Sivagangai Custodial Death: ரூ. 2 லட்சம் நிவாரணம்..! அஜித் குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்!

Vijay's Consoling Visit: திருப்புவனம் அருகே போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்திற்கு தமிழ் வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் கூறினார். ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivagangai Custodial Death: ரூ. 2 லட்சம் நிவாரணம்..! அஜித் குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்!

தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்

Published: 

02 Jul 2025 20:43 PM

 IST

சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை (Sivagangai) மாவட்டத்தை அடுத்த திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளியான அஜித் குமாரை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தனிப்படை கொடூரமாக தாக்கியது. இந்த விசாரணையின்போது அஜித் குமாரை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், தவெக தலைவர் விஜய் (TVK Leader Vijay), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு கண்டனங்களை பதிவிட்டனர். இதை தொடர்ந்து, அஜித் குமாரை தாக்கிய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்தசூழ்நிலையில், காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்:


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு காவல்துறை தாக்கி உயிரிழந்த அஜித் குமார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, வீட்டிலிருந்த அஜித் குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறிதுநேரம் அஞ்சலி செலுத்தினார். விஜயுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, அஜித் குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் குமாரிடம் ஆறுதலாக பேசினார். தொடர்ந்து, தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக விஜய் தெரிவித்தார்.

தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழ்நாடு காவல்துறையின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமார் மறைவை கண்டித்து, வருகின்ற 2025 ஜூலை 5ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Follow Us
Related Stories
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்