Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Anti-Hindi Protest: இந்தி மொழிக்கு எதிர்ப்பு.. 3வது மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை..? ராஜ் தாக்கரே கடும் சாடல்!

Thackeray Brothers Unite: மும்பையில் நடைபெற்ற மாபெரும் கூட்டுப் பேரணியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒரே மேடையில் இணைந்து, மகாராஷ்டிராவில் இந்தி மொழியை மூன்றாவது மொழியாக திணிப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், மகாராஷ்டிராவின் மொழி, கலாச்சாரம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தையும் வெளிப்படுத்தினர்.

Anti-Hindi Protest: இந்தி மொழிக்கு எதிர்ப்பு.. 3வது மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை..? ராஜ் தாக்கரே கடும் சாடல்!
ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரேImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2025 14:47 PM

மும்பை, ஜூலை 05: மும்பையில் நடைபெற்ற கூட்டு பேரணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் (Uddhav Thackeray), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் (Raj Thackeray) ஒரே மேடையில் ஒன்றாக தோன்றினர். இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் சகோதரர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை பரிமாறினர். இது இரு கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகத்தை கொடுத்தது. மகாராஷ்டிரா அரசு 3வது மொழியாக இந்தி திணிப்பை (Anti-Hindi Protest) ரத்து செய்ய முடிவெடுத்ததன் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் மொழி குறித்த அரசியல் விவாதத்தை மீண்டும் தூண்டியது.

இந்தி மொழிக்கு தான் எதிரானவர் அல்ல – ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தனது உரையில், “ எனது மகாராஷ்டிரா எந்த அரசியல் மற்றும் சண்டையை விட பெரியது என்று நான் எனது நேர்காணல்களில் ஒன்றில் கூறியிருந்தேன். இன்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தவ்வும் நானும் ஒன்றிணைந்துள்ளோம். பாலாசாகேப்பால் செய்ய முடியாததை, தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்துள்ளார். எங்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் பணி.

நான் இந்தி மொழிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் எந்த மொழியையும் மக்கள் மீது திணிப்பது சரியல்ல. மகாராஷ்டிரா ஒன்றுபட்டால், அதன் விளைவு நாடு முழுவதும் தெரியும். யார் எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும், அது மக்களின் உரிமை, அதை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது. அதிகாரத்தின் பலத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் ஜனநாயக உணர்வுக்கு எதிரானவை. இந்தி வெறும் 200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மொழி. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது என்பதே எனது கேள்வி.

மும்பையை பிரிக்க சதி:


மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால், பாஜக இந்தியை திணிக்கிறது. மராட்டியத்தில் இருந்து மும்பையை பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்திய திணிக்கவில்லை. அதன்படி, யாரேனும் இனிமேல் மகாராஷ்டிராவை நோக்கி கண்களை உயர்த்தினால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம், அவர் எங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்களைப் பார்க்க முடியும். இது அவசியமில்லை. பாஜக எங்கிருந்து வந்தது? யாரிடமும் கேட்காமல் அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற முடிவை எடுப்பது சரியல்ல” என்று தெரிவித்தார்.