்களில் சருமத்தில் ஒருவித ஒட்டும் தன்மையையோ அல்லது வெள்ளைத் திட்டுக்களையோ (White cast) ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய குறைகளைப் போக்கி, சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும் வகையில் கொரியன் அழகுப் பொருட்கள் (K-Beauty) தற்போது உலகளவில் கவனம் பெற்று வருகின்றன.
<h3>கொரியன் தயாரிப்புகளின் தனித்துவமும் உள்ளடக்கமும்</h3>
கொரியன் சன்ஸ்கிரீன்கள் என்பவை வெறும் சூரிய பாதுகாப்பு கவசமாக மட்டுமில்லாமல், சருமப் பராமரிப்புக்கான ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. இவை சீரம் போன்ற லேசான தன்மையைக் கொண்டிருப்பதால், முகத்தில் எளிதாக உறிஞ்சப்பட்டு ஒப்பனைக்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்கின்றன. மேலும், இவற்றில் நியாசினமைடு, ஹைலூரோனிக் அமிலம் மற்றும் இயற்கையான மூலிகைகளின் சாறுகள் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் பலனாகும். இந்திய தட்பவெப்ப நிலைக்கு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, அதிகப்படியான எண்ணெய் பசை கொண்ட சருமத்தினர் முகப்பருக்களை ஏற்படுத்தாத (Non-comedogenic) தயாரிப்புகளையும், கரும்புள்ளி பிரச்சனை உள்ளவர்கள் அதிக UVA பாதுகாப்பு (PA++++) கொண்ட தயாரிப்புகளையும் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.
<h3>பல்வேறு சரும வகைகளுக்கான சிறந்த சன்ஸ்கிரீன் தேர்வுகள்</h3>
இந்தியாவின் தீவிரமான கோடைகாலத்திற்கும், பல்வேறு வகையான சரும அமைப்புகளுக்கும் ஏற்றவாறு சந்தையில் சில குறிப்பிட்ட கொரியன் சன்ஸ்கிரீன்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதிக வெப்பத்தால் எரிச்சலடையும் சருமத்திற்கு 'மேரி அண்ட் மே சிகா சூத்திங் சன் கிரீம்' (Mary&amp;May CICA Sun Cream) சிறந்த தேர்வாகும். அதேபோல், உணர்திறன் மிக்க மற்றும் பருக்கள் வரக்கூடிய சருமத்திற்கு 'கிளையர்ஸ் ஆல்-டே ஏரி மினரல் சன்ஸ்கிரீன்' (Klairs All-Day Airy Mineral Sunscreen) பாதுகாப்பானது. வறண்ட சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்க 'டோரிடன் டைவ்-இன் மாய்ஸ்சரைசிங் சன் கிரீம்' (Torriden Dive-In Moisture Sun Cream) உதவுகிறது.
<h3>பொலிவான மற்றும் இயற்கையான தோற்றத்திற்கான இறுதித் தேர்வுகள்</h3>
முகத்தில் சன்ஸ்கிரீன் போட்டதே தெரியக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு 'தி பேஸ் ஷாப் விட்டா டிராப் சன்குவிட்' (The Face Shop Vita Drop Sunquid) போன்ற பால் போன்ற திரவ வடிவ தயாரிப்புகள் உகந்தவை. மேலும், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பியூட்டி ஆஃப் ஜோசியோன்' (Beauty of Joseon) மற்றும் 'ரவுண்ட் லேப்' (Round Lab) ஆகிய பிராண்டுகள், சருமத்திற்கு ஒரு ஆரோக்கியமான பளபளப்பைத் தருவதோடு, அன்றாட பயன்பாட்டை எளிதாக்குகின்றன. உங்கள் சருமத்தின் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப சரியான கொரியன் சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுப்பது, நீண்ட கால சரும ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பள்ளி குழந்தைகள் கொண்டும் செல்லும் வாட்டர் பாட்டிலை எப்படி தேர்வு செய்வது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/selecting-the-safest-and-healthiest-school-water-bottles-for-kids-82617.html</link>	
		<pubDate>Thu, 04 Jun 2026 06:10:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/selecting-the-safest-and-healthiest-school-water-bottles-for-kids-82617.html</guid>
		            
			

    	<description><![CDATA[Healthiest School Water Bottles: குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நச்சுத்தன்மையற்ற, இரசாயனக் கசிவுகள் இல்லாத 'BPA-Free' பிளாஸ்டிக் அல்லது எஃகு (Stainless Steel) வாட்டர் பாட்டில்களை மட்டுமே பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும். தண்ணீரைத் தூய்மையாக வைப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தாமிர (Copper) பாட்டில்களைப் பயன்படுத்துவது மாணவர்களின் உடல்நலத்திற்குப் பெரும் நன்மை பயக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பள்ளி குழந்தைகள் கொண்டும் செல்லும் வாட்டர் பாட்டிலை எப்படி தேர்வு செய்வது?" /></figure>கோடைக்காலம் மற்றும் சாதாரண நாட்களிலும் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அவர்கள் பருகும் குடிநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்கள் பாதுகாப்பானவையா என்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சந்தையில் விற்கப்படும் கவர்ச்சிகரமான பல வண்ண பாட்டில்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு உகந்தவை அல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
<h3>பிளாஸ்டிக் பாட்டில்களின் ஆபத்துகளும் விழிப்புணர்வும்</h3>
இன்றைய சூழலில் பெரும்பாலான பெற்றோர்கள் எளிதாகக் கிடைக்கிறது மற்றும் எடை குறைவாக இருக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களையே தேர்வு செய்கிறார்கள். எனினும், மலிவான தரம் குறைந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் பிஸ்பெனால்-ஏ (BPA) போன்ற ஆபத்தான இரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பாட்டில்களில் நீண்ட நேரம் தண்ணீர் இருக்கும்போது, அந்த இரசாயனங்கள் தண்ணீரில் கலந்து குழந்தைகளின் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கலாம். எனவே, தவிர்க்க முடியாத பட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்குவதாக இருந்தால், அவை கட்டாயம் 'BPA Free' என்று சான்றளிக்கப்பட்ட உணவுத் தரத்திலான (Food Grade) பிளாஸ்டிக் தானா என்பதைச் சரிபார்த்து வாங்குவது மிக அவசியமாகும்.
<h3>எஃகு மற்றும் தாமிர பாட்டில்களின் ஆரோக்கிய நன்மைகள்</h3>
குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான தேர்வாக இருப்பது துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) மற்றும் தாமிர (Copper) பாட்டில்கள் ஆகும். எஃகு பாட்டில்கள் நீடித்த உழைப்பைத் தருவதுடன், சுத்தம் செய்வதற்கும் எளிதானவை; மேலும் இவற்றில் எவ்வித இரசாயனக் கசிவுகளும் ஏற்படுவதில்லை. அதேபோல், தாமிர பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்து வைக்கும் போது, அது இயற்கையாகவே பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலைப் பெறுகிறது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், செரிமான மண்டலத்தைச் சீராக்கவும் உதவுகிறது. ஆனால், தாமிர பாட்டில்களைத் தேர்வு செய்யும் போது, அவற்றை தினமும் முறையாகச் சுத்தப்படுத்துவது அவசியமாகும்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/smart-morning-routines-to-get-kids-ready-for-school-without-stress-82359.html">பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அவசரமின்றி, புன்னகையோடு தயார் செய்வது எப்படி?</a>
<h3>பாட்டிலின் வடிவமைப்பு மற்றும் எடையைக் கவனித்தல்</h3>
ஆரோக்கியம் மட்டுமின்றி, பாட்டிலின் எடையும் அதன் பயன்பாட்டுத் தன்மையும் கூட இங்கு முக்கியமானதாகும். பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க, பாட்டில்கள் லேசான எடையில் இருப்பது நல்லது. அதேபோல், சிறிய குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் போது எளிதாகத் திறந்து மூடும் வசதி கொண்ட (Sipper அல்லது Flip-top) மூடிகளைக் கொண்ட பாட்டில்களைத் தேர்வு செய்ய வேண்டும். அகலமான வாய் பகுதி கொண்ட பாட்டில்களை வாங்குவதன் மூலம், அவற்றை உட்புறமாகத் தூரிகை (Brush) கொண்டு எளிதாகச் சுத்தம் செய்ய முடியும். இது பாட்டில்களின் மூலைகளில் கிருமிகள் மற்றும் பாசிகள் படிவதைத் தடுக்க உதவும்.

முக்கியக் குறிப்பு: எந்த வகையான வாட்டர் பாட்டிலாக இருந்தாலும், அதனை வாரத்திற்கு ஒருமுறையாவது வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது சமையல் சோடா (Bakingsoda) கொண்டு நன்கு சுத்தப்படுத்துவது கிருமித் தொற்றுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட இவ்வளவா? 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் எவ்வளவு கலோரிகள் போகும் தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-many-calories-can-you-burn-by-cycling-for-30-minutes-know-the-fact-in-tamil-82549.html</link>	
		<pubDate>Wed, 03 Jun 2026 13:26:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-many-calories-can-you-burn-by-cycling-for-30-minutes-know-the-fact-in-tamil-82549.html</guid>
		            
			

    	<description><![CDATA[உலக மிதிவண்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மிதிவண்டி ஓட்டுவதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். இப்போதெல்லாம், உடல் எடையைக் குறைப்பதற்கும் கலோரிகளை எரிப்பதற்கும் மிதிவண்டி ஓட்டுதல் ஒரு நல்ல வழியாக மக்கள் கருதுகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/cycling-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட இவ்வளவா? 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் எவ்வளவு கலோரிகள் போகும் தெரியுமா?" /></figure>உடற்பயிற்சிக்காக சிலர் பல மணிநேரம் மிதிவண்டி ஓட்டுகிறார்கள், மற்றவர்களோ உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று சில நிமிடங்கள் மட்டும் ஓட்டுகிறார்கள். ஆனால், 30 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டுவதால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை உடல் எடை, மிதிவண்டி ஓட்டும் வேகம் மற்றும் அதன் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்தது. இருப்பினும், சரியாக அளவிட்டால், எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியும். நீங்களும் மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் கலோரிகளை எரிக்க விரும்பினால், 30 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டுவதால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன, பொருத்தமான வேகம் என்ன, மற்றும் மிதிவண்டி ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
<h3>30 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டுவதால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன?</h3>
ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின்படி , ஒருவரின் எடை மற்றும் வேகத்தைப் பொறுத்து, 30 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டுவது தோராயமாக 240 முதல் 432 கலோரிகளை எரிக்கக்கூடும். ஹார்வர்டின் கலோரி எரிப்பு அட்டவணைப்படி, சுமார் 70 கிலோகிராம் எடை கொண்ட ஒருவர் மணிக்கு 12-14 மைல் (சுமார் 19-22 கி.மீ) வேகத்தில் மிதிவண்டி ஓட்டினால், தோராயமாக 288 கலோரிகளை எரிக்க முடியும். இருப்பினும், இதைவிட அதிக வேகத்தில் (மணிக்கு 16-19 மைல்) மிதிவண்டி ஓட்டினால், இந்த அளவு 400 கலோரிகளைத் தாண்டக்கூடும்.
<h3>மிதிவண்டி ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?</h3>
ஹெல்த்லைன் தகவலின்படி , மிதிவண்டி ஓட்டுவது கலோரிகளை எரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு வேறு பல குறிப்பிடத்தக்க நன்மைகளையும் வழங்குகிறது. அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
<h3>மிதிவண்டி ஓட்டுதல் கால்களை வலுப்படுத்துகிறது</h3>
மிதிவண்டி ஓட்டுதல் உங்கள் கால்களைப் பயன்படுத்துகிறது, இது உங்கள் கால் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மிதிவண்டி ஓட்டுதல் உங்கள் குவாட்ஸ் (முன் தொடைகள்), க்ளூட்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் மற்றும் கெண்டைக்கால் தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. முக்கியமாக, மிதிவண்டி ஓட்டுதல் மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தாமல் கீழ் உடலை வலுப்படுத்துகிறது.
<h3>ஆரம்பநிலையாளர்களுக்கான எளிய பயிற்சிகள்</h3>
மிதிவண்டி ஓட்டுதல் என்பது ஏறக்குறைய எல்லா வயதினராலும் எளிதாகச் செய்யக்கூடிய ஒரு உடல் செயல்பாடாகும். உங்கள் உடற்பயிற்சிப் பயணத்தை நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால், குறைந்த வேகத்தில் தொடங்கலாம். உங்கள் உடற்தகுதி மேம்பட மேம்பட, வேகத்தையும் நேரத்தையும் அதிகரிக்கலாம். அதிக சுறுசுறுப்பாக இல்லாதவர்கள் கூட, தொடர்ந்து மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் உடல்நலப் பலன்களைப் பெற முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
<h3>கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது</h3>
வழக்கமான மிதிவண்டிப் பயிற்சி உடலில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவுகிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். இது நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவும். மிதிவண்டிப் பயிற்சி இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக்கூடும்.
<h3>மன ஆரோக்கியத்திற்கும் மூளைக்கும் நன்மை பயக்கும்</h3>
மிதிவண்டி ஓட்டுதல் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவும். மிதிவண்டி ஓட்டுதல் உங்கள் கவனத்தைச் சாலையிலும் இயக்கத்திலும் ஒருமுகப்படுத்தி, உங்கள் மனதை நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வைத்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. வெளிப்புறங்களில் மிதிவண்டி ஓட்டுவது சிந்தனைத் திறனையும் மன நலத்தையும் மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும், உடற்பயிற்சி எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இளமையை காக்கும் சீன ரகசியம்: என்றும் 16-ஆக வாழ எளிய வழிகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/the-timeless-secrets-of-traditional-chinese-medicine-for-youthful-longevity-82499.html</link>	
		<pubDate>Wed, 03 Jun 2026 12:32:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/the-timeless-secrets-of-traditional-chinese-medicine-for-youthful-longevity-82499.html</guid>
		            
			

    	<description><![CDATA[Traditional Chinese Medicine: பாரம்பரிய சீன மருத்துவத்தின்படி உடலின் உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதே என்றும் மாறாத இளமையின் ரகசியமாகும், எனவே குளிர்ந்த உணவுகளைத் தவிர்த்து செரிமானத்தை ஊக்குவிக்கும் வெதுவெதுப்பான உணவுகளை உட்கொள்ளவதே அவர்களின் ரகசியமாக பார்க்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-5-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இளமையை காக்கும் சீன ரகசியம்: என்றும் 16-ஆக வாழ எளிய வழிகள்!" /></figure>இன்றைய நவீன உலகில் ரசாயனப் பூச்சுகளும், செயற்கை அழகுச் சாதனங்களும் பெருகிவிட்ட நிலையிலும், உடலின் அக அழகு மற்றும் இளமையைப் பராமரிக்கப் பாரம்பரிய மருத்துவ முறைகளே சிறந்த தீர்வாக அமைகின்றன. சமீபத்தில் வெளியான 'வோக்' இதழின் செய்திக்குறிப்பில், பல நூற்றாண்டுகள் பழமையான சீன பாரம்பரிய மருத்துவக் கோட்பாடுகள் மூலம் உடலை என்றும் இளமையுடன் வைத்திருப்பது எப்படி என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் வெளிப்படையான தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல், உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முதுமையைத் தள்ளிப்போடும் ஒரு முழுமையான வாழ்வியல் முறையாகும்.
<h3>உணவுப் பழக்கவழக்கங்களில் கொண்டு வர வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள்</h3>
சீன மருத்துவ முறையின்படி, நாம் உட்கொள்ளும் உணவின் தன்மையே நமது ஆயுளையும் இளமையையும் தீர்மானிக்கிறது. குளிர்ந்த உணவுகள் மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்கள் உடலின் செரிமானத் தீயைக் (Digestive Fire) குறைத்து, உடலின் ஆற்றலை மந்தமாக்குவதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. அதற்குப் பதிலாக, எளிதில் செரிமானமாகக்கூடிய வெதுவெதுப்பான உணவுகள், மூலிகைக் குடிநீர் மற்றும் இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கி, நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
<h3>உடலின் ஆற்றல் ஓட்டத்தை (Qi) சமநிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவம்</h3>
சீன மருத்துவத்தில் 'கி' (Qi) எனப்படும் முக்கிய உயிர் ஆற்றல் ஓட்டம் உடலின் இளமைக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது. உடலில் இந்த ஆற்றல் தடையின்றிப் பாய்வதை உறுதி செய்ய மிதமான உடற்பயிற்சிகளும், முறையான மூச்சுப் பயிற்சிகளும் அவசியம் என்று வோக் கட்டுரை வலியுறுத்துகிறது. கடுமையான, உடலை வருத்தும் பயிற்சிகளைத் தவிர்த்து, யோகா அல்லது 'கிங்காங்' (Qigong) போன்ற தியான நிலைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இது முகத்தில் இயற்கையான பொலிவையும், நீண்ட நாள் இளமையையும் தக்கவைக்கும்.
<h3>மன அழுத்த மேலாண்மை மற்றும் முறையான ஓய்வின் அவசியம்</h3>
அக இளமையைப் பாதிக்கும் மிக முக்கியக் காரணியாக தற்கால மன அழுத்தம் பார்க்கப்படுகிறது. மன அமைதியின்மை மற்றும் தூக்கமின்மை ஆகியவை உடலின் ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. சீன மருத்துவக் கோட்பாடுகளின்படி, இரவு 11 மணிக்குள் உறங்கச் செல்வது கல்லீரல் மற்றும் பித்தப்பையின் செயல்பாட்டைச் சீராக்க இன்றியமையாததாகும். மனதை அமைதிப்படுத்தும் தியான முறைகளைப் பின்பற்றுவதும், போதுமான ஓய்வு எடுப்பதும் உடலின் உள்ளக ஆற்றலை (Yin and Yang) சமநிலையில் வைத்து, என்றும் இளமை மாறாத ஆரோக்கியத்தை நமக்கு அளிக்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உலகத்தோடு போட்டியா? இல்லை உங்களுடனேயே போராட்டமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/the-ultimate-blueprint-for-self-mastery-and-continuous-success-82472.html</link>	
		<pubDate>Wed, 03 Jun 2026 10:15:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/the-ultimate-blueprint-for-self-mastery-and-continuous-success-82472.html</guid>
		            
