Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் ஏற்ற இறக்கத்தில் தக்காளி விலை… மேலும் உயர வாய்ப்பா?

Chennai Tomato Prices Drop: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.15 குறைந்து, ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் தக்காளி வரத்து குறைந்து, விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது உழவர் சந்தைகளில் ரூ.32-36, வெளி சந்தைகளில் ரூ.45-50 வரை விலை உள்ளது.

தமிழகத்தில் ஏற்ற இறக்கத்தில் தக்காளி விலை… மேலும் உயர வாய்ப்பா?
தக்காளி விலைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 06 Jul 2025 10:15 AM

சென்னை ஜூலை 06: சென்னை கோயம்பேடு (Chennai Koyambedu) சந்தையில் தக்காளி விலை (Tomato price) ஒரே நாளில் ரூ.15 குறைந்து, மொத்தமாக ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ரூ.40 வரை விற்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தக்காளி வரத்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் (Tamil Nadu, Andhra Pradesh, and Karnataka) குறைந்து உள்ளது. இதனால் விலை முந்தைய மாதங்களை விட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது உழவர் சந்தைகளில் கிலோ ரூ.32–36, வெளி சந்தைகளில் ரூ.45–50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்து விற்பனை நிலை தொடருவதால், விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

கோயம்பேடு: தக்காளி விலை ஒரே நாளில் ரூ.15 குறைவு

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.15 குறைந்துள்ளது. மொத்த விற்பனையில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்கப்படுகிறது, சில்லறையில் இது ரூ.40 வரை உள்ளது. கடந்த வாரத்தில் சில்லறை விற்பனை விலை ரூ.60 முதல் ரூ.70 வரை இருந்த நிலையில், தற்போதைய விலை குறைவு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக தக்காளி வரத்து பாதிப்பு

தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக தக்காளி வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய மாதங்களில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரை விற்கப்பட்ட தக்காளி, தற்போது உழவர் சந்தைகளில் ரூ.32 முதல் ரூ.36 வரைவும், வெளி சந்தைகளில் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது.

திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனை

விவசாயிகள் தெரிவித்ததாவது, தக்காளி வரத்து சீராக நடைபெறவில்லை என்றாலும் விற்பனை அளவு குறையவில்லை என்பதால் விலைக்குள் தட்டுப்பாடு உருவாகி விட்டது. 2025 ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து இந்த நிலை தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் வடக்கு உழவர் சந்தைக்கு 2.23 டன் தக்காளி வந்த நிலையில், மொத்த விலையாக கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. இதன் விளைவாக, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த நான்கு மாதங்களாக தக்காளி விலை ரூ.15 முதல் ரூ.20 இடையே நிலைத்திருந்த நிலையில், தற்போது வரத்து குறைவால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், விலை மேலும் உயரக்கூடும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.