குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!
Anna University Harassment Case : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 2025 ஜூன் 2ஆம் தேதியான இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தண்டனை விவரங்களை அறிவிக்கிறார்.

சென்னை, ஜூன் 02 : சென்னை அண்ணா பல்கலைக்கழக (Anna University Harassment Case) மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு (accused gnanasekaran) சென்னை மகிளா நீதிமன்றம் 2025 ஜூன் 2ஆம் தேதியான இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என வழக்கறிஞர்கள் தரப்பு கூறுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் 2025 மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகிளர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றச்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?
அப்போது, குற்றவாளி நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தபோது, நீதிமன்றத்திலேயே ஞானசேகரன் கதறி அழுத்ததாக தெரிகிறது. மேலும், தனக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதாவது, ஞானசேகரன் நீதிபதியிடம் பேசுகையில், ”தன்னுடைய அப்பா இறந்துவிட்டதால், தாய், சகோதரி, மகளை கவனிக்க வேண்ய நிலை உள்ளது.




தனக்கு அதிக கடன்களும் இருக்கிறது. முடக்கி வைக்கப்பட்டுள்ள தனது வங்கி கணக்கை விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து, நீதிபதி ஜூன் 2ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறினார். இதனை அடுத்து குற்றவாளி ஞானசேரகனுக்கு தண்டனை விவரம் இன்று (ஜூன் 2 2025) வெளியாக உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி தனது சக மாணவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
Chennai, Tamil Nadu: In the Anna University sexual harassment case, all 11 charges against accused Gnanasekaran were proven, said government prosecutor Mary Jayanthi. The court found him guilty; sentencing is on June 2. The prosecution opposed any leniency in punishment pic.twitter.com/1ycO0wuxT5
— IANS (@ians_india) May 28, 2025
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, ஞானசேகரனை 2025 டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கைது செய்தது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
அவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்து வந்தார். பின்னர், கோடூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனை அடுத்து ஞானசேகரன் மீது பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் பிரிவுகள் 329, 126(2), 87, 127(2), 75(2) உடன் 75(i), (ii), (iii), 76, 64(1), 351(3), 238(b) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணை குழு 2025 பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 100 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில், ஞானசேகரன் மீது பெண் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 11 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
மேலும், சுமார் 75 சான்று ஆவணங்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை அடுத்து, இருதரப்பு விசாரணைகளும் முடிந்து, 2025 மே 28ஆம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 2 2025) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.