விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஓவர்? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie: நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஓவர்? வைரலாகும் தகவல்

எச்.வினோத் மற்றும் விஜய்

Published: 

03 Jun 2025 13:14 PM

நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் அவர் இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். நடிகர் விஜயின் கடைசிப் படத்தை யார் இயக்க உள்ளது என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைக்க உள்ளதாகவும் அப்டேட்கள் தொடர்ந்து வெளியானது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகின்றது. தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான இது தற்போது தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியான போது கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் ஒரு ட்ரிபியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான படங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் கண் கலங்குவது இணையத்தில் வைரலானது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட பதிவு:

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைப்பெற்றது. அதில் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை பூகா ஹெக்டே விஜய்க்கு நாயகியாக நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜன நாயகன் படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ, வரலட்சுமி சரத்குமார், மோனிஷா பிளெஸ்ஸி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜயின் இறுதிப் படனமான இது அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரயரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் படப்பிடிப்பின் இறுதி நாள் அன்று படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் படக்குழு இதுவரை இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.