நோ தியேட்டர்… நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் படம்!

Actress Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உப்பு புளி காரம் என்ற கீர்த்தி சுரேஷின் படம் ஜூலை மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோ தியேட்டர்... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் படம்!

உப்பு புளி காரம்

Published: 

16 Jun 2025 15:44 PM

 IST

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள படம் உப்பு கப்புறம்பு (Uppu Kappurambu). இயக்குநர் அனில் இயக்கியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க நடிகர் சுஹாஸ் நாயகனாக நடித்துள்ளார். இவர்கள் உடன் இணைந்து நடிகர்கள் பாபு மோகன், சத்ரு, தல்லூரி ராமேஸ்வரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எல்லானார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராதிகா லாவு தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள உப்பு கப்புறம்பு படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகின்றது. இதனால் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகரக்ளிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

உப்பு கப்புறம்பு படத்தின் வெளியீடு குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட பதிவு:

மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் காணக் கிடைக்கும் என்றும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூட நம்பிகையில் 90களில் இருக்கும் கிராம மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக இந்தியில் பேபி ஜான் படம் வெளியான பிறகு எந்தப் படமும் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் இந்தப் படத்தில் அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உப்பு கப்புறம்பு படம் குறித்து இயக்குநரின் பேச்சு:

இந்தப் படம் குறித்து இயக்குநர் அனில் பேசியபோது 90-களில் வாழ்ந்த கிராம மக்கள் தங்களின் வாழ்க்கையில் பல அசாதாரண நம்பிக்கையை கடைபிடித்து வர்ந்தனர். அதனை சுற்றி இருந்த மூட நம்பிக்கைகள் மற்றும் காமெடியை மையமாக வைத்து இந்த உப்பு கப்புறம்பு படம் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக சில சீரியசான விசயங்களை கூறியிருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
லெவன் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் அதிகம் பார்த்து இருந்தால் மகிழ்ந்து இருப்பேன் – நடிகர் நவீன் சந்திரா
இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் நடிகரானேன் – பேசில் ஜோசஃப்
Jana Nayagan: ஒரு பேரே வரலாறு… வெளியானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட 2வது பாடல்!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?