Sivagangai Custodial Death: ரூ. 2 லட்சம் நிவாரணம்..! அஜித் குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்!

Vijay's Consoling Visit: திருப்புவனம் அருகே போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்திற்கு தமிழ் வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் கூறினார். ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivagangai Custodial Death: ரூ. 2 லட்சம் நிவாரணம்..! அஜித் குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்!

தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்

Published: 

02 Jul 2025 20:43 PM

 IST

சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை (Sivagangai) மாவட்டத்தை அடுத்த திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளியான அஜித் குமாரை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தனிப்படை கொடூரமாக தாக்கியது. இந்த விசாரணையின்போது அஜித் குமாரை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், தவெக தலைவர் விஜய் (TVK Leader Vijay), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு கண்டனங்களை பதிவிட்டனர். இதை தொடர்ந்து, அஜித் குமாரை தாக்கிய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்தசூழ்நிலையில், காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்:


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு காவல்துறை தாக்கி உயிரிழந்த அஜித் குமார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, வீட்டிலிருந்த அஜித் குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறிதுநேரம் அஞ்சலி செலுத்தினார். விஜயுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, அஜித் குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் குமாரிடம் ஆறுதலாக பேசினார். தொடர்ந்து, தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக விஜய் தெரிவித்தார்.

தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழ்நாடு காவல்துறையின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமார் மறைவை கண்டித்து, வருகின்ற 2025 ஜூலை 5ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..