AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வசந்த நவராத்திரி 2026: முதல் நாளில் சைலபுத்ரி வழிபாட்டின் முக்கியத்துவம்

Chaitra Navratri 2026: வசந்த நவராத்திரி 2026 மார்ச் 19 முதல் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது; முதல் நாளில் சைலபுத்ரி தேவியை வழிபடுவது முக்கியம். கலசம் அமைத்து, நெய் விளக்கு ஏற்றி, மஞ்சள் நிற அலங்காரத்துடன் பால் மற்றும் இனிப்பு நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும். “ஓம் தேவி சைலபுத்ரியே நமஹ” மந்திரம் ஜபித்து, நல்ல நேரத்தில் பூஜை செய்தால் வளமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

வசந்த நவராத்திரி 2026: முதல் நாளில் சைலபுத்ரி வழிபாட்டின் முக்கியத்துவம்
வசந்த நவராத்திரி 2026 முதல் நாள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Mar 2026 15:03 PM IST

வசந்த நவராத்திரி அல்லது சைத்ர நவராத்திரி என்பது வசந்த காலத்தின் துவக்கமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான ஆன்மீக திருநாளாகும். இந்த ஆண்டு வசந்த நவராத்திரி 2026 மார்ச் 19ம் தேதி துவங்கி, 2026 மார்ச் 27ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் தொடங்கி, ஸ்ரீராம நவமி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தனித்துவமான தேவியை வணங்குவது இந்த நவராத்திரியின் முக்கிய அம்சமாகும்.

சைலபுத்ரி யார்? அவளின் அடையாளம்

நவராத்திரியின் முதல் நாளில் வழிபடப்படும் தேவியான சைலபுத்ரி, துர்கையின் முதல் வடிவமாக கருதப்படுகிறார். இவள் இமயமலை அரசனான இமவானின் மகளாகவும், அதனால் “மலைத்துவசன் மகள்” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். வலிமை, உறுதி மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் சைலபுத்ரி, கையில் திரிசூலம் மற்றும் தாமரை ஏந்தியபடி ரிஷப வாகனத்தில் பவனி வருவாள். திரிசூலம் சக்தியின் அடையாளமாகவும், தாமரை தூய்மையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

சைலபுத்ரி பூஜை செய்வது எப்படி?

நவராத்திரியின் முதல் நாளில், கலசம் அமைத்து சைலபுத்ரியை வீட்டிற்கு வரவேற்று வழிபடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜை செய்யும் இடத்தை கங்கை நீர் அல்லது தீர்த்தம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நவதுர்கை படத்தை வைத்து அலங்கரித்து, அதன் முன் கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர், மஞ்சள், நாணயம், எலுமிச்சை போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு, மேல் பகுதியில் தேங்காய் மற்றும் மாவிலை வைக்கப்படுகிறது. முதலில் நெய் விளக்கு ஏற்றி அம்பிகையை வணங்குவது வழக்கம்.

முதல் நாள் வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை

வசந்த நவராத்திரியின் முதல் நாளில் மஞ்சள் நிறம் முக்கியமாக கருதப்படுகிறது. இது உற்சாகம், வெளிச்சம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை குறிக்கிறது. சைலபுத்ரியின் அருளைப் பெற, பசு நெய்யில்லாமல் செய்யப்பட்ட இனிப்புகள், பால் அல்லது பாலால் செய்யப்பட்ட நைவேத்தியங்களை சமர்ப்பிக்க வேண்டும். “ஓம் தேவி சைலபுத்ரியே நமஹ” என்ற மந்திரத்தை ஜபித்து, கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். பின்னர் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டு, விரதத்தை நிறைவு செய்வது வழக்கமாகும்.

வழிபாட்டிற்கான நல்ல நேரங்கள்

வசந்த நவராத்திரி முதல் நாளில் கலசம் அமைப்பதற்கான நல்ல நேரம் காலை 05.15 முதல் 06.26 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது. அபிஜித் முகூர்த்தம் பகல் 12.05 முதல் 12.53 வரை உள்ளது. மேலும் மாலை 06.32 முதல் 07.43 வரை வழிபாடு செய்ய ஏற்ற நேரமாகும். இந்த நேரங்களில் பூஜை செய்தால் அதிக ஆன்மீக பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Follow Us