			

    	<description><![CDATA[Self-Improvement: உலகத்தோடு ஒப்பிடாமல் நேற்றைய விட இன்று சிறப்பாக மாறுவதே அசாத்திய வெற்றிக்கான முதல் படியாகும். நாம் தொடர்ந்து செய்யும் சிறு முன்னேற்றங்கள் மற்றும் விடாமுயற்சி மட்டுமே எதிர்காலத்தில் பிரம்மாண்டமான முடிவுகளைத் தரும். தடைகளும் சாக்குப்போக்குகளும் வரலாற்றில் நிலைப்பதில்லை; அவற்றை எதிர்த்து நாம் காட்டிய தைரியமே நிலைத்து நிற்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உலகத்தோடு போட்டியா? இல்லை உங்களுடனேயே போராட்டமா?" /></figure>மற்றவர்களுடன் போட்டி போடுவதைத் தவிர்த்து, நேற்றைய உங்களை விட இன்று ஒரு படி உயர்வதே உண்மையான வெற்றியாகும். தினசரி வாழ்வில் நாம் செய்யும் மிகச் சிறிய நேர்மறை மாற்றங்கள், காலப்போக்கில் மிகப்பெரிய அசாதாரண விளைவுகளைக் கொடுக்கும். இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் போது, நாம் சொல்லும் சாக்குப்போக்குகளை இந்த உலகம் ஒருபோதும் நினைவில் வைத்துக்கொள்ளாது. நாம் சந்தித்த சுய சந்தேகங்களையும், நம் பாதையில் குறுக்கிட்ட தடைகளையும் மட்டுமே மக்கள் உற்று நோக்குவார்கள். சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் முடங்கிவிடாமல், தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பது மட்டுமே முதன்மையானது. தற்காலிகத் தடைகளால் திசைமாறாமல், நாம் நிர்ணயித்த இறுதி இலக்கிற்கு எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். நாம் அடைய நினைக்கும் உன்னதமான நிலையை அடைவதற்கு, நம்மிடம் இருக்கும் அசாத்திய துணிச்சலும் நம்பிக்கையுமே வெற்றியைத் தீர்மானிக்கும்.
<h3>மாற்றத்தை நோக்கிய முதல் படி</h3>
இன்றைய வேகமான உலகில், நாம் எப்போதும் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால், உண்மையான வெற்றி என்பது அடுத்தவர்களை வீழ்த்துவதில் இல்லை; நம்மையே நாம் செதுக்கிக் கொள்வதில் தான் இருக்கிறது. நீங்கள் எல்லாரடனும் போட்டி போட வேண்டியதில்லை, உங்களுக்குத் தேவையானது நேற்றைவிட சிறப்பாக ஆவதே ஆகும். தினசரி வாழ்வில் நாம் செய்யும் சிறு முன்னேற்றங்கள், பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை நாம் போதுமான அளவு தொடர்ந்து செய்தால் அது காலப்போக்கில் அசாதாரண முடிவுகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர் முயற்சியும், சுய பரிசோதனையும் மட்டுமே ஒரு மனிதனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
<h3>சாக்குகளைக் கடந்து சாதிப்பதே வரலாறு</h3>
வாழ்க்கைப் பயணத்தில் தடைகளும் சவால்களும் வருவது இயற்கை. ஆனால், தோல்விகளுக்கு நாம் சொல்லும் காரணங்களை இந்த உலகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. உங்கள் பயணத்தின் முடிவில் நீங்கள் எத்தனை சாக்குப்போக்குகள் சொன்னீர்கள் என்பதை மக்கள் நினைவில் வைக்க மாட்டார்கள். மாறாக, எத்தனை முறை உங்களை நீங்களே சந்தேகித்தீர்கள் என்பதையும், எத்தனை தடைகள் உங்கள் வழியில் நின்றன என்பதையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தடைகளைத் தாண்டி நிற்பவர்களே வரலாற்றில் பதியப்படுகிறார்கள். சாக்குப்போக்குகள் நம் இலக்கை பலவீனமாக்குமே தவிர, ஒருபோதும் நமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தராது என்பதை நாம் உணர வேண்டும்.
<h3>இலக்கை நோக்கிய உறுதியான பயணம்</h3>
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவருடைய வெற்றிப்பயணத்தில் மிக முக்கியமானது இதுதான்: நீங்கள் நகர்ந்து கொண்டே இருந்தீர்களா? இடர் வரும்போது முடங்கிவிடாமல், உங்கள் இலக்குக்கு உண்மையாக இருந்தீர்களா? என்பதே ஆகும். எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் சுயத்தை இழக்காமல், நீங்கள் ஆகக்கூடிய ஆளாக ஆவதற்கான தைரியம் உங்களிடம் இருந்ததா? என்பதுதான் உங்களின் உண்மையான ஆளுமையைத் தீர்மானிக்கிறது. தேக்கநிலை என்பது வீழ்ச்சிக்குச் சமம். எனவே, உங்களைச் சுற்றியுள்ள விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல், உங்களின் தனித்துவமான திறமை மீது நம்பிக்கை கொண்டு, தைரியத்துடன் முன்னேறிச் செல்வதே உண்மையான சாதனைக்கான இலக்கணம் ஆகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அவசரமின்றி, புன்னகையோடு தயார் செய்வது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/smart-morning-routines-to-get-kids-ready-for-school-without-stress-82359.html</link>	
		<pubDate>Wed, 03 Jun 2026 06:30:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/smart-morning-routines-to-get-kids-ready-for-school-without-stress-82359.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smart Morning Routines: முந்தைய இரவிலேயே பள்ளி சீருடைகள், பைகள் மற்றும் சமையல் தேவைகளைத் திட்டமிட்டுத் தயார் செய்து வைப்பது காலை நேரப் பதற்றத்தைப் பாதியாகக் குறைக்கும். குழந்தைகள் எழுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பெற்றோர்கள் எழுந்து தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது வீட்டின் சூழலை அமைதியாக வைத்திருக்க உதவும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/school.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அவசரமின்றி, புன்னகையோடு தயார் செய்வது எப்படி?" /></figure>காலை அலாரம் அடித்த உடனே வீடே ஒரு போர்க்களமாக மாறிவிடுகிறதா? "சீக்கிரம் சாப்பிடு", "வேன் வந்துடும், சீக்கிரம் ஷூ போடு" போன்ற அலறல் சத்தங்கள் இல்லாத வீடுகளைப் பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் காலை பொழுது மிகுந்த மன அழுத்தத்துடனேயே தொடங்குகிறது. இந்த அவசரமும் பதற்றமும் பெற்றோர்களை மட்டுமின்றி, குழந்தைகளின் நாள் முழுவதையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது. ஆனால், ஒரு சில எளிய திட்டமிடல் மற்றும் பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் இந்த காலை நேரப் பதற்றத்தைத் தவிர்த்து, அமைதியான முறையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள் குடும்ப நல ஆலோசகர்கள்.
<h3>முந்தைய இரவு திட்டமிடலின் மந்திரம்</h3>
காலை நேரத்து அவசரத்தைக் குறைப்பதற்கான மிக முக்கியமான சாவி முந்தைய இரவிலேயே ஒளிந்திருக்கிறது. மறுநாள் காலையில் செய்ய வேண்டிய வேலைகளை இரவிலேயே திட்டமிட்டு முடிப்பது பாதி பாரத்தைக் குறைத்துவிடும். குழந்தைகளின் பள்ளி சீருடை, அடையாள அட்டை, ஷூ மற்றும் சாக்ஸ் போன்றவற்றை இரவிலேயே எடுத்துத் தயாராக வைக்க வேண்டும். அதேபோல், மறுநாள் காலை என்ன சமையல் செய்ய வேண்டும், மதிய உணவுக்கு என்ன கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, காய்கறி நறுக்குவது போன்ற முதற்கட்ட வேலைகளை இரவிலேயே முடித்து வைப்பது காலை நேரத்துச் சமையல் அறையின் பதற்றத்தை முற்றிலும் போக்கும்.
<h3>அதிகாலை எழுவதே ஆரோக்கியமான தொடக்கம்</h3>
"சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது" என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல, அதுவே அமைதியான காலை பொழுதுக்கான அடித்தளம். குழந்தைகள் எழுவதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களுக்கு முன்பாகவே பெற்றோர்கள் எழுந்துவிடுவது நல்லது. நீங்கள் நிதானமாக உங்கள் காலை கடமைகளை முடித்துவிட்டு, சமையல் வேலைகளையும் ஓரளவிற்குத் தயார் செய்துவிட்டால், குழந்தைகளை எழுப்பும்போது உங்களால் பதற்றமின்றி நிதானமாகச் செயல்பட முடியும். குழந்தைகள் எழுவதற்குப் போதுமான கால அவகாசத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வழிவகுக்கும்.
<h3>குழந்தைகளைப் பொறுப்பாக்கும் காலைப் பழக்கம்</h3>
அனைத்து வேலைகளையும் பெற்றோர்களே தங்கள் தலைமேல் போட்டுக்கொள்ளக் கூடாது. குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற சிறு சிறு பொறுப்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். படுக்கையைச் சுருட்டி வைப்பது, பல் துலக்குவது, குளித்த பின் ஆடைகளைத் தாங்களாகவே அணிந்துகொள்வது, பள்ளிப் பையைத் தயார் செய்வது போன்ற வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். தொடக்கத்தில் இதற்குச் சற்று கூடுதல் நேரம் எடுத்தாலும், நாளடைவில் இது அவர்களின் சுய ஒழுக்கத்தை வளர்ப்பதோடு, பெற்றோர்களின் வேலைச் சுமையையும் கணிசமாகக் குறைக்கும்.
<h3>நேர்மறையான அணுகுமுறையும் பாராட்டுதல்களும்</h3>
காலை நேரத்தில் குழந்தைகளை அதட்டுவதோ அல்லது மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதோ அவர்களின் மனநிலையைக் கெடுத்துவிடும். அதற்குப் பதிலாக, "இன்னைக்கு நீங்க ரொம்ப சீக்கிரம் ரெடி ஆயிட்டீங்க, வெரி குட்!" என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். காலை உணவை அவர்கள் ரசித்துச் சாப்பிடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். பதற்றமில்லாத, அன்பான மற்றும் மகிழ்ச்சியான ஒரு காலைத் தொடக்கம், குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வத்துடனும் புன்னகையுடனும் செல்ல வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நகரத்தின் விடியல் vs கிராமத்தின் விடியல்: ஒரு ரசனைப் பார்வை</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/the-pulse-of-the-city-vs-the-peace-of-the-wild-two-distinct-dawns-82357.html</link>	
		<pubDate>Wed, 03 Jun 2026 05:21:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/the-pulse-of-the-city-vs-the-peace-of-the-wild-two-distinct-dawns-82357.html</guid>
		            
			

    	<description><![CDATA[Urban Dawn vs Rural Morning: நகரத்தின் விடியல் அலார சத்தத்துடனும், வாகன இரைச்சலுடனும், கடிகார முட்களோடு போட்டிப்போடும் வாழ்வாதாரப் பரபரப்புடனும் அவசரமாகத் தொடங்குகிறது. இதற்கு நேர்மாறாக, கிராமத்தின் விடியல் சேவலின் கூவலுடனும், வயல்வெளிப் பனித்துளிகளுடனும், பறவைகளின் கீதத்துடனும் இயற்கையின் கவிதையாக அரங்கேறுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/different-morning.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நகரத்தின் விடியல் vs கிராமத்தின் விடியல்: ஒரு ரசனைப் பார்வை" /></figure>ஒவ்வொரு நாளின் விடியலும் மனித குலத்திற்கு இயற்கை வழங்கும் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். ஆனால், நாம் வாழும் சூழலைப் பொறுத்து அந்த விடியலின் முகமும், அதன் குணமும் முற்றிலும் மாறுபடுகிறது. நவீன வசதிகளின் உறைவிடமான நகரத்தின் காலைப் பொழுதும், அமைதியும் பாரம்பரியமும் நிறைந்த கிராமத்தின் விடியலும் வெவ்வேறு விதமான வாழ்வியல் ரசனைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரே சூரியனின் கதிர்கள் தான் என்றாலும், அவை இந்த இரு வேறு உலகங்களில் நிகழ்த்தும் மாற்றங்கள் சுவாரஸ்யமானவை.
<h3>சுவரொட்டிகளும் வாகன இரைச்சலும்: நகரத்தின் பரபரப்பான விடியல்</h3>
நகரத்தின் விடியல் என்பது இயற்கையின் அழைப்போடு தொடங்குவதில்லை; மாறாக, அது கடிகாரத்தின் அலார சத்தத்துடனும் இயந்திரங்களின் இயக்கத்துடனும் அவசரமாகத் தொடங்குகிறது. அதிகாலை ஐந்து மணிக்கே பால் வண்டிகளின் சத்தமும், செய்தித்தாள் போடுபவர்களின் பரபரப்பும் நகரத்தை எழுப்பிவிடுகின்றன. மெல்ல மெல்ல விடியும் வேளையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள் வழியே தெரியும் அரைகுறை வெளிச்சத்தில் மனிதர்கள் தங்களின் அன்றாட ஓட்டத்திற்குத் தயாராகிறார்கள். பறவைகளின் கீதங்களுக்குப் பதிலாக, பேருந்துகளின் ஹாரன் சத்தங்களும், தொழிற்சாலைகளின் இயக்கமுமே நகரத்தின் விடியலை வரவேற்கின்றன. இங்கு விடியல் என்பது ரசனைக்கான நேரம் அல்ல, அது கடிகார முட்களோடு போட்டிப் போடும் ஒரு வாழ்வாதாரப் போராட்டம்.
<h3>பனித்துளியும் இயற்கையின் கீதமும்: கிராமத்தின் அமைதியான விடியல்</h3>
இதற்கு நேர்மாறாக, கிராமத்தின் விடியல் என்பது ஒரு முப்பரிமாணக் கவிதை போல அத்தனை அழகுடன் அரங்கேறுகிறது. அங்கு அலாரங்கள் தேவையில்லை, சேவலின் கம்பீரமான கூவல் சத்தமே ஒட்டுமொத்தக் கிராமத்தையும் இதமாகத் தூக்கத்திலிருந்து எழுப்புகிறது. அதிகாலையில் வயல்வெளிகளில் படர்ந்திருக்கும் மெல்லிய பனிமூட்டமும், புற்களின் நுனியில் முத்துக்களைப் போலத் தேங்கியிருக்கும் பனித்துளிகளும் பார்ப்பவர் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன. குளிர்ந்த காற்று வீச, குயில்களின் ஓசையும், சிட்டுக் குருவிகளின் சலசலப்பும் காதுகளுக்குப் பேரின்பத்தைத் தருகின்றன. கிராமத்து விடியல் மனிதர்களை அவசரப்படுத்துவதில்லை; மாறாக, இயற்கையோடு இணைந்து ஒரு புதிய நாளை நிதானமாகத் தொடங்க அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.
<h3>வாசலில் கோலமும் அடுப்புப் புகையும்: கிராமத்து விடியலின் பாரம்பரிய நறுமணம்</h3>
கிராமப்புறங்களில் விடியல் என்பது கலாச்சாரத்தின் தொட்டிலாகத் திகழ்கிறது. விடிவதற்கு முன்பே வீட்டின் வாசல்களில் சாணம் தெளித்து, பெண்கள் புள்ளிக்கோலமிடும் அழகே தனிச்சிறப்பு வாய்ந்தது. மற்றொரு புறம், மாட்டுத் தொழுவங்களில் மாடுகள் எழுப்பும் சத்தமும், கறவை மாடுகளிடம் பால் கறக்கும் ஓசையும் கிராமத்தின் உழைப்பை பறைசாற்றுகின்றன. விறகு அடுப்பில் இருந்து கிளம்பும் மெல்லிய புகையும், சுடச்சுடத் தயாராகும் பழைய கஞ்சியின் அல்லது காபியின் நறுமணமும் அந்த விடியலை இன்னும் அழகாக்குகின்றன. கிராமத்து மனிதர்களிடம் காலையிலேயே ஒருவித அலாதியான புன்னகையையும், அண்டை வீட்டாருடன் நலம் விசாரிக்கும் உன்னதமான மனிதநேயத்தையும் நாம் காண முடிகிறது.
<h3>அடுக்குமாடி ஜன்னல்களும் காபி கோப்பையும்: நகரத்து விடியலின் நவீன ரசனை</h3>
இயற்கை சூழல் குறைவாக இருந்தாலும், நகரத்து விடியலிலும் ஒரு தனித்துவமான நவீன ரசனை ஒளிந்திருக்கிறது. பூங்காக்களிலும், பிரதான சாலைகளிலும் உடற்பயிற்சி செய்பவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் கூட்டம் நகரத்தின் ஆரோக்கிய விழிப்புணர்வைக் காட்டுகிறது. அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றுகொண்டு, தூரத்தில் தெரியும் கட்டிடங்களுக்கு இடையே சூரியன் மெல்ல மேலேறுவதைப் பார்ப்பது ஒரு நவீன ரசனை. கையில் ஒரு கோப்பை சூடான காபியுடன், செய்தித்தாளையோ அல்லது கைபேசியையோ பார்த்தபடி, அன்றைய நாளின் திட்டங்களை வகுப்பதில் நகரத்து விடியல் நகர்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Summer Ideas: கோடைக்காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிவிடுகிறதா..? இதை செய்து நீண்ட காலம் பாதுகாக்கலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-vegetables-from-rotting-quickly-in-summer-kitchen-hacks-in-tamil-82388.html</link>	
		<pubDate>Tue, 02 Jun 2026 19:08:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-protect-vegetables-from-rotting-quickly-in-summer-kitchen-hacks-in-tamil-82388.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vegetables Fresh For Longer: காய்கறிகளை ஒரு சுத்தமான காகிதத் துண்டில் சுற்ற வேண்டும். இந்தக் காகிதம், குளிர்சாதனப் பெட்டியின் ஈரப்பதத்திலிருந்து காய்கறிகளைப் பாதுகாப்பதுடன், அவற்றை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். காய்கறிகளைச் சுற்றுவதற்கு செய்தித்தாள் அல்லது அச்சிடப்பட்ட, வண்ணமயமான எந்தக் காகிதத்தையும் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/fresh-vegs.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Summer Ideas: கோடைக்காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிவிடுகிறதா..? இதை செய்து நீண்ட காலம் பாதுகாக்கலாம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/7-bird-species-you-can-easily-spot-in-india-this-summer-79392.html">கோடைக்காலத்தில்</a> <strong>(Summer)</strong> அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக காய்கறிகள் விரைவில் கெட்டுப்போகின்றன. இரண்டாவதாக, அவற்றில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி வேகமாகப் பெருகுகிறது. இதுபோன்ற நேரங்களில், சமைத்த உணவைச் சரியாகச் சேமிப்பது மட்டுமல்லாமல், பச்சைக் காய்கறிகளையும் <strong>(Vegtables)</strong> சரியாகப் பாதுகாக்காததால் அவை விரைவில் கெட்டுப்போகத் தொடங்குகின்றன. குறிப்பாக, <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/mango-storage-tips-should-you-refrigerate-mangoes-full-details-here-79876.html">ப்ரிட்ஜில்</a> வைத்தாலும் பச்சைக் காய்கறிகள் விரைவாகக் கெட்டுப்போகின்றன. காய்கறிகளைச் சரியான வெப்பநிலையில் சேமிப்பதுடன், அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது சில சிறிய விஷயங்களைக் கவனிப்பதும் முக்கியம். இது அவற்றை நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/mango-storage-tips-should-you-refrigerate-mangoes-full-details-here-79876.html">மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? இந்த தவறுகள் வேண்டாம்..!</a>
<h3>கோடையில் காய்கறிகளை சரியான முறையில் பராமரிப்பது எப்படி..?</h3>
அரசு நிறுவனமான இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம், காய்கறிகளைச் சேமிப்பது தொடர்பாக ஓர் அறிவுரையை (வழிகாட்டுதலை) வெளியிட்டுள்ளது. இதனால், காய்கறிகள் நீண்ட காலத்திற்குக் கெட்டுப்போகாமல் ப்ரஸாக இருப்பதை உறுதி செய்யும். இதன் காரணமாக, காய்கறிகளிலுள்ள ஊட்டச்சத்துக்களும் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுகின்றன.

