Shubman Gill: இந்தூரில் தண்ணீர் குடிக்க பயமா? நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையோடு கொண்டு வந்த கில்.. ஏன் தெரியுமா?

IND vs NZ 3rd ODI: இந்தூருக்கு சுப்மன் கில் கொடுத்த நீர் சுத்திகரிப்பான் RO மற்றும் பேக் செய்யப்பட்ட பாட்டில் தண்ணீரை முழுமையாக மீண்டும் சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. கேப்டன் சுப்மன் கில் இந்த சுத்திகரிப்பான் இயந்திரத்தை தனது ஹோட்டல் அறையில் வைத்துள்ளார்.

Shubman Gill: இந்தூரில் தண்ணீர் குடிக்க பயமா? நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையோடு கொண்டு வந்த கில்.. ஏன் தெரியுமா?

சுப்மன் கில்

Published: 

17 Jan 2026 19:44 PM

 IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ 3rd Odi) அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை அதாவது 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியில் இந்திய அணியும் (Indian Cricket Team), 2வது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்தநிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி தொடரை வெல்லும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான இந்தூர், கடந்த சில நாட்களாக பல பிரச்சனைகளை சந்தித்து செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்தூரில் உள்ள ஒரு பகுதியில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் பலர் இறந்தனர். மேலும், சிலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஒரு சிறப்பு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையோடு கொண்டு வந்துள்ளார்.

ALSO READ: வெளியேறிய வாஷிங்டன்.. உள்ளே வந்த ஷ்ரேயாஸ், பிஷ்னோய்! இந்திய அணியில் மாற்றம்!

சுத்திகரிப்பு இயந்திரம்:


கிடைத்த ஊடக அறிக்கைகளின்படி, இந்தூருக்கு சுப்மன் கில் கொடுத்த நீர் சுத்திகரிப்பான் RO மற்றும் பேக் செய்யப்பட்ட பாட்டில் தண்ணீரை முழுமையாக மீண்டும் சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. கேப்டன் சுப்மன் கில் இந்த சுத்திகரிப்பான் இயந்திரத்தை தனது ஹோட்டல் அறையில் வைத்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், ஹோட்டல் ஊழியர்களுக்கு கூட அதன் பயன்பாடு குறித்து சுப்மன் கில் தெரிவித்ததாக தகவல் கிடைக்கவில்லை.

இந்தூரில் நடந்தது என்ன..?

இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் அசுத்தமான தண்ணீரைக் குடித்து பலர் இறந்துள்ளனர்.மேலும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய அணியினரிடையே பதட்டத்தை கொடுத்துள்ளது. இதுபோல சர்ச்சைக்குரிய சூழ்நிலையில்தான் சுப்மன் கில் இந்த இயந்திரத்தை தன்னுடன் கொண்டு வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வீரர்களின் உணவு முறைகளின் அடிப்படையில் உணவுகளைத் தயாரிக்க பிசிசிஐ ஒரு பிரத்யேக சமையல்காரரையும் குழுவுடன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவ வீரர்களுக்கு சிறப்பு உணவுகள்:

விராட் கோலியின் உணவு பட்டியலில் எப்போதும் வேகவைக்கப்பட்ட பச்சை காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். அவரது காலை உணவில் எலுமிச்சை, முளைகட்டிய பயிறுகள், கிரீன் டீ மற்றும் மதிய உணவில் கிரில் செய்யப்பட்ட பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், ரைத்தா மற்றும் சூப் ஆகியவை அடங்கும். அதேநேரத்தில், ரோஹித் சர்மாவின் உணவில் முளைகட்டிய பருப்பு வகைகள், பாதாம், பழம், ஓட்ஸ், பனீர், காய்கறிகள், பயறு வகைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தூரில் இந்தியா சாதனை எப்படி?

3வது ஒருநாள் போட்டி

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அதாவது 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தூரில் இதற்கு முன்பு விளையாடிய 7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