Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Monsoon Health Tips: மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்.. தடுப்பது எப்படி..?

Monsoon Health Tips For Children: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, பெற்றோர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்கு நிறைய கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான, சத்தான உணவை வழங்குங்கள்.

Monsoon Health Tips: மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்.. தடுப்பது எப்படி..?
குழந்தைகள் ஆரோக்கியம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2025 18:58 PM IST

மழைக்காலங்களில் நம் வீட்டு குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்துவது முக்கியம். எளிதாக விட்டுவிட்டால் விரைவாகவே, காய்ச்சல் மற்றும் சளியால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மழைக்காலங்களில் (Monsoon) குளுமையுடன் வைரஸ் காய்ச்சல், தொற்றுகள் மற்றும் பிற வைரஸ்களின் பாதிப்பு கணிசமாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் சிக்குன்குனியா போன்ற பிரச்சனைகளும் இந்த நேரத்தில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக இருப்பதால், வானிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அந்தவகையில், சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், பெற்றோர்கள் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதை எளிதாகத் தடுக்கலாம். மழைக்காலங்களில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கிய உணவு:

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, பெற்றோர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்கு நிறைய கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான, சத்தான உணவை வழங்குங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்கவும். தெரு உணவு, துரித உணவுகள், குளிர் பானங்கள், சிப்ஸ், பீட்சா, பர்கர்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிருங்கள்.

ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்கள்.. மழைக் காலத்தில் மிஸ் 

மழையில் நனைய விடாதீர்கள்:

மழையில் நனைந்த பிறகு குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அவர்களை மழையில் நனைய விடாமல் பாதுகாப்பாக பார்த்து கொள்வதும் முக்கியம். மழையில் குழந்தைகள் நனைந்தால், அவர்களுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கவும். மேலும், சூடான காபி, டீ, சூடான தண்ணீர் அல்லது இஞ்சி டீ கொடுக்கவும்.

சுகாதாரம்:

மழைக்காலத்தில், வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவும். மேலும், ஈரப்பதம் தூசி மற்றும் அழுக்குகளுடன் இணையும் போது, ​​பாக்டீரியாக்கள் இன்னும் அதிகமாகப் பெருகத் தொடங்குகின்றன. குழந்தைகள் வெளியே விளையாடும்போது அல்லது பொருட்களைத் தொடும்போது பாக்டீரியாக்கள் குழந்தைகள் மீது படையெடுக்கும். அதன்படி, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் குளித்தல் அவசியம். இந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் நுழைந்தால், அவை குழந்தையை நோய்வாய்ப்படுத்தும்.

ALSO READ: புயல் அடிக்கும்போது வாகனத்தில் சிக்கி கொண்டீர்களா..? பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?

துணிகள் மீது கவனம்:

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்குகின்றன. இது தீங்கு விளைவிக்கும் கொசுக்களை இனப்பெருக்கம் செய்யும். இந்த நேரத்தில், டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. எனவே, குழந்தைகள் முழு கை ஆடைகளை அணிவதை உறுதி செய்யுங்கள். ஷார்ட்ஸுக்கு பதிலாக, பேன்ட்களைத் தேர்வு செய்யவும். மாலையில் வெளியே விளையாட விடுவதை தவிர்க்கவும். மாலை நேரங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். மேலும், கொசு விரட்டியை பயன்படுத்தவும்.