Director Ram: ஏழுகடல்..ஏழுமலை படம் தாமதம்.. இயக்குநர் ராம் சொன்ன காரணம்!
Ram About Yezhu Kadal Yezhu Malai Movie Release Delay : தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட திரைக்கதைகளைக் கொடுத்து படங்களை இயக்கியிருப்பவர் இயக்குநர் ராம். இவரின் இயக்கத்தில் கடந்த 2 வருடமாக வெளியாகாமல் இருக்கும் படம்தான் ஏழு கடல் ஏழு மலை. இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் பற்றி இயக்குநர் ராம் பேசியுள்ளார், அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

ராமின் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம்
மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் நடிகர் நிவின் பாலி (Nivin Pauly) . இவரின் முன்னணி நடிப்பில் உருவாகி ரிலீசாகாமல் இருக்கும் தமிழ்த் திரைப்படம்தான், ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai ) . இந்த படத்தை தமிழ் முன்னணி இயக்குநர் ராம் (Ram) இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி முன்னணி கதாநாயகனாக நடிக்க, நடிகை அஞ்சலி (Anjali) கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும் (Soori) நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் கதை ஒரு எலியை வைத்துத்தான் நகர்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாகவே வெளியாகியிருந்த நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இப்படமானது கடந்த 2023ம் ஆண்டிலே வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ராம். ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தாமதம் (Release Delay) பற்றியும், மேலும் இப்படம் எப்போது ரிலீசாகும் என்பதைப் பற்றியும் பேசியுள்ளார்.
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட பதிவு :
ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் குறித்து இயக்குநர் ராம் பேச்சு :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ராமிடம், ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குநர் ராம், “இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் விநியோகத்தால் இன்னும் தாமதமாகி வருகிறது. இப்படம் கடந்த 2025ம் மார்ச் மாதத்தில் வெளியாகியிருக்கவேண்டியது. மேலும் இப்படமானது இன்னும் 3 மாதங்களில் ரிலீஸாகும் என்று நினைக்கிறேன். இப்படத்தின் பட்ஜெட் அதிகமான நிலையில், ஓடிடிக்கு விற்பனை செய்தால்தான் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடமுடியும்.
மேலும் சிவாவின் “பறந்து போ” படத்தை ஒப்பிடும்போது, இந்த ஏழு கடல் ஏழு மலை படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்டது. மேலும் ஏழு கடல் ஏழு மலை படம் வெளியானால் நான் எப்படிப்பட்ட இயக்குநர் என அனைவருக்கும் தெரியும். அதை போல இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் நான் செதுக்கியிருக்கிறேன். மேலும் ஏழு கடல் ஏழு மலை படத்தின் வசனங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஒரு வெறித்தனமான படமாக இருக்கும்” என இயக்குநர் ராம் ஓபனாக பேசியுள்ளார்.