Reheated Food: எந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது? ஏன் இவற்றை சாப்பிடக்கூடாது?
Reheated Vegetable Risk: ஒரு சில காய்கறிகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அவை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரோசமைன்களாக மாறும், அவை மிகவும் தீங்கு விளைவிக்கும். அதில், கீரையும் ஒன்று. அந்தவகையில், இந்த கட்டுரையில் எந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது? ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

சமைக்கப்பட்ட காய்கறிகள்
வீட்டில் சமைத்து சாப்பிட்ட மீதமுள்ள சமைத்து (Cooking) வைத்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து, வெளியே எடுத்து மீண்டும் சூடாக்கிய பிறகு சாப்பிடுகிறோம். குறிப்பாக குளிர்காலத்தில், வெளியில் வைத்திருக்கும் காய்கறிகளை கூட பல முறை மீண்டும் சூடுபடுத்தி, மிகுந்த சுவையுடன் சாப்பிடுகிறோம், இது நம் ஆரோக்கியத்திற்கு (Health) எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை அறியாமல் செய்கிறோம். உண்மையில் ஒரு சில காய்கறிகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அவை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரோசமைன்களாக மாறும், அவை மிகவும் தீங்கு விளைவிக்கும். அதில், கீரையும் ஒன்று. அந்தவகையில், இந்த கட்டுரையில் எந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது? ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
கீரை:
கீரையில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இவற்றை மீண்டும் சூடுபடுத்தப்படும்போது நைட்ரேட்டுகளாக மாறுகின்றன. இது இரத்த ஆக்ஸிஜன் அளவை குறைத்து, குழந்தைகளில் நீல – தோல் நோய்க்குறியை ஏற்படுத்தும். மேலும், பெரியவர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. கீரையை மீண்டும் சூடாக்கும்போது இரும்பை அதிகமாக சூடாக்கும் போது, அது ஆக்ஸிஜனேற்றம் அடையத் தொடங்குகிறது.
இரும்பு ஆக்ஸிஜனேற்றப்படும்போது, அது அதிக அளவு ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது, அவை உடலில் உறிஞ்சப்படும்போது, பல உயிருக்கு ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. கருவுறாமை மற்றும் புற்றுநோய் ஆகியவை அத்தகைய இரண்டு நோய்கள் முக்கியமானது.
ALSO READ: சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடலாமா? இது ஆரோக்கியத்தை சீர்குலைக்குமா?
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது போட்யூலிசம் பாக்டீரியாவின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் மீண்டும் சூடுபடுத்தும்போது உடைந்து, தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகிறது. அதன்படி, வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு சார்ந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் பாதுகாப்பற்றது.
காளான்:
காளானில் புரதம் உள்ளது, இது மீண்டும் சூடுபடுத்தும்போது மாறுகிறது. இது வயிற்று கோளாறு, வாயு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். எனவே, காளான் உணவுகளை உடனடியாக உட்கொள்ள வேண்டும்.
சாதம்:
வேகவைத்த சாதத்தில் பேசிலஸ் செரியஸ் பாக்டீரியா வேகமாகப் பெருகும். அவை குளிர்சாதன பெட்டியில் கூட இறக்காது, சாப்பிட்டால் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். எனவே, அரிசியை முறையாக சேமித்து விரைவாக உட்கொள்வது முக்கியம்.
ALSO READ: கொத்தமல்லி ஃப்ரிட்ஜில் வைத்தாலும் கெட்டு போகிறதா? இந்த 5 ட்ரிக்ஸ் போதும்! ப்ரஷாக வைக்க உதவும்!
சில காய்கறிகள்:
கேரட், டர்னிப்ஸ், பீட்ரூட் போன்ற நிலத்தடியில் வளரும் பெரும்பாலான குறிப்பிடத்தக்க அளவு நைட்ரேட் உள்ளது. இந்தக் காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, நைட்ரேட் அளவு கணிசமாக அதிகரிக்கிறது, இது உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். மீண்டும் சூடுபடுத்திய பிறகு நைட்ரேட்டுகள் நச்சுத்தன்மையுடையதாக மாறும். மேலும் இந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்துவது புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளை வெளியிடுகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.