Asia Cup 2025: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்..? முழு விவரம் இங்கே!

Indian Cricket Team Next Match: இந்திய அணியின் அடுத்த போட்டி ஓமனுக்கு எதிராக விளையாருகிறது. இந்த போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா இதுவரை 2 போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடியுள்ளது.

Asia Cup 2025: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்..? முழு விவரம் இங்கே!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

17 Sep 2025 08:30 AM

 IST

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டி தொடங்குவதற்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்தனர்ல். சர்வதேச டி20யில் உலகின் நம்பர்-1 அணியாக உள்ள இந்திய அணி (Indian Cricket Team) 2025 ஆசிய கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து, கடந்த 2025 செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த 2 வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணி 4 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் உள்ளது மட்டுமல்லாமல், சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில், 2025 ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி அடுத்த போட்டியில் யாரை, எப்போது எதிர்கொள்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது, ​​யாருடன்?

இந்திய அணியின் அடுத்த போட்டி ஓமனுக்கு எதிராக விளையாருகிறது. இந்த போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா இதுவரை 2 போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடியுள்ளது. இந்தநிலையில், அபுதாபி ஸ்டேடியம் இந்திய அணிக்கு ஒரு புதிய சவாலாக இருக்கலாம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கும்.

ALSO READ: இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ்.. ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் வழங்குமா..?

இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா..?

இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான இந்த குரூப் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஓமன் வெற்றி பெற்றாலும், எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் ஓமன் அணியில் இப்போது சூப்பர்-4 க்கு செல்வது சாத்தியமற்றது.

ALSO READ: 1993 முதல் 2025 வரை.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார்..? முழு லிஸ்ட்!

இதுவரை 2 அணிகள் வெளியேற்றம்:

2025 ஆசிய கோப்பையில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன, அவற்றில் இந்தியா மட்டுமே இதுவரை சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், ஹாங்காங் மற்றும் ஓமன் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. அதாவது, சூப்பர்-4க்கான போட்டி இரு குழுக்களிலும் உள்ள 5 அணிகளுக்கு இடையே இன்னும் நடந்து வருகிறது. இந்த ஐந்து அணிகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளில் 3 அணிகள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற முடியும்.

Related Stories