Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ISL 2026: மிக குறைந்த பட்ஜெட்.. இல்லாத ஸ்பான்சர்.. விரைவில் தொடங்கும் ஐஎஸ்எஸ் 2026!

Indian Super League 2026: ஐஎஸ்எல்லின் கடைசி சீசன் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதன் பின்னர், 2026 ஐஎஸ்எல் சீசன் நடைபெறுவது தொடர்பாக பல சிக்கல்கள் தொடர்ந்தது. ஏனெனில், லீக் தொடங்கப்பட்டபோது அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) மற்றும் அதன் இணை அமைப்பாளரான எஃப்எஸ்டிஎல் இடையேயான ஒப்பந்தம் முந்தைய சீசனுடன் முடிவடைந்தது.

ISL 2026: மிக குறைந்த பட்ஜெட்.. இல்லாத ஸ்பான்சர்.. விரைவில் தொடங்கும் ஐஎஸ்எஸ் 2026!
இந்தியன் சூப்பர் லீக் 2026Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Jan 2026 11:50 AM IST

இந்திய கால்பந்தில் நீடித்து வரும் பிரச்சனை பல மாதங்களுக்கு பிறகு இறுதியாக முடிவுக்கு வரவுள்ளது. இது அனைத்து கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் சற்று நிம்மதியை தந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ஐபிஎல் போன்று, கால்பந்துக்கு என்று இந்தியன் சூப்பர் லீக்கின் (Indian Super League) புதிய சீசன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஸ்பான்சர் இல்லாத காரணத்தினால் இந்த ஐஎஸ்எல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், நேற்று அதாவது 2026 ஜனவரி 6ம் தேதி ஊடகங்களுக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டாவியா (Mansukh Mandaviya) இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், புதிய சீசன் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கும் என்றார். இதனால், கடந்த எட்டு முதல் ஒன்பது மாதங்களாக நீடித்த புதிய சீசனைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பை முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!

கடைசி சீசன் எப்போது நடைபெற்றது..?


ஐஎஸ்எல்லின் கடைசி சீசன் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதன் பின்னர், 2026 ஐஎஸ்எல் சீசன் நடைபெறுவது தொடர்பாக பல சிக்கல்கள் தொடர்ந்தது. ஏனெனில், லீக் தொடங்கப்பட்டபோது அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) மற்றும் அதன் இணை அமைப்பாளரான எஃப்எஸ்டிஎல் இடையேயான ஒப்பந்தம் முந்தைய சீசனுடன் முடிவடைந்தது. அப்போதிருந்து, AIFF மற்றும் எஃப்எஸ்டிஎல் புதிய ஒப்பந்தம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை. மேலும் லீக்கிற்கான புதிய ஸ்பான்சர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இது ஐஎஸ்எல் லீக் சரியான நேரத்தில் தொடங்குவதை தாமதப்படுத்தி வந்தது.

எத்தனை போட்டிகள், எவ்வளவு பட்ஜெட்?

பல மாதங்களாக நீடித்த இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர, AIFF மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உதவியை நாடியது. இறுதியாக, வருகின்ற 2026 ஜனவரி 6ம் தேதி மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுடனான சந்திப்பிற்குப் பிறகு,  14 கிளப்களும் பங்கேற்கும் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார். ஒற்றை-லெக் ஹோம்-அவே வடிவத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 91 போட்டிகள் நடைபெறும். இருப்பினும், எந்த அணி எந்தெந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இந்த 2026 ஐஎஸ்எல் லீக்கை ஒழுங்கமைக்க ரூ. 25 கோடி மையக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மிகவும் சிறியது. அதேநேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் ஒரு ஐபிஎல் சீசனில் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இரண்டு மாத சீசனுக்கு பண்ட் ரூ. 27 கோடியும், ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 26.75 கோடியும் சம்பளம் பெறுகிறார்கள்.

ALSO READ: இந்தியா முதல் நேபாளம் வரை! டி20 உலகக் கோப்பைக்கு இதுவரை அறிவிக்கப்பட்ட 11 அணிகள்..!

ஐ.எஸ்.எல்லுக்கு ஸ்பான்சர் கிடைத்துவிட்டதா..?

மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஐ.எஸ்.எல் லீக் தொடங்கும் நாளை அறிவித்தாலும், லீக்கிற்கு இன்னும் முதன்மை ஸ்பான்சர் கிடைக்கவில்லை. எனவே, சீசன் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ AIFF ஒரு நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலைகள் லீக்கின் வடிவமைப்பைக் குறைத்துள்ளன.