Beauty Tips: முடி – சரும பராமரிப்பை பேண வேண்டுமா..? இந்த 5 மசாலாப் பொருட்கள் வரப்பிரசாதம்!

Hair and Skin care: தேங்காய் எண்ணெய், கடலை மாவு, எலுமிச்சை போன்றவற்றை சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்காக நீங்கள் பலமுறை பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அஞ்சறை பெட்டியில் இருக்கும் மணம் மற்றும் சுவையை தரும் மசாலாப் பொருட்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Beauty Tips: முடி - சரும பராமரிப்பை பேண வேண்டுமா..? இந்த 5 மசாலாப் பொருட்கள் வரப்பிரசாதம்!

முடி - சரும பராமரிப்பு

Published: 

31 Oct 2025 20:41 PM

 IST

உங்கள் சருமத்தையும் முடியையும் எந்த பிரச்சனையையும் இல்லாமல் பராமரிப்பது சாதாரண காரியம் அல்ல. இதற்காக பலரும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அதிக செலவுகளை மேற்கொள்கிறார்கள். இது சில நேரங்களில் பலன் தராமல் வீண் செலவுகளை தரும். அதற்கு பதிலாக உங்கள் வீட்டு சமையலறையிலேயே (Kitchen) இயற்கையான பயனுள்ள தீர்வுகள் கிடைக்கின்றன. இவை சருமம் (Skin Care) மற்றும் முடி பிரச்சினைகளைப் போக்க பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, தயிர் போன்றவை சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்குவதுடன், பழுப்பு நிறத்தைக் குறைக்க உதவுகிறது. இதேபோல், உங்கள் சருமத்தையும் முடியையும் பளபளப்பாக்குவதோடு, பல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவும் 5 மசாலாப் பொருட்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய், கடலை மாவு, எலுமிச்சை போன்றவற்றை சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்காக நீங்கள் பலமுறை பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அஞ்சறை பெட்டியில் இருக்கும் மணம் மற்றும் சுவையை தரும் மசாலாப் பொருட்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய 5 மசாலாப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சருமத்தை பிரகாசமாக்கும் கற்றாழை – மஞ்சள் கலவை.. ஆனால்! இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

சருமத்திற்கு மஞ்சள்:

மஞ்சள் சருமத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய உணவு வகைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் இந்த மசாலா, நிறத்தை மேம்படுத்தவும், காயங்களை குணப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

தழும்புகளை மறைக்கும் ஜாதிக்காய்:

முகத்தில் சிவப்பு தடிப்புகள் அல்லது தழும்புகள் இருந்தால், அதைப் போக்க ஜாதிக்காய் ஒரு சிறந்த மசாலாப் பொருளாகும். இதை பாலுடன் தேய்த்து முகத்தில் தடவ வேண்டும். இதனால், படிப்படியாக முகம் தெளிவாகத் தொடங்கி, சருமத்தின் நிறமும் மேம்படும்.

கூந்தலுக்கு கருஞ்சீரகம்:

முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளைக் குறைப்பதில் கருஞ்சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது முடியை பளபளப்பாக்குவதுடன் முடி நரைப்பதையும் தடுக்கிறது.

ALSO READ: தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் கேன்சர் வருமா..? மருத்துவர் சஹானா விளக்கம்!

முகப்பருவை நீக்கும் இலவங்கப்பட்டை:

இந்திய சமையலறைகளில் இலவங்கப்பட்டை எளிதில் கிடைக்கும் ஒரு மசாலாப் பொருளாகும். இது முகப்பருவை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் எண்ணெய் பசை சருமத்தின் அதிகப்படியான சருமத்தையும் கட்டுப்படுத்துகிறது. தேனுடன் இலவங்கப்பட்டை பேஸ் மாஸ்கை உருவாக்கி முகத்தில் தடவுவது நன்மை பயக்கும்.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்