டெல்லி, பிப்ரவரி 5, 2026: மாநிலங்களவையில் வளர்ச்சி சாதனைகளை வரிசையாக எடுத்துரைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.” இந்தியா தொடர்ந்து இளமையாகிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்தியாவின் திறமையும் முன்னேற்றமும் ஏற்கனவே உணரப்பட்டுவிட்டது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற வேகமாக முன்னேறி வருகிறது என நன்றி தெரிவிக்கும் உரையில் அவர் குறிப்பிட்டார்.
விக்சித் பாரத்தை நோக்கி இந்தியா:
‘விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய நாடு முன்னேற வேண்டும். “21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலகட்டம் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும்” என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெரிவித்தார். உலகிலேயே மிகச் செல்வந்த நாடுகள் கூட முதுமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதே மிகப் பெரிய காரணம். அவர்களுடைய மக்கள் தொகையில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்தியா இளமையாகிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
3வது பெரிய பொருளாதார நாடு:
“பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்று” என முத்திரை குத்தப்பட்ட இந்தியா, இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக அதிவேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் கூறினார். குறைந்த பணவீக்கத்துடன் நாடு உயர் வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், இது இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலிமையையும் எதிர்ப்பு சக்தியையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் சேர்த்துக் கூறினார்.
மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது
