America : அமெரிக்காவில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு.. சுமார் 1,000 அடி உயரத்திற்கு வெளியேறும் தீக்குழம்பு!
Kilauea volcano erupts in America | அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப்பெரிய எரிமலையான கிலாவியா வெடித்து சிதறியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் கிலாவியா 26 முறை வெடித்து சிதறியுள்ளது. தற்போது கிலாவியா மீண்டும் சிதறியுள்ள நிலையில், அதில் இருந்து சுமார் 1000 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெளியேறி வருகிறது.

கிலாவியா எரிமலை
அமெரிக்கா, ஜூன் 22 : அமெரிக்காவில் எரிமலை ஒன்று வெடித்து (America Volcano Eruption) சிதறிய நிலையில், அதில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களை, பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதிப்புக்கு மிக அருகில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிமலை வெடிப்பின் தாக்கம் என்னவாக உள்ளது, அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் வெடித்து சிதறிய எரிமலை
அமெரிக்காவின் (America) ஹவாய் தீவில் (Hawaii Island) கிலாவியா (Kilauea) என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக கிலாவியா எரிமலை அடிக்கடி வெடித்து சிதறி வந்தது. இந்த நிலையில் ஜூன் 11, 2025 அன்று அந்த எரிமலை மிக பயங்கரமாக வெடித்தது. அதனை தொடர்ந்து தற்போது கிலாவியா மீண்டும் வெடித்து சிதறி உள்ளது.
மீண்டும் வெடித்து சிதறிய கிலாவியா
🌋ERUPTION IN PROGRESS: Watch Kilauea erupting for 26th time since last December, sending lava more than 1,000 feet into the sky.https://t.co/qkOjUwwfOT pic.twitter.com/Lzzc4fTMwl
— FOX Weather (@foxweather) June 20, 2025
1,000 அடி உயரத்திற்கு வெளியாகும் தீக்குழம்பு
கிலாவியா எரிமலை வெடித்து சிதறியதில் அதில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெளியேறி வருகிறது. வானத்தை நோக்கி எரிமலை குழம்பு பீறிட்டு வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. எரிமலை வெடிப்பால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது. எனவே எரிமலையை சுற்றியுள்ள பொதும்மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலக அளவில் உள்ள மிகப்பெரிய எரிமலைகளில் அமெரிக்காவின் கிலாவியாவும் உள்ளது. இங்கு 2024, டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 26வது முறையாக இந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.