300 பவுன் நகை.. ரூ.70 லட்சம் கார்.. வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண்.. திருப்பூரில் நடந்த சோகம்!

Young Woman Killed Herself in Tirupur | திருப்பூரில் திருமணமான 2.5 மாதங்களிலேயே தொழிலதிபரின் மகள் காரில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக தனது மரணத்திற்கு கணவர் மற்றும் கணவரின் வீட்டார் தான் காரணம் என்றும் அவர் தனது தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

300 பவுன் நகை.. ரூ.70 லட்சம் கார்.. வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண்.. திருப்பூரில் நடந்த சோகம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Jun 2025 08:08 AM

திருப்பூர், ஜூன் 30 : திருப்பூரில் (Tirupur) திருமணத்திற்கு பிறகு மாமியார், மானனார் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும், கணவன் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், வரதட்சனை கேட்டு கொடுமை செய்தததாகவும் இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக அந்த பெண் தனது தந்தைக்கு, தனது மரணத்திற்கு மாமனார், மாமியார் மற்றும் தனது கணவர் தான் முக்கிய காரணம் என்றும் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

திருமணமான இரண்டரை மாதங்களில் இளம் பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்ட அவிநாசியை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழிலதிபரான இவர் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ரிதன்யா என்ற 27 வயது மகள் இருந்த நிலையில், அவரை கவின் குமார் என்ற 27 வயது நபருக்கு அண்ணாதுரை திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று உள்ளது.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் ரிதன்யா மகிழ்ச்சியாக வாழவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும் மாமனார் மற்றும் மாமியார் மனரீதியாகவும் அவரை சித்திரவதை செய்து வந்ததாகவும், இனி இந்த வாழ்க்கையை தன்னால் வாழ முடியாது என்று அவர் தனது தந்தையிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோரோ அனைத்தும் சரியாகும் என்று மகளுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

காருக்குள் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யா

இந்த நிலையில் நேற்று (ஜூன் 29, 2025) காரில் கோயிலுக்கு சென்ற அவர், காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு தான் வைத்திருந்த விஷயத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  காரில் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்ந்து கிடந்த ரதன்யாவின் உடலை மீட்டனர். அப்போது அங்கு வந்த அவரது உடலைக் கண்டு அவர் பெற்றோர் கதறி அழுத்துள்ளனர்.

500 பவுனில் 300 பவுன் மட்டுமே கொடுத்ததால் சித்ரவதை செய்த கணவனின் குடும்பத்தார்

ரிதன்யாவின் திருமணத்தின் போது 500 பவுன் நகை தருவதாக அவரது வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் திருமணத்தின் போது 300 பவுன் நகை, ரூபாய் 70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் 2.5 கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணம் முடிந்த அடுத்த பத்து நாட்களிலேயே, கணவரின் விட்டார் ரிதன்யாவிடம் இருந்து மீதம் உள்ள 200 பவுன் நகையை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ரிதன்யா தற்கொலை முடிவு எடுத்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் தனது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியில், மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.