டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி உறுதி
PM Modi Bhutan Visit: பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திங்கட்கிழமை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். மிகவும் கனத்த இதயத்துடன் இன்று இங்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
நவம்பர் 11, 2025: டெல்லி சம்பவம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, இந்த சம்வத்திற்கு காரணமாக இருந்த அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பூட்டானுக்கு வந்தார். விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை பூட்டான் பிரதமர் வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் சிறப்பு உறவுகளை வலுப்படுத்துவதே பிரதமர் மோடியின் பயணத்தின் நோக்கமாகும்.
இந்தியாவும் பூட்டானும் இணைந்து உருவாக்கிய 1020 மெகாவாட் பன்ட்சாங்சு-2 நீர்மின் திட்டத்தை மோடியும் பூட்டான் பிரதமர் மன்னர் வாங்சுக்கும் கூட்டாகத் தொடங்கி வைக்கின்றனர். பூட்டானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின் 70வது பிறந்தநாள் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.
சதி செய்தவர்களை விட்டுவைக்க மாட்டோம் – பிரதமர் மோடி:
பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திங்கட்கிழமை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். மிகவும் கனத்த இதயத்துடன் இன்று இங்கு வந்துள்ளதாக அவர் கூறினார். திங்கட்கிழமை மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் ஆழமாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை தாம் புரிந்துகொள்கிறோம்.
முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது. சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த சதித்திட்டத்தின் மூலத்தை புலனாய்வு அமைப்புகள் விரைவில் கண்டுபிடிக்கும். இதற்கு சதிகாரர்களை விட்டுவிடுவதில் அர்த்தமில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பூட்டான் பயணம் – முக்கிய நோக்கம்:
Landed in Bhutan. Grateful to Prime Minister Tobgay for the warm and gracious welcome at the airport. This visit reflects the deep bonds of friendship and cooperation shared between our two nations. India and Bhutan enjoy a time-tested partnership anchored in trust, goodwill and… pic.twitter.com/bbivxSyfU6
— Narendra Modi (@narendramodi) November 11, 2025
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பிரதமரின் பயணம் அமைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான உறவுகள் வளர்ந்து வருகின்றன. செப்டம்பரில், பூட்டானுடன் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு எல்லை தாண்டிய ரயில் இணைப்புகளை கட்டும் திட்டத்தை இந்தியா அறிவித்தது, இது இந்திய அரசாங்கம் பூட்டானுடன் மேற்கொள்ளும் முதல் ரயில் இணைப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் முடிந்ததும், பூட்டானில் உள்ள கெலேஃபு மற்றும் சாம்ட்சே, அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பனார்ஹட் நகரங்களுக்கு இடையே புதிய ரயில் பாதைகளை உருவாக்கும்.