காய்கறிகளைச் சேமித்து வைப்பதற்கு முன், அவற்றைச் சுத்தம் செய்யுங்கள். அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் அகற்றப்படும் வகையில் அனைத்துக் காய்கறிகளையும் நன்கு கழுவுவது அவசியம். இல்லையெனில், அது காய்கறிகள் கெட்டுப்போகும் செயல்முறையை விரைவுபடுத்தக்கூடும். இதற்குப் பிறகு, காய்கறிகளில் உள்ள தண்ணீரை உலர விடுங்கள். இதற்காக, காய்கறிகளை ஒரு துண்டின் மீது பரப்பி வைக்கலாம்.

இரண்டாவது படி, காய்கறிகளை ஒரு சுத்தமான காகிதத் துண்டில் சுற்ற வேண்டும். இந்தக் காகிதம், குளிர்சாதனப் பெட்டியின் ஈரப்பதத்திலிருந்து காய்கறிகளைப் பாதுகாப்பதுடன், அவற்றை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். காய்கறிகளைச் சுற்றுவதற்கு செய்தித்தாள் அல்லது அச்சிடப்பட்ட, வண்ணமயமான எந்தக் காகிதத்தையும் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். அவ்வாறு செய்தால், காய்கறிகள் வண்ணம் மற்றும் மையில் உள்ள இரசாயனங்களை உறிஞ்சிக்கொள்ளும், அவை உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல.

காய்கறிகளைச் சேமிக்கும்போது, ​​மக்கள் பெரும்பாலும் அவற்றை நேரடியாக பாலித்தீன் (பிளாஸ்டிக் பைகள்) பைகளில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறார்கள். இவ்வாறு செய்வதால், காய்கறிகளுக்குக் காற்று கிடைக்காததால், அவை விரைவில் கெட்டுவிடுகின்றன. காய்கறிகளைச் சேமிக்க, அவற்றுடன் வரும் சிவப்பு நிற வலையைப் பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், காய்கறிகளைச் சேமிப்பதற்காகக் கிடைக்கும் பிரத்யேகப் பையைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/health/top-nutrient-rich-foods-to-naturally-improve-your-sleep-quality-81616.html">இனி தினமும் நிம்மதியாக தூங்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.!</a>

காய்கறிகளைக் கழுவிய பிறகு, அவற்றை ஒரு துணியால் நன்றாகத் துடைத்து, ஈரப்பதம் படாதவாறு வைக்கவும். காய்கறிகளைத் தனித்தனி தட்டுகளில் சேமிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு காய்கறி கெட்டுப்போனால் கூட மற்ற காய்கறிகளும் விரைவில் அழுகிவிடும். தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைத் தவிர்க்கவும். ஈரப்பதம் இல்லாத குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் போதும். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் சேமிக்க வேண்டிய காய்கறிகளே. குளிர் காரணமாக அவை விரைவில் முளைத்துவிடும். காய்கறிகளை நீண்ட நேரம் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Water Bottle Tips: எவ்வளவு காலத்திற்குப் பிறகு தண்ணீர் பாட்டிலை மாற்ற வேண்டும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-long-should-you-replace-your-water-bottle-kitchen-hacks-in-tamil-82376.html</link>	
		<pubDate>Tue, 02 Jun 2026 18:34:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-long-should-you-replace-your-water-bottle-kitchen-hacks-in-tamil-82376.html</guid>
		            
			

    	<description><![CDATA[Water Bottle Changed Tips: காலாவதியான பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பதால், உடலில் நச்சுகள் சேர்கின்றன .இந்த நச்சுகள் இரத்த ஓட்டத்தில் கலந்து, அனைத்து உறுப்புகளையும் மோசமாகப் பாதிக்கின்றன. விஷத்தைப் போலவே, இதுவும் மெதுவாகச் செயல்படுகிறது. நீங்கள் தவறுதலாக காலாவதியான தண்ணீரை 1-2 முறை குடித்தால், அது உங்கள் உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/water-bottle-changed-tips.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Water Bottle Tips: எவ்வளவு காலத்திற்குப் பிறகு தண்ணீர் பாட்டிலை மாற்ற வேண்டும்?" /></figure>தண்ணீரின் சேமிப்புக் காலம் நீண்ட காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இன்று, சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை <strong>(Water Bottle)</strong> எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பது குறித்த சில உண்மைகளைப் பார்ப்போம். மேலும், காலாவதியான தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் அபாயங்களையும் ஆராய்வோம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் <a href="https://www.tv9tamilnews.com/health/can-cold-foods-really-help-during-a-heatwave-81238.html">தண்ணீரை</a> அடைத்து வைக்கும்போது அதற்கும், காலாவதி தேதியும் உள்ளது. அதாவது, உணவுப் பொருட்களுக்குக் காலாவதித் தேதி இருப்பது போலவே, காற்றுப் புகாத மூடியுடன் கூடிய பாட்டில்களுக்கும் காலாவதித் தேதி உண்டு. அந்தவகையில், பாட்டிலுக்குள் பிடித்து வைக்கும் நீரை எத்தனை நாட்களுக்குள் குடிக்கலாம்..? எத்தனை நாட்கள் வரை பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தலாம் என்று அறிவோம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/the-ultimate-guide-to-choosing-the-healthiest-cooking-oil-79171.html">சமையல் எண்ணெய்: உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?</a>
<h3>வாட்டர் பாட்டிலில் தண்ணீர்:</h3>
நாம் ரயில், பேருந்து அல்லது காரில் பயணம் செய்யும்போது கடைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் அடிக்கடி வாங்கும் தண்ணீர் பாட்டில்களும் கெட்டுப்போகுமா என்ற கேள்வி எழுகிறது.  லைவ் சயின்ஸ் (Live Science) அறிக்கையின்படி, தண்ணீர் அதன் அசல் வடிவத்தில் கெட்டுப்போவதில்லை. காலாவதி தேதி, அதாவது கெட்டுப்போதல், மூடப்பட்ட பாட்டிலின் பிளாஸ்டிக்கைச் சார்ந்தது. உண்மையில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த பிளாஸ்டிக் கரையத் தொடங்குகிறது. இது பல வகையான நோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, மூடப்பட்ட பாட்டிலில் எழுதப்பட்டிருக்கும் காலாவதி தேதி தண்ணீருக்கானது அல்ல, மாறாக அந்த பிளாஸ்டிக் பாட்டிலுக்கானது.

காலாவதியான பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பதால், உடலில் நச்சுகள் சேர்கின்றன .இந்த நச்சுகள் இரத்த ஓட்டத்தில் கலந்து, அனைத்து உறுப்புகளையும் மோசமாகப் பாதிக்கின்றன. விஷத்தைப் போலவே, இதுவும் மெதுவாகச் செயல்படுகிறது. நீங்கள் தவறுதலாக காலாவதியான தண்ணீரை 1-2 முறை குடித்தால், அது உங்கள் உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுகிறது. அதனால் பெரிய தீங்கு எதுவும் ஏற்படாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மிகச் சிறிய அளவிலான நச்சுக்கள், பிளாஸ்டிக்குகள் மற்றும் இரசாயனங்கள் மட்டுமே உங்கள் உடலுக்குள் நுழையும். இருப்பினும், நீங்கள் அத்தகைய தண்ணீரைத் தொடர்ச்சியாகவோ அல்லது மீண்டும் மீண்டும் குடித்தால், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html">இரவில் தூக்கமின்மையால் அவதியா? இந்த 4 விஷயங்கள் காரணமாக இருக்கலாம்</a>
<h3>வாட்டர் பாட்டில்களை எத்தனை நாட்களுக்குள் மாற்ற வேண்டும்?</h3>
<ul>
 	<li>கடைகளில் குடிக்க வாங்கும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி, மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.</li>
 	<li>தொடர்ந்து பயன்படுத்தும்போது, ​​பிளாஸ்டிக் பாட்டில்களை 1 முதல் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.</li>
 	<li>உங்கள் பாட்டிலில் விரிசலோ கீறலோ இருந்தால், அதை உடனடியாக மாற்றிவிட்டு ஒரு புதிய பாட்டிலை வாங்க வேண்டும்.</li>
 	<li>பிளாஸ்டிக் பாட்டிலின் நிறம் மாறினால், அது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.</li>
 	<li>வெப்பம் கடத்தாத பாட்டிலில் உள்ள ரப்பர் சீல் சேதமடைந்தால், மூடியை அல்லது பாட்டிலை கூடிய விரைவில் மாற்றிவிடவும்.</li>
 	<li>உங்கள் தண்ணீர் பாட்டில் சுத்தமாக இருப்பதையும், அதைத் தவறாமல் மாற்றுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல ஆரோக்கியம் சுத்தமான நீரிலிருந்து தொடங்குகிறது.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிரபஞ்ச மர்மமும் பறக்கும் தட்டுகளும்: உலக யுஎஃப்ஒ தினத்தின் ஒரு பார்வை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/unlocking-universes-mysteries-the-significance-of-world-ufo-day-82233.html</link>	
		<pubDate>Tue, 02 Jun 2026 11:40:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/unlocking-universes-mysteries-the-significance-of-world-ufo-day-82233.html</guid>
		            
			

    	<description><![CDATA[Unlocking Universe's Mysteries: அண்டவெளியின் புரியாத புதிராக விளங்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக யுஎஃப்ஒ தினம் கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமான விமானங்கள் மற்றும் விண்கற்களைத் தாண்டி, வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்தும் விசித்திரமான விண்கலன்களாகக் கருதப்படும் இவற்றைப் பற்றிய தேடலை உலகளவில் கொண்டு செல்ல இந்த நாள் உதவுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ufo-day.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிரபஞ்ச மர்மமும் பறக்கும் தட்டுகளும்: உலக யுஎஃப்ஒ தினத்தின் ஒரு பார்வை!" /></figure>பரந்த அண்டமானது மனித அறிவுக்கு எட்டாத அத்தனை அதிசயங்களையும், விடுவிக்க முடியாத புதிர்களையும் தன்னுள் ரகசியமாய் ஒளித்து வைத்துள்ள ஒரு ஆச்சரியப் பேழையாகவே திகழ்கிறது. பேரண்டத்தின் இந்த நீள அகலங்களுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்களில், இன்றுவரை மனிதகுலத்திற்கு மிகப் பெரும் சவாலாகவும் சுவாரசியமாகவும் விளங்குவது 'அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்' (Unidentified Flying Objects) எனப்படும் யுஎஃப்ஒ-க்கள் ஆகும். நாம் அன்றாடம் வானத்தில் பார்க்கும் பறவைகள், வண்ணப் பட்டங்கள், விமானங்கள், அதிநவீன ராக்கெட்டுகள் அல்லது இயல்பாக விழும் விண்கற்கள் போன்ற வழக்கமான பொருட்களைத் தாண்டி, விவரிக்க முடியாத வடிவிலும் வேகத்திலும் நகரும் உன்னதப் பொருட்களையே விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் UFO என்று வகைப்படுத்துகின்றனர். பொதுமக்களின் கற்பனையிலும் அறிவியல் புனைகதைகளிலும், இந்த வார்த்தையானது வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) பூமியைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தும் பறக்கும் தட்டுகளையே (Flying Saucers) முதன்மையாகக் குறித்து நிற்கிறது.
<h3>உலக யுஎஃப்ஒ தினத்தின் தோற்றம்: விழிப்புணர்வை விதைத்த ஹக்டன் அக்டோகன்</h3>
விண்வெளியில் நிகழும் இந்த விசித்திரமான நகர்வுகள் குறித்த தேடலை உலகளவில் கொண்டு சேர்க்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் 'உலக யுஎஃப்ஒ தினம்' (World UFO Day) மிகக் கோலாகலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பூமியைத் தாண்டிய உயிரினங்கள் மற்றும் விண்கலன்கள் இருப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு தளமாக இந்த நாள் பார்க்கப்படுகிறது. இத்தகைய விசித்திரமான விண்கலன்கள் குறித்த முறையான தேடலையும், அறிவியல் பூர்வமான விவாதங்களையும் உலக அரங்கில் ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த 2001-ஆம் ஆண்டு பிரபல யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளரான ஹக்டன் அக்டோகன் என்பவரால் இந்த சிறப்பு தினம் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை, பிரபஞ்ச ரகசியங்களை விரும்பும் உலகளாவிய தேடலாளர்களால் இந்தத் தினம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
<h3>விண்வெளி ஆர்வலர்களின் தேடல்: தொலைநோக்கிகள் வழியே விரியும் மர்ம உலகம்</h3>
ஒவ்வொரு ஆண்டும் உலக யுஎஃப்ஒ தினத்தன்று, உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் தங்களின் அதிநவீன தொலைநோக்கிகள் (Telescopes) மற்றும் தொலைநோக்கிக் கருவிகளுடன் தயாராகி விடுகின்றனர். இந்த நாளில் அவர்கள் இரவு நேரத்து வானத்தை உற்று நோக்கி, ஏதேனும் மர்மப் பொருட்கள் தங்களின் கண்களில் அகப்படுகிறதா என்று மிகுந்த ஆர்வத்துடன் தேடிப் பார்த்து மகிழ்கின்றனர். இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமில்லாமல், வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அவர்களின் தொழில்நுட்பங்கள் குறித்த மனிதகுலத்தின் அறிவியல் தேடலைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு உந்துசக்தியாகவும் அமைகிறது. இத்தகைய கூட்டுத் தேடல்களும் விவாதங்களும், பிரபஞ்சத்தின் எல்லையற்ற மர்மங்களை நோக்கிய மனிதனின் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பெரிதும் உதவுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலையில் இசை கேட்பது மனநிலையை மாற்றுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/a-sound-morning-how-music-shapes-your-day-82159.html</link>	
		<pubDate>Tue, 02 Jun 2026 06:15:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/a-sound-morning-how-music-shapes-your-day-82159.html</guid>
		            
			

