உலகின் மிகவும் அருவருப்பான பெண் என்று உலகம் அழைத்த மேரி அன் பெவன், தனது குழந்தைகளுக்கு மட்டும் உலகின் சிறந்த அம்மாவாக இருந்தார். லண்டனில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், பின்னர் நர்ஸாக வேலை செய்து, திருமணம் செய்து நான்கு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் 32 வயதில் அவருக்கு அக்ரோமேகலி என்ற அரிய நோய் ஏற்பட்டது. இதனால் அவரது முகமும் உடலும் மாறத் தொடங்கியது.