ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி.. காண முடியாதவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு
AR Rahman Show Controversy : கடந்த 2023 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காண முடியவில்லை என ரசிகர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் டிக்கெட் வாங்கியும் பார்க்க முடியாதவர்களுக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்க உத்தரவிட வேண்டும் என ஏசிடிசி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்
கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை (Chennai) கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் (A.R.Rahman) இசை நிகழச்சி மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என ரசிகர்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக டிக்கெட் வாங்கிய பலருக்கும் இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. விழா அரங்கில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் பார்க்க முடியாதவருக்கு ரூ.50,000 தர சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிக்கெட் இருந்தும் பார்க்க முடியாதவருக்கு ரூ.50, 000 இழப்பீடு
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடத்துவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் கனத்த மழை பெய்ததன் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாற்றாக செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. ஆக்ஸ்ட், 2025 மாதம் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியிருந்தவர்கள் டிக்கெட்டுடன் வந்து நிகழ்ச்சியை ரசிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலர் நிகழ்ச்சி அரங்குக்கு செல்ல தாமதமானது. இந்த நிலையில் நிகழ்ச்சி அரங்கில் போதுமான பார்க்கிங் வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்பட்ட நிலையில் வாகனங்கள் சாலையில் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனத்தின் பதிவு
Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn’t attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam
— ACTC Events (@actcevents) September 11, 2023
மேலும் டிக்கெட் எடுத்தவர்களுக்கு நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்கள், சிறுமிகள் உட்பட பலர் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் வாங்கியும் அனுமதி மறுக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அவர் மனு மீது நடத்தப்பட்ட விசாரணையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு டிக்கெட் எடுத்தவருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.