    	<description><![CDATA[Morning music: காலையில் மென்மையான இசை கேட்பது மூளையில் டோபமைன் மற்றும் செரடோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரித்து மன அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கிறது. இது உடலில் சுரக்கும் கார்டிசோல் என்னும் கவலை ஹார்மோனைக் கட்டுப்படுத்தி, அதிகாலைப் பொழுதை பதற்றமின்றி நிதானமாகத் தொடங்க உதவுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/06/how-music-enhances-productivity.png" class="attachment-large size-large wp-post-image" alt="காலையில் இசை கேட்பது மனநிலையை மாற்றுமா?" /></figure>அதிகாலைப் பொழுதில் நாம் கேட்கும் ஒலிகள் அன்று முழுவதற்குமான நம் மனநிலையைத் தீர்மானிக்கின்றன. படுக்கையை விட்டு எழுந்ததும் மென்மையான இசையை நாடுவதன் மூலம் நம் மூளையின் செயல்பாடுகள் நேர்மறையான திசையை நோக்கித் தூண்டப்படுகின்றன. குறிப்பாக, அமைதியான பாடல்கள் அல்லது மெல்லிசை நம் உடலின் அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. இதனால், காலை நேரத் தொடக்கம் பதற்றமின்றி, நிதானமாக அமைகிறது என்று வாழ்வியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
<h3>மன அழுத்த முறிப்பான்: ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள்</h3>
இசைக்கும் நமது உடலின் வேதியியல் மாற்றங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. காலையில் பிடித்தமான பாடல்களைக் கேட்கும்போது, மூளையில் மகிழ்ச்சியைத் தரும் 'டோபமைன்' மற்றும் 'செரடோனின்' போன்ற வேதியியல் சுரப்புகள் அதிகரிக்கின்றன. அதே வேளையில், கவலை மற்றும் சோர்வை உண்டாக்கும் 'கார்டிசோல்' சுரப்பின் அளவு கணிசமாகக் குறைகிறது. இந்த எளிய பழக்கம், அலுவலக வேலைகளுக்கோ அல்லது அன்றாடப் பணிகளுக்கோ கிளம்புபவர்களின் மன இறுக்கத்தை ஒரு தற்காப்புக் கவசம் போலத் தடுத்து நிறுத்துகிறது.
<h3>கவனச் சிதறல் தவிர்ப்பு: அன்றாடப் பணிகளில் கூடும் சுறுசுறுப்பு</h3>
காலையில் இசையுடன் தொடங்கும் நாளின் செயல்பாடுகளில் தொய்விருக்காது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான இசை நம் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலுக்கு ஒரு புதிய ஆற்றலைத் தருகிறது. இது சோம்பலை விரட்டி, அன்றைய நாளின் இலக்குகளை நோக்கி நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. மேலும், தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் மனதில் நுழைவதைத் தடுத்து, செய்யும் வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்த இது ஒரு எளிய பயிற்சியாக மாறுகிறது.
<h3>சரியான தேர்வு: எத்தகைய இசையைக் கேட்க வேண்டும்?</h3>
மனநிலையை மாற்றுவதில் நாம் தேர்ந்தெடுக்கும் இசையின் வடிவத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அதிகாலையில் அதிக சத்தமுள்ள அல்லது ஆக்ரோஷமான இசையைத் தவிர்த்து, மெல்லிசை, புல்லாங்குழல், வீணை போன்ற கருவிகளின் நாதம் அல்லது இயற்கையின் ஒலிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த வகையான ஒலிகள் இதயத் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவுவதோடு, நாள் முழுவதும் ஒரு நேர்மறையான அலைவரிசையை நம்மைச் சுற்றி உருவாக்கி வைக்கின்றன. எனவே, காலையில் இசை கேட்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஆரோக்கியமான மனநிலைக்கான ஒரு சிறந்த முதலீடு. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏசி அறையிலும் தூக்கம் வராததற்கு என்ன காரணம்? – வெப்பஅலை காலத்தில் உடல் எப்படி பாதிக்கப்படுகிறது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/why-sleeping-in-ac-rooms-during-heatwaves-still-feels-uncomfortable-82061.html</link>	
		<pubDate>Mon, 01 Jun 2026 13:49:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/why-sleeping-in-ac-rooms-during-heatwaves-still-feels-uncomfortable-82061.html</guid>
		            
			

    	<description><![CDATA[AC Room Sleep: வெப்பஅலை காலங்களில் பகலில் உடல் அதிக வெப்பத்தை எதிர்கொள்வதால், இரவில் ஏசி அறையில் இருந்தாலும் உடல் உடனடியாக ஓய்வுநிலைக்கு வராது. உடல் வெப்பநிலை குறைய தாமதமாகும் போது தூக்கம் பாதிக்கப்படலாம். ஏசியை அதிக குளிரில் வைத்தாலும் மூக்கு உலர்தல், தொண்டை எரிச்சல் போன்ற சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏசி அறையிலும் தூக்கம் வராததற்கு என்ன காரணம்? – வெப்பஅலை காலத்தில் உடல் எப்படி பாதிக்கப்படுகிறது?" /></figure>கோடைக்கால வெப்பம் அதிகரிக்கும் நாட்களில், ஏசி அறையில் இருந்தாலும் பலருக்கு சரியாக தூங்க முடியாமல் போகிறது. “அறை குளிராக இருந்தால் நன்றாக தூங்கிவிடலாம்” என்று பலர் நினைத்தாலும், உடலின் இயல்பான செயல்முறைகள் அதைவிட சிக்கலானவை. பகல் நேரத்தில் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைதல், சோர்வு, மனஅழுத்தம் மற்றும் உடல் வெப்ப கட்டுப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் இரவு நேரத்தில் உடல் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருந்தாலும் உடனடியாக தூக்கநிலைக்கு செல்ல முடியாமல் போகும்.
<h3>உடல் வெப்பநிலை குறையாமல் இருந்தால் தூக்கம் பாதிக்கும்</h3>
சாதாரணமாக நல்ல தூக்கம் கிடைக்க உடலின் உள்ளக வெப்பநிலை சிறிது குறைய வேண்டும். ஆனால் வெப்பஅலை காலங்களில் உடல் பகல் முழுவதும் அதிக வெப்பத்தை எதிர்கொண்டிருப்பதால், இரவு நேரத்திலும் அந்த தாக்கம் நீடிக்கலாம். ஏசி இயக்கப்பட்டிருந்தாலும் உடல் முழுமையாக அமைதியான நிலைக்கு வர சில நேரம் பிடிக்கும். இதனால் திரும்பத் திரும்ப விழித்துக்கொள்வது, சரியாக உறங்க முடியாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
<h3>அதிக குளிரான ஏசி அமைப்பும் சிக்கலை உருவாக்கலாம்</h3>
சிலர் “அதிக குளிர் என்றால் நல்ல தூக்கம்” என நினைத்து ஏசியை மிகவும் குறைந்த வெப்பநிலைக்கு அமைத்துவிடுவார்கள். ஆனால் இது உடலுக்கு வேறு விதமான சிரமத்தை தரலாம். மிக அதிக குளிர் காரணமாக மூக்கு உலர்தல், தொண்டை எரிச்சல், தசை இறுக்கம் அல்லது நடு இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். தொடர்ந்து ஏசி காற்றில் இருப்பதால் அறை காற்று உலர்ந்து, உடலில் நீர்ச்சத்து குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/health-benefits-of-kollu-why-horse-gram-is-good-for-your-body-81994.html">கொள்ளு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? வாங்க என்னென்னு தெரிஞ்சுக்கலாம்…</a>
<h3>பகல் வெப்பத்தின் தாக்கம் இரவில் தொடரும்</h3>
பகல் முழுவதும் கடும் வெப்பத்தில் இருந்தவர்கள் இரவில் மிகவும் சோர்வாக உணர்ந்தாலும் மனமும் உடலும் முழுமையாக ஓய்வடையாமல் இருக்கலாம். தலைவலி, உடல் சோர்வு, உணவில் மாற்றம், எரிச்சல், மனஅழுத்தம் போன்றவை தூக்கத்தின் தரத்தை பாதிக்கின்றன. குறிப்பாக வெப்பமான இரவுகள் அதிகரித்து வரும் நிலையில், பலருக்கும் தூக்கமின்மை பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது.
<h3>நல்ல தூக்கத்திற்கான எளிய வழிமுறைகள்</h3>
வெப்பஅலை காலங்களில் நல்ல தூக்கம் பெற, ஏசியை மிதமான வெப்பநிலையில் வைத்திருப்பது முக்கியம். பகல் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பது, தூங்குவதற்கு முன் அதிக எண்ணெய் அல்லது கனமான உணவுகளை தவிர்ப்பது, தினசரி ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது போன்றவை உதவும். தூக்கம் என்பது அறையை குளிர்விப்பது மட்டும் அல்ல; உடலும் மனமும் அமைதியாக ஓய்வெடுக்க தயாராக இருப்பதுதான் முக்கியம் என்பதையும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அவசரமான காலை&#8230; பள்ளி குழந்தைகளுக்கு ஈஸியான ஹெல்தி பிரேக்பாஸ்ட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/quick-and-nutritious-breakfast-ideas-for-school-going-children-82011.html</link>	
		<pubDate>Mon, 01 Jun 2026 13:03:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/quick-and-nutritious-breakfast-ideas-for-school-going-children-82011.html</guid>
		            
			

    	<description><![CDATA[School breakfast Easy recipes: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவைத் தடையின்றி வழங்க முன்தின இரவே காய்கறிகளை நறுக்கி, மாவு வகைகளைத் தயார் செய்து வைப்பது நேரத்தைப் பெரிதும் மிச்சப்படுத்தும். முட்டையுடன் காய்கறிகள் சேர்த்த பிரெட் டோஸ்ட் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் போன்றவற்றை ஐந்தே நிமிடங்களில் சத்தாகவும் சுவையாகவும் செய்து கொடுத்துவிடலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/06/oil-free-breakfast.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அவசரமான காலை&#8230; பள்ளி குழந்தைகளுக்கு ஈஸியான ஹெல்தி பிரேக்பாஸ்ட்!" /></figure>பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு என்பது வெறும் உணவு மட்டுமல்ல; அது அவர்களின் அன்றாட ஆற்றலின் அடித்தளம் ஆகும். இரவு முழுவதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மூளை மற்றும் உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான குளுக்கோஸை காலை உணவே வழங்குகிறது. எனினும், இன்றைய பரபரப்பான காலை வேளையில், குழந்தைகளுக்குப் பிடித்தமான, அதே சமயம் சத்துக்கள் நிறைந்த உணவைச் சமைப்பது பெற்றோருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. சரியான திட்டமிடல் இல்லையெனில், இது காலை நேரப் பதற்றத்தையும், அவசரத்தையும் உருவாக்கி விடுகிறது. இந்த அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான உணவை மிக எளிதாகத் தயாரிப்பதற்கான வழிமுறைகளைச் சமையல் நிபுணர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
<h3>முன்தின இரவுத் திட்டமிடல் மூலம் நேரத்தைச் சேமிக்கும் ரகசியம்</h3>
காலை நேரச் சமையலை எளிதாக்க மிகச் சிறந்த வழி முன்தின இரவே சில வேலைகளை முடித்து வைப்பதாகும். இட்லி, தோசைக்கான மாவை அரைத்து வைப்பது மட்டுமின்றி, அடுத்த நாள் காலையில் செய்யப் போகும் காய்கறிப் பிரியாணி அல்லது உப்மாவிற்குத் தேவையான காய்கறிகளை இரவிலேயே நறுக்கி, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்துவிடலாம். சட்னிக்குத் தேவையான தேங்காய் துருவல், நிலக்கடலை போன்றவற்றைத் தயார் செய்து வைப்பதன் மூலம், காலையில் சமையலறையில் செலவிடும் நேரத்தில் பாதியை மிச்சப்படுத்த முடியும். இது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்த்து, நிதானமாகச் சமைக்க உதவும்.
<h3>ஐந்தே நிமிடத்தில் தயாராகும் சத்துக்கள் நிறைந்த பிரெட் மற்றும் முட்டை உணவுகள்</h3>
குழந்தைகளுக்குத் தயாரிக்கும் உணவு எளிமையாகவும், அவர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும். இதற்கு ‘பிரெட் ஆம்லெட்’ அல்லது ‘முட்டை டோஸ்ட்’ சிறந்த தேர்வாகும். முழுத் தானிய பிரெட் (Wheat Bread) துண்டுகளுக்கு நடுவே, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் குடைமிளகாய் கலந்த முட்டையை ஊற்றித் டோஸ்ட் செய்து கொடுக்கலாம். முட்டையில் உள்ள புரதச்சத்தும், காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும் குழந்தைகளுக்குத் தேவையான உடனடி ஆற்றலைத் தரும். முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு, பிரெட்டின் மேல் வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter) மற்றும் வாழைப்பழத் துண்டுகளை வைத்து ‘சாண்ட்விச்’ ஆகக் கொடுக்கலாம்.
<h3>பாரம்பரிய உணவுகளுக்குப் புத்துயிர் ஊட்டும் சிறுதானியக் கஞ்சிகள்</h3>
சில குழந்தைகளுக்குக் காலையில் எழுந்தவுடன் திட உணவுகளைச் சாப்பிடுவதில் விருப்பமிருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்குச் சிறுதானியங்கள் மற்றும் நவதானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி அல்லது கேழ்வரகு (Ragi) கூழ் சிறந்த மாற்றாகும். முன்தினமே வறுத்துப் பொடித்த சத்து மாவை, பாலுடன் சேர்த்து, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து திரவ வடிவில் கொடுக்கலாம். இது செரிமானத்திற்கு எளிதானது மட்டுமின்றி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது என்பதால், மதிய உணவு இடைவேளை வரை குழந்தைகளைப் பசியின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
<h3>வண்ணமயமான பழங்கள் மற்றும் நட்ஸ் கலந்த ஓட்ஸ் உணவுகள்</h3>
நவீன காலக் குழந்தைகளுக்கு ஓட்ஸ் (Oats) ஒரு சிறந்த காலை உணவாகும். ஓட்ஸை வெறும் தண்ணீரில் வேகவைக்காமல், பாலில் வேகவைத்து, அதனுடன் ஆப்பிள், மாதுளை போன்ற வண்ணமயமான பழத்துண்டுகளைச் சேர்க்கலாம். மேலும், பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை (Nuts and Raisins) போன்றவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கி அதன் மேல் தூவி வழங்கலாம். இந்த ‘ஓட்ஸ் பொரிட்ஜ்’ பார்ப்பதற்கு அழகாகவும், சாப்பிடுவதற்கு இனிப்பாகவும் இருப்பதால் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அடம் பிடிக்கும் குட்டி சுட்டீஸை அசத்தலாகச் சமாளிப்பது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/effective-strategies-to-calm-crying-infants-and-handle-tantrums-smoothly-81992.html</link>	
		<pubDate>Mon, 01 Jun 2026 10:15:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/effective-strategies-to-calm-crying-infants-and-handle-tantrums-smoothly-81992.html</guid>
		            
			

    	<description><![CDATA[Calm Crying Infants: குழந்தைகள் அடம் பிடித்து அழும்போது பதற்றமடையாமல் பசி, வலி, சோர்வு போன்ற உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அன்போடு அரவணைப்பதே முதல் படியாகும். ஒரு பொருளைப் பறிக்கும்போது பிடிவாதம் பிடித்தால், பலவந்தமாகப் பிடுங்காமல் மாற்றுப் பொருளையோ அல்லது விளையாட்டையோ காட்டி அவர்களின் கவனத்தை எளிதாகத் திசைதிருப்பலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/kid-cries.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அடம் பிடிக்கும் குட்டி சுட்டீஸை அசத்தலாகச் சமாளிப்பது எப்படி?" /></figure>கை குழந்தைகள் அல்லது சிறு பிள்ளைகள் தங்களிடமிருக்கும் ஒரு பொருளை திரும்பப் பெறும்போது அடம் பிடித்து அழுவது என்பது அவர்களின் இயல்பான வளர்ச்சிப் படியின் (Developmental stage) ஒரு பகுதியாகும். அந்தப் பொருள் தனக்குரியது என்ற உடைமை உணர்வும், அது பறிபோகும் போது ஏற்படும் ஏமாற்றமும் அவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகிறது. இந்தச் சூழ்நிலையை கோபப்படாமல், பொறுமையுடனும் சாதுரியத்துடனும் கையாள்வது எப்படி என்பதைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
<h3>மாற்றுப் பொருளைக் காட்டி கவனத்தைத் திருப்புதல்</h3>
குழந்தைகளிடம் இருந்து ஒரு பொருளை (குறிப்பாக அவர்களுக்கு ஆபத்தான கூர்மையான பொருட்கள் அல்லது மொபைல் போன் போன்றவற்றை) வாங்கும் போது, அவர்களிடம் இருந்து அதை நேரடியாகப் பிடுங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பிடித்தமான மற்றொரு பாதுகாப்பான பொம்மையையோ அல்லது ஒரு பழத்தையோ காட்டி, "இதைப் பார், இது எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று அவர்களின் கவனத்தை திசைதிருப்பலாம். குழந்தைகள் புதிய அல்லது கவரக்கூடிய மாற்றுப் பொருளைப் பார்க்கும் போது, பழைய பொருளைப் பற்றிய நினைப்பை எளிதில் மறந்து விடுவார்கள்.
<h3>முன்கூட்டியே எச்சரித்து மனதைத் தயார்படுத்துதல்</h3>
ஒரு பொருளை சட்டென்று பிடுங்கும் போதுதான் குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அடம் பிடிக்கத் தொடங்குவார்கள். எனவே, "இன்னும் இரண்டு நிமிடங்களில் நாம் இந்தப் பொருளை அக்காவிடம் கொடுத்துவிட வேண்டும்", அல்லது "விளையாடியது போதும், இதோ கடிகாரத்தில் முள் இங்கே வரும்போது நாம் இதை வைத்துவிடலாம்" என்று அவர்களிடம் முன்கூட்டியே பேச வேண்டும். அவர்களுக்குப் புரியாது என்று நினைக்காமல், தொடர்ந்து இவ்வாறு கூறிப் பழகினால், தங்களிடம் இருந்து அந்தப் பொருள் எடுக்கப்படப் போகிறது என்பதை அவர்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு அழாமல் இருப்பார்கள்.
<h3>விளையாட்டாக மாற்றிப் பொருளைப் பெறுதல்</h3>
பொருளைக் கட்டாயப்படுத்தி வாங்குவதை விட, அதை ஒரு விளையாட்டாக மாற்றுவது சிறந்த பலனைத் தரும். "இந்தப் பொருளை அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஓடிப் போய் அப்பாவைக் தொடு பார்க்கலாம்!" என்றோ, அல்லது "யார் இந்தப் பொருளை கூடையில் முதலில் போடுகிறார்கள் என்று பார்க்கலாம்!" என்றோ சவால் விடலாம். கை குழந்தைகளாக இருந்தால், "டாடா (Bye-Bye) சொல்லுங்க" என்று கூறி அந்தப் பொருளுக்கு அவர்களையே விடைபெறச் சொல்வதன் மூலம், அவர்கள் அழாமல் மகிழ்ச்சியோடு அதை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
<h3>எல்லையைத் தீர்மானித்தலும் பாராட்டுதலும்</h3>
குழந்தை அழுது அடம் பிடிக்கிறது என்பதற்காக, வாங்க நினைத்த பொருளை மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிடக் கூடாது; இது அடம் பிடித்தால் எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்துவிடும். அழுகையின் போது அவர்களை மென்மையாகக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறலாமே தவிர, பொருளைத் தரக் கூடாது. அதே நேரத்தில், அவர்கள் அடம் பிடிக்காமல் ஒரு பொருளை உங்களிடம் கொடுத்தால், "மிகச் சமத்துப் பிள்ளை" என்று கைகளைத் தட்டிப் பாராட்டுவதும், முத்தம் கொடுப்பதும் அடுத்த முறை அவர்கள் அடம் பிடிக்காமல் இருக்க ஊக்குவிக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலையில் வெயில் படுவது ஏன் அவசியம்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/why-morning-sunlight-is-essential-for-your-health-81741.html</link>	
		<pubDate>Sun, 31 May 2026 05:30:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/why-morning-sunlight-is-essential-for-your-health-81741.html</guid>
		            
