Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆப்கானிஸ்தான் எல்லையில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..

Afganisthan: ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த கடுமையான மோதலில் 45 தெஹ்ரிக் -இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பதட்டமான வடமேற்கு பகுதிகளில் உள்ள மூன்று டிடிபி மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Sep 2025 19:20 PM IST

ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 14, 2025: தாலிபான்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அப்போதிலிருந்தே எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதே இதற்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த தொடர்ச்சியான மோதல்களில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் டிடிபி ( தெஹ்ரிக் -இ-தலிபான் பாகிஸ்தானின் ) போராளிகளை பலரையும் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 19 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாட்களாக நடந்த இந்த மோதல்கள், பாகிஸ்தானின் பதட்டமான வடமேற்கு பகுதிகளில் உள்ள மூன்று டிடிபி மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் விளைவாகும்.

45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்:


பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின் படி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சில பகுதிகளில் இந்த மோதல்கள் பஜௌர், லோயர் டிர் மற்றும் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பஜௌரில் நடந்த முதல் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் உறுதிப்படுத்தியது. தெற்கு வசிரிஸ்தானில் நடத்தப்பட்ட தனி நடவடிக்கையில் மேலும் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் லோயர் டிர் பகுதியில் நடந்த மூன்றாவது மோதலில் கூடுதலாக 10 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க: உலகின் முதல் AI அமைச்சர்.. ஊழலை ஒழிக்க அல்பேனியா அரசு அதிரடி நடவடிக்கை!

தெற்கு வஜீரிஸ்தானில் பதுங்கியிருந்த தாக்குதலில் 12 பேரும், லோயர் டிரில் துப்பாக்கிச் சண்டையில் ஏழு பேரும் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சண்டையின் தீவிரத்தையும், பாகிஸ்தான் எதிர்கொள்ளும் சிக்கலான பாதுகாப்பு சவால்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாகிஸ்தான் கூறும் ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி மறைவிடங்களை அகற்றுவதற்கான பரந்த இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் உள்ளன, மேலும் தீவிரவாதிகள் தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: அறுவை சிகிச்சையின்போது நர்ஸ் உடன் உடலுறவு வைத்த மருத்துவர்.. நோயாளியை தவிக்க விட்ட கொடூரம்!

19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு:

டிடிபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான்களை பாகிஸ்தான் அரசாங்கம் பலமுறை வலியுறுத்தி வருகிறது, ஆனால் காபூல் அதன் மண்ணில் போராளிகள் இருப்பதை தொடர்ந்து மறுத்து வருகிறது. டிடிபிக்கு எதிராக பாகிஸ்தான் ரானுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் சுமார் 19 ரானுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.