32 பந்துகளில் அதிரடி சதம்… 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
Vaibhav Suryavanshi Creates History : துபாயில் நடைபெற்ற ஆசியா கப் ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 42 பந்துகளில் 144 ரன்கள் அடித்து மீண்டும் ஒருமுறை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி
இந்தியா ஏ அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, (Vaibhav Suryavanshi) துபாயில் நடைபெற்ற ஆசியா கப் ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 42 பந்துகளில் 144 ரன்கள் அடித்து மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். ஐபிஎல், 19 வயதுகுட்பட்டோர் போட்டிகள் போன்ற பல போட்டிகளில் சாதனை புரிந்துவரும் இந்த இளம் வீரர், எதிர்கால இந்திய கிரிக்கெட் (Cricket) அணியின் முக்கிய தூணாகவே பார்க்கப்படுகிறார். மின்னல் வேகத்தில் ஆடிய வைபவ், 32 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். கிறிஸ் கெய்லின் 175 ரன்கள் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 42 பந்துகளில் 144 ரன்கள் அடித்து வெளியேறினார்.
32 பந்துகளில் அதிரடி சதம்
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் அதிரடி சதம் அடித்து அசத்தினார். மொத்தம் 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 144 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 15 சிக்சர்களும் அடங்கும். அதாவது 144 ரன்களில் 134 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களின் மூலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் சார்பில் பல சாதனைகளை படைப்பார் என கூறப்படுகிறது. இதற்கு முன் அவர் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்திருந்தார். தற்போது, இருபது ஓவர் போட்டிகளில் 35 பந்துகளுக்கும் குறைவாக இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
இதையும் படிக்க : கடினமாக காட்சியளித்த பிட்ச்.. ஈடன் கார்டனில் கில் அதிருப்தி.. நேரில் ஆய்வு செய்த கங்குலி..!
வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்று சாதனை
இந்த போட்டியில் பந்துகளை 4 பக்கமும் சிதறடித்தார். யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்த அசத்திய அவர், அடுத்த பந்தை சிக்சருக்கு முயல அது முடியாமல் போகவே தலையை பின்னோக்கி சாய்த்து தனது விரக்தியை பதிவு செய்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்குள் ஒரு வெறி இருந்ததை காண முடிந்தது.
ஜிதேஷ் ஷர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. கேப்டன் ஜிதேஷ் ஷர்மா தன் பங்குக்கு 32 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் எதிர்கால இந்திய அணிக்கு வலுவான வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க : அர்ஜூன் டெண்டுல்கரை வெளியேறும் மும்பை..? வேறு வீரருக்கு அழைப்பு..! யார் இந்த ஆல்ரவுண்டர்?
அவரது ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரியங்க் பஞ்சால் தனது எக்ஸ் பக்கத்தில், வைபவ் விளையாடியதை என்னால் நம்பவே முடியவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய அணியின் சீனியர் பிரிவில் அவர் ஆடுவார். ஆனால் அவர் விளையாடியதை வரலாறு பேசும். என புகழாரம் தெரிவித்தார்.