			

    	<description><![CDATA[Morning Sunlight: நவீன வாழ்க்கைச் சூழலில் வீடுகளுக்குள் முடங்கிவிடும் மனிதர்களுக்கு அதிகாலைச் சூரிய ஒளி ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அமைகிறது. காலை வெயிலில் நனைவதால் நம் உடலில் எலும்புகளின் பலத்திற்குத் தேவையான வைட்டமின் டி இயற்கையாகவே உற்பத்தியாகிறது. மேலும், இது மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், இரவில் நிம்மதியான உறக்கத்திற்கும் வழிவகுக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-2-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலையில் வெயில் படுவது ஏன் அவசியம்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!" /></figure>நவீன நாகரிக உலகில், பளபளக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும், குளிர்சாதன அறைகளிலும் முடங்கிக் கிடக்கும் மனித இனம், இயற்கையின் மாபெரும் கொடையான சூரிய ஒளியை முற்றிலும் மறந்துவிட்டது. அதிகாலையில் உதயமாகும் சூரியனின் இளம் கதிர்கள் நம் உடலில் படுவது ஏதோ சாதாரண விஷயம் அல்ல, அது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கிய காரணியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் அதிகாலை சூரிய வழிபாட்டையும், செந்நிற வெயிலில் நடப்பதையும் தங்களின் தினசரி கடமைகளில் ஒன்றாக வைத்திருந்தனர். காலை வெயிலில் நனைவதால் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் வியக்கத்தக்க தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
<h3>வைட்டமின் டி மற்றும் எலும்பு பலம்</h3>
காலை வெயிலில் நம் உடல் படும்போது, சருமத்தின் அடியில் உள்ள கொழுப்புச் சத்துக்கள் தூண்டப்பட்டு, உடலுக்குத் தேவையான 'வைட்டமின் டி' இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வைட்டமின் டி, நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதற்கு ஒரு பாலமாகச் செயல்படுகிறது. போதிய சூரிய ஒளி உடலுக்குக் கிடைக்காத பட்சத்தில், எலும்புகள் பலவீனமடைந்து, குழந்தைகளுக்கு 'ரிக்கெட்ஸ்' நோயும், முதியவர்களுக்கு எலும்புத் தேய்மானத்தை ஏற்படுத்தும் 'ஆஸ்டியோபோரோசிஸ்' போன்ற தீவிர நோய்களும் ஏற்படுகின்றன. எனவே, வலுவான எலும்பு கட்டமைப்பிற்கு காலை வெயில் ஒரு வரப்பிரசாதமாகும்.
<h3>மன அழுத்த நிவாரணம் மற்றும் நிம்மதியான உறக்கம்</h3>
காலை நேரத்துச் சூரிய ஒளி மனிதனின் மன ஆரோக்கியத்திலும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. சூரியக் கதிர்கள் கண்களின் வழியே நரம்பு மண்டலத்தைத் தூண்டும்போது, மூளையில் 'செரட்டோனின்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட உதவுகிறது. மேலும், பகலில் போதிய சூரிய ஒளி உடலில் படும்போது, இரவு நேரத்தில் தூக்கத்தை முறைப்படுத்தும் 'மெலடோனின்' ஹார்மோன் சுரப்பு சீராகி, ஆழ்ந்த மற்றும் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
<h3>சருமப் பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு</h3>
அதிகாலை வெயிலில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், முகப்பரு, பூஞ்சைத் தொற்றுகள், மற்றும் சரும அழற்சி போன்ற பல்வேறு தோல் நோய்களைக் குணமாக்கும் இயற்கைக் கிருமி நாசினியாக சூரிய ஒளி விளங்குகிறது. வியக்கத்தக்க வகையில், தகுந்த நேரத்தில் உடலுக்குக் கிடைக்கும் மிதமான சூரிய ஒளி, உடலுக்குள் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுத்து, தோல், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயங்களைக் குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
<h3>தவிர்க்க வேண்டிய மதிய வெயில்</h3>
காலை மற்றும் மாலை நேரத்துச் சூரிய ஒளி உடலுக்கு எத்துணை நன்மைகளைத் தருகிறதோ, அத்துணை தீமைகளை மதிய வெயில் ஏற்படுகிறது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். காலை 9 மணிக்கு மேல், குறிப்பாக முற்பகல் 11:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வீசும் கடுமையான சூரிய ஒளியில் உள்ள 'புற ஊதா கதிர்கள்' மிகவும் ஆபத்தானவை. இந்த நேரத்தில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது சருமத்தைக் கருக்குவது மட்டுமின்றி, தோல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது. எனவே, ஆரோக்கியம் தரும் அதிகாலை வெயிலை முறையோடு பயன்படுத்தி, நோயற்ற வாழ்வை வாழ பழகிக் கொள்வது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாட்டில் திருமணச் சான்றிதழ் பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-apply-for-a-marriage-certificate-in-tamil-nadu-81645.html</link>	
		<pubDate>Sat, 30 May 2026 12:36:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-apply-for-a-marriage-certificate-in-tamil-nadu-81645.html</guid>
		            
			

    	<description><![CDATA[Marriage Certificate Tamil Nadu: தமிழ்நாட்டில் திருமணச் சான்றிதழ் பெற, திருமணமான தம்பதியினர் அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, வயது சான்று, முகவரி ஆதாரம், திருமண புகைப்படம் மற்றும் சாட்சிகளின் ஆவணங்கள் தேவைப்படும். அதிகாரப்பூர்வ இணையதளமான TNREGINET தளத்தில் பதிவு செய்து விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும் முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-26.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாட்டில் திருமணச் சான்றிதழ் பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை என்ன?" /></figure>தமிழ்நாட்டில் திருமணமான தம்பதியினர் பல்வேறு அரசு மற்றும் தனியார் தேவைகளுக்காக திருமணச் சான்றிதழ் பெறுவது மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பம், விசா செயல்முறை, வங்கி கணக்கு மாற்றம், குடும்ப அட்டை புதுப்பிப்பு, சொத்து உரிமை விவகாரங்கள், காப்பீடு மற்றும் சட்டரீதியான ஆதாரங்கள் போன்ற பல இடங்களில் திருமணச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. திருமணம் நடந்ததை அரசு அங்கீகரிக்கும் அதிகாரப்பூர்வ சான்றாக இது கருதப்படுவதால், திருமணத்திற்குப் பிறகு விரைவாக இதை பதிவு செய்து பெறுவது நல்லது.
<h3>திருமணப் பதிவு செய்ய வேண்டிய தகுதிகள்</h3>
தமிழ்நாட்டில் திருமணச் சான்றிதழ் பெற, முதலில் திருமணம் சட்டப்படி நடைபெற்றிருக்க வேண்டும். மணமகனின் வயது குறைந்தது 21 ஆகவும், மணமகளின் வயது 18 ஆகவும் இருக்க வேண்டும். திருமணம் இந்து திருமணச் சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம். திருமணம் நடைபெற்ற இடம் அல்லது மணமகன், மணமகள் வசிக்கும் பகுதியின் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. திருமணமான தேதி, இடம் மற்றும் சாட்சிகளின் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும்.
<h3>தேவையான ஆவணங்கள் என்ன?</h3>
திருமணச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது சில முக்கிய ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படும். மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டை, வயது சான்று (பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ்), முகவரி ஆதாரம், திருமண புகைப்படங்கள், திருமண அழைப்பிதழ் போன்றவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், திருமணத்தில் கலந்து கொண்ட இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் அடையாள ஆவணங்களும் கேட்கப்படலாம். ஆவணங்களில் உள்ள பெயர் மற்றும் விவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியம்.
<h3>ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை</h3>
தமிழ்நாட்டில் தற்போது திருமணப் பதிவு சேவைகள் ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கின்றன. அதிகாரப்பூர்வமாக Tamil Nadu Registration Department இணையதளத்தில் பதிவு செய்து திருமணப் பதிவு தொடர்பான சேவைகளை அணுகலாம். தேவையான விவரங்களை பதிவு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து, அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரம் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த பிறகு அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து, தேவையானால் நேரில் வருமாறு தகவல் தெரிவிக்கப்படலாம்.
<h3>நேரில் விண்ணப்பிக்கும் முறை</h3>
ஆன்லைன் வசதி பயன்படுத்த முடியாதவர்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். திருமணமான பகுதியைச் சேர்ந்த அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மணமகன், மணமகள் மற்றும் சாட்சிகள் நேரில் வருவது சில சந்தர்ப்பங்களில் கட்டாயமாக இருக்கலாம். அதிகாரிகள் சரிபார்த்த பிறகு பதிவு முடிக்கப்பட்டு திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.
<h3>சான்றிதழ் பெற எவ்வளவு நாட்கள் ஆகும்?</h3>
பொதுவாக அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் சில நாட்களுக்குள் திருமணச் சான்றிதழ் கிடைக்கும். சில இடங்களில் அதே நாளிலோ அல்லது ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. விண்ணப்ப நிலையை ஆன்லைனிலும் சரிபார்க்க முடியும். தவறான தகவல்கள் அல்லது ஆவணக் குறைபாடுகள் இருந்தால் செயல்முறை தாமதமாகும் என்பதால், விண்ணப்பிக்கும் முன் அனைத்தையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.
<h3>திருமணச் சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம்</h3>
தமிழ்நாட்டில் திருமணச் சான்றிதழ் பெற விரும்புவோர், தமிழ்நாடு பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான <a href="https://tnreginet.gov.in/portal/">TNREGINET Portal (Tamil Nadu Registration Department)</a> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தளத்தில் புதிய பயனராக பதிவு செய்து, திருமணப் பதிவு சேவையைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படிப்படியான முறை

முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து “Registration” → “Marriage Registration” என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் திருமண வகையை (Hindu Marriage / Tamil Nadu Marriage / Special Marriage / Christian Marriage) தேர்ந்தெடுத்து, மணமகன் மற்றும் மணமகளின் விவரங்கள், திருமண தேதி, இடம், சாட்சிகள் பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registrar Office) நேரம் முன்பதிவு செய்து, நேரில் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கலாம்.

<strong>தேவையான ஆவணங்கள்</strong>

<strong>விண்ணப்பிக்கும் போது பொதுவாக பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:</strong>

• மணமகன், மணமகளின் ஆதார் அட்டை
• வயது சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழ் / பள்ளி TC)
• முகவரி ஆதாரம்
• திருமண புகைப்படங்கள்
• திருமண அழைப்பிதழ் (இருந்தால்)
• 2 அல்லது 3 சாட்சிகளின் அடையாள ஆவணங்கள்.
ஆவணங்களில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம். தவறுகள் இருந்தால் விண்ணப்பம் தாமதமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உலகின் மிகப்பெரிய டைனோசர் எது? – புதைபடிவங்கள் சொல்வது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/world/biggest-dinosaur-mystery-why-scientists-still-cant-decide-81630.html</link>	
		<pubDate>Sat, 30 May 2026 11:40:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/world/biggest-dinosaur-mystery-why-scientists-still-cant-decide-81630.html</guid>
		            
			

    	<description><![CDATA[Biggest Dinosaur Mystery: மிகப்பெரிய டைனோசர் எது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. முழுமையான புதைபடிவங்கள் இல்லாததால் விஞ்ஞானிகள் கணிப்புகள் மூலம் மட்டுமே அளவை மதிப்பிடுகின்றனர். சௌரோபோட் இனங்கள் பெரியதாக கருதப்பட்டாலும் புதிய கண்டுபிடிப்புகள் பழைய தகவல்களை மாற்றுகின்றன. இதனால் இந்த ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/biggest-dinosaur.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உலகின் மிகப்பெரிய டைனோசர் எது? – புதைபடிவங்கள் சொல்வது என்ன?" /></figure>பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர் எது என்ற கேள்வி விஞ்ஞான உலகில் இன்னும் முழுமையாக தீராத புதிராகவே உள்ளது. பொதுவாக மக்கள் பெரிய எலும்புகள் கிடைத்தவுடன் அதுவே மிகப்பெரிய டைனோசர் என நினைத்தாலும், ஆராய்ச்சியாளர்கள் அதனை எளிதாக உறுதிப்படுத்த முடியாது என்கிறார்கள். காரணம், பல டைனோசர் இனங்களின் முழுமையான எலும்புக்கூடுகள் கிடைக்காததே. சில நேரங்களில் ஒரு காலெலும்பு, முதுகெலும்பு அல்லது இடுப்புப் பகுதி மட்டும் கிடைப்பதால் அதன் முழு உடல் அளவை கணிப்பது கடினமாகிறது. இதனால் எந்த டைனோசர் உண்மையில் “மிகப்பெரியது” என்பதை தீர்மானிப்பது விஞ்ஞானிகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
<h3>துண்டு துண்டாக கிடைக்கும் புதைபடிவங்களின் சிக்கல்</h3>
டைனோசர் காலத்தைப் பற்றி அறிய உதவும் முக்கிய ஆதாரம் புதைபடிவங்களே. ஆனால் அவை பெரும்பாலும் முழுமையாக கிடைப்பதில்லை. மில்லியன் ஆண்டுகள் கடந்ததால் எலும்புகள் சேதமடைதல், இயற்கை மாற்றங்களால் புதைபடிவங்கள் அழிவது போன்ற காரணங்களால் விஞ்ஞானிகள் முழுமையான தகவல்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ஒரு சிறிய பகுதியை வைத்து முழு உயிரினத்தின் உயரம், எடை, நீளம் போன்றவற்றை கணிக்க வேண்டிய நிலை உருவாகிறது. சில ஆய்வுகளில் ஒரு டைனோசர் மிகப்பெரியது என்று கூறப்பட்டாலும், பின்னர் கிடைக்கும் புதிய ஆதாரங்கள் அந்த மதிப்பீட்டை மாற்றியமைத்த சம்பவங்களும் உள்ளன.
<h3>எந்த டைனோசர்கள் ‘மாபெரும்’ பட்டியலில் உள்ளன?</h3>
அறிவியல் உலகில் மிகப்பெரிய டைனோசர் பட்டியலில் சில பெயர்கள் அடிக்கடி பேசப்படுகின்றன. குறிப்பாக நீண்ட கழுத்தும் மிகப்பெரிய உடல் அமைப்பும் கொண்ட சௌரோபோட் இன டைனோசர்கள் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. சில இனங்கள் பல தசாப்தங்களாக “மிகப்பெரிய டைனோசர்” என்ற பட்டத்தை தக்கவைத்திருந்தாலும், புதிதாக கண்டுபிடிக்கப்படும் எலும்புகள் இந்த விவாதத்தை மீண்டும் கிளப்புகின்றன. ஆய்வாளர்கள் ஒவ்வொரு புதிய புதைபடிவத்தையும் பழைய தரவுகளுடன் ஒப்பிட்டு உடல் அளவை மீண்டும் மதிப்பிடுகின்றனர். இதனால் டைனோசர்களின் உலகில் “மிகப்பெரியது யார்?” என்ற கேள்வி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
<h3>அறிவியல் இன்னும் தேடும் பதில்</h3>
விஞ்ஞானிகள் கூறுவதாவது, எதிர்காலத்தில் முழுமையான புதைபடிவங்கள் அதிகமாக கிடைத்தால் இந்த புதிருக்கு தெளிவான பதில் கிடைக்கலாம் என்பதே. தொழில்நுட்ப வளர்ச்சியால் 3D மாதிரிகள் மற்றும் கணினி ஆய்வுகள் மூலம் உடல் அளவை மிகத் துல்லியமாக கணிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே மதிப்பீடுகள் செய்யப்படுவதால், “உலகின் மிகப்பெரிய டைனோசர்” என்ற பட்டம் இன்னும் உறுதியாக ஒருவருக்குச் செல்லவில்லை. அதனால் டைனோசர் ஆராய்ச்சியில் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் வரலாற்றையே மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி தினமும் நிம்மதியாக தூங்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.!</title>
		<link>https://www.tv9tamilnews.com/health/top-nutrient-rich-foods-to-naturally-improve-your-sleep-quality-81616.html</link>	
		<pubDate>Sat, 30 May 2026 10:20:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[உடல்நலம் அப்டேட்ஸ்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/health/top-nutrient-rich-foods-to-naturally-improve-your-sleep-quality-81616.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sleep Health: ஆரோக்கியமான உணவு முறைகள் உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி இரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற பெரிதும் உதவுகின்றன. வால்நட்ஸ் மற்றும் கிவி பழங்களில் உள்ள மெலடோனின் மற்றும் செரடோனின் சத்துக்கள் மூளையை அமைதிப்படுத்தி தடையற்ற தூக்கத்தை வழங்குகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-2-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி தினமும் நிம்மதியாக தூங்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.!" /></figure>தற்போதைய அவசர காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் தூக்கமின்மை பிரச்சினைக்கு நாம் உட்கொள்ளும் உணவு முறைகளே சிறந்த தீர்வாக அமைகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த மெடிட்டரேனியன் உணவு முறை உடலின் தூக்கச் சுழற்சியை சீராக்க உதவுகிறது.வால்நட்ஸ் மற்றும் பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் உள்ள இயற்கையான மெலடோனின் ஹார்மோன் இரவில் சீக்கிரமாக தூக்கம் வரவழைக்கிறது.கிவி பழத்தில் உள்ள செரடோனின் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நடு இரவில் விழிப்பு ஏற்படுவதைத் தடுத்து ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறது.பசலைக்கீரை போன்ற கீரை வகைகளில் உள்ள மெக்னீசியம் தாதுச்சத்து நரம்புகளை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
<h3>சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கும் உணவு முறைகள்</h3>
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் போதிய தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவு முறைகள் முக்கியப் பங்கு வகிப்பதாக லேட்டஸ்ட் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் ஹார்மோன் சமநிலை மற்றும் தூக்கச் சுழற்சியை சீராக்க மெடிட்டரேனியன் (Mediterranean) வகை உணவு முறைகள் பெரிதும் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள், மற்றும் முழு தானியங்கள் அடங்கிய இத்தகைய உணவுகள் தூக்கமின்மைப் பிரச்சினையைக் குறைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
<h3>இயற்கையான மெலடோனின் நிறைந்த கொட்டைகள்</h3>
இரவு நேரத்தில் சீக்கிரமாக தூக்கம் வரவும், நீண்ட நேரம் விழிப்பின்றி உறங்கவும் 'மெலடோனின்' (Melatonin) என்ற ஹார்மோன் அவசியமாகும். வால்நட்ஸ் மற்றும் பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் இந்த மெலடோனின் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவற்றை மாலையிலோ அல்லது இரவு உணவிற்குப் பின்போ சிறிதளவு உட்கொள்வதன் மூலம் உடலின் தூக்கச் சுழற்சி இயற்கையாகவே தூண்டப்பட்டு, நிம்மதியான உறக்கம் சாத்தியமாகிறது என்று மருத்துவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
<h3>உறக்கத்தை மேம்படுத்தும் கிவி பழங்கள்</h3>
கிவி (Kiwi) பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நடு இரவில் திடீரென விழிப்பு ஏற்படுவது குறைவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள 'செரடோனின்' (Serotonin) என்ற வேதிப்பொருள் மூளையை அமைதிப்படுத்தி உறக்கத்தை வரவழைக்கிறது. மேலும், இதில் உள்ள ஃபோலேட் (Folate) சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் தூக்கமின்மைப் பிரச்சினையையும் இப்பழம் எளிதாகக் குணப்படுத்துகிறது.
<h3>நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் கீரை வகைகள்</h3>
ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவதற்கு நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் தளர்வடைவது அவசியமாகும். கீரை வகைகளில், குறிப்பாக பசலைக்கீரையில் (Spinach) உடலுக்குத் தேவையான 'மெக்னீசியம்' (Magnesium) தாதுச்சத்து ஏராளமாக உள்ளது. இது நரம்புகளை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இரவில் தடையற்ற, நிம்மதியான தூக்கத்தை நமக்கு வழங்குகிறது.
<h3>உடலுக்கு சோர்வை நீக்கி தூக்கத்தைத் தரும் அசைவ உணவுகள்</h3>
பொதுவாக அசைவ உணவுகளில் உள்ள 'டிரிப்டோபான்' (Tryptophan) என்ற அமினோ அமிலம் தூக்கத்தை ஊக்குவிக்கும் ஆற்றல் கொண்டது. கோழி இறைச்சியில் இந்தச் சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இது மூளையில் செரடோனின் மற்றும் மெலடோனின் சுரப்பை அதிகரித்து, சரியான நேரத்தில் தூக்கம் வர வழிவகுக்கிறது. முட்டை, பால் மற்றும் மீன் போன்ற உணவுகளையும் முறையாக உட்கொள்வது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சர்வதேச பட்டியலில் பெருமை சேர்த்த பாரம்பரிய பானம் என்னானு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/indias-masala-chai-tops-global-tasteatlas-beverage-list-81535.html</link>	
		<pubDate>Sat, 30 May 2026 05:30:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/indias-masala-chai-tops-global-tasteatlas-beverage-list-81535.html</guid>
		            
