Rajinikanth: எனக்கு பேரிழப்பு.. மறைந்த நடிகர் ராஜேஷ் பற்றி ரஜினி நெகிழ்ச்சி!

Rajinikanth Pays Tribute To Actor Rajesh : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 2025, மே 29ம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து இவரது உடலுக்கு முதலமைச்சர் முதல் நடிகர்கள் பிறரும் வந்து அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் நேரில் வந்து ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Rajinikanth: எனக்கு பேரிழப்பு.. மறைந்த நடிகர் ராஜேஷ் பற்றி ரஜினி நெகிழ்ச்சி!

ரஜினிகாந்த் மற்றும் ராஜேஷ்

Published: 

31 May 2025 13:17 PM

கோலிவுட் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராஜேஷ் (Rajesh). இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ் (Merry Christmas). கடந்த 2024ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வந்த ராஜேஷ், கடந்த 2025, மே 29 தேதியில் காலமானார். இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும், அவரது உடலுக்கு முதல் அமைச்சர் உட்பட அரசியல் பிரபலங்கள் மற்றும் பிரபல நடிகர்கள் பலரும் நேரில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 2025, மே 31ம் தேதியில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நேரில் சென்று, நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், அவரின் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், மறைந்த நடிகர் ராஜேஷை பற்றிப் பேசியுள்ளார்.

நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் வீடியோ :

 

மறைந்த நடிகர் ராஜேஷை பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேச்சு :

பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் ராஜேஷை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நடிகர் ராஜேஷ் எனக்கும் மட்டும் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் பலருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர்தான். ராஜேஷ் பெரிய நடிகரோ, இயக்குநரோ, தயாரிப்பாளரே அரசியல்வாதியோ கிடையாது. இருந்தாலும் அவர் தமிழக முதல் அமைச்சரில் இருந்து இசைஞானி இளையராஜா முதல் பல பிரபலங்களும் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள், அதற்குக் காரணம் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதுதான்.

அவர் ஆடுதொடா இலை போல, அவருக்குத் தெரியாத, இல்லாத விஷயங்களே கிடையாது. அந்த அளவிற்கு அவர் சிறந்த படிப்பாளரும் கூட, சினிமா முதல் ஆன்மிகம் வரை அவருக்கு அனைத்தும் தெரியும். அவர் கிட்டத் தேடுதல் அதிகமாக இருக்கும், அவருக்குத் தெரிந்தது அனைவருக்கும் தெரியவேண்டும் என்று நினைப்பார். என்னை அடிக்கடி ராஜேஷ் சந்திப்பார், நான் நன்றாக இருக்கவேண்டும், எப்போது நலமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.

தற்போது அவர் நம்முடன் இல்லை என்பது மிகவும் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல மனிதர் அவரின் இழப்பு, பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடையே பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.