தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு!
Tamil Nadu Electricity Bill Hike : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார்.

மின்கட்டணம்
சென்னை, ஜூன் 29 : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார். தமிழகத்தில் வீடு, தொழில்நிறுவனங்கள், விவசாய நிலங்களுக்கு மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடுகளுக்கான மின்சாரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2024ஆம் ஆண்டில் தான் மின்கட்டணம் சற்று உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வா?
இந்த சூழலில், 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இது நுகர்வோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார வெளியிடப்படவில்லை.
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மீண்டும் திட்டவட்ட தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/QNK0AJs45d
— TN DIPR (@TNDIPRNEWS) June 29, 2025
ஒழுங்குமுறை ஆணையத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025 ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.