79 வயதில் உணவுக்கடை நடத்தும் ராணுவ வீராங்கனை- வைரலாகும் வீடியோ
Inspiring Senior Citizen : வாழ்க்கைையில் சில கஷ்டம் என்றாலே, வாழ்க்கையே முடிந்து விட்டதாக புலம்புபவர்களுக்கு மத்தியில், 79 வயதான பாட்டி ஒருவர், சாலையோரம் உணவுக் கடை நடத்தி வாழ்ந்து வருகிறார். முன்னாள் ராணுவ வீராங்கணையான அவர் திருமணமாகாத நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

79 வயதில் உணவுக் கடை நடத்தும் பாட்டி
வாழ்க்கையின் மீதான ஆர்வத்தை இழந்து, வாழ்க்கை முடிந்துவிட்டது என சலித்துக்கொள்வார்கள், மறுபுறம், வலிமையாக இருந்தபோதிலும், வேலை செய்வதில் அக்கறையில்லாமல் இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடையே, தன்னம்பிக்கையுடன் வாழும் பலர் உள்ளனர். அவர்களின் ஊக்கமளிக்கும் கதைகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஒரு வயதான பெண்ணின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வயதாகி விட்டது, இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என வீட்டில் சும்மா உட்காந்திருக்காமல் சாலையோரம் உணவுக்கடை நடத்தி வருகிறார் 79 வயதான பெண். அவரது முயற்சி பலரின் இதயங்களை வென்றுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு இட்லி கடை நடத்தும் பாட்டி
இந்திய ராணுவத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய பாட்டி, தற்போது இந்தூரில் சாலையோரத்தில் இட்லி சாம்பார் விற்று வாழ்க்கையை நடத்துகிறார். திருமணமாகாத பாட்டி, தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவளுடைய நேர்மறையான அணுகுமுறையாலும், வாழ்க்கையை விட்டுக்கொடுக்காத விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் அனைவரின் இதயங்களையும் வென்றிருக்கிறார்.
உணவு கடை நடத்தும் முன்னாள் ராணுவ வீராங்கனை
உணவு விமர்சகர் காஷிஷ் சோனி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த வயதான பெண்ணின் இந்த ஊக்கமளிக்கும் கதையைப் பகிர்ந்துள்ளார். வைரலாகும் வீடியோவில், “நான் மும்பையில் டிகிரி முடித்த ஒரு சுயமரியாதையுள்ள, திருமணமாகாத பெண் என்று கூறும் அவர், முன்பு இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்ததாககவும் தெரிவிக்கிறார். ஓய்வுக்குப் பிறகு, அவர் தனது பொழுதுபோக்குக்காக சமையல் செய்ய ஆரம்பித்து அதன் பிறகு அதனை ஒரு தொழிலாக மாற்றி, தன்னிறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பெருமையுடன் தெரிவிக்கிறார்.
மேலும் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி நான் மிகவும் திருப்திகரமான வாழ்க்கை வாழ்ந்ததாக தெரவித்த அவர். எதை நினைத்தும் தனக்கு வருத்தம் இல்லை என சிரிப்புடன் கூறுகிறார். வாழ்க்கைையில் சில கஷ்டம் என்றாலே, வாழ்க்கையே முடிந்து விட்டதாக புலம்புபவர்களுக்கு மத்தியில் இந்த பாட்டியின் வீடியோ பலருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த ஜூன் 22, 2025 அன்று பகிரப்பட்ட இந்த காணொளி, 5.2 மில்லியன் பார்வைகளையும் ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு பயணர், அந்த பாட்டி யாரையும் தொந்தரவு செய்யாமல் அவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் என்று தெரிவித்தார். மற்றொரு பயனர், தனிமையில் இருந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அந்த பாட்டி காட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுளார். குறிப்பாக பலரும் அவரது பதிவு தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.