அடுத்த மாதம் சூர்யாவின் பிறந்த நாளில் விருந்து காத்திருக்கிறது – ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்
RJ Balaji About Karuppu Movie: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யாவின் 45-வது படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நாளை சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கின்றது என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி, சூரியா
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதன்படி படத்திற்கு கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தலைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது பிறந்த நாளிற்கு நீங்கள் அனைவரும் கூறிய வாழ்த்துகளுக்கு நன்றி. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டதற்கு நீங்கள் அனைவரும் வரவேற்பைப் அளித்ததற்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் பிறந்த நாளில் காத்திருக்கும் விருந்து:
மேலும் அதே பதிவில் அடுத்த மாதம் ஒரு சிறப்பான நாளில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருந்தார். அதன்படி அடுத்த மாதம் ஜூலை 23-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அன்று கருப்பு படத்தில் இருந்து மிகப் பெரிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அந்த அப்டேட் படத்தின் ரிலீஸ் குறித்து இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் ஆர்.ஜே.பாலஜியின் எக்ஸ் தள பதிவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you ❤️ #Karuppu 🔥 pic.twitter.com/ODpNxq54f8
— RJ Balaji (@RJ_Balaji) June 21, 2025
சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கருப்பு படம்:
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்டோ. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் தனது 45-வது படத்திற்காக கூட்டணி வைத்தார் நடிகர் சூர்யா.
அந்தப் படத்திற்கு தற்போது கருப்பு என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். முன்னதாக பேட்டி ஒன்றில் இந்தப் படம் ஒரு பண்டிகை நாளில் தான் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.