வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..

2021 ஆம் ஆண்டு திமுகஆட்சியை கைப்பற்றியது போல மீண்டும் இந்த முறைவும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைப் பொருத்தவரையில் 21 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதாவது விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் - முதல்வர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Mar 2026 17:57 PM

 IST

சென்னை, மார்ச் 18, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய சூழலில், தமிழக அரசியல் களத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

2021 ஆம் ஆண்டு திமுகஆட்சியை கைப்பற்றியது போல மீண்டும் இந்த முறைவும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைப் பொருத்தவரையில் 21 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதாவது விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி இறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு கட்சிகளுடனும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதேபோல் திமுக தரப்பில் மாநில மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாநாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் படிக்க: தூத்துக்குடி பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள்… தமிழக தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்

மாநில மாநாடுகளில் திமுக செய்திருக்கும் சாதனைகள் மற்றும் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்:

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்: “இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: செயற்பாட்டு வரைவு 2026.. நாளை வெளியிடப்படும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை..

மறுபுறம் சொல்வதற்கு சாதனைகளும் செயல்படுத்துவதற்கு கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
Related Stories
Tirunelveli Constituency Election 2026: தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டை.. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்துக்கொள்வார்களா? நெல்லை தொகுதியின் நிலவரம் என்ன?
நமது தலைமையில் தான் ஆட்சி.. அவதூறுகளை நம்ப வேண்டாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..
4 நாட்கள் தொடர் விடுமுறை – வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் – வெளியான அறிவிப்பு
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் ரூ. 42.65 கோடி பறிமுதல்..
ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?
தூத்துக்குடி பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள்… தமிழக தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்