Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஐபிஎல் போட்டிகள் ரத்து, சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

India-Pakistan Tension: பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமடைந்து, போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தாக்குதலால் பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். டெல்லி மைதானமும் மிரட்டலை எதிர்கொண்டது.

ஐபிஎல் போட்டிகள் ரத்து, சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 May 2025 17:24 PM

சென்னை மே 09: பஹல்காம் தாக்குதலுக்குப் (Pahalgam attack) பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவு (India-Pakistan relations) முற்றிலும் துண்டிக்கப்பட்டு, போர் பதற்றம் உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாபில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் ரத்து (IPL matches cancelled) செய்யப்பட்டது. பிசிசிஐ ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்த முடிவு செய்தது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மைதானத்தில் சோதனை நடத்தினர். இதேபோல டெல்லி மைதானத்துக்கும் மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உறவு பதற்றம்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன. இதனால், இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: ஐபிஎல் போட்டிகள் ரத்து

மே 8 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் எல்லைப் பகுதியில் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல். இருப்பினும், இந்த தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. இதனால், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் ஒத்திவைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உயர்ந்த பதற்றம் காரணமாக, பிசிசிஐ அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைப்பதாக முடிவு செய்தது.

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த சூழலில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 2025 மே 12 ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மைதான நிர்வாகம் இந்த தகவலை உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு மைதானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சோதனையின் போது, மைதான அலுவலகத்திற்கு பாகிஸ்தானை குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. அந்த மின்னஞ்சலில், “ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும்” என்றும், இது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற மிரட்டல் டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கும் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்மசாலா போட்டி பாதியிலேயே நிறுத்தம்

2025 மே 8 ஆம் தேதி இரவு ஹிமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டி, இரவு 8.30 மணியளவில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை தீவிரமடைந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.