அல்லு அர்ஜுன் இல்லை… அந்த பாலிவுட் நடிகர் தானாம்… பேசில் ஜோசஃப் அடுத்ததாக இயக்க உள்ள நடிகர் யார்?
Basil Joseph: மலையாள சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என மாறி மாறி பணியாற்றி ரசிகர்களை தன்வசம் கட்டி வைத்துள்ளார் பேசில் ஜோசஃப். இவர் அடுத்ததாக ஒரு சூப்பர் ஹீரோ கதையை இயக்க உள்ளார் என்றும் அதில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிப்பார் என்றும் சினிமாவில் வதந்திகள் பரவியது.

பேசில் ஜோசஃப்
மலையாள சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முதக் தன்மை கொண்டவராக வலம் வருபவர் பேசில் ஜோசஃப் (Basil Joseph). இவர் படங்களை இயக்குவதை விட தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேசில் ஜோசஃப் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை (Allu Arjun) வைத்து படம் இயக்க உள்ளதாக வதந்தி இணையத்தில் பரவியது. தற்போது அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி உடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் அடுத்ததாக பேசில் ஜோசஃப் உடன் இணைந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பேசில் ஜோசஃப் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளார்.
சக்திமானாக நடிக்கும் நடிகர் ரன்வீர் சிங்:
இயக்குநர் பேசில் ஜோசஃப் 90களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சக்திமான் சீரியலை படமாக எடுக்க உள்ளதாகவும் அதில் முன்னதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அதில் இருந்து நடிகர் ரன்வீர் சிங் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் வதந்திகள் இணையத்தில் பரவியது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதகாம இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசஃப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் சக்திமான் கதை படமாக்கப்பட்டால் அது நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து மட்டுமே எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
மின்னல் முரளியை இயக்கிய பேசில் ஜோசஃப்:
இந்திய சினிமா வரலாற்றில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் மின்னல் முரளி. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசஃப் தான் இயக்கி உள்ளார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இருவருக்கு மழை நாளில் மின்னல் தாக்குகிறது. இதில் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்யும் நபராகவும் மற்றொருவர் அவரின் சுய நலத்திற்காகவும் வாழ்கிறார்கள். அதில் நல்லது செய்யும் நபராக நடிகர் டொவினோ தாமசும் சுய்நலமாக இருப்பவராக குரு சோம சுந்தரமும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவது பல விருதுகளைப் பெற்றுக் குவித்தது. இதனைத் தொடர்ந்து பல மொழிகளிலும் நடிகர்கள் பேசில் ஜோசஃப் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.