Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர்.. ஷேக் ஹசீனாவை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை..

Sheik Hasina Death Sentence: இடைக்கால அரசாங்கம் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மூன்று வெவ்வேறு முனைகளில் பணியாற்றத் தொடங்கியுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து, வங்கதேச சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ருல், ஹசீனாவை நாடு கடத்தக் கோரி மீண்டும் இந்தியாவுக்கு கடிதம் எழுதப் போவதாகக் கூறினார். அவரது அறிக்கைக்குப் பிறகு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான அடிப்படையாக இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது .

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர்.. ஷேக் ஹசீனாவை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2025 19:25 PM IST

நவம்பர்  17, 2025: வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. ஹசீனா தற்போது டெல்லியில் உள்ளார். இடைக்கால அரசாங்கம் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மூன்று வெவ்வேறு முனைகளில் பணியாற்றத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு இருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இந்த கலவர சூழலில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த பரபரப்பு அடங்காத நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சொல்லி முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்ற ஆடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை..

முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை:

இதனை ஆதாரமாக வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இந்த சூழலில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மனிதகுலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமாக நடந்துக்கொண்ட நீதிமன்றம் – ஷேக் ஹசீனா:

இந்நிலையில், ஹசீனா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார், மேலும் தனது அவாமி லீக் கட்சிக்கும் தனக்கும் “தங்களை தற்காத்துக் கொள்ள நியாயமான வாய்ப்பை” வழங்காததற்காக நீதிமன்றத்தை விமர்சித்தார். தீர்ப்பாயமும் அதன் உறுப்பினர்களும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், அதன் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் “தற்போதைய நிர்வாகத்திற்கு பகிரங்கமாக அனுதாபம் தெரிவித்துள்ளதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க:  ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!

முன்னாள் பிரதமரை இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை:

இந்த நிலையில், இடைக்கால அரசாங்கம் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மூன்று வெவ்வேறு முனைகளில் பணியாற்றத் தொடங்கியுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து, வங்கதேச சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ருல், ஹசீனாவை நாடு கடத்தக் கோரி மீண்டும் இந்தியாவுக்கு கடிதம் எழுதப் போவதாகக் கூறினார். அவரது அறிக்கைக்குப் பிறகு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான அடிப்படையாக இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது .

இன்டர்போல் என்பது ஒரு சர்வதேச காவல் அமைப்பாகும், இதன் நோக்கம் அதன் 194 உறுப்பு நாடுகளிடையே குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கு ஒத்துழைப்பை எளிதாக்குவதாகும். பங்களாதேஷ் இன்டர்போல் மூலம் ஷேக் ஹசீனாவைக் கைது செய்ய விரும்பினால், அது ரெட் கார்னர் அறிவிப்பை வெளியிடும் செயல்முறையைப் பின்பற்றும். ரெட் கார்னர் அறிவிப்பு என்பது ஒரு தனிநபரின் சர்வதேச கைது குறித்த அறிவிப்பாகும், இது உறுப்பு நாடுகளின் காவல்துறைக்கு அனுப்பப்படும்.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த திட்டமா?

இருப்பினும், இந்தியாவில் ஒருவரைக் கைது செய்வதற்கு இந்திய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் உரிய நடைமுறை தேவைப்படுகிறது. ஷேக் ஹசீனாவைக் கைது செய்து பங்களாதேஷுக்கு நாடு கடத்தலாமா என்பதை இந்திய அரசு முடிவு செய்யும். இந்த செயல்முறைக்கு நீதித்துறை அங்கீகாரமும் தேவை. உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் இன்டர்போல் கோரிக்கையின் பேரில் இந்தியா யாரையும் நேரடியாகக் கைது செய்ய முடியாது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடுத்த வாரம் டெல்லியில் தனது வங்கதேசப் பிரதிநிதி கலிலுர் ரஹ்மானை வரவேற்க உள்ளார். இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நவம்பர் 19-20 தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு வங்கதேசக் குழுவை ரஹ்மான் வழிநடத்துவார்.

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு உரையாடலைப் பேணுவதற்கும் ரஹ்மானின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விஜயத்தின் போது, ​​ஹசீனாவை நாடு கடத்துவது குறித்த பிரச்சினையையும் ரஹ்மான் NSA டோவலுடன் எழுப்பக்கூடும்.