பெற்றோர் உஷார்.. தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி.. திருவள்ளூரில் சோகம்

Tiruvallur Newborn Dies : திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோர் உஷார்..  தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி.. திருவள்ளூரில் சோகம்

மாதிரிப்படம்

Updated On: 

12 Oct 2025 07:08 AM

 IST

திருவள்ளூர், அக்டோபர் 12 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது. பிறந்த குழந்தைகள் மூச்சுத்திணறலால் உயிரிழந்து வருகின்றனர். எனவே, குழந்தைளுக்கு பால், உணவு கொடுக்கும்போது கவனமாக பெற்றோர் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், சில கவனக் குறைவால் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது, தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பிரெய்சி. இவர் தம்பதிக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 2025 அக்டோபர் 10ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டிற்கு பிரெய்சி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். அப்போது, குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளது. பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. இதனால் பதறிய பிரெய்சி உடனடியாக ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

Also Read : சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?

தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

அங்கு குழந்தையை பரிசோதனை மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read : காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்

மேலும், குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது கவனமாக கொடுக்க வேண்டும். குழந்தைக்கு படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

அமர்ந்து தான் கொடுக்க வேண்டும். பால் கொடுத்தவுடன் குழந்தை படுக்க வைக்க கூடாது. சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு உடனடியாக விழுங்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்படலாம். எனவே, குழந்தைகளுக்கு பால் உணவு கொடுக்கும்போது கவனமுடன் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..