Kamal Haasan : ‘கமல்ஹாசனுக்கு மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ’- கர்நாடகா உயர்நீதிமன்றம் கேள்வி!

Karnataka High Court : தென்னிந்திய சினிமாவில் சில நாட்களாகக் கமல்ஹாசன் மற்றும் கன்னட மொழி தொடர்பான பிரச்சனைகள் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவில், தக் லைஃப் பட வெளியீட்டிற்குத் தடை செய்யப்பட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்தார். இதில் கமலிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறப்பட்ட நிலையில், அவர் அதை மறுத்துள்ளார்.

Kamal Haasan : கமல்ஹாசனுக்கு மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ- கர்நாடகா உயர்நீதிமன்றம் கேள்வி!

நடிகர் கமல் ஹாசன்

Published: 

03 Jun 2025 17:46 PM

நடிகர் கமல்ஹாசன் (Kamal Hasan)  தக் லைஃப் (Thug Life)  திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், கன்னட மொழியைப் பற்றி தவறாகப் பேசியதாக கடந்த சில நாட்களாகச் சர்ச்சை வெடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தக் லைஃப் படமானது கர்நாடகாவில் (Karnataka) வெளியானால் திரையரங்குகளைக் கொளுத்துவோம் என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருக்கிற தடையை நீக்கக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் (Karnataka High Court) வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது இன்று 2025, ஜூன் 3ம் தேதியில் நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் கமல்ஹாசனிடம் சரமாரியாகப் பல கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் அவரிடம் கன்னட மொழியைப் பற்றி அவதூறாகப் பேசியது குறித்து மன்னிப்பு (apology) கேட்குமாறு உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கமல்ஹாசன் நான் சொன்ன கருத்து மக்களுக்குத் தவறாகச் சென்றுள்ளது என வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். அந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு என்று கூறவில்லை. இதை தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, கமல்ஹாசனுக்கு ஒரு மன்னிப்பு கேட்பதில் என்ன இவ்வளவு ஈகோ, மன்னிப்பு கேட்கச்சொன்னால் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறீர்கள். கன்னட மொழியை மதிக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் ஆனால், அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே என என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டிருந்த அறிக்கை :

 

கோலிவுட் சினிமாவில் மிகப் பிரபல நாயகனாக இருப்பவர் நாயகன் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் முன்னணி நடிகர் சிலம்பரசனும் முக்கிய நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு, கடந்த 2025, மே 24 ம் தேதியில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்னன், அசோக் செல்வன் , கன்னட நடிகர் சிவராஜ்குமார் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன், “தமிழிருந்துதான் கன்னட மொழி பிறந்தது” என்று கூறியிருந்தார். அது கர்நாடகா மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து தக் லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது இன்று, 2025, ஜூன் 3ம் தேதியில் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்ட நிலையிலும், கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இது குறித்து உயர் நீதிமன்றம் கமலிடம், மன்னிப்பு கேட்பதில் என் ஈகோ என்று கேள்வியை எழுப்பியுள்ளது. இது தற்போது மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.