பிரதமர் மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்..

C.P. Radhakrishnan Meets PM Modi: இந்திய நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9, 2025 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்..

பிரதமர் மோடியை சந்தித்த சி.பி ராதாகிருஷ்ணன்

Published: 

18 Aug 2025 20:32 PM

டெல்லி, ஆகஸ்ட் 18, 2025: பிரதமர் நரேந்திர மோடியை ஆகஸ்ட் 18 2025 தேதியான இன்று மகாராஷ்டிரா ஆளுநரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருமான சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகஸ்ட் 17 2025 அன்று அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி சி.பி ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:

இந்திய நாட்டின் 15 வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9 2025 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் அரசியல் கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளார்.

Also Read: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அழைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார். அதே சமயம் இந்திய கூட்டணி தரப்பில் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை இதன் காரணமாக அவரது நிலைப்பாடுகள் குறித்தும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியை சந்தித்த சி.பி ராதாகிருஷ்ணன்:

இது போன்ற சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சி.பி ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். இது தொடர்பான அவரது வலைதள பதிவில், “ சி.பி ராதாகிருஷ்ணன் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.

Also Read: சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..

அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் கள அனுபவம் நமது நாட்டை பெரிதும் வளப்படுத்தும் அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து நம் தேசத்திற்கு சேவை செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்

Related Stories
இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம்.. பிரதமர் மோடியை சந்தித்த சுபான்ஷு சுக்லா..
Vice President Election Date: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..
Telangana Crime : மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்
Harsh Goenka’s Viral Toast: தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் டோஸ்ட்டில் பிரபலத்தின் முகம்.. சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு!
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..
Air India : தொழில்நுட்ப கோளாறு.. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் அவதி!