எனக்கு இந்தி தெரியாது… குபேரா பட விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு!

Actor Dhanush Viral Speech: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தில் இருந்து 3-வது பாடல் வெளியீட்டு இன்று விழா மும்பையில் இன்று நடைப்பெற்றது. அதில் நடிகர் தனுஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனக்கு இந்தி தெரியாது... குபேரா பட விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு!

நடிகர் தனுஷ்

Published: 

10 Jun 2025 20:24 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Actor Dhanush). இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று மும்பையில் குபேரா படத்தின் மூன்றாவது சிங்கிளை படக்குழு வெளியிட்டது.

வைரலாகும் குபேரா பட விழாவில் தனுஷ் பேச்சு:

விழாவில் பேச ஆரம்பித்த நடிகர் தனுஷ் அனைவருக்கும் தனது நன்றியை தமிழில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய நடிகர் தனுஷ் அதனை நிறுத்திவிட்டு எனக்கு இந்தி பேசத் தெரியாது. ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சம் தான் பேசுவேன் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குபேரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்ன மற்றும் சேகர் கம்முலா உங்களை இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்க என்ன செய்தார் என்று தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் குபேரா வெறும் அடுத்தப் படம் இல்லை. இது மிகவும் முக்கியமான படம் என்று தெரிவித்தார்.

என் மனதிற்கு மிகவும் நெறுக்கமான படமாக குபேரா உள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல அனுபவங்கள் எனக்கு கிடைத்தது. அதில் வித்தியாசமான அனுபவம் பல என்று தெரிவித்த நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் பல சிறந்த நல்ல நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ் நான் இதற்கு முன்பு எனது எந்த படத்திற்கு இப்படி அதிக அளவில் புரமோஷனுக்கு செல்ல மாட்டேன். இந்தப் படத்திற்கு வர காரணம் இது மிகவும் முக்கியமான படம் அதனால் தான் வருகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தில் பிச்சைகாரன் வேடத்தில் தான் நடித்ததாக தெரிவித்த நடிகர் தனுஷ் அந்த பாத்திரத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.