			

    	<description><![CDATA[India’s Masala Chai: இந்தியாவின் பாரம்பரிய பானமான மசாலா சாய், உலகளாவிய உணவு தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது. ஏலக்காய், இஞ்சி, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதன் சுவை தனித்துவமாக உள்ளது. வெளிநாடுகளிலும் இந்திய சாய் பிரபலமடைந்து பல கஃபேக்களில் முக்கிய பானமாக விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-1-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சர்வதேச பட்டியலில் பெருமை சேர்த்த பாரம்பரிய பானம் என்னானு தெரியுமா?" /></figure>இந்தியாவின் பாரம்பரிய பானங்களில் ஒன்றான மசாலா சாய், உலகளாவிய உணவு மற்றும் பான தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. ஏலக்காய், இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு உள்ளிட்ட நறுமண மசாலாக்கள் சேர்க்கப்படுவதால் இதன் சுவை தனித்துவமாக உள்ளது. இந்தியாவில் வீடுகள் முதல் தெரு டீக்கடைகள் வரை மசாலா சாய் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. சமீப ஆண்டுகளில் வெளிநாடுகளிலும் இந்திய சாய்க்கான வரவேற்பு அதிகரித்து பல கஃபேக்களில் முக்கிய பானமாக வழங்கப்படுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாகவும் இது பலரால் விரும்பப்படுகிறது. சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது இந்திய பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
<h3>உலக அளவில் இந்திய டீ-க்கு கிடைத்த அங்கீகாரம்</h3>
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்திருக்கும் மசாலா சாய், தற்போது உலகளவிலும் பெரும் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச உணவு மற்றும் பானங்களை மதிப்பீடு செய்யும் பட்டியலில் இந்திய மசாலா சாய் முதலிடத்தைப் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மணமும், சுவையும், உடலுக்கு தரும் சுகமான உணர்வும் காரணமாக உலகம் முழுவதும் இந்த பாரம்பரிய பானம் பிரபலமடைந்து வருகிறது. இதனால் இந்திய உணவு கலாச்சாரத்திற்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
<h3>மசாலா சாயின் தனிச்சிறப்பு என்ன?</h3>
சாதாரண தேநீரிலிருந்து மசாலா சாய் வேறுபடுவதற்கான முக்கிய காரணம் அதில் சேர்க்கப்படும் நறுமண மசாலாக்களே. ஏலக்காய், இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதன் சுவை தனித்துவமாக மாறுகிறது. குறிப்பாக மழைக்காலம் அல்லது குளிரான காலநிலைகளில் இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாக பலர் நம்புகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் மசாலா சாய் தயாரிக்கும் முறை மாறுபட்டாலும், அதன் அடிப்படை சுவை அனைவராலும் விரும்பப்படுகிறது.
<h3>உலக நாடுகளில் அதிகரிக்கும் இந்திய சாய் பிரபலம்</h3>
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய உணவுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இந்திய மசாலா சாய் பல கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் தனி பானமாக வழங்கப்படுகிறது. சுவை மட்டுமல்லாமல், உடலை சூடாக வைத்திருக்க உதவும் பானமாகவும் இது பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் மசாலா சாயை சுவைத்து பாராட்டும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் இந்திய பாரம்பரிய பானங்களின் மதிப்பு உலகளவில் மேலும் உயர்ந்து வருகிறது.
<h3>இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த சாய் கலாச்சாரம்</h3>
ஒரு சாதாரண தேநீராக பார்க்கப்பட்ட மசாலா சாய், இன்று இந்திய கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வீடுகள், தெரு டீக்கடைகள், அலுவலகங்கள் என எங்கும் காணப்படும் இந்த பானம் பலரின் தினசரி பழக்கமாக உள்ளது. உலகின் சிறந்த பானங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இது இந்திய பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் உலக அரங்கில் மேலும் இடம்பிடிக்கும் வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை: காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/japan-temporarily-halts-indian-mango-imports-after-safety-concerns-81431.html</link>	
		<pubDate>Fri, 29 May 2026 12:15:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/japan-temporarily-halts-indian-mango-imports-after-safety-concerns-81431.html</guid>
		            
			

    	<description><![CDATA[Indian Mangoes Ban: சுமார் 20 ஆண்டுகளாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய மாம்பழங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்போன்சோ, கேசர், லங்க்ரா, பங்கனப்பள்ளி போன்ற பிரபல வகைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடாகும். இதனால் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/indian-mango-ban.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை: காரணம் என்ன?" /></figure>இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜப்பான் தற்காலிக தடை விதித்திருப்பது ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக தடையின்றி சென்றுவந்த இந்திய மாம்பழ வர்த்தகம் தற்போது தடைபட்டுள்ளது. குறிப்பாக அல்போன்சோ, கேசர், லங்க்ரா, பங்கனப்பள்ளி போன்ற உயர்தர இந்திய மாம்பழ வகைகள் ஜப்பான் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இந்த முடிவு பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது.
<h3>ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள்</h3>
ஜப்பான் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ ஏற்றுமதிக்கு முன் இந்தியாவில் உள்ள சிகிச்சை மையங்களை ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆய்வின் போது, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு Vapour Heat Treatment (VHT) மையத்தில் பூச்சி கட்டுப்பாடு மற்றும் கிருமி நீக்க நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாம்பழங்களில் பழ ஈக்கள் அல்லது பிற நுண்ணுயிர் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கும் செயல்முறைகளில் முழுமையான தரநிலைகள் பின்பற்றப்படவில்லை என்ற சந்தேகமே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
<h3>ஜப்பானின் கடுமையான உணவு பாதுகாப்பு விதிமுறைகள்</h3>
விவசாயப் பொருட்கள் இறக்குமதியில் ஜப்பான் மிகவும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் நாடாக அறியப்படுகிறது. குறிப்பாக பழ ஈக்கள் போன்ற வெளிநாட்டு பூச்சிகள் தங்கள் நாட்டின் விவசாய அமைப்பை பாதிக்கக் கூடும் என்பதால், பூச்சி கட்டுப்பாட்டில் ‘Zero Tolerance Policy’ எனப்படும் கடுமையான அணுகுமுறையை ஜப்பான் பின்பற்றுகிறது. இதனால், இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மாம்பழங்களில் தரநிலைகள் குறித்த சந்தேகம் எழுந்தவுடன் உடனடியாக தடை அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
<h3>ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு</h3>
இந்த தடை இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஜப்பான் இந்தியாவின் மிகப்பெரிய மாம்பழ சந்தை அல்ல என்றாலும், அங்கு இந்திய மாம்பழங்களுக்கு உயர்ந்த விலை கிடைப்பது முக்கிய அம்சமாக இருந்தது. ஏற்கனவே கடும் வெப்பம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்த நிலையில், இந்த தடை கூடுதல் சவாலாக மாறியுள்ளது. சில பகுதிகளில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/india/indian-economy-facing-severe-multi-dimensional-risks-81232.html">நெருங்கி வரும் நெருக்கடி: இந்தியப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் 4 பெரும் சவால்கள்!</a>
<h3>அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?</h3>
தற்போது ஜப்பான் இந்த தடையை எப்போது நீக்கும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்திய அதிகாரிகள் மற்றும் ஏற்றுமதி அமைப்புகள் தரநிலைகள் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்து மீண்டும் ஏற்றுமதியை தொடங்க முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாம்பழங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவது அடுத்த கட்டத்தில் முக்கியமானதாக இருக்கும் என வணிக வட்டாரங்கள் கருதுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலையில் தெரியாமலே செய்யும் தவறுகள் உடல்நலத்தை பாதிக்குமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/7-common-morning-mistakes-that-can-affect-your-health-81330.html</link>	
		<pubDate>Fri, 29 May 2026 06:10:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/7-common-morning-mistakes-that-can-affect-your-health-81330.html</guid>
		            
			

    	<description><![CDATA[Morning Mistakes: காலையில் எழுந்தவுடன் மொபைல் பயன்படுத்துவது மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடல், மனநிலையை பாதிக்கக்கூடும். காலை உணவை தவிர்ப்பது சோர்வு மற்றும் கவனக்குறைவுக்கு வழிவகுக்கலாம். உடற்பயிற்சியை புறக்கணித்தல் மற்றும் அதிக காபி குடிப்பது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சிறிய காலை பழக்கங்களை மாற்றுவது நாள் முழுவதும் புத்துணர்ச்சியை தர உதவும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-21.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலையில் தெரியாமலே செய்யும் தவறுகள் உடல்நலத்தை பாதிக்குமா?" /></figure>நாம் தினமும் காலையை எப்படி தொடங்குகிறோம் என்பது நாள் முழுவதும் உடல் மற்றும் மனநிலையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பலர் அறியாமலேயே சில பழக்கங்களை பின்பற்றி வருகிறார்கள். இவை உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்ட காலத்தில் உடல்நலம், மன அமைதி மற்றும் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எழுந்த உடனே செய்யும் சில தவறுகள் உடலை சோர்வாகவும், மனதை எரிச்சலாகவும் மாற்றக்கூடும்.
<ul>
 	<li><strong>எழுந்தவுடன் மொபைல் பார்க்கும் பழக்கம்</strong></li>
</ul>
பலருக்கு காலை கண் திறந்தவுடன் முதலில் கையில் எடுப்பது மொபைல் போனாகவே இருக்கும். சமூக வலைத்தளங்கள், செய்திகள் அல்லது வேலை தொடர்பான தகவல்களை உடனே பார்ப்பது மனதில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் நாள் தொடங்கும் முன்பே பதட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில நிமிடங்கள் அமைதியாக இருந்து நாளை தொடங்குவது மனநிலைக்கு நல்லதாக கருதப்படுகிறது.
<ul>
 	<li><strong>தண்ணீர் குடிக்காமல் நாளை தொடங்குவது</strong></li>
</ul>
இரவு முழுவதும் தூங்கிய பிறகு உடலுக்கு நீர்ச்சத்து தேவைப்படும். ஆனால் பலர் காலையில் எழுந்த உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கிறார்கள். இது உடலில் சோர்வு உணர்வை அதிகரிக்கக்கூடும். காலை நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை தூண்டி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவலாம்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/8-morning-mistakes-that-ruin-your-entire-day-81113.html">எழுந்தவுடன் இதை மட்டும் செய்யாதீங்க! சுறுசுறுப்பான நாளுக்கான சீக்ரெட்!</a>
<ul>
 	<li><strong>காலை உணவை தவிர்ப்பது</strong></li>
</ul>
வேலை அவசரம் அல்லது நேரமின்மை காரணமாக பலர் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் காலை உணவு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. இதை தவிர்ப்பது சோர்வு, கவனக்குறைவு மற்றும் அதிக பசியை ஏற்படுத்தி பின்னர் அதிக உணவு சாப்பிடும் நிலையை உருவாக்கக்கூடும்.
<ul>
 	<li><strong>உடற்பயிற்சியை முற்றிலும் புறக்கணித்தல்</strong></li>
</ul>
காலையில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடும். ஆனால் பலர் நேரமில்லை என்ற காரணத்தால் எந்த உடல் இயக்கமும் இல்லாமல் நாளை தொடங்குகிறார்கள். இது நீண்ட காலத்தில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
<ul>
 	<li><strong>அதிக காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம்</strong></li>
</ul>
சிலர் காலையில் வெறும் வயிற்றில் அதிகமாக காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது சிலருக்கு வயிற்று எரிச்சல் அல்லது அமிலத்தன்மை பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். எனவே, உணவுடன் சமநிலையாக பானங்களை எடுத்துக்கொள்வது நல்ல தேர்வாக கருதப்படுகிறது.
<ul>
 	<li><strong>அவசரமாக நாளை தொடங்குவது</strong></li>
</ul>
காலை நேரத்தில் எல்லாவற்றையும் அவசரமாக செய்வது மனஅழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். தாமதமாக எழுதல், வேலைக்கு அவசரப்படுதல் போன்றவை நாள் முழுவதும் மனநிலையை பாதிக்கலாம். அதனால், சில நிமிடங்கள் முன்பே எழுந்து திட்டமிட்டு நாளை தொடங்குவது பலனளிக்கக்கூடும்.
<ul>
 	<li><strong>சிறிய பழக்கங்கள் பெரிய மாற்றத்தை தரும்</strong></li>
</ul>
காலை நேரத்தில் செய்யும் சிறிய மாற்றங்கள் கூட உடல் மற்றும் மனநலத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தண்ணீர் குடித்தல், சத்தான காலை உணவு, சிறிய உடற்பயிற்சி மற்றும் மொபைல் பயன்பாட்டை குறைத்தல் போன்றவை நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவலாம். தெரியாமலே செய்யும் இந்த தவறுகளை சரிசெய்தால் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழி திறக்கப்படலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தினமும் காலை வெயிலில் 10 நிமிடம் இருந்தால் என்ன நடக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/amazing-benefits-of-morning-sunlight-for-your-health-and-mind-81327.html</link>	
		<pubDate>Fri, 29 May 2026 05:30:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/amazing-benefits-of-morning-sunlight-for-your-health-and-mind-81327.html</guid>
		            
