Manikandan : அதைப் பார்த்தால் எனக்குப் பயம்.. மூன்று நாள் தூங்கவில்லை.. நடிகர் மணிகண்டன்!
Manikandan About Horror Movies Fear : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் கே. மணிகண்டன். இவரின் நடிப்பில் இதுவரை சில படங்கள் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் நேர்காணலில் பேசிய அவர் பேய் படங்களைப் பார்த்தால் பயப்படுவேன் என்று கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் பீல் குட் (Feel good) திரைப்படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானவர் கே. மணிகண்டன் (K. Manikandan) . ஆரம்பத்தில் சினிமாவில் துணை கதாபாத்திரம், சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாகக் குடும்பஸ்தன் (Kudumbasthan) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி (Rajeshwar Kalisamy) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025, ஜனவரி 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது முற்றிலும் குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து. இது போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை நடிகர் கே மணிகண்டன் கவர்ந்துள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்தும் இவர் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மணிகண்டன், தனக்கு பேய் படங்களைப் பார்த்தால் பயம் அதிகமாகிவிடும் என்றும், பேய் படங்களைப் பார்த்தால் 3 நாட்கள் தூக்கம் வராது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
பேய் படங்களை பற்றி நடிகர் மணிகண்டன் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் கே. மணிகண்டன், “எனக்கு ஹாரர் படங்கள் செட்டாகவில்லை என்று இல்லை, ஆனால் பேய் படங்கள் என்றாலே எனக்குப் பயம் இருக்கும். அமானுஷ்ய படங்கள் என்றால் எனக்குப் பயம், அந்த மாதிரி படங்களைப் பார்த்தல் எனக்கு இரவு தூக்கம் வராது. மேலும் நான் ஒரு பேய் படத்திற்குத் தெரியாமல் போய்விட்டேன், அந்த படம் அனபெல் திரைப்படம்.
அந்த படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு தூக்கமே வரவில்லை, வீட்டில் லைட்டை ஆப் செய்தாள் மிகவும் பயமாக இருந்தது. அதன் காரணமாகதான் நான் ஹாரர் படங்களில் நடிப்பதற்குப் பயப்படுகிறேன். ஆனால் நான் எனது முதல் சினிமா நுழைவில், பீசா என்ற ஹாரர் படத்திற்குத்தான் வசனம் எழுதினேன்” என்று நடிகர் மணிகண்டன் கூறியிருந்தார். இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கே. மணிகண்டன் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
குடும்பஸ்தன் வரவேற்பு :
நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் மற்றும் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்துதான் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்துதான் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியின் இயக்கத்தில் குடும்பஸ்தன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் எதிர்பார்காத வரவேற்பைப் பெற்று, சுமார் ரூ. 28 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்த நடிகர் மணிகண்டன் அடுத்தடுத்த 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.