திமுக கூட்டணியில் விஜய்..? ஓ. பன்னீர்செல்வம் சொன்ன சூசக பதில்…

O Panneer Selvam Slams EPS: தூத்துக்குடியில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமாரை கடுமையாக விமர்சித்து, அதிமுகவை அழித்தவர்கள் இவர்களே என குற்றம்சாட்டினார். சசிகலாவிடம் ஆதரவு பெற்று முதல்வரானவர் பின்னர் துரோகம் செய்ததாகவும் கூறினார். ஸ்டாலின் ஆட்சியை பாராட்டிய அவர், விஜய் கூட்டணி கேள்விக்கு நேரடி பதிலை தவிர்த்தார்.

திமுக கூட்டணியில் விஜய்..? ஓ. பன்னீர்செல்வம் சொன்ன சூசக பதில்...

ஓ.பன்னீர் செல்வம்

Published: 

17 Mar 2026 13:47 PM

 IST

தூத்துக்குடி: “ஊர்ந்து சென்று சின்னம்மாவின் (சசிகலா) காலைத் தொட்டு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, பின்னாளில் அவரையே இழிவாகப் பேசி நம்பிக்கை துரோகி என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறார்” என்று ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறும் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொள்ள அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்திருந்தார். இக்கூட்டங்களில், தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், அதிமுக-திமுக கட்சிகளின் நிலைப்பாடுகளையும் விளக்கி, தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு

அவர் பேசியபோது, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் ஆட்சிச் செயல்பாடுகள் தன்னை திருப்தி அடையச் செய்துள்ளதாக கூறினார். திமுகவில் இணைந்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றியுணர்வு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், அதே திட்டங்களை ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

அதிமுக மீது கடும் விமர்சனம்

தொடர்ந்து அதிமுக குறித்து பேசிய ஓபிஎஸ், “அதிமுக கட்சியை அழித்த பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரையே சாரும்” என்று நேரடியாக குற்றம்சாட்டினார். கட்சியின் அடிப்படை நோக்கங்களையும், அதன் வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டதாகவும், கட்சியை பலவீனப்படுத்திய முக்கிய காரணம் இவர்கள்தான் என்றும் தெரிவித்தார். இந்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெரம்பூரில் விஜய்.. டி.நகரில் ஆனந்த்? சென்னையில் களமிறங்கும் முதல் கட்ட தலைவர்கள்?

சசிகலா தொடர்பான குற்றச்சாட்டு

மேலும் அவர் பேசியபோது, “சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி, தற்போது அவரையே இழிவாகப் பேசுவது நம்பிக்கை துரோகம்” என்று குறிப்பிட்டார். தமிழக சிறைச்சாலையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று சசிகலா கூறியதும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில்தான் எனவும் அவர் நினைவூட்டினார். இத்தகைய மனநிலையைக் கொண்டவரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்தார்.

விஜய் கூட்டணி கேள்விக்கு பதில்

கோவில்பட்டியில் நடைபெற்ற மற்றொரு பரப்புரைக் கூட்டத்தில், திமுகவுடன் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம் சுருக்கமாக பதிலளித்தார். “அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறி அவர் தனது பதிலை முடித்தார். இந்த பதில், எதிர்கால அரசியல் கூட்டணிகள் குறித்து மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Follow Us
Related Stories
Tamil Nadu Election: ஜி பே ட்ரான்ஸ்ஃபரில் வாக்கு வேட்டை: வங்கிகளுக்கு கடும் அலர்ட்..!
விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் – எடப்பாடி பழனிசாமி
Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!
K.P. Munusamy Tamil Nadu Election: அதிமுகவில் தொண்டனாக இணைந்து து.பொ.செயலராக உயர்ந்த கே.பி.முனுசாமி.. மீண்டும் வெற்றிக் கனியை பறிப்பாரா?
இந்தியாவில் வாக்களிப்பு எப்படி செயல்படுகிறது? விளக்கம் இதோ!
“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”.. ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சுக்கு ரஜினிகாந்த் பதிலடி..
அமெரிக்க உலகப்போர் நினைவு சின்னம் முன்பு நடனமாடிய இந்தியர் - சர்ச்சையாகும் வீடியோ
ஈரானின் புதிய தலைவர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.92 கோடி பரிசு - அமெரிக்க அறிவிப்பு
கேஸ் தட்டுப்பாடு - புதிதாக ஒரு இணையதளத்தையே உருவாக்கிய இளைஞர்கள்
மஹாராஜா 2 அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்