			

    	<description><![CDATA[Morning Sunlight: காலை சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் D வழங்கி எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மனஅழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்தும். தூக்கத்தின் தரத்தை உயர்த்தி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். தினமும் சில நிமிடங்கள் காலை வெயிலில் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களை தரலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-20.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தினமும் காலை வெயிலில் 10 நிமிடம் இருந்தால் என்ன நடக்கும்?" /></figure>இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் வீட்டிற்குள் அல்லது அலுவலகங்களில் அதிக நேரம் செலவிடுவதால் இயற்கையான சூரிய ஒளியை அனுபவிக்கும் நேரம் குறைந்து வருகிறது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆரோக்கிய ஆய்வுகள் கூறுவதுபோல், காலை நேர சூரிய ஒளி உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஒரு எளிய இயற்கை வழியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிகாலை முதல் காலை வரை கிடைக்கும் மென்மையான வெயில் உடலின் இயல்பான செயல்பாடுகளை தூண்டி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
<h3>வைட்டமின் D மற்றும் எலும்பு ஆரோக்கியம்</h3>
காலை நேர சூரிய ஒளியின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று உடலில் வைட்டமின் D உருவாக உதவுவதாகும். இந்த சத்து எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாக கருதப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் போதுமான அளவு வைட்டமின் D கிடைப்பது முக்கியம். குறிப்பாக வீட்டிற்குள் அதிக நேரம் இருப்பவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சில நிமிடங்கள் காலை வெயிலில் நிற்பதன் மூலம் உடல்நலத்திற்கு ஆதரவு கிடைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
<h3>மனநிலையை மேம்படுத்தும் இயற்கை சக்தி</h3>
காலை சூரிய ஒளி உடலில் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும் சில ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டக்கூடும். இதனால் சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிக மன அழுத்தத்தில் வாழும் நபர்களுக்கு காலை நேரத்தில் சிறிது நேரம் வெளியில் நடப்பது அல்லது சூரிய ஒளியை அனுபவிப்பது மன அமைதியை அளிக்க உதவக்கூடும்.
<h3>நல்ல தூக்கத்திற்கும் உதவும் காலை வெயில்</h3>
பலர் இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு வாழ்க்கை முறை, மொபைல் பயன்பாடு மற்றும் உடல் நேர மாற்றங்கள் போன்றவை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் காலை சூரிய ஒளி உடலின் இயற்கையான biological clock-ஐ சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இரவு நேரத்தில் தூக்கத்தின் தரம் மேம்பட்டு, மறுநாள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க உதவலாம்.
<h3>உடல் சுறுசுறுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி</h3>
காலை நேரத்தில் சூரிய ஒளியை பெறுவது உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க உதவக்கூடும். சிலருக்கு காலை வெயிலில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆற்றலை உயர்த்தி, நாள் முழுவதும் செயல்திறனை மேம்படுத்தும் அனுபவத்தை தருகிறது. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆதரிக்க சூரிய ஒளி ஒரு மறைமுக பங்காற்றக்கூடும் என ஆரோக்கிய வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Also Read:<a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html"> இரவில் தூக்கமின்மையால் அவதியா? இந்த 4 விஷயங்கள் காரணமாக இருக்கலாம்</a>
<h3>அளவோடு சூரிய ஒளி பெறுவது அவசியம்</h3>
எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அளவோடு பின்பற்றுவது முக்கியம் என்பதுபோல், சூரிய ஒளியையும் சரியான நேரத்தில் மற்றும் சரியான அளவில் பெறுவது அவசியமாகும். அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்த்து, காலை நேரத்தில் சில நிமிடங்கள் இயற்கை வெளிச்சத்தில் இருப்பது உடல் மற்றும் மனநலத்திற்கு நல்ல பலன்களை அளிக்கக்கூடும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இரவில் தூக்கமின்மையால் அவதியா? இந்த 4 விஷயங்கள் காரணமாக இருக்கலாம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html</link>	
		<pubDate>Thu, 28 May 2026 21:00:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html</guid>
		            
			    	<description><![CDATA[Bedtime Routine For Sleep:  தூக்கமின்மையால் அவதிப்படும்போது, நம்மில் பலர் மருந்துகளை நாடுகிறோம். நமது அன்றாடப் பழக்கங்களில் சிலவற்றை மாற்றுவதன் மூலம் நாம் நன்றாக உறங்க முடியும். இரவில் நன்றாக உறங்குவதற்காக, இன்றே மாற்றிக்கொள்ள வேண்டிய சில பழக்கங்களும் இயற்கையான வழிகள் குறித்தும் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bedtime-routine-for-sleep-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Bedtime Routine For Sleep 1" /></a></dt><p>தூக்கமின்மை என்பது இன்று பலரையும் பாதிக்கும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாகும். நாம் தூக்கமின்மையால் அவதிப்படும்போது, நம்மில் பலர் மருந்துகளை நாடுகிறோம். நமது அன்றாடப் பழக்கங்களில் சிலவற்றை மாற்றுவதன் மூலம் நாம் நன்றாக உறங்க முடியும். இரவில் நன்றாக உறங்குவதற்காக, இன்றே மாற்றிக்கொள்ள வேண்டிய சில பழக்கங்களும் இயற்கையான வழிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bedtime-routine-for-sleep-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Bedtime Routine For Sleep 2" /></a></dt><p>உறங்கச் செல்வதற்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, தூக்கத்தைப் பாதிக்கும் மிகப்பெரிய எதிரியாகும். கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளிலிருந்து வரும் நீல ஒளி, மூளையில் தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியைச் சீர்குலைக்கிறது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bedtime-routine-for-sleep-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Bedtime Routine For Sleep 3" /></a></dt><p>இரவு உணவிற்குப் பிறகு அதிக காஃபின் கலந்த காபி, தேநீர் மற்றும் எனர்ஜி பானங்களை அருந்துவது தூக்கத்தைப் பாதிக்கலாம். காஃபின் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக உடலில் தங்குவதால், அது தூக்கத்தை கணிசமாகச் சீர்குலைக்கிறது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bedtime-routine-for-sleep-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Bedtime Routine For Sleep 4" /></a></dt><p> உறங்கச் செல்வதற்குச் சற்று முன்பு எண்ணெய் நிறைந்த அல்லது அதிக காரமான உணவுகளைச் சாப்பிடுவது அஜீரணம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது தூக்கத்தைக் கெடுக்கக்கூடும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-sleep-better-at-night-with-simple-bedtime-routine-tips-81324.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bedtime-routine-for-sleep-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Bedtime Routine For Sleep 5" /></a></dt><p>பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தூங்குவது, இரவில் ஏற்படும் இயற்கையான தூக்கச் சுழற்சியைச் சீர்குலைக்கும்.
</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>எழுந்தவுடன் இதை மட்டும் செய்யாதீங்க! சுறுசுறுப்பான நாளுக்கான சீக்ரெட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/8-morning-mistakes-that-ruin-your-entire-day-81113.html</link>	
		<pubDate>Thu, 28 May 2026 05:25:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/8-morning-mistakes-that-ruin-your-entire-day-81113.html</guid>
		            
			

    	<description><![CDATA[Morning Habits: காலைப்பொழுது நாம் அன்றைய நாளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கிய தருணமாகும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் செய்யும் சில தவறான பழக்கவழக்கங்கள், அன்றைய நாள் முழுவதையும் சோர்வாகவும் மன அழுத்தம் நிறைந்ததாகவும் மாற்றிவிடுகின்றன. ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு, தூங்கி எழுந்தவுடன் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி காணலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-18.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எழுந்தவுடன் இதை மட்டும் செய்யாதீங்க! சுறுசுறுப்பான நாளுக்கான சீக்ரெட்!" /></figure>காலையில் அலாரத்தை ஸ்னூஸ் செய்து மீண்டும் தூங்குவது நாள் முழுவதும் மந்தநிலையையும் தலைவலியையும் ஏற்படுத்தும். எழுந்தவுடனேயே மொபைல் போன் பார்ப்பது மூளையில் தேவையற்ற பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது.வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பது அமிலத்தன்மையை அதிகரித்து செரிமான மண்டலத்தைப் பாதிக்கும்.படுக்கையை ஒழுங்குபடுத்தாமல் விடுவது அன்றைய நாளின் நேர்மறை எண்ணங்களையும் ஒழுக்கத்தையும் குறைக்கும்.உடலை லேசாக வளைத்து நீட்டாமல் (Stretching) திடீரென வேகமாக எழுவது தசைப்பிடிப்பிற்கு வழிவகுக்கும்.இருண்ட அறையிலேயே நேரத்தைக் கழிப்பது தூக்க ஹார்மோனைத் தூண்டி சோர்வை நீடிக்கச் செய்யும். காலை உணவைத் தவிர்ப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து கடுமையான சோர்வை ஏற்படுத்தும்.

1. அலாரத்தை 'ஸ்னூஸ்' (Snooze) செய்வதை தவிர்க்கவும்

காலையில் அலாரம் அடித்தவுடன் உடனே எழாமல், 'இன்னும் ஒரு ஐந்து நிமிடம் தூங்கலாம்' என்று ஸ்னூஸ் பொத்தானை அழுத்துவது பலரது வழக்கம். ஆனால், இவ்வாறு செய்வதால் உடல் மீண்டும் ஒரு புதிய தூக்க சுழற்சிக்குள் (Sleep cycle) நுழைய முயல்கிறது. அந்த குறுகிய நேரத் தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தராமல், நாள் முழுவதும் ஒருவித மந்தநிலையையும், தலைவலியையும் மட்டுமே பரிசாக அளிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2. எழுந்தவுடன் மொபைல் போனை பார்ப்பதை நிறுத்தவும்

கண்களைத் திறந்தவுடனேயே வாட்ஸ்அப், முகநூல் அல்லது மின்னஞ்சல்களைப் பார்க்கும் பழக்கம் இன்று பரவலாகக் காணப்படுகிறது. காலையிலேயே மற்றவர்களின் செய்திகளையும், எதிர்மறையான செய்திகளையும் பார்ப்பது மூளையில் தேவையற்ற பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் (Cortisol spike) உருவாக்குகிறது. இது உங்களின் அன்றைய நாள் திட்டமிடலையும், கவனச்சிதறலையும் பெருமளவில் பாதிக்கும்.

3. வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்க வேண்டாம்

காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு கப் காபி அல்லது டீ குடித்தால் தான் பலருக்கு சுறுசுறுப்பே வரும். ஆனால், வெறும் வயிற்றில் காஃபின் (Caffeine) உட்கொள்வது வயிற்றில் அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து, செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். மேலும், இது உடலின் இயற்கையான ஆற்றல் சுரப்பியான கார்டிசோலின் அளவை சீர்குலைத்து, உங்களை காபியைச் சார்ந்தே வாழும் நிலைக்குத் தள்ளிவிடும்.

4. படுக்கையை அப்படியே போட்டுவிட்டு செல்லாதீர்கள்

தூங்கி எழுந்தவுடன் உங்கள் படுக்கையை உடனே ஒழுங்குபடுத்தி வைப்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், உளவியல் ரீதியாக இது அன்றைய நாளின் முதல் வெற்றிகரமான கடமையாகக் கருதப்படுகிறது. படுக்கையைச் சுருட்டி, அறையை சுத்தமாக வைப்பது மூளைக்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையை அனுப்பி, உங்களை ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் செயல்படத் தூண்டுகிறது.

5. உடலை வளைத்து நீட்டாமல் (Stretching) திடீரென எழாதீர்கள்

இரவு முழுவதும் ஓய்வில் இருந்த உடலின் தசைகளும், மூட்டுகளும் காலையில் சற்று இறுக்கமாக இருக்கும். படுக்கையில் இருந்து திடீரென வேகமாக எழுந்து ஓடுவது தசைப்பிடிப்பு மற்றும் தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கும். எனவே, எழுந்தவுடன் படுக்கையிலேயே லேசான ஸ்ட்ரெச்சிங் (Stretching) செய்து, உடலைத் தயார்படுத்திய பின்பே அன்றாட வேலைகளைத் தொடங்க வேண்டும்.

6. இருண்ட அறையிலேயே நேரத்தைக் கழிக்காதீர்கள்

காலையில் எழுந்த பிறகும் ஜன்னல் திரைகளை மூடிக் கொண்டு, இருண்ட அறையிலேயே இருப்பது உடலின் மெலடோனின் (Melatonin) என்ற தூக்க ஹார்மோனைத் தொடர்ந்து சுரக்கச் செய்யும். இதனால் தூக்கக் கலக்கம் நீங்காது. எழுந்தவுடன் ஜன்னல்களைத் திறந்து, இயற்கையான சூரிய ஒளி அறPostக்குள் வர அனுமதிப்பது உடலையும் மனதையும் விழிப்படையச் செய்ய உதவும்.

7. தியானம் அல்லது அமைதியைத் தவிர்க்க வேண்டாம்

காலை நேரத்தின் முதல் அரை மணி நேரம் மிகவும் அமைதியானதும், ஆற்றல் வாய்ந்ததுமாகும். இந்த நேரத்தில் சத்தம் போடுவது, சண்டை போடுவது அல்லது அவசர அவசரமாக வேலைகளைச் செய்வது மன அமைதியைக் கெடுக்கும். குறைந்தபட்சம் 5 முதல் 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதோ அல்லது அன்றைய நாளுக்கான நேர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதோ அவசியம்.

8. காலை உணவைத் தவிர்க்கும் தவறைச் செய்யாதீர்கள்

இரவு உணவிற்குப் பிறகு சுமார் 8 முதல் 10 மணி நேர இடைவெளிக்குப் பிறகு உடலுக்குக் கிடைக்கும் முதல் எரிபொருள் காலை உணவு தான். உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரிலோ அல்லது நேரமின்மை காரணமாகவோ காலை உணவைத் தவிர்ப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் (Metabolism) குறைத்து, சர்க்கரை அளவை பாதிக்கும். இது மதிய நேரத்தில் அதிக பசியையும், சோர்வையும் ஏற்படுத்தும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொசுக்களை விரட்டும் பூண்டு: இனப்பெருக்கத்தைத் தடுக்கும் புதிய கண்டுபிடிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/garlic-disrupts-mosquito-reproduction-by-targeting-taste-receptors-81149.html</link>	
		<pubDate>Wed, 27 May 2026 23:17:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/garlic-disrupts-mosquito-reproduction-by-targeting-taste-receptors-81149.html</guid>
		            
			

    	<description><![CDATA[Garlic Disrupts Mosquito: யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பூண்டு கொசுக்களின் இனப்பெருக்கத்தையே முற்றிலும் முடக்கும் ஆற்றல் கொண்டது என்பதை ஒரு புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்; பூண்டின் கடுமையான வாசனை கொசுக்களை விரட்டுவதாக நம்பப்பட்ட நிலையில், அதன் சுவையே கொசுக்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/garlic-kill.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொசுக்களை விரட்டும் பூண்டு: இனப்பெருக்கத்தைத் தடுக்கும் புதிய கண்டுபிடிப்பு!" /></figure>உலகம் முழுவதும் கொசுக்களினால் ஏற்படும் நோய்களும், அவற்றின் பெருக்கமும் பெரும் சவாலாக விளங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொசுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக, பூண்டு மனிதர்களுக்குப் பல்வேறு மருத்துவ நன்மைகளைத் தருகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது கொசுக்களின் இனப்பெருக்கத்தையே முடக்கும் ஆற்றல் கொண்டது என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அறிவியல் இதழான 'செல்' (Cell) என்பதில் வெளியாகியுள்ளன.
<h3>இனப்பெருக்கத்தைத் தடுக்கும் ரகசியம்: வாசனை அல்ல, சுவைதான் காரணம்!</h3>
பூண்டின் கடுமையான வாசனைதான் கொசுக்களை விரட்டுகிறது என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால், அது தவறு என்றும், பூண்டின் சுவையே கொசுக்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பூண்டில் உள்ள 'டயலில் டைசல்பைடு' (diallyl disulfide) என்ற வேதிப்பொருள், கொசுக்களின் சுவை உறுப்புகளில் உள்ள 'TrpA1' என்ற ஏற்பியை (receptor) தூண்டுகிறது. இந்தத் தூண்டுதல் காரணமாக, குறிப்பாக பெண் கொசுக்களுக்குத் தங்களுக்கு வயிறு நிறைந்துவிட்டது போன்ற ஒரு போலி உணர்வு (satiety) ஏற்படுகிறது. இதனால், அவை பிற கொசுக்களுடன் இணை சேருவதிலும், முட்டையிடுவதிலும் முற்றிலும் ஆர்வத்தை இழக்கின்றன.
<h3>ஆய்வகச் சோதனை: பூண்டு விழுதால் முடக்கப்பட்ட கொசுக்கள்</h3>
ஆராய்ச்சியாளர்கள் பழ ஈக்கள் மற்றும் ஏடிஸ் கொசுக்களைக் கொண்டு இந்தச் சோதனையை நடத்தினர். பூண்டு விழுது வைக்கப்பட்டிருந்த சோதனைத் தட்டுகளில் இருந்த கொசுக்கள் மற்றும் ஈக்களின் இனப்பெருக்க நடவடிக்கை முற்றிலும் முடங்கியதை அவர்கள் கவனித்தனர். அதே நேரத்தில், கொசுக்கள் பூண்டை சுவாசிக்க மட்டும் அனுமதித்து, சுவைக்க முடியாதவாறு வலை அமைக்கப்பட்டபோது, அவை வழக்கம்போல 80 சதவீதம் வரை இனப்பெருக்கம் செய்தன. இதிலிருந்து, பூண்டின் வாசனையை விட அதன் சுவையே கொசுக்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதிக்கிறது என்பது உறுதியானது.
<h3>இயற்கையான கொசு ஒழிப்பு: எதிர்காலத்திற்கான எளிய தீர்வு</h3>
டெங்கு, சிக்கன்குனியா மற்றும் ஜிகா போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்த இந்த ஆய்வு பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போதைய சூழலில் சந்தையில் கிடைக்கும் ரசாயனக் கொசு விரட்டிகள் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளன. ஆனால், பூண்டில் உள்ள இந்த இயற்கை வேதிப்பொருளைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், பாதுகாப்பான மற்றும் சூழலுக்கு உகந்த கொசு ஒழிப்புத் திட்டங்களை உருவாக்க முடியும் என்று யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் கார்ல்சன் தெரிவித்துள்ளார். இந்த எளிய வீட்டு உபயோகப் பொருள், எதிர்காலத்தில் உலகளாவிய கொசு ஒழிப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நன்றாகத் தூங்கணுமா? அப்போ இந்த ‘மேஜிக்’ பருப்பை மறந்துடாதீங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/the-natural-secret-to-deep-sleep-and-ultimate-brain-health-80933.html</link>	
		<pubDate>Wed, 27 May 2026 06:02:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/the-natural-secret-to-deep-sleep-and-ultimate-brain-health-80933.html</guid>
		            
			

    	<description><![CDATA[தினசரி பாதாம் பருப்பை சாப்பிடுவதால் அதில் உள்ள மெலடோனின் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இரவு நேரத்தில் இடையூறில்லாத ஆழ்ந்த உறக்கத்தை இயற்கையாகவே வரவழைக்கின்றன. பாதாமானது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் 'டிரிப்டோபன்' அமினோ அமிலத்தின் செயல்பாட்டை ஊக்குவித்து தூக்கமின்மை பிரச்சினையை முற்றிலும் தீர்க்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/badam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நன்றாகத் தூங்கணுமா? அப்போ இந்த ‘மேஜிக்’ பருப்பை மறந்துடாதீங்க!" /></figure>இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில், மனிதர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று முறையற்ற தூக்கமின்மை ஆகும். இதற்கு இயற்கை தந்துள்ள மிகச்சிறந்த தீர்வுகளில் ஒன்றாக பாதாம் பருப்பு விளங்குகிறது. பகல் வேளைகளிலோ அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாகவோ ஒரு சில பாதாம் பருப்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைக்கின்றன. இது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் சீராக்குவதுடன், உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியையும் நாள் முழுவதும் தக்க வைக்க பெரிதும் உதவுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
<h3>மெலடோனின் மற்றும் மெக்னீசியத்தின் அற்புதம்:</h3>
மனித உடலின் தூக்க சுழற்சியைக் கட்டுப்படுத்துவதில் 'மெலடோனின்' எனப்படும் ஹார்மோன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பாதாம் பருப்பில் இந்த மெலடோனின் ஹார்மோன் மற்றும் தூக்கத்தை இயற்கையாகவே தூண்டக்கூடிய 'மெக்னீசியம்' தாது உப்பும் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. தினசரி பாதாமை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இந்த சத்துக்கள் அனைத்தும் நேரடியாக உடலால் உறிஞ்சப்பட்டு, இரவு நேரத்தில் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாத, மிகவும் ஆழமான மற்றும் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. மாத்திரைகளின் துணையின்றி இயற்கையான முறையில் தூக்கத்தை வரவழைக்க இதுவொரு மிகச்சிறந்த வழியாகும்.
<h3>மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் அமைதி:</h3>
பாதாம் பருப்பானது மனித மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது. இதில் உள்ள மருத்துவக் குணங்கள், உடலில் 'டிரிப்டோபன்' (Tryptophan) எனப்படும் அத்தியாவசிய அமினோ அமிலத்தின் செயல்பாட்டை கணிசமாக ஊக்குவிக்கின்றன. இந்த டிரிப்டோபன் அமினோ அமிலம் நரம்புகளைத் தளர்த்தி, மூளையை அமைதிப்படுத்துவதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக, நள்ளிரவில் திடீரென தூக்கம் தடைபடுவது மற்றும் தூக்கக் கலக்கம் போன்ற இன்னல்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் சாத்தியமாகிறது.
<h3>மஞ்சள் மற்றும் குங்குமப்பூ கலந்த பாலின் நன்மைகள்:</h3>
பாதாம் பருப்பைப் போலவே, இரவு நேரத்தில் நல்ல உறக்கத்தைத் தருவதில் பாலுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இருப்பினும், வெறும் பாலை மட்டும் பருகுவதை விட, பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகுவது இரட்டிப்பு பலனைத் தரும். இந்த கூட்டு கலவையானது உடலில் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் சோர்வு நீங்கி, நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று மிக எளிதாகத் தூக்கம் வரத் தொடங்குகிறது.
<h3>ஆரோக்கியமான வாழ்வியலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும்:</h3>
தினசரி உடற்பயிற்சி, யோகாசனம் மற்றும் நடைப்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுபவர்கள், இரவு நேரத்தில் இந்த மஞ்சள் மற்றும் குங்குமப்பூ கலந்த பாலைத் தொடர்ந்து பருகி வரும்போது, அவர்களின் தூக்கத்தின் தரம் வியக்கத்தக்க வகையில் உயர்கிறது. எந்தவிதமான மன அழுத்தமும் இன்றி, இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும்போது உடல் மற்றும் மனம் இரண்டுமே மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவதை உணர முடியும். எனவே, செயற்கை மாத்திரைகளைத் தவிர்த்து, இதுபோன்ற இயற்கை உணவுகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மறதி பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா? மூளையை கூர்மையாக்கும் எளிய வழிகள் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/best-hobbies-to-keep-your-brain-sharp-and-active-80923.html</link>	
		<pubDate>Wed, 27 May 2026 05:30:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/best-hobbies-to-keep-your-brain-sharp-and-active-80923.html</guid>
		            
			

    	<description><![CDATA[Brain Health: புத்தகம் படித்தல், இசை கற்றல், சதுரங்கம் போன்ற சிந்தனை விளையாட்டுகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. புதிய திறன்கள் மற்றும் மொழிகளை கற்றுக்கொள்வது நினைவாற்றல் மற்றும் கவன திறனை மேம்படுத்தும். நடைபயிற்சி, தோட்டப் பணி போன்ற செயல்கள் மன அமைதியையும் சிந்தனை தெளிவையும் அதிகரிக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-13-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மறதி பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா? மூளையை கூர்மையாக்கும் எளிய வழிகள் இதோ!" /></figure>உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மூளைக்கும் தொடர்ந்து சவால்கள் மற்றும் புதிய அனுபவங்கள் தேவைப்படுகின்றன. தினசரி ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களில் மட்டுமே சிக்கிக் கொண்டால், சிந்தனை திறன் மந்தமாகும் அபாயம் இருப்பதாக நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும், சிந்திக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுவதும் மூளையின் செயற்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
<h3>புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடலின் சக்தி</h3>
புத்தகம் படிப்பது வெறும் பொழுதுபோக்கல்ல; அது நினைவாற்றல், கவன திறன் மற்றும் கற்பனை ஆற்றலை வளர்க்கும் ஒரு சிறந்த பழக்கமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக படித்த விஷயங்களை மற்றவர்களுடன் விவாதிப்பது, மூளைக்கு கூடுதல் சிந்தனைத் தூண்டுதலை தருகிறது. புத்தக வாசிப்பு மூலம் புதிய பார்வைகள் உருவாகும் என்பதால், மன அழுத்தத்தையும் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
<h3>இசை, நடனம் மற்றும் புதிய திறன்கள் மூளையை புத்துணர்ச்சியடையச் செய்கின்றன</h3>
ஒரு இசைக்கருவி கற்றுக்கொள்வது அல்லது நடனம் பழகுவது, உடலும் மூளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக இசை பயிற்சி நினைவாற்றல், கவனம் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல் புதிய மொழி கற்றல் அல்லது புதிதாக ஒரு திறனை முயற்சிப்பது, மூளையில் புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
<h3>விளையாட்டுகள் மற்றும் சிந்தனைச் செயல்களின் முக்கியத்துவம்</h3>
சதுரங்கம், சுடோகு, வார்த்தை விளையாட்டுகள் போன்றவை வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் மூளைக்கான உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகின்றன. இவை பிரச்சினைகளை தீர்க்கும் திறன், முன்கூட்டிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. தினசரி சிறிய அளவிலாவது இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுவது, கவன சிதறலை குறைத்து நினைவாற்றலை வலுப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
<h3>இயற்கை மற்றும் சமூக உறவுகளும் மூளைக்கு மருந்தே</h3>
வீட்டிற்குள் மட்டுமே இருப்பதை விட இயற்கையில் நேரம் செலவிடுவது, மன அமைதியையும் சிந்தனைத் தெளிவையும் தருகிறது. நடைபயிற்சி, தோட்டப் பணிகள் அல்லது சமூக சேவை போன்ற செயல்கள் மன நலத்தையும், மூளையின் செயற்பாட்டையும் மேம்படுத்தும். குறிப்பாக பிறருடன் கலந்துரையாடல் மற்றும் சமூக உறவுகள் தனிமையை குறைத்து மன உறுதியை அதிகரிக்க உதவுகின்றன.
<h3>மூளை கூர்மையாக இருக்க ரகசியம் இதுதான்</h3>
மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகப் பெரிய ரகசியம், “புதியதை தொடர்ந்து முயற்சிப்பது” என நிபுணர்கள் கூறுகின்றனர். சற்றே சவாலாக இருக்கும் செயல்களில் ஈடுபடும்போது, மூளை புதிய இணைப்புகளை உருவாக்கி மேலும் வலுவடைகிறது. அதனால் வயது எதுவாக இருந்தாலும், புதிய பொழுதுபோக்குகளை தொடங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கண்ணை பறிக்கும் கனிகளின் சங்கமம்.. குன்னூரில் நாளை தொடங்குகிறது பழக்கண்காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html</link>	
		<pubDate>Tue, 26 May 2026 13:53:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html</guid>
		            
			    	<description><![CDATA[Coonoor Sims Park Fruit Exhibition: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை பல்வேறு வகையான பழ கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியானது வருகிற மே 30- ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kunnur-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kunnur 3" /></a></dt><p>தமிழகத்தில்  தற்போது  கோடை காலம் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர்.  அந்த வகையில்,  நீலகிரி மாவட்டத்தில்  ஏராளமான சுற்றுலா பயணிகள்  குவிந்திருந்து  சுற்றி பார்த்து வருகின்றனர்.  இந்த சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி,  ரோஜா கண்காட்சி,  பழவகை கண்காட்சி,  வாசனை திரவிய கண்காட்சி மற்றும் படகு அணிவகுப்பு போட்டிகள் உள்ளிட்டவை  நடத்தப்பட்டு வருகின்றன.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kunnur-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kunnur 5" /></a></dt><p>இந்த நிலையில்,  குன்னூர்  சிம்ஸ் பூங்காவில் தோட்டக் கலைத்துறை சார்பில் நாளை  புதன்கிழமை (  மே 27- ஆம் தேதி)  பழ  கண்காட்சி  தொடங்க உள்ளது.  இதில்,  பல்வேறு வகையான  வண்ண மலர்களால்   வன விலங்குகளான  யானை, பெரிய வகை டைனோசர், சிறிய வகை டைனோசர், டைனோசர் முட்டை,  ஒட்டகம்,  கொரில்லா குரங்கு,  முதலை,  நாரை,  கொக்கு, வாத்துகள்  உள்ளிட்ட  உருவங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kunnur-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kunnur 1" /></a></dt><p>இதே போல, பல்வேறு வகையான பழ வகைகளால்  உயிரினங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த உருவங்கள் அனைத்தும்  சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வகையிலான வண்ண வண்ண மலர்கள் வளர்க்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பல்வேறு வடிவமைப்புகளை  காட்சிப்படுத்துவதற்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த கண்காட்சியானது  வருகிற மே 30- ஆம் தேதி (  சனிக்கிழமை)  வரை நடைபெற உள்ளது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kunnur-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kunnur 2" /></a></dt><p>ஏற்கனவே  ஊட்டி ரோஜா பூங்காவில்  கடந்த மே 14- ஆம் தேதி  முதல் 18-  ஆம் தேதி வரை  ரோஜா கண்காட்சி நடைபெற்றது.  இதை தொடர்ந்து,  காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.  மேலும்,  ஊட்டி  அரசு தாவரவியல் பூங்காவில் 128-  ஆவது மலர் கண்காட்சி  நடத்தப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக  தற்போது குன்னூர் சிம்ஸ்  பூங்காவில் 66-  ஆவது மலர்கள் மற்றும் பழ வகைகள்  கண்காட்சி  தொடங்கி நடைபெற உள்ளது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/fruit-exhibition-to-begin-tomorrow-at-sims-park-coonoor-nilgiris-district-photo-gallery-80848.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kunnur-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kunnur 4" /></a></dt><p>சுமார் 4  நாட்கள் நடைபெறும் இந்த பழ  கண்காட்சியை  சுற்றுலா பயணிகளும்,  பொதுமக்களும்  கண்டு களித்து  மகிழலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பழ கண்காட்சிக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீலகிரி  மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி  பவ்யா  தண்ணீரு  தெரிவித்துள்ளார். நீலகிரியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த பழ கண்காட்சியை கண்டு கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் தலைகள் தென்பட்ட வண்ணாக உள்ளது.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>டிஎன்ஏ சொன்ன ரகசியம்: வம்சத்தின் உண்மையான வேர் பெண்களே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/women-not-men-carry-forward-the-human-lineage-through-mitochondrial-dna-80783.html</link>	
		<pubDate>Tue, 26 May 2026 12:25:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/women-not-men-carry-forward-the-human-lineage-through-mitochondrial-dna-80783.html</guid>
		            
			

    	<description><![CDATA[Maternal Inheritance: வம்சத்தை மகன்கள் தான் கடத்துகிறார்கள் என்ற பழங்கால நம்பிக்கையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு முற்றிலும் உடைத்துள்ளது. மனிதனின் மிகப்பழமையான 'மிட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ' தாயிடமிருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கடத்தப்படுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மகள்கள் மட்டுமே இந்த வம்சாவளி மரபணுவைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் ஆவர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-8-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டிஎன்ஏ சொன்ன ரகசியம்: வம்சத்தின் உண்மையான வேர் பெண்களே!" /></figure>பல நூற்றாண்டுகளாக மகன்கள் தான் வம்சாவளியையும் இரத்தவழியையும் கடத்துகிறார்கள் என்ற வலுவான சமூக நம்பிக்கை நிலவி வருகிறது. ஆனால் மனித இனத்தின் மிகப்பழமையான மரபணுத் தொடரான 'மிட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ' (Mitochondrial DNA) தாயிடமிருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது. இந்தத் தனித்துவமான மரபணுத் தொடரானது தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு ஒருபோதும் கடத்தப்படுவதில்லை என அறிவியல் கூறுகிறது. தாயிடமிருந்து இந்த மரபணுவை ஆண் மற்றும் பெண் என இருபாலினக் குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறார்கள். இருப்பினும், தாயிடமிருந்து மரபணுவைப் பெறும் மகன்களால் அதனை அவர்களின் அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியாது. மாறாக, மகள்கள் மட்டுமே இந்த மரபணுத் தொடரைத் தங்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். வம்சத்தைக் கடத்துவதில் ஆண்களை விட பெண்களே முதன்மைப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
<h3>வம்சாவளி கடத்தலில் உடையும் பழங்கால கட்டுக்கதை: புதிய அறிவியல் உண்மை!</h3>
பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தில் ஒரு குடும்பத்தின் வம்சாவளியையும், இரத்தவழியையும் மகன்கள் மட்டும்தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்கிறார்கள் என்ற ஒரு வலுவான நம்பிக்கை நிலவி வருகிறது. வாரிசு என்றாலே அது ஆண் பிள்ளைதான் என்ற இந்த ஆணாதிக்கச் சிந்தனை, கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மனிதர்களிடையே ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் இந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைக்கும் விதமாக, தற்போதைய நவீன அறிவியல் ஆய்வுகள் ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளன.
<h3>மிட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ (Mitochondrial DNA) மற்றும் தாயின் பங்கு!</h3>
மனித இனத்தின் மிகப்பழமையான மரபணுத் தொடராகக் கருதப்படுவது மிட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ (Mitochondrial DNA) ஆகும். இந்தத் தனித்துவமான மரபணுத் தொடரானது, தந்தையிடமிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படுவதில்லை; மாறாக, இது தாயிடமிருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் அறிவியல் உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குடும்பத்தின் உண்மையான மற்றும் தூய்மையான இரத்தவழித் தொடர்ச்சி என்பது ஆண்களிடமிருந்து அல்ல, பெண்களிடமிருந்துதான் தொடங்குகிறது என்பதும், அவர்களே அதைத் சுமந்து செல்கிறார்கள் என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
<h3>அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் மகள்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வுத் தகவல்!</h3>
தாயிடமிருந்து இந்த மிட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ ஆண், பெண் என இருபாலினக் குழந்தைகளுக்கும் கடத்தப்பட்டாலும், அதில் ஒரு மிக முக்கியமான நுணுக்கம் உள்ளது. தாயிடமிருந்து இந்த மரபணுவைப் பெறும் மகன்களால், அதனைத் தங்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளுக்குக் கடத்த முடியாது. மாறாக, மகள்கள் மட்டுமே இந்த மிட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வை தங்களின் அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் (Cambridge University) அதிநவீன ஆய்வுத் தகவல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே, "வம்சத்தை ஆண்கள் கடத்தவில்லை; பெண்கள்தான் கடத்துறாங்க!" என்ற உண்மை இதன் மூலம் உலகிற்குத் தெள்ளத்தெளிவாகப் பறைசாற